November 29, 2018

திருக்குறள்- பதிவு-60


                      திருக்குறள்- பதிவு-60

பிறரை ஏமாற்றுவதை
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று:
பிறருக்கு தெரிந்து
பிறரை ஏமாற்றுவது

இரண்டு:
பிறருக்கு தெரியாமல்
பிறரை ஏமாற்றுவது

பிறருக்கு தெரிந்து
பிறரை ஏமாற்றுவது
என்பது சிறிது காலம்
தான் நீடிக்கும் - ஆனால்,
பிறருக்கு தெரியாமல்
பிறரை ஏமாற்றுவது
என்பது 
காலம் காலமாக
நீடித்துக் கொண்டிருக்கும்

முதல் பெண்ணின்
மகள் வீட்டை
விட்டு வெளியேறி
தான் காதலித்த
பையனை திருமணம்
செய்து கொண்டார்
இதைக் கேள்வி பட்ட
இரண்டாவது பெண்
முதல் பெண்ணிடம்
உங்கள் மகள்
வீட்டை விட்டு போய்
காதலித்த பையனை
திருமணம் செய்து
கொண்டதாக
கேள்வி பட்டேன்
வருத்தமாக இருக்கிறது
என்று சொல்கிறார்
அதற்கு முதல் பெண்
அப்படி எல்லாம்
ஒன்றும் இல்லை
என்னுடைய மகள்
அவளுடைய
மாமாவினுடைய
வீட்டிற்கு சென்று
இருக்கிறாள்
என்கிறாள் இது தான்
பிறருக்கு தெரிந்து
பிறரை ஏமாற்றுவது

இந்தியன் என்ற
படத்தையும்
அந்நியன் என்ற
படத்தையும்
எடுத்துக் கொண்டால்
இரண்டு படங்களும்
ஒரே கருத்தைத் தான்
சொல்ல வருவது
தெரியும் அதாவது
“தப்பு செய்தால்
கொலை செய்ய
வேண்டும்
தப்பு செய்பவர்களை
கொலை செய்வதில்
தப்பில்லை”
என்ற கருத்தை
சொல்ல வரும் படம்

இந்தியன் படத்தை
எடுத்துக் கொள்வோம்
அதில் இரண்டு கமல்
முதல் கமல்
வேலை செய்வார்
காதல் செய்வார்
இரண்டாவது கமல்
தப்பு செய்பவர்களை
கொலை செய்வார்

இந்தியன் படத்தில்
இருவர் செய்த செயலை
அந்நியன் படத்தில்
மூன்று பேர்கள்
பிரித்து செய்வார்கள்
அதாவது
ஒருவர் மூன்று
நிலைகளில் பிரிந்து
செயலைச் செய்வார்
முதல் நிலையில்
இருக்கும் விக்ரம்
வேலை செய்வார்
காதல் செய்வார்
இரண்டாவது நிலையில்
இருக்கும் விக்ரம்
காதல் செய்வார்
மூன்றாவது நிலையில்
இருக்கும் விக்ரம்
தப்பு செய்பவர்களை
கொலை செய்வார்


இந்தியன் படத்தில்
இருவர் செய்த செயலை
அந்நியன் படத்தில்
மூன்று நிலைகளில்
மூன்று நபர்கள்
பிரித்து செய்வார்கள்


இந்தியன் படத்தில்
கொலை செய்தவர்
யார் என்று
கண்டு பிடிக்க ஒரு
கும்பல் சுற்றிக்
கொண்டு அலையும்

அந்நியன் படத்தில்
கொலை செய்தவர்
யார் என்று
கண்டுபிடிக்க ஒரு
கும்பல் சுற்றிக்
கொண்டு அலையும்

இந்தியன் படத்தில்
முதல் கமல் மறைந்து
இரண்டாவது கமல்
தப்பு செய்தால்
கொலை செய்வேன்
என்பார்
கொலை செய்த
கமல் தப்பியது
போல் காட்டப்படும்

அந்நியன் படத்தில்
முதல் விக்ரம்
மற்றும் இரண்டாம்
விக்ரம் மறைந்து
மூன்றாவது விக்ரம்
தப்பு செய்தால்
கொலை செய்வேன்
என்பார்
கொலை செய்த
விக்ரம் தப்பியது
போல் காட்டப்படும்

இரண்டு படங்களும்
ஒரே ஒரு கருத்தைத்
தான் சொன்னது
“தப்பு செய்தால்
கொலை செய்ய
வேண்டும்
தப்பு செய்பவர்களை
கொலை செய்வதில்
தப்பில்லை”

இந்த இரண்டு
படங்களிலும்
சொல்லப்பட்ட கருத்து
ஒன்று என்றாலும்
பிரம்மாண்டம்
என்ற பெயரில்
கோடிக்கணக்கான
பணத்தை செலவழித்து
பெரிய நடிகர்கள்
சிறந்த தொழில்நுட்ப
வல்லுநர்கள்
ஆகியோரை வைத்து
ஒரு டைரக்டர்
அவர் படத்தை
அவரே காப்பி அடித்து
எடுத்த படத்தை
மக்களை பார்க்க
வைத்து இருக்கிறார்
இது தான்
பிறருக்கு தெரியாமல்
பிறரை ஏமாற்றுவது

பிறருக்கு தெரியாமல்
பிறரை ஏமாற்றுபவர்கள்
தான்
அந்தக் காலம் முதல்
இந்தக் காலம் வரை
இந்த உலகத்தை
ஆண்டு வந்திருக்கிறார்கள்

அவர்கள் தான் நிக்கோலஸ்
கோப்பர் நிக்கஸ்
கியார்டானோ புருனோ
கலிலியோ ஆகியோர்
சொன்ன கருத்து தவறு
என்று சொன்னார்கள்
என்பதை நாம் நினைவில்
கொள்ள வேண்டும்

---------  இன்னும் வரும்
---------  28-11-2018
///////////////////////////////////////////////////////////