November 22, 2019

பரம்பொருள்-பதிவு-90


            பரம்பொருள்-பதிவு-90

உலூபி :
“12 மாதங்கள் வனத்தில்
பிரம்மச்சாரியாக
வசிக்க வேண்டும்
என்பது தானே சட்டம்:”

“இந்த சட்டத்தை நன்றாக
ஆராய்ந்து பார்த்தால்.
வனத்தில் பிரம்மச்சாரியாக
இருக்க வேண்டும்
என்று தான் சட்டத்தில்
சொல்லப்பட்டு
இருக்கிறதே தவிர………….?
,நாட்டில் பிரம்மச்சாரியாக
இருக்க வேண்டும்
என்று சட்டத்தில்
சொல்லப்படவேயில்லையே?”

“அதன்படி பார்த்தால்
நீங்கள் நாட்டில் வசிக்கும்
போது பிரம்மச்சாரியாக
இருக்க வேண்டிய
அவசியமே இல்லை
சம்சாரியாகவே வசிக்கலாம்”

“ வனத்தில் தான்
நீங்கள் பிரம்மச்சாரியாக
இருக்க வேண்டும்
நாட்டில் இல்லை என்று
அந்த சட்டத்திற்கு
அர்த்தத்தை எடுத்துக்
கொண்டால் - இப்போது
நீங்கள் இருப்பது
எங்களுடைய நாட்டில்
உள்ள அரண்மனையில் ;
எங்களுடைய நாட்டில்
நீங்கள் பிரம்மச்சாரியாக
இருக்க வேண்டிய
அவசியம் இல்லை ;
எங்களுடைய நாட்டில் நீங்கள் 
சம்சாரியாகவே வசிக்கலாம்”

“அதாவது வனத்தில்
வசித்த போது
பிரம்மச்சாரியாக
இருந்த நீங்கள் ;
எங்களுடைய நாட்டில்
வசிக்கும் போது
சம்சாரியாக வசியுங்கள்”

அர்ஜுனன் :
“அப்படி என்றால்
12 மாதங்கள்
பிரம்மச்சாரியாக இருக்க
வேண்டும் என்று – அந்த
சட்டத்தில் சொல்லப்பட்டு
இருக்கிறதே !”

உலூபி :
“அது ஒன்றும் பெரிய
விஷயம் இல்லை”

 “12 மாதங்கள்
பிரம்மச்சாரியாக
இருக்க வேண்டும்
என்று தான் சட்டத்தில்
சொல்லப்பட்டு
இருக்கிறதே தவிர ;
12 மாதங்களும்
பிரம்மச்சாரியாக
இருக்க வேண்டும்
என்று அந்த சட்டத்தில்
சொல்லப்படவில்லையே?”

“அதன்படி பார்த்தால்
12 மாதங்களில் தேவைப்படும்
சமயத்தில் பிரம்மச்சாரியாகவும்
இருக்கலாம் - தேவைப்படும்
சமயத்தில் சம்சாரியாகவும்
இருக்கலாம் என்று தான்
அந்த சட்டம் சொல்கிறது”

“12 மாதங்களும்
பிரம்மச்சாரியாக
இருக்க வேண்டும் என்று
இருந்தால் மட்டுமே ;
12 மாதங்களும்
பிரம்மச்சாரியாக
இருகக வேண்டும் ;”

“12 மாதங்கள்
பிரம்மச்சாரியாக
இருக்க வேண்டும் என்றால்
தேவைப்படும் சமயத்தில்
பிரம்மச்சாரியாகவும் 
இருக்கலாம் - தேவைப்படும்
சமயத்தில் சம்சாரியாகவும்
இருக்கலாம் என்று
தான் அர்த்தம் ;

“மொத்தத்தில் உங்களுக்குள்
நீங்கள் வகுத்துக் கொண்ட
சட்டம் என்ன சொல்ல
வருகிறது என்றால்
12 மாதங்களில் தேவைப்படும்
சமயத்தில் வனத்தில்
பிரம்மச்சாரியாகவும்
இருக்கலாம் - தேவைப்படும்
சமயத்தில் நாட்டில்
சம்சாரியாகவும் இருக்கலாம்
என்று தான் சொல்கிறது;”

“தற்போது நீங்கள்
எங்களுடைய நாட்டில்
இருக்கிறீர்கள்-சட்டப்படி
பார்த்தால் நாட்டில் இருக்கும்
நீங்கள் சம்சாரியாக வாழலாம்”.

“சட்டத்தைப் பார்த்துத்
தானே நீங்கள் பயந்தீர்கள். ;
சட்டம் நமக்கு சாதகமாகத்
தானே இருக்கிறது ;
எனவே நீங்கள் என்னை
மணந்து என்னை தங்களுடைய
மனைவியாக ஏற்றுக்
கொண்டால் நான் மனம்
மகிழ்வேன்.- என்னை
தங்களுடைய மனைவியாக
ஏற்றுக் கொள்வீர்களா?”

அர்ஜுனன் :
(“அர்ஜுனன் உலூபியின்
அபாரமான அறிவுக்
கூர்மையைக் கண்டு
வியந்து போய் நின்றான்;
பேச நாக்கு எழவில்லை;
வாயிலிருந்து வார்த்தை
வரவில்லை;
தலை சுற்றுவது போல்
இருந்தது அர்ஜுனனுக்கு.;
இவ்வளவு அறிவுக்
கூர்மையைக் கொண்ட
ஒரு பெண்ணை அவன்
பார்த்ததே இல்லை ;
சிறிது நேரம் அமைதியாக
இருந்த அர்ஜுனன்
தன்னை சமாளித்துக் கொண்டு
பேசத் தொடங்கினான்;”)

“நீங்கள் அழகானவர் என்று
தான் நினைத்தேன்
என்னுடைய கணிப்பு தவறு
நீங்கள் வீரம் மிக்க
நங்கையாக இருக்கிறீர்கள் ;
அறிவுக்கூர்மை கொண்ட
மங்கையாக இருக்கிறீர்கள்;
அதுமட்டுமல்ல
அழகு ,வீரம், அறிவு,
இந்த மூன்றும் ஒருங்கே
கொண்ட பெண்ணை இதுவரை
நான் பார்த்ததேயில்லை;
முதன் முதலாக உங்களைத்
தான்  நான் பார்க்கிறேன்;” 

“மாதர்குல மாணிக்கம் நீங்கள் ;
பெண்களுக்குள் அதிசயம் நீங்கள் ;
உங்களைப் புகழ்வதற்கு
எந்த மொழியிலும்
வார்த்தைகளே இல்லை ;
என்பது மட்டும் உண்மை;”

உலூபி :
“அர்ஜுனனின் வார்த்தைகளைக்
கேட்ட உலூபி வெட்கத்தால்
தலை குனிந்தாள் ;
நாணத்தால் தலை சாய்ந்தாள்;” 

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
-------------22-11-2019
//////////////////////////////////////////