February 24, 2012

இயேசுகிறிஸ்து-திருவள்ளுவர்அருள்இல்லார்க்கு-பதிவு15





        இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-அருள் இல்லார்க்கு-பதிவு-15
      
                          “”பதிவு பதினைந்தை விரித்துச் சொல்ல
                                                        ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :
ஐசுவரியவான் பரலோக ராஜ்யத்திற்குள் நுழைய முடியாததைப் பற்றி இயேசு கீழ்க்கண்ட வசனங்கள் மூலம் விளக்குகிறார்:

வசனம்:1 :
இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி : ஐசுவரியவான் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதென்று,  மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
                                                               ------மத்தேயு - 19 : 23

ஏமாற்று வித்தை பல கற்று - அதை
ஏமாந்தவர்  மேல் சரிவரப் பயன் படுத்தி
மயக்கு மொழி பேசி மானிடர்  மனதை மயக்கி
கரையான் அரித்த நெஞ்சுடன்
கணக்கற்ற தவறான செயல்களைச் செய்து ,
கரை படிந்த உள்ளத்துடன்
களங்கமுள்ள செயல்கள் பல செய்து ,
                           வஞ்சக நெஞ்சமும் ,
                           வசீகரப் பார்வையும் ,
                           மாயஜால வார்த்தையும் - கொண்டு
                           செல்வம் பல சேர்த்து ,
                          பணத்தில் திளைத்து ,
                          பணத்தில் களித்து ,
                          சுக போகமுடனும்
                          பன்னீரில் குளித்து ,
                         சந்தனத்தில் நீந்தி ,
                         கன்னியர்  புடை சூழ
                         உலா வரும்
                        செல்வ நிலை கொண்ட
                         சீமான்களும் ,
                        பணக்காரர்களும் ,
                       ஐஸ்வரியவான்களும் ,

பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது .

பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டுமென்றால் ,
அனைத்து செல்வங்களையும் துறந்தவனாக இருக்க வேண்டும் ;
பாவங்களைக் கழித்தவனாக இருக்க வேண்டும் ;
துன்பங்களை விட்டவனாக இருக்க வேண்டும் ;
அறவழி நின்றவனாக இருக்க வேண்டும் ;
பொய் சொல்லாதவனாக இருக்க வேண்டும் ;
புறங்கூறாதவனாக இருக்க வேண்டும் ;
சூது செய்யாதவனாக இருக்க வேண்டும் ;
களவு கடைப் பிடிக்காதவனாக இருக்க வேண்டும் ;
கொலை செய்யாதவனாக இருக்க வேண்டும் ;
கொள்ளை அடிக்காதவனாக இருக்க வேண்டும் ;
கற்பு நெறி பிறழாதவனாக இருக்க வேண்டும் ;
பேராசை இல்லாதவனாக இருக்க வேண்டும் ;
சினம் தவிர்த்தவனாக இருக்க வேண்டும் ;
கடும்பற்றை விட்டவனாக இருக்க வேண்டும் ;
முறையற்ற பால் கவர்ச்சியை
நினைவாலும் , உடலாலும் தீண்டாதவனாக இருக்க வேண்டும் ;
உயர்வு தாழ்வு மனப்பான்மையை வாழ்வில்
கடை பிடிக்காதவனாக இருக்க வேண்டும் ;
வஞ்சக நெஞ்சத்தை கொண்டு
அழிக்கும் மனம் இல்லாதவனாக இருக்க வேண்டும் ;
இத்தகைய பல்வேறு தன்மைகள் கொண்டவர்
கண்டிப்பாக ஐஸ்வரியவனாக இருக்க முடியாது .

பணக்காரனாக வேண்டுமானால் இதில்
ஏதாவது ஒன்றை பயன் படுத்தித் தான் பணக்காரனாக முடியும் .
இதில் ஏதாவது ஒன்றை பயன் படுத்தாமல் பணக்காரனாக முடியாது .

நேர்மையான வழியில் பணம் சம்பாதித்து
உயர்  நிலையை அடைய முடியாது .
ஏதாவது ஒரு சிறிய தவறோ , மற்றவருக்கு துன்பமோ செய்தால் ,
தான் பணக்காரனாக முடியும் .
அதனால் தான் இயேசு இத்தகைய தன்மைகள் கொண்டவர்கள்
பரலோக ராஜ்யத்தில் நுழைய முடியாது என்பதை
குறிப்பால் உணர்த்தத் தான்
ஐஸ்வரியவான் பரலோக ராஜ்யத்தில்
நுழைய முடியாது என்று உண்மையாக
சத்தியமாக சொல்லுகிறேன் என்றார்.



வசனம்:2 :
ஐசுவரியவானைப் பற்றி விளக்கிய இயேசு அதனை ஒரு உவமையுடன் ஒப்பிட்டு மேலும் விளக்குகிறார்:

மேலும் ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும் ,ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் எனறு உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் .”
                                                                                      ---------மத்தேயு - 19 : 24

ஐசுவரியவான் பரலோகராஜ்யத்தில்
நுழைய முடியாது என்றால்
எத்தகைய தன்மைகள் கொண்டவர்கள்
பரலோகராஜ்யத்தில் நுழைய முடியும் என்று
சிந்தித்துப் பார்த்தால்

எந்த விதமாக களங்கமும் இல்லாதவர் ;
அனைத்து    விதமான ஆசைகளையும் எரித்தவர் ;
எல்லா     விதமான செல்வங்களையும் துறந்தவர் ;
கற்பு நெறி பூண்டு ஒழுகுபவர் ;
ஆண்டவர் பால் தன் மனதை செலுத்துபவர் ;
தன் பாவங்களை ஆண்டவரிடம் ஒப்படைத்தவர் ;
ஆண்டவரிடம் முழுமையாக தன்னை அர்ப்பணித்தவர் ;
ஆண்டவரிடம் பரிபூரண சரணாகதி அடைந்தவர் ;
அனைத்தும் ஆண்டவரே என்றும் உணர்ந்தவர் ;

இத்தகைய தன்மைகள் கொண்டவர்கள் மட்டுமே
பரலோக ராஜ்யத்தை அடைய முடியும் என்று பொருள் .


பொருட்களில் அளவில் உருவத்தில்
மிகச் சிறியதாக கருதப்படுவது ஊசி .
அத்தகைய ஊசியின் காதிற்குள்
ஒட்டகத்தை நுழைக்க
முயற்சி செய்தால் கூட நுழைத்து விடலாம் - ஆனால்
கள்ளத்தனமான எண்ணங்களையும் ,
தவறான செய்கைகளையும் ,
மனதை வருத்தப்பட வைக்கும் செயல்களையும் ,
பல்வேறு விதமான களங்கங்களையும் ,
தன்னுள் கொண்ட
ஐஸ்வரியவான் பரலோக ராஜ்யத்தில்
கண்டிப்பாக நுழைய முடியாது என்கிறார்  இயேசு.



திருவள்ளுவர்:
      “அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
       இவ்வுலகம் இல்லாகி யாங்கு
                                            -----திருவள்ளுவர்----திருக்குறள்----- 

இந்த உலகத்தில் மனிதனாகப் பிறந்து விட்டால்
தன் அடிப்படைத் தேவையை நிறைவேற்றிக்  கொள்ளவும் ;
தன் ஆசையை பூர்த்தி செய்து கொள்ளவும் ;
தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளவும் ;
தன் சிந்தனையை செயல்படுத்திக் கொள்ளவும் ;
தன் கற்பனைக்கு உருவம் கொடுத்துக் கொள்ளவும் ;
தன் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளவும்  ;
தன் குடும்பத்தை செழிப்பாக்கிக் கொள்ளவும் ;
சமுதாயத்தில் தன்னை உயர்த்திக் காட்டிக் கொள்ளவும் ;
மற்றவரிடத்தில் இருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டிக் கொள்ளவும்;

உறவுகள் தன்னை மதிக்கும் படி நடந்து கொள்ளவும்;
நண்பர்கள் தன் மேல் பாசமழை பொழியும் படி நடந்து கொள்ளவும் ;
தன் சந்ததிகள் தன்னை வாழ்த்தும் படி நடந்து கொள்ளவும் ;
உயர்ந்தோர்  போற்றும் படி நடந்து கொள்ளவும் ;
சான்றோர்  வாழ்த்தும் படி நடந்து கொள்ளவும் ;

நம் வாழ்க்கை சிறப்புடன்
அமைய வேண்டும் என்றால் பொருள் வேண்டும் .
பொருள் இருந்தால் தான் நமக்கு தேவையானவற்றை
நிறைவேற்றிக் கொள்ள முடியும்,
பொருள் இல்லாமல் நமக்கு தேவையானவற்றை
நிறைவேற்றிக் கொள்ள முடியாது .


இவ்வுலகில் இந்த உலகில்
வாழ வேண்டுமென்றால் பொருள் வேண்டும் .
சிறப்புடன் வாழ வேண்டுமென்றால் ,
மேலே சொன்னவாறு எல்லாவற்றையும் பெற்று
வாழ வேண்டும் என்றால் .

பொருள் நல்ல வழியில் தேட முடியாது ;
கிடைக்கும் என்று சொல்ல முடியாது ;
சமுதாயம் அதற்காக ஒத்துழைப்பும் கொடுக்காது ;
அத்தகைய பொருளை நல்வழியில் தேட முடியாது ;
பொருள் இல்லாமல் இவ்வுலகில் வாழ முடியாது ;
இச்சமுதாயம் வாழவும் விடாது ;

அதனால் மனிதன் தன் தேவையை நிறைவேற்றிக் கொள்ள
அவன் செய்யும் செயல்கள்
கர்ம வினைகளைக் கொண்டு வந்து விடுகிறது.
கர்ம வினையில் மனிதன் மாட்டிக் கொள்வதால்
பிறப்பு - இறப்பு என்ற சூழலில் சிக்கிக் கொள்கிறான் .

கர்ம வினைகள் முழுவதையும் எரித்து ,
பிறப்பு - இறப்பு என்ற சூழற்சியை அறுத்து ,
முக்தி என்ற நிலையை அடைந்தால் தான்
முக்தி கிடைத்தால் தான்
அவன் ஆதி நிலை , முதல் நிலை , மூல நிலை
என்று சொல்லக் கூடிய இருப்பு நிலையுடன் சேர முடியும் .
அதாவது அந்த உலகம் என்று சொல்லக் கூடிய
சுத்தவெளி , இருப்பு நிலையில் கலக்க முடியும் ,
பிறப்பை அறுக்க முடியும் ,
அதற்கு
அன்பு கருணையும் மனதில் சுரக்க வேண்டும் .
கர்ம வினை களைய வேண்டும் .
முன்வினை , முயற்சி , ஆராய்ச்சி கொண்டு
அதை அடைய வேண்டும் .

கர்ம வினைகளைக் கொண்டவனால்
இந்த உலகத்தில் தான் வாழ முடியும் .
கர்ம வினைகளைக் களைந்தவனால் மட்டுமே
இறைவனை அடைய முடியும் என்கிறார்  திருவள்ளுவர் .



இயேசு கிறிஸ்து - திருவள்ளுவர்:
இயேசு ( பணம் , பொருள் ……… ) கொண்டவனால் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது .
இவையனைத்தையும் விட்டால் தான் பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியும் என்கிறார்.
இதற்கு ,
அனைத்தையும் வைத்துக் கொண்டு பரலோக ராஜ்யம் அடைய முடியாது ,
அனைத்தையும் விட்டால் தான் பரலோக ராஜ்யம் அடைய முடியும்
என்று பொருள் .



திருவள்ளுவரும் , கர்ம வினை கொண்டவரால் இந்த உலகத்தில் தான் வாழ முடியும் .
கர்ம வினை கழித்தவரால் மட்டுமே இறைநிலையுடன் இணைய முடியும் என்று கூறுகிறார்.
இதற்கு ,
கர்ம வினைகளை வைத்தக் கொண்டு இறை நிலை அடைய முடியாது ,
கர்ம வினைகளைக் கழித்தால் தான் இறை நிலை அடைய முடியும்
என்று பொருள் .   


                                 “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                                      போற்றினேன் பதிவுபதினைந் துந்தான்முற்றே “”