April 15, 2021

பதிவு-4-ஐந்து புத்தக வெளியீடு

 பதிவு-4-ஐந்து

புத்தக வெளியீடு

 

அதனைத்

தொடர்ந்து

 

"அழிவில்லாத

அஸ்வத்தாமன்"

 

என்ற

தலைப்பில்

மகாபாரதக்

கதாபாத்திரத்திரமான

அஸ்வத்தாமனின்

வாழ்க்கை

வரலாற்றை

எழுத

இருக்கிறேன்

இந்தக்

கதையை

நான்

நேரடியாக

பதிப்பித்து

வெளியிடலாம்

அல்லது

இணையதளத்தில்

தொடர் கதையாக

எழுதி

விட்டு

பதிப்பிக்கலாம்

என்று

முடிவு

செய்து

இருக்கிறேன்

 

எப்படி

இருந்தாலும்

நான்

முதலில்

ஐந்து

புத்தகங்களை

பதிப்பித்து

வெளியிடலாம்

என்று

இருக்கிறேன்

 

கடவுள் தன் கண்களை

கட்டிக் கொண்டு

கபட நாடகத்தால்

களிநடம்

புரிந்தாலும்

 

இயற்கையானது

இன்பங்களை

இயற்றாமல்

இழிவை ஏற்படுத்தி

இழிவாக நடத்தினாலும்

 

புதை சேற்றில்

புதைத்து

புயலில்

புன்னகையை சிதைத்து

புவிவாழ்வை

அழித்தாலும்

 

வாழ்வின்

சிறகுகளை

முறித்து

உடல்

இயக்கம்

முடிந்து

உயிர்

தன்னியக்கம்

பெற்று

செல்லும்

வழியை

தேர்ந்தெடுக்க

முயற்சி

செய்தாலும்

 

என்னிடமிருந்து

அனைத்தையும்

பறிக்க விதி

விளையாட்டு

நடத்தினாலும்

 

என்னிடமிருந்து

என்னுடைய

எழுதுகோலை

மட்டும்

பறிக்க

முடியாது

 

ஏனென்றால்

என்னுடைய

எழுதுகோல்

இறைவனால்

எனக்கு

வழங்கப்பட்டது

என்பதைத்

தெரிவித்துக்

கொள்கிறேன்

 

நன்றி !

 

------என்றும்அன்புடன்

------எழுத்தாளர்.

K.பாலகங்காதரன்

 

------15-04-2021

////////////////////////////////////

பதிவு-3-ஐந்து புத்தக வெளியீடு

 பதிவு-3-ஐந்து

புத்தக வெளியீடு

 

பூம்பாவையின்

பெற்றோர்கள்

செம்பிலிட்டு

பாதுகாத்து வந்த

பூம்பாவையின்

சாம்பலுக்கு உயிர்

கொடுத்து

பூம்பாவையை

எழுப்பி

திருஞான சம்பந்தர்

பூம்பாவையை

இந்த உலகத்தில்

உயிருடன்

உலவ விட்டார்

 

பூம்பாவையை

இப்புவியில் உள்ள

அனைவரும்

தரிசித்து வணங்க

வேண்டும்

என்பதற்காக

பூம்பாவையின்

மகிமையை

உணர்த்தும்

வகையில்

சென்னை

மயிலாப்பூரில்

உள்ள கபாலீஸ்வரர்

கோயிலின் வெளிப்புற

பிரகாரத்தில்

பூம்பாவைக்கு

என்று தனி

சந்நிதி உள்ளது

 

இத்தகைய

சிறப்புகளைப் பெற்ற

பூம்பாவையின்

வாழ்க்கை வரலாற்றை

திருஞான சம்பந்தரின்

அருளாசியுடன்

பூம்பாவையின்

கதைக்கு

வசனங்கள் எழுதி

இருக்கிறேன்.

 

தலைப்பு :

 

(5) ஜியார்டானோ

புருனோ :

 

(சூரியனை மையமாக

வைத்து பூமி

சுற்றுகிறது என்று

சொன்னதற்காக

உயிரோடு எரித்துக்

கொல்லப்பட்டவரின்

கதை)

 

பூமியை மையமாக

வைத்து சூரியன்

சுற்றி வருகிறது

என்று பல

ஆண்டுகளாக

இந்த சமுதாயத்தில்

நிலவி வரும்

கோட்பாடானது

தவறு

என்று சொன்ன

காரணத்திற்காகவும்

 

பூமியை மையமாக

வைத்து சூரியன்

சுற்றவில்லை

சூரியனை மையமாக

வைத்துத் தான்

பூமி சுற்றுகிறது

என்று சொன்ன

காரணத்திற்காகவும்,

 

நான் சொன்ன

கோட்பாடு

உண்மையானது தான்

சூரியனை

மையமாக

வைத்துத் தான்

பூமி சுற்றுகிறது

நான் சொன்ன

கோட்பாட்டை

என்னுடைய

உயிரே போனாலும்

மாற்றிக் கொள்ள

மாட்டேன் என்று

சொன்ன

காரணத்திற்காகவும்.

ஜியார்டானோ

புருனோ உயிரோடு

எரித்துக்

கொல்லப்பட்டார்

 

இந்தக் கருத்தை

மையமாக

வைத்துத்தான்

ஜியார்டானோ

புருனோவின்

வாழ்க்கை

வரலாற்றை

இரண்டு

வருடங்களுக்கு

முன்பு - நான்

பல்வேறு

இணையதளங்களிலும்

WHATS APP-லும்

தொடர்ந்து

தொடர்கதையாக

எழுதி

இந்த உலகத்தில்

உள்ள அனைத்து

மக்களின்

மிகப்பெரும்

ஆதரவைப் பெற்ற

ஜியார்டானோ

புருனோவின்

உண்மையான

வாழ்க்கை

வரலாற்றைத் தான்

ஜியார்டானோ புருனோ

என்ற தலைப்பில்

உரையாடல்

நடையில் எழுதி

இருக்கிறேன்.

 

 

மேற்கண்ட

ஐந்து தலைப்புகளில்

ஐந்து புத்தகங்களை

வெளியிட

இருக்கிறேன்

இந்த புத்தகங்களை

வெளியிடுவதற்காக

நான்

எழுதியவைகளை

தொகுக்கும்

பணியையும்

சரிபார்க்கும்

பணியையும்

செய்து

கொண்டிருக்கும்

எனக்கு என்னுடைய

சீடர்களும்

அன்புள்ளங்களும்

உதவி செய்து

கொண்டிருக்கிறார்கள்

 

இதுவரை

இந்த சமுதாயத்தில்

யாராலும் முழுமையாக

எழுதப்படாத

வரலாறு

புராணம்

இதிகாசம்

மற்றும்

இலக்கியங்கள்

ஆகியவற்றில் உள்ள

கதாபாத்திரங்களின்

வாழ்க்கை

வரலாறுகளை

எழுத வேண்டும்

என்ற நினைப்பில்

நான் தற்போது

இணையதளங்களில்

தொடர்கதையாக

எழுதிக்

கொண்டிருக்கும்

 

"சாவேயில்லாத

சிகண்டி"

 

என்ற கதையையும்

எழுதி முடித்தபின்

புத்தகமாக

வெளியிட இருக்கிறேன்

 

 

------என்றும்அன்புடன்

------எழுத்தாளர்.

K.பாலகங்காதரன்

 

------15-04-2021

////////////////////////////////////

பதிவு-2-ஐந்து புத்தக வெளியீடு

பதிவு-2-ஐந்து

புத்தக வெளியீடு

  

தலைப்பு :

(2) பழமொழி :


(உண்மை நிலையில்

விளக்கம்)

 

மனிதன்

இந்த உலகத்தில்

உயிர் வாழ்வதற்கு

காரணமாக இருந்து

மனிதனுடைய

உடலுக்குள் குடி

கொண்டிருக்கும்

உயிரைக் கூட

மனிதனின்

உடலிலிருந்து

பிரித்து விடலாம்

 

அங்கிங்கெனாதபடி

பிரபஞ்சம் முழுவதும்

நீக்கமற நிறைந்து

கொண்டிருக்கும்

மனிதன் உயிர்

வாழ்வதற்கு

அத்தியாவசியமான

பிராண சக்தியைக் கூட

மனிதனுடைய

உடலிலிருந்து

பிரித்து விடலாம்

 

ஆனால்,

மனிதனின்

வாழ்வியலோடு

என்றும்

தொடர்பு கொண்டு

மனிதனுடன்

பிண்ணிப் பிணைந்து

கொண்டு இருக்கும்

பழமொழியை

பிரித்து

விட முடியாது

 

இத்தகைய

சிறப்புமிக்க

பழமொழிக்கு

விளக்கங்கள்

அளிப்பதற்கு

பிரபஞ்சத்துடன்

பிணைந்து கொண்டு

பிரிக்க முடியாமல்

ஒன்றுக்குள் ஒன்றாக

கலந்திருக்கும்

உண்மையானது

பழமொழிக்குள்

மறைந்திருக்கும்

உண்மையை

வெளிக் கொண்டுவர

எனக்கு உறுதுணையாக

இருந்ததால் - நான்

பழமொழிக்கு

விளக்கங்கள் எழுதி

இருக்கிறேன்

 

 

 

தலைப்பு :

 

(3) சித்தர் பாடல்கள் :

 

(சித்தர் நிலையில்

விளக்கம்)

 

ஆன்மீகத்தில்

ஆதி முதல்

அந்தம் வரை

உள்ள அனைத்து

உயர்நிலைகளையும்

மந்திரம்

யந்திரம்

தந்திரம்

ஆகியவற்றில்

உள்ள சிறந்த

உயர் நிலைகளையும்

மாந்திரீகத்தில்

உள்ள அனைத்து

சூட்சுமங்களின்

உயர் நிலைகளையும்

எழுதியவைகளை

செயல்படுத்திப்

பார்த்தால்

உண்மை தெரியும்

என்ற சிறப்பைத்

தன்னுள் கொண்ட

சாஸ்திரங்களில்

ஒன்றான

சோதிட சாஸ்திரத்தின்

உயர்நிலைகளையும்

நம்முடைய

மருத்துவத்தை

கவர்ந்து

சென்று தான்

அகில உலகமே

மருத்துவத்தில்

கொடி கட்டிப்

பறக்கிறது என்று

சொல்லத்தக்க

வகையில் இருக்கும்

மருத்துவத்தின்

உயர்நிலைகளையும்

மனித வாழ்வியலின்

உயர் நிலைகளையும்

அனைவரும் அவரவர்

நிலைகளுக்கேற்ப

புரிந்து கொள்ளும்

வகையில்

குறியீடுகளாக

சொல்லிச் சென்ற

சித்தர்களின்

பாடல்களுக்கு

சித்தர்களின்

அருளாசியுடன்

சித்தர் பாடல்களுக்கு

விளக்கங்கள்

எழுதி இருக்கிறேன்

 

 

 

தலைப்பு :

 

(4) பூம்பாவை :

(இறந்தவர் உயிரோடு

எழுப்பட்ட கதை)

 

கர்மவினையின்

தாக்குதலால்

உந்தப்பட்டு

தன் கடமையை

செவ்வனே

நிறைவேற்ற வேண்டும்

என்பதற்காக கடவுள்

மேல் அளவிட

முடியாத பக்தி

கொண்ட

பூம்பாவை என்ற

தெய்வப்பெண்ணை

அரவம் தீண்டியதால்

முறைப்படி

செய்ய வேண்டிய

இறுதி சடங்குள்

அனைத்தும்

செய்யப்பட்டு

பூம்பாவையின்

உடலானது

நெருப்பிலிட்டு

எரித்ததால் உண்டான

சாம்பலை

செம்பிலிட்டு

பூம்பாவையின்

பெற்றோர்கள்

பாதுகாத்து வந்தனர்

 

 

------என்றும்அன்புடன்

------எழுத்தாளர்.

K.பாலகங்காதரன்

 

------15-04-2021

////////////////////////////////////

 

பதிவு-1-ஐந்து புத்தக வெளியீடு

 பதிவு-1-ஐந்து

புத்தக வெளியீடு

 

அன்பிற்கினியவர்களே !

 

நான் எழுதி

வெளியிட்ட

என்னுடைய

முதல் புத்தகமான

அரவான் களப்பலி

என்ற புத்தகம்

பல்வேறு

பிரச்சினைகளையும்

பல்வேறு

தடைகளையும்

கடந்து

பலநிலையில்

உள்ளவர்களின்

ஏகோபித்த

பாராட்டுக்களைப்

பெற்று

வெற்றி நடை

போட்டு- இந்த

அவனியெல்லாம்

வலம் வந்து

கொண்டிருக்கின்ற

நிலையிலும்,

 

அடுத்து நான்

செய்ய வேண்டிய

செயல்களை

செய்ய முடியாத

சூழ்நிலைகளை

காலம் எனக்கு

ஏற்படுத்திக்

கொண்டிருக்கின்ற

நிலையிலும்,

 

பல பிரச்சினைகள்

என்னை சூழ்ந்து

அழுத்தி மீள

முடியாமல் செய்து

கொண்டிருக்கும்

நிலையிலும்

 

மனவேதனைகள்

என்னை சூழ்ந்து

அழுத்தி பாதித்துக்

கொண்டிருக்கும்

நிலையிலும்,

 

காலம் என்னை

அழித்துச்

செல்ல காத்துக்

கொண்டிருக்கும்

நிலையிலும்

 

எனக்கென்று

ஒதுக்கப்பட்ட பணி

என்னவென்று

தெரிந்து அதை

முடிக்க வேண்டும்

என்பதை

உணர்ந்த நான்

 

ஏற்கனவே

பல்வேறு

இணையதளங்களில்

பல்வேறு

தலைப்புகளில்

பல்வேறு

கருத்துக்களை

மையக்கருத்தாகக்

கொண்டு-நான்

எழுதியவைகளை

கீழ்க்கண்ட

தலைப்புகளில்

அச்சிட்டு புத்தகமாக

வெளியிட்டு தொடர்ந்து

என்னுடைய

எழுத்துக்களை

மக்கள் மத்தியில்

கொண்டு செல்ல

இருக்கிறேன்

 

நான் விரைவில்

வெளியிட இருக்கும்

ஐந்து புத்தகங்களின்

தலைப்புகள் மற்றும்

அவைகளைப் பற்றிய

சிறு குறிப்புகள்

கீழ்க்கண்டவாறு:

 

 

தலைப்பு :

 

(1) திருக்குறள் :

 

 

(பரம்பொருள்

நிலையில்

விளக்கம்)

 

முப்பாலும்

உணர்ந்தவர்கள்

எப்பாலும் இல்லை


அக்காலம்

இக்காலம் என்று

எக்காலமும்

இல்லை என்று

சொல்லத்தக்க

விதத்தில்

 

இது போல்

ஒரு நூலை  இனி

யாராலும் எழுத

முடியாது என்ற

காரணத்தினால் தான்

உலகில் உள்ள

அதிகமான

மொழிகளால் மொழி

பெயர்க்கப்பட்டு

இருக்கிறது என்று

சொல்லத்தக்க

விதத்தில்

 

உயர்ந்த

கருத்துக்களை

வாழ்வியல்

நெறிமுறைகளை

மனிதத்

தன்மைகளை

பரம்பொருளின்

சூட்சுமங்களை

சிற்றின்பத்தின்

சீரழிவுகளை

பேரின்பத்தின்

பெருமைகளை

என்று

தொட்டுக் காட்டாத

விஷயங்கள் என்று

எதுவும் இல்லை

என்று

சொல்லத்தக்க

விதத்தில்

 

காலத்தால்

அழிக்க முடியாத

காலத்தை வென்று

நிற்கும் - இந்த

உலகத்தில் உள்ள

அனைவருடைய

இதயங்களிலும்

இறவாமல் வாழ்ந்து

கொண்டிருக்கும்

திருக்குறளுக்கு

பரம்பொருளின்

அருளுடன்

திருக்குறளுக்கு

விளக்கங்கள்

எழுதியிருக்கிறேன்

 

------என்றும் அன்புடன்

------எழுத்தாளர்.

K.பாலகங்காதரன்

 

------15-04-2021

////////////////////////////////////