February 22, 2021

BOOK STALL - ARAGAN LETTER

 

அன்பிற்கினியவர்களே,

 

சென்னையில்

வருடந்தோறும்

புத்தகக் காட்சி

நடைபெறும்

 

வருடந்தோறும்

நடைபெறும் - அந்த

புத்தகக்காட்சியில்

உள்ள புத்தகங்களை

பார்வையிட்டு

வாங்குவதற்காக

தவறாமல் நான்

புத்தகக் காட்சிக்கு

செல்வேன்

 

“நான் எழுதியவைகள்

எப்போது-இந்த

புத்தகக் காட்சியில்

இடம்பெறும்”

என்று நான் பத்து

வருடங்களுக்கும்

மேலாக

புத்தகக்காட்சிக்கு

செல்லும் போது

எல்லாம்

நினைத்துக்

கொள்வேன்

 

பல்வேறு

மன உளைச்சல்கள்

துன்பங்கள்

கஷ்டங்கள்

கவலைகள் என்று

பல்வேறு

பிரச்சினைகளுக்கு

இடையே

10-01-2021-ம் தேதி

ஞாயிற்றுக் கிழமை

அன்று நான்

முதன் முதலில் எழுதி

வெளியிட்ட

அரவான் களப்பலி

என்ற தலைப்பைக்

கொண்ட புத்தகம்

மகாபாரதக் கதையில்

குருஷேத்திரப்போரில்

பாண்டவர்கள்

வெற்றி பெறுவதற்கு

காரணமாக இருந்த

அரவானின் வாழ்க்கை

வரலாற்றை

அடிப்படையாகக்

கொண்டதாகும்

 

தற்போது

சென்னையில்

நடைபெறவுள்ள

44-வது

புத்தகக் காட்சியில்

அரவான் களப்பலி

என்ற புத்தகத்தை

காட்சிப்படுத்தி

விற்பனை

செய்வதற்கு

கடை எண்.471

எனக்கு ஒதுக்கப்

பட்டிருக்கிறது

 

சென்னை

புத்தகக் காட்சியில்

என்னுடைய

புத்தகம்

காட்சிப்படுத்தப்பட்டு

விற்பனை

செய்யப்பட

வேண்டும்

என்ற என்னுடைய

எண்ணம் தற்போது

நிறைவேறி

இருக்கிறது

 

பிப்ரவரி-24

முதல்

மார்ச்-9

வரை

நடைபெறும்

புத்ககக் காட்சியில்

கடைஎண்.471—ல்

அரவான் களப்பலி

என்ற புத்தகம்

மட்டுமே

காட்சிப்படுத்தப்பட்டு

விற்பனை

செய்யப்படும்

என்ற விவரங்களை

தெரிவித்துக்

கொள்ள நான்

விரும்புகிறேன்

 

நன்றி

 

------என்றும் அன்புடன்

-------K.பாலகங்காதரன்

-----------M.Ed.,L..L.B

 

---------21-02-2021

/////////////////////////////////