April 15, 2019

பரம்பொருள்-பதிவு-2


                        பரம்பொருள்-பதிவு-2

“கடவுள் எங்கு
இருக்கிறார் ;
அவரை அடையக்கூடிய
வழி என்ன ;
எந்த முறையைப்
பின்பற்றி அவரை
அடையலாம் ;
என்பதை உணர்ந்தவர்கள்
இந்த பிரபஞ்சம் முழுவதும்
அங்கிங்கெனாதபடி எங்கும்
எல்லா இடங்களிலும்
நீக்கமற நிறைந்திருக்கும்
இறைவனுடன்
தொடர்பு கொண்டு
தனக்கு தேவையானதை
இறைவனிடம் இருந்து
பெற்றுக் கொண்டு
தன்னுடைய ஆசையை
பூர்த்தி செய்து கொள்ளும்
முறையை அறிந்தவர்களுக்காக
கட்டப்பட்டதல்ல  
இந்து மதக்கோயில்கள் “

“ கடவுள் எங்கு
இருக்கிறார் ;
அவரை அடையக்கூடிய
வழி என்ன ;
எந்த முறையைப்
பின்பற்றி அவரை
அடையலாம் ;
என்பதை உணராதவர்கள்
இந்த பிரபஞ்சம் முழுவதும்
அங்கிங்கெனாதபடி எங்கும்
எல்லா இடங்களிலும்
நீக்கமற நிறைந்திருக்கும்
இறைவனுடன்
தொடர்பு கொண்டு
தனக்கு தேவையானதை
இறைவனிடம் இருந்து
பெற்றுக் கொண்டு
தன்னுடைய ஆசையை
பூர்த்தி செய்து கொள்ள
முடியாதவர்கள்
ஆகியோருக்காகக்
கட்டப்பட்டது தான்
இந்து மதக்கோயில்கள் “

“ எளிமையாக சொல்ல
வேண்டுமானால்
எல்லா இடங்களிலும்
நிறைந்து இருக்கக்கூடிய
இறைவனுடன் தொடர்பு
கொண்டு தனக்கு
வேண்டியதை
பெற்றுக் கொள்ள
முடியாதவர்களுக்காக
கட்டப்பட்டது தான்
இந்து மதக்கோயில்கள் “

“ கடவுள் எங்கு
இருக்கிறார் ;
அவரை அடையக்கூடிய
வழி என்ன ;
எந்த முறையைப்
பின்பற்றி அவரை
அடையலாம் ;
என்பதற்குரிய வழிமுறைகள்
அனைத்தையும் கொண்டு
அமைக்கப்பட்டிருப்பது தான்
இந்து மதக்கோயில்கள் “

“ இந்து மதக் கோயில்களில்
பின்பற்றப்படும் முறைகளான

“இறைவனை
வணங்குவதற்கு என்று
முறைப்படுத்தி
வைக்கப்பட்டிருக்கும்
இறை வழிபாட்டு  முறைகள்; “

“இறைவனை பூஜிப்பதற்காக
செய்யப்படும் பூஜை முறைகள்;”

“ இறைவனை
வணங்குவதற்காக
உச்சரிக்கப்படும் மந்திர
உச்சாடண முறைகள் ; “

“செய்யப்படும் ஹோமங்கள்; “

“பின்பற்றப்படும்
மதச்சடங்குகள் ;”

“கடை பிடித்து வரும்
மத நம்பிக்கைகள் ; “

“மதக்கோட்பாடுகள் ; “

“கொண்டாடப்படும்
பண்டிகைகள் ; “

“வாசிக்கப்படும்
புனித நூல்கள் ; “

இவைகள் அனைத்தும்
கடவுளுடன் இணைந்து
தனக்கு வேண்டியதை
பெற்றுக் கொள்ள
முடியாத நிலையில்
யாராக இருந்தாலும்-
அவரும் கடவுளுடன்
இணைந்து தனக்கு
வேண்டியதை பெற்றுக்
கொள்ள வேண்டும் என்ற
உயர்ந்த நோக்கத்துடன்
அமைக்கப்பட்டு
பின்பற்றப்படும்
முறைகள் தான்
இந்து மதக்கோயில்களில்
உள்ளவை அனைத்தும்”

“எல்லா இடங்களிலும்
நிறைந்திருக்கக் கூடிய
இறைவனுடன் தொடர்பு
கொண்டு தனக்கு
வேண்டியதை பெற்றுக்
கொள்ளும் ஆற்றல்
ஒரு சிலருக்கே
இருக்கிறது - இந்த
உண்மையை உணர்ந்தவர்கள்
இறைவனிடம் இருந்து
தனக்கு வேண்டியதை
பெற்றுக் கொள்வதற்காக
கோயிலுக்கு செல்லும்
ஒவ்வொருவரும்
இறைவனுடன் தொடர்பு
கொண்டு - தனக்கு
வேண்டியதை பெற்றுக்
கொள்ளும் வகையில்
சக்தியின் மையங்களாக
இந்து மதக் கோயில்களை
உருவாக்கி வைத்திருக்கின்றனர்”

“இந்து மதக் கோயில்கள்
அளவிடற்கரிய
ஆன்மீக ரகசியங்கள் ;
சூட்சும முறைகள் ;
மெய்ஞ்ஞானத்தின்
உயர் தன்மைகள் ;
அறிவு; ஞானம்; முக்தி;
ஆகியவற்றை அடையக்
கூடிய முறைகள்
ஆகிய அனைத்தையும்
தன்னுள் கொண்டு
உச்ச சக்தியின்
மையங்களாக எப்படி
இருக்கின்றன என்பதை
நாம் தெரிந்து கொள்ளாமல்
இந்து மதக்கோயில்களின்
சிறப்பை நம்மால்
உணர்ந்து கொள்ள முடியாது

---------  ஜபம் இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  15-04-2019
/////////////////////////////////////////////////////