August 29, 2019

பரம்பொருள்-பதிவு-57


              பரம்பொருள்-பதிவு-57

"பைரவர் கோயிலின்
நீளம், அகலம், உயரம்,
கர்ப்பக் கிரகத்தின்
நீளம், அகலம், உயரம்,
கர்ப்பக் கிரகத்தில்
வைக்கப்படும்
பைரவர் சிலையின்
நீளம், அகலம், உயரம்,
ஆகிய மூன்றும்
ஒன்றுக்கொன்று
தொடர்பு கொண்டு ;
ஒத்திசைவு பெற்று ;
இயங்குவதற்கு
ஏற்ற வகையில்
பைரவர் சிலையை
செதுக்குவதற்கு முதலில்
உயிருள்ள கல்லானது
தேர்ந்தெடுக்கப்படுகிறது ;

" தேர்ந்தெடுக்கப்பட்ட
உயிருள்ள கல்லிடம்
பைரவர் சிலையை
செதுக்குவதற்கு
தேவையான
அனுமதி பெறப்பட்டு ;
ஆகமசாஸ்திர
விதிமுறைகளின்படி
பைரவர் சிலையானது
செதுக்கப்படுகிறது ; "

" செதுக்கப்பட்ட
பைரவர் சிலைக்கு
பிராண பிரதிஷ்டையின்
மூலமாக
உயிரூட்டப்பட்டு ;
பைரவர் சிலை
பைரவராகவே
மாற்றப்படுகிறது ;

"பைரவராகவே
மாற்றப்பட்ட
பைரவர் சிலையை
பீடத்துடன்
இணைப்பதற்கு முன்பாக
பைரவர் சிலைக்குரிய
மந்திரம்;
பைரவர் சிலைக்குரிய
யந்திரம்;
பைரவர் சிலைக்குரிய
தந்திரம் ;
ஆகிய மூன்றும்
தேர்ந்தெடுக்கப்பட்டு ;
ஒன்றுக் கொன்று
ஒன்றுபட்டு செயல்படும்
வகையில்
செயல்களைச்
செய்த பின்னர்
பைரவர் சிலைக்கும்
பீடத்திற்கும் இடையில்
மந்திரத் தகடு
வைக்கப்பட்டு ;
பைரவர் சிலையானது
பீடத்துடன்
அஷ்ட பந்தன
மருந்து மூலம்
இணைக்கப்படுகிறது "

"பைரவர் சிலையானது
பீடத்துடன் இணைக்கப்
பட்டபிறகு
கும்பாபிஷேகம்
செய்யப்படுகிறது ;
செய்யப்பட்ட
கும்பாபிஷேகத்தின் மூலம்
பைரவர் சிலையில் உள்ள
பைரவர் சக்தியானது
இயங்கும் சக்தியைப்
பெறுகிறது ;"

"கும்பாபிஷேகத்தின் மூலம்
இயங்கும் சக்தியைப்
பெற்ற பைரவர்
சிலைக்கு
ஒவ்வொரு நாளும்
பூஜைகள்
செய்யப்படுகிறது ;
பூஜைகள் என்பது
மந்திரம், யந்திரம், தந்திரம்,
ஆகிய மூன்றினைக்
கொண்டு செய்யப்படுகிறது "

"மந்திரம், யந்திரம், தந்திரம்,
ஆகிய மூன்றும்
தொடர்ந்து
பயன்படுத்தப்படுவதால்
கர்ப்பக் கிரகத்தில்
இருக்கும்
பைரவர் சிலையிலிருந்து
பெறப்படும் பைரவர்
சக்தியானது
கோயிலுக்குள் செலுத்தப்பட்டு
கோயிலுக்குள் பைரவர்
சக்தியானது உற்பத்தி
செய்யப்படுகிறது ;; "

" இந்துமதக் கோயில்களில்
எந்த ஒரு கோயிலை
எடுத்துக் கொண்டாலும்
எந்த ஒரு கடவுளுடைய
சக்தியாக இருந்தாலும்
இவ்வாறாகத் தான்
கோயிலுக்குள் சக்தியானது
உற்பத்தி செய்யப்படுகிறது "

" கோயிலுக்குள் உற்பத்தி
செய்யப்படும் சக்தி
எந்த ஒரு கடவுளுடைய
சக்தியாக இருந்தாலும்
கோயிலுக்குள்
ஒரு குறிப்பிட்ட
இடத்திற்குள் குவித்து
வைக்கப்பட வேண்டும்,.  "

"கோயிலுக்குள் உற்பத்தி
செய்யப்படும் சக்தி
கோயிலுக்குள் குவித்து
வைக்கப்பட்டால் மட்டுமே
கோயிலானது ஆற்றல்
மிக்க களமாக இருக்கும். "

" கோயிலுக்குள் உற்பத்தி
செய்யப்பட்ட சக்தியானது
கோயிலுக்குள் குவித்து
வைக்கப்படவில்லையெனில்
கோயிலானது ஆற்றல்
மிக்க களமாக இருக்காது "

" இந்து மதக்கோயில்களில்
உற்பத்தி செய்யப்படும்
கடவுள் சக்தியானது
கோயிலுக்குள்
எப்படி குவித்து
வைக்கப்படுகிறது
என்று தெரியுமா………………………..?"

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 29-08-2019
//////////////////////////////////////////////////////////