May 24, 2012

இயேசு கிறிஸ்து-திருமூலர்-ஓங்காரத்துள்ளே- பதிவு-41




       இயேசு கிறிஸ்து-திருமூலர்-ஓங்காரத்துள்ளே- பதிவு-41   

              “”பதிவு நாற்பத்தியொன்றை விரித்துச் சொல்ல
            ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :   
    
பரலோக ராஜ்யம் புளித்த மாவுக்கு ஒப்பாயிருக்கிறது ;அதை ஒரு ஸ்திரீ எடுத்து ,முழுவதும் புளிக்கும் வரைக்கும் மூன்றுபடி மாவிலே அடக்கி வைத்தாள் என்றார்.”
                                                               --------மத்தேயு 13 : 33

மறைத்துக் கொள்ளுதல் , வெளிக்காட்டாமல் இருத்தல்
என இருவகைப்படும்.
தகுதிகள் பலவற்றை ,
திறமைகள் பலவற்றை ,
அனுபவங்கள் பலவற்றை ,
உயர்ந்தவைகள் பலவற்றை ,
சக்திகள் பலவற்றை ,
தன்னுள் வைத்துக் கொண்டு
மறைத்துக் கொள்ளுதல் ஒரு வகை .

தனக்குள் ஒன்றும் இல்லாமல்
தகுதிகள் இருப்பது போல் ,
திறமைகள் இருப்பது போல் ,
அனுபவங்கள் இருப்பது போல் ,
உயர்ந்தவைகள் இருப்பது போல் ,
சக்திகள் இருப்பது போல் ,
காட்டிக் கொள்ளுதல் தன்னை
வெளிப்படுத்திக் கொள்ளுதல் மற்றொரு வகை .

தகுதிகள் பலவற்றை தன்னுள் கொண்டு
தங்களை வெளிப்படுத்தாமல்
தங்கள் பெயர்  வெளிப்படாமல்
மறைத்துக் கொள்பவர்
வேறு பெயர்  கொண்டு
புனை பெயர்  கொண்டு
படைப்புகளை படைத்தாலும்
உண்மையான திறமைசாலிகளை இன்னார்  
என்று வெளிப்படுத்தி விடும்.

திறமைசாலிகள் தங்களை மறைத்துக் கொண்டாலும் ,
திரைக்கு பின்னால் மறைந்து கொண்டாலும் ,
புனை பெயர்  போட்டு பின்னால் மறைத்துக் கொண்டாலும் ,
அவருடைய படைப்புகளே அவரை
இன்னார்  என்று வெளிப்படுத்தி விடும்
இந்த உலகத்தில் அவர்  யார்  என்பதை
வெளிக்காட்டி விடும் .

புகழ்பெற்ற படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை
பல்வேறு பெயர்களில் வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

உண்மை பெயரை மறைத்துக் கொண்டு
புதுப்பெயரை தரித்துக் கொண்டு
பெரும்பாலானோர்  படைத்த படைப்புகளே
அவர்  உண்மை பெயரை மறைக்க வைத்து
புனைப் பெயரே அவரை
புகழின் உச்சிக்கு கொண்டு சென்றிருக்கிறது .

புனைந்து கொண்ட பெயரே மக்களின் மத்தியில்
மக்கள் சிந்தனையில் நீங்கா இடம் பெறும்
வகையில் செய்து விட்டு இருந்தது .
அதற்கு காரணம் அவர்களின்
திறமையின் வெளிப்பாடு
உழைப்பின் மேம்பாடு
எவ்வளவு தான் திறமையை மறைவாக வைத்திருந்தாலும் ,
புகழ் வேண்டாம் என்று தங்களை மறைத்துக் கொண்டாலும் ,
புனை பெயரில் தங்களை வெளிப்படுத்தினாலும் ,
உண்மையான திறமைசாலிகளின் திறமையை யாராலும்
மறைக்க முடியாது .

திறமை இல்லாமல் திறமைசாலியாக தன்னை
வெளியில் காட்டிக் கொள்பவர் ;
உண்மையை உணராமல் உண்மையை உணர்ந்தவர்
போல் தன்னை வெளிப்படுத்திக் கொள்பவர் ;
சொந்தமாக படைப்புகளை படைக்காமல்
மற்றவர்  படைப்புகளை தங்கள் படைப்பு என்று
பெருமையடித்துக் கொள்பவர் ;
எழுத்துக்களை வரி பிசகாமல் காப்பியடித்து விட்டு
தன் அறிவு என்று தன்னை விளம்பரப்படுத்திக் கொள்பவர் ;

தங்களை மறைத்துக் கொண்டு
வேறொரு பெயர்  மூலம்
மற்றவர்  கற்பனையை திருடி ,
மற்றவர்  எழுத்துக்களைத் திருடி ,
மற்றவர்  படைப்புகளைத் திருடி ,
மற்றவர்  அறிவைத் திருடி ,
பாராட்டு பெற வேண்டும் ;
புகழ் பெற வேண்டும் ;
உயர்நிலை அடைய வேண்டும் ;
உன்னத நிலை எட்ட வேண்டும் ;
என்று நினைப்பவர்கள் வாழ்வானது
தோன்றி மறையும் மின்னலைப் போன்றது
ஒரு குறிப்பிட்ட காலம் வரை தான் நிலைக்கும் .

உண்மையான திறமை தான் என்றும் நிலைக்கும்
மற்றவரிடம் களவாடிய திறமை நிலைக்காது .

உண்மையான திறமைக்கும்,
களவாடிய திறமைக்கும் வேறுபாடு இருக்கிறது .

உண்மையான திறமை என்பது அனைத்தையும்
தன்னுள் அடக்கி வைத்திருக்கும்
காலம் வரும் போது படிப்படியாக வெளிப்படுத்தும்

விதைக்கப்படும் விதையானது எவ்வாறு படிப்படியாக
விதை முளைத்து , செடியாகி , மரமாகி , பூவாகி ,
காயாகி , கனியாகி வளர்கிறதோ
பருவ காலத்திற்கு ஏற்ற படி மாற்றமடைகிறதோ
அவ்வாறே உண்மையான திறமையும்
படிப்படியாக வெளிப்படும் ;
ஜீவ ஊற்றாக வெளிப்படும் ;
வற்றாத நதியாக வெளிப்படும் ;
எல்லையில்லாமல் ஓடியாடும் ;
முற்றுப்புள்ளி இல்லாமல் சுழன்றாடும் ;
முடிவில்லாமல் வெளிப்படும்.

உண்மையான திறமை நித்தியமானது ;
களவாடிய திறமை அநித்தியமானது ;

பாதை மாறிப் போன
பயணத்தில்
பள்ளத்தின் சுவடுகள் !

        வழுக்கி விழுந்த
        வாழ்க்கையில்
        வழுக்கலின் வடுக்கள்!

நிலை கெட்டுப் போன
நித்தியத்தில்
நித்திரையின் காலடிகள் !

        கொட்டி வைக்கப் பட்ட
        கொடுமைகளில்
        கோபத்தின் இலக்கணங்கள்!

மறைத்து வைக்கப் பட்ட
மனதுகளில்
மாசற்ற மாணிக்கங்கள் !

       வார்த்து வைக்கப் பட்ட
       வார்த்தைகளில்
       வறுமையின் குறியீடுகள் !

செதுக்கி வைக்கப் பட்ட
சிற்பங்களில்
சிந்தனையின் ஊற்றுகள்!

         பற்றி வைக்கப் பட்ட
         பல்லவிகளில்
         பாடலின் புதுமைகள்!

உழைத்து பெறப் பட்ட
உவகையில்
உள்ளத்தின் உண்மைகள்!

       அன்பில் சேர்த்து வைத்த
       அரவணைப்பில்
       ஆசையின் கீதங்கள்!

இதனை உணர்ந்து கொள்பவர்
மறைப்புத் தன்மையில் உள்ள
மர்மங்களை முடிச்சு அவிழ்ப்பவர்
காலத்தின் கண்களை படம் பிடிப்பவர்
ஒன்று பலவாறாக மாறும் விதம் சிந்திப்பவர் .

அரைத்து வைக்கப்பட்ட மாவானது
எவ்வாறு பல்கி பெருகுகிறது
பொங்கி வழிகிறது
மாற்றம் அடைகிறது
என்பதில் அறிய துடிப்பவர்
உண்மை உணர வேண்டும்
உண்மையில் உள்ள மறைபொருள் தெரிய வேண்டும்
மறைபொருளின் விளக்கம் தெரிய வேண்டும்
ஆண்டவரே அனைத்துமாக உள்ளார்
அவரே உலகை இயக்குகிறார் ;
உலக உயிர்களை காக்கிறார் ;
உலக உயிர்களை வழி நடத்துகிறார் ;
உலகத்தை இயக்குகிறார் ;
பல்கிப் பெருக்குகிறார் ;
என்பதில் தெளிவு பெற வேண்டும் .

அழகு நயமாகவும் ,
கலை தோற்றமாகவும் ,
எழில் வண்ணமாகவும் ,
தென்றல் காற்றாகவும் ,
மழலை மொழியாகவும் ,
இசை பிம்பமாகவும் ,
கலையின் தோற்றமாகவும் ,
பல்வேறு கலை தோற்றமாகவும் ,
இந்த உலகத்தை படைத்து காப்பவர்
ஆண்டவர்  என்பதில் தெளிவு பெற வேண்டும்.

ஆண்டவரே நித்தியம்
மற்றவை அநித்தியம் என்று
உணரும் தன்மை கொண்டவராலேயே
தோற்றத்தின் ரகசியத்தையும்
பிறப்பின் மூலத்தையும்
படைப்பின் தன்மையையும்
அறிய முடியும்.

அரைத்து வைத்த மாவானது
எப்படி பல்கி பெருகுகிறதோ?
தனனுள் உள்ளது தான்
தன்னுள் கொண்டது தான்
தன்னுள் இருப்பது தான்
பெருக்கமடைய முடியும்
தன்னுள் இல்லாதது பெருக்க மடைய முடியாது.

உண்மையா திறமை ,
பெருகிய வண்ணம் இருக்கும்.
வெளிப்பட்ட வண்ணம் இருக்கும்.
களவாடிய திறமை ,
வெளிப்பட்ட வண்ணம் இருக்காது
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் மறைந்து விடும்

அதைப் போல என்றும் இருக்கும்
எல்லாம் வல்ல எல்லாவற்றையும் தன்னுள் வைத்திருக்கும்
எல்லாவற்றையும் தன்னுள் கொண்டிருக்கும்
எல்லாம் வல்ல ஆண்டவர்
இந்த பிரபஞ்சத்தை உயிர்களை உலகத்தை படைக்கிறார் .

ஆண்டவர்  ஒருவரால் மட்டுமே அனைத்தையும்
உருவாக்க முடியும் படைக்க முடியும்;
வெளிப்படுத்த முடியும் ; காக்க முடியும் .

படைக்கப்பட்ட பிரபஞ்சத்தையும்
உருவாக்கப்பட்ட உயிர்களையும்
உணர்ந்து கொள்ள வேண்டும் என்றால்
ஆண்டவரை அறிய வேண்டும் ;
ஆண்டவரை உணர வேண்டும் ;
ஆண்டவருள் இணைய வேண்டும் ;
ஆண்டவர்  ஆசி பெற வேண்டும் ;
ஆண்டவர்  சித்தத்தின் படி நடக்க வேண்டும் ;
ஆண்டவரை ஏற்றுக் கொள்ள வேண்டும் ;
ஆண்டவரே உண்மை என்பதை உணர வேண்டும் ;
ஆண்டவரே அனைத்தும் என்பதில் தெளிவு பெற வேண்டும் ;
ஆண்டவரே அனைத்தையும் காக்கிறார்
என்பதில் தெளிவு பெற வேண்டும் ;

இத்தகைய தன்மை கொண்டவரால் மட்டுமே
பிரபஞ்ச படைப்பையும் ,
உயிர்களின் உயிர்ப்பையும்
அறிய முடியும் என்கிறார்  இயேசு .

உண்மைக்கும் , போலிக்கும்
வேறுபாடு தெரிந்தவர்களால் உண்மையை உணர்ந்து
உண்மையின் தோற்றத்தை உணர்ந்து
உண்மையின் வெளிப்பாட்டை உணர்ந்து
உண்மையே ஆண்டவராக இருக்கிறது
ஆண்டவரின் அருள்பார்வையால் கருணைக் கொடையால்
இநத உலகம் பல்வேறு வண்ணமாக
பல்கிப் பெருகுகிறது என்பதை உணர்ந்து
கொள்ள முடியும் என்கிறார்  இயேசு .



திருமூலர்:

“””ஓங்காரத் துள்ளே யுதித்தஐம் பூதங்கள்
   ஓங்காரத் துள்ளே யுதித்த சராசரம்
   ஓங்காரத் தீதத் துயிர்மூன்றும் உற்றன
   ஓங்கார சீவ பரசிவ ரூபமே”””
                       --------திருமூலர்-------திருமந்திரம்---

கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறார்
அனைத்து இடத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்
கடவுள் இல்லாத இடமே இல்லை
கடவுள் எல்லா இடத்திலும் இருக்கும் போது
எதற்காக கோயில்கள் , வழிபாடுகள்
என்று பெரும்பாலானவர்களால் கேட்கப்படும் கேள்வி .

எல்லா இடத்திலும் உள்ள
கடவுளுடன் தொடர்பு கொள்ள முடியாதவர்களுக்கு ,

எல்லா இடத்திலும் உள்ள
கடவுளுடன் தொடர்பு கொண்டு
தனக்கு தேவையானவற்றை

பெற்றுக் கொள்ள முடியாதவர்களுக்கு ,
தன் தேவையை தீர்த்துக் கொள்ள முடியாதவர்களுக்கு ,
தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முடியாதவர்களுக்கு ,
தன் கனவுகளை நிஜமாக்கிக் கொள்ள முடியாதவர்களுக்கு ,
தன் விருப்பங்களை பூர்த்தி செய்து கொள்ள முடியாதவர்களுக்கு ,
தன் வாழ்க்கையை செழிப்பாக்கிக் கொள்ள முடியாதவர்களுக்கு ,
இன்பத்தின் வாசலை திறந்து கொள்ள முடியாதவர்களுக்கு ,
துயர மேகங்களை கலைக்க முடியாதவர்களுக்கு ,
கவலைகளை கழிக்க முடியாதவர்களுக்கு ,
இன்பத்தை நுகர முடியாதவர்களுக்கு ,
உண்மையின் இலக்கணத்தை அறிய முடியாதவர்களுக்கு ,
வெற்றியின் விலாசத்தை பார்க்க முடியாதவர்களுக்கு ,
தோல்வியின் சுமையிலிருந்து மீள முடியாதவர்களுக்கு ,
கண்ணீரின் தாக்கத்தை தீர்;க்க முடியாதவர்களுக்கு ,
சோகத்தை துhககி எறிய முடியாதவர்களுக்கு ,
மன அழுத்தத்தை தாங்க முடியாதவர்களுக்கு ,
கர்;ம வினையின் தாக்கத்திலிருந்து மீள முடியாதவர்களுக்கு ,
வறுமையின் கோர தாண்டவத்தால் பாதிக்கப்பட்டு
ஏற்றத்தின் சுகங்களை சுவைக்க முடியாதவர்களுக்கு ,

சுனாமியைப் போன்ற கோர தாண்டவம்
இதயத்தை ஆட்டி வைத்து
வாழ்க்கையைப் புரட்டி போட்டு
ரத்த ஆற்றின் சாவு மேட்டில்
நடந்து கொண்டிருக்கும் கடின வாழ்க்கையில்
இருந்து எழ முடியாதவர்களுக்கு ,
கட்டி வைக்கப் பட்டது தான் கோயில் .

எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும்
இறைவனுடன் தொடர்பு கொள்ள முடியாதவர்களுக்கு ,
படைக்கப் பட்டது தான் கோயில் .

எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும்
இறைவனுடன் தொடர்புகொள்ள முடிந்தவர்களுக்காக
படைக்கப் பட்டது அல்ல கோயில் .

இறைவனுடன் தொடர்பு கொள்ளத் தெரிந்தவர்கள்
கோயிலுக்கு செல்ல மாட்டார்கள்.
எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும்
இறைவனை உணர்ந்து வேண்டியதைப் பெற்று
இறைவனுடன் இரண்டறக் கலந்தவர்கள்
தான் அடைந்த பேரின்பத்தை
அனைவரும் பெறவேண்டும்
என்ற உயரிய நோக்கில்
அகத்தில் தான் கண்டதை ,
அகத்தில் தான் பெற்றதை ,
அகத்தில் தான் உணர்ந்ததை ,
அகத்தில் தான் அனுபவித்ததை ,
அகத்தில் தான் பெற்ற விளக்கத்தை ,
அகத்தில் தான் பெற்ற இறை அனுபவத்தை ,
அகத்தில் தான் பெற்ற ஆன்மீகத்தை ,
அகத்தில் தான் பெற்ற பேரின்பத்தை ,
அகத்தில் தான் சுவைத்த அனுபவத்தை ,
அகத்தில் தான் இன்புற்ற அமுதத்தை ,

புறத்தில் கோயிலாக வடிவமைத்து
சக்தியின் களமாக வடிவமைத்து
ஆற்றலின் இருப்பிடாமாக வடிவமைத்து
புறத்தை உணர்ந்து
புறத்தில் தெளிந்து
புறத்தேவைகளை நிறைவு செய்து
புறத்தேவைகளை பூர்த்தி செய்து
புறத்தின் முழுமையை முடித்து
அகத்தில் நுழைந்து
அக சூட்சுமத்தை உணர்ந்து
அக மறைபொருளில் தெளிந்து
அகத்திற்குள் ஓங்கி உயர்வு பெற்று
புறத்தை முழுமையாக விலக்கி
அகத்திற்குள் பிரவேசித்து
அகத்தின் சூட்சுமத்தை உணர்ந்து
இறை அனுபவம் பெற்று
இறை நிலை அடைய வேண்டும்
என்ற நோக்கில் வடிவமைக்கப்
பட்டதே கோயில் .


ஓம்:
ஓம் உச்சரிப்பதற்காகவோ , ஓதுவதற்காகவோ
கண்டு பிடிக்கப்பட்ட சொல் அன்று.
எல்லாச் சொற்களும் முடிந்து விட்ட நிலையில்
எல்லா ஓசைகளும் அடங்கி விட்ட நிலையில்
ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் போது
எல்லாச் சொற்களும் மறைந்து போய்
ஓம் என்பது மட்டுமே அதிர்கின்றது.

அதைச் சொல்லத் தொடங்கினால் அது நம்
காதுகளில் ஒலிக்கத் தொடங்கி விடும்.
அப்புறம் அந்த ஆதாரபூர்வமான ஓம்காரத்தை இழந்துவிடுவோம்.

மனமும் , அறிவும் , எண்ணங்களும்
ஒரு முடிவுக்கு வந்து விடும்
அதற்குப் பிறகு அபூர்வமானதொரு
அதிர்வு நிலை கொள்ளும்
அதைத் தான் இந்த நாடு ஓம் என்று சொன்னது .

எல்லையற்ற அமைதி , சூன்யம் விளையும் போது ,
அதற்கேயான ஓர்  ஒலி , ஓர்  ஓசை வந்து விடுகிறது - அதை
பிரபஞ்ச அமைதியின் ஓசை ,
அனாகதம் ,
எழுப்பப்படாத ஓசை ,
இசைக்கப்படாத சங்கீதம் ,
என்று சொல்வார்கள் .
ஓம் எந்த பெயர்  கொண்டு அழைக்கப்பட்டாலும்
ஓம் என்பது உண்டாக்கப்படும் ஒன்றல்ல .

இரண்டு கைகளின் மோதலினால்
ஓசை உண்டாகிறது பிறக்கிறது .
அது உண்டாக்கப்படும் ஓசை
எல்லா ஓசைகளும் மறைந்து விடுகிறபோது
இருமைப் பண்பே இல்லாமற் போய் விடும் போது
பூரணத் தன்மை நிலை பெற்று விடும் போது
அப்போது உண்டாக்கப்படாத ஓசை பிறக்கிறது
இந்திய முனிவர்கள் இதைத் தான் ஓம் என்று சொன்னார்கள்.

ஓம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஓசை அல்ல
தியானத்தின் அடியாழத்தில் கேட்கப்பட்டவை.
எல்லா ஓசைகளும் முடிவடைகிற
எல்லையில் வருவது இந்த ஓம்.

ஓம் என்பது பிரபஞ்ச ஒலி
ஓம் என்பது எழுப்பப்படும் ஒலி அல்ல
அது தன்னால் எழும்பும் ஒலி.
அது படைக்கப்படும் ஒலி அல்ல
அனைத்தையும் படைத்த ஒலி .

படைக்க காரணமானது,
ஆதி அந்தத்தில் இருப்பது,
தோற்றம் மறைவில் இருப்பது.

ஓம் என்பது தான் இருப்புநிலை
ஓம் என்பது தான் சுத்தவெளி
ஓம் என்பது தான் வெட்டவெளி
ஓம் என்பது தான் சிவகளம்
ஓம்--------ம்-----------ம்

ஆதியிலிருந்து தான் அனைத்தும் உண்டாகின
பஞ்ச பூதங்கள் எனப்படுபவை
நிலம் , நீர் , நெருப்பு, காற்று ,விண்
ஆகியவை ஆகும் .

விண் கூடி காற்று ,
காற்று எரிந்து நெருப்பு ,
நெருப்பு எரிந்து நீர் ,
நீர்  குறுகி இறுகி நிலம் உருவானது .

பஞ்சபூதங்கள் கூடி
உயிர்கள் ,உலகம், பிரபஞ்சம் தோன்றியது.
ஒன்று மூன்றாகி ,
மூன்று ஐந்தாகி ,
ஐந்து எட்டாகி ,
வருவது தான் மறைபொருள் .
அதை உணராமல் ரகசியம் தெரிய முடியாது .

இந்தப் பாடலில் திருமூலர்,
ஓன்று மூன்றாகியதை சொல்கிறார் ;
மூன்று ஐந்தாகியதை சொல்கிறார் ;
ஐந்து எட்டாகியதை சொல்கிறார் ;

இவை எல்லாமே சிவகளம் ,
இருப்பு நிலையின் சாரமே
இருப்பு நிலையின் பரிணாம வெளிப்பாடே ஆகும் .

உண்மை உணரும் போது தான்
இதன் உண்மை தெரியும்
உண்மை உணர்ந்த குருவால் இதன்
விளக்கம் பெற முடியும்.
புத்தகங்களை படித்து
உண்மை விளக்கம் பெற முடியாது.
உண்மை குருவை தேட வேண்டும்
உண்மை உணர்வை பெற வேண்டும்
உண்மை வழியை நாட வேண்டும்
உண்மை நிலையை அடைய வேண்டும்

உண்மை உணர முதலில் ஓரெழுத்து
உண்மை தெரிய வேண்டும்.
ஓம் என்பது எதற்கு ஓரெழுத்து என்று
அழைக்கப்படுகிறது என்பதில் தெளிவு பெற வேண்டும்.

அப்பொழுது தான் ஓம் என்ற இருப்பு நிலையே
பஞ்சபூதங்களாகி ,
அண்ட சராசரங்களாகி ,
அரூபம் , ரூபம், அரூபாரூபம் என்ற மூன்றாகி ,
அனைத்தும் இருப்பு நிலையின் சாராம்சத்தின் பிம்பமாகி ,
நிற்கும் நிலையை உணரும் போது தான்
அனைத்தும் சுத்தவெளி
அனைத்துமே இருப்ப நிலை
இருப்பு நிலையின் இயக்கமே இயக்க நிலை
இயக்க நிலையின் அடக்கமே இருப்புநிலை
இருப்பு நிலைக்குள் இயக்க நிலையும்
இயக்க நிலைக்குள் இருப்பு நிலையும்
சிவனுக்குள் சக்தியும்
சக்திக்குள் சிவனும்
இருப்பதை உணர்வதன் மூலம்

சக்தியை கழித்தால் சிவம்
சிவம் இயக்கம் பெற்றால் சக்தி

சிவம் இயக்கம் பெற்றால் சிவன் சக்தி
சக்தி கழிந்தால் சிவன் சிவமாகிறது
சக்தி இல்லாத சிவம் இருப்புநிலை
சக்தி உள்ள சிவம் இயக்கநிலை.

ஒன்று இல்லாமல் ஒன்று இல்லை
ஒன்றுக்குள் ஒன்று ,
ஒன்றை பிரிய ஒன்று ,
ஒன்றை நீங்க ஒன்று ,
ஒன்று உருவாக ஒன்று ,
ஒன்று தோன்ற ஒன்று ,
ஒன்று பிறக்க ஒன்று ,
ஒன்று முடிய ஒன்று ,
ஒன்று பெற ஒன்று ,
என்பதில் தெளிவு பெற வேண்டும் .

இயக்கநிலையில் உள்ள அனைத்துமே அழியக் கூடியது
இயக்க நிலையில் உள்ள அனைத்துமே மாற்றம் அடையக் கூடியது
இருப்பு நிலை ஒன்றே உண்மை ; மற்றதெல்லாம் பொய்
அழியாத நிரந்தரமான உண்மையை உணர்ந்து
உண்மையே இந்த பிரபஞ்சம் முழுவதும்
பொய்யாக நிரம்பி இருக்கிறது.

உண்மையை உணர்ந்து பொய்யை நீக்கி
பார்க்கும் திறன் உடையவர்களால் மட்டுமே
உண்மையே ஆண்டவனாக ,
பிரபஞ்சமாக ,
இறைநிலையாக ,
இறைத்தன்மையாக ,
நிரம்பி இருக்கிறது
என்பதை உணர்ந்து கொள்ள முடியும்
அறிவில் தெளிவு பெற முடியும்
என்கிறார் திருமூலர்.



இயேசு கிறிஸ்து - திருமூலர்:
இயேசு,
உண்மைக்கும் ,போலிக்கும்
உள்ள வேறுபாட்டை உணர்பவர்கள் மட்டுமே
உண்மையில் மறைந்துள்ள மறைபொருளையும்
மறைபொருளின் மூலத்தையும்
மூலமே ஆண்டவர்  என்பதையும் அறிந்து
கொள்ள முடியும் என்கிறார் .

அவ்வாறே ,
திருமூலரும் ,
உண்மையை உணரும் தகுதி
படைத்தவர்களால் மட்டுமே
எல்லாமாக உருவாகி இருப்பதே கடவுள் ,
எல்லாமாக விரிந்திருப்பதே கடவுள் ,
எல்லாமாக பரிணமித்திருப்பதே கடவுள் ,                                                                                                
என்பதை உணர்ந்து கொள்ள முடியும் என்கிறார் .

               
          “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                      போற்றினேன் பதிவுநாற்பத்தியொன்று ந்தான்முற்றே “”