August 29, 2018

திருக்குறள்-பதிவு-10


                        திருக்குறள்-பதிவு-10

“”””எனைத்தானும்
எஞ்ஞான்றும்
யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை””””

ஒருவரை அறிமுகப்
படுத்தும் போது
இரண்டு விதமான
செயல்களைச்
செய்யக் கூடாது.

 ஒன்று :ஒருவரை குறை
         சொல்லி அறிமுகப்
         படுத்தக் கூடாது

இரண்டு :ஒருவருடைய
         குறையை சொல்லி
         அறிமுகப்படுத்தக்
         கூடாது

ஒருவரை குறை சொல்லி
அறிமுகப் படுத்துவதற்கும்,
ஒருவருடைய
குறையை சொல்லி
அறிமுகப்படுத்துவதற்கும்
சிறிதளவு
வேறுபாடு இருக்கிறது.

ஒரு அதிகாரி
ஒரு அலுவலகத்திற்கு
புதியதாக
மாற்றலாகி வருகிறார்
அவருக்கு கீழ் உள்ள
மற்றொரு அதிகாரி
அலுவலகத்தில்
வேலை செய்பவர்களை
ஒவ்வொருவராக அறிமுகம்
செய்து வைக்கிறார்.

ஒவ்வொருவராக அறிமுகம்
செய்யும் போது,
முதலாவது நபரை
அறிமுகம் செய்து
வைக்கும்போது
இவர் கடின உழைப்பாளி;
இவர் நன்றாக
வேலை செய்வார்;
இவர் சொல்வதை
புரிந்து கொண்டு
விரைவாக வேலை செய்வார்;
என்று அறிமுகம்
செய்து வைக்கிறார்.

இரண்டாவது நபரை
அறிமுகம் செய்து
வைக்கும்போது,
இவர் கால நேரம்
பார்க்காமல்
வேலை செய்வார்;
இவர் கடினமாக உழைப்பார்;
இவர் கொடுத்த வேலையை
முடித்து விட்டுத் தான்
வீட்டிற்கு செல்வார்;
என்று அவரை அறிமுகம்
செய்து வைக்கிறார்.

ஆனால்,
மூன்றாவது நபரை
அறிமுகம் செய்து
வைக்கும் போது
இவர் சுமாராகத் தான்
வேலை செய்வார்;
இவர் வேலையை எளிதில்
புரிந்து கொள்ள மாட்டார்;
இவர் ஒரு வேலையை
செய்ய நீண்ட நேரம்
எடுத்துக் கொள்வார்;
என்று அறிமுகம்
செய்து வைக்கிறார்.
          
இது தான் ஒருவரை
அறிமுகம் செய்து
வைக்கும் போது
ஓருவரை குறை சொல்லி
அறிமுகம் செய்து வைப்பது.

ஒரு நண்பர்
மற்றொரு நண்பரிடம்
தன்னைப் பார்க்க வந்த
மூன்று நண்பர்களை
அறிமுகம்
செய்து வைக்கிறார்.

முதல் நபரை அறிமுகம்
செய்து வைக்கும் போது,
இவர் பட்டம்
முடித்து இருக்கிறார்;
பெரிய கம்பெனியில்
வேலை செய்கிறார்;
நிறைய சம்பளம்
வாங்குகிறார்; என்று
முதல் நபரை அறிமுகம்
செய்து வைக்கிறார்.

இரண்டாம் நபரை அறிமுகம்
செய்து வைக்கும்போது,
இவர் இஞ்சினியர்
படிப்பு படித்திருக்கிறார்;
நிறைய கட்டிடங்கள்
கட்டி இருக்கிறார்;
இவர் கட்டிய கட்டிடங்கள்
பிரமிப்பாகவும்,
அற்புதமாகவும்  இருக்கும்;
வீடு கட்டினால் அது
வித்தியாசமாக இருக்கும்;
என்று இரண்டாம் நபரை
அறிமுகம் செய்து வைக்கிறார்.

மூன்றாவது நபரை
அறிமுகம் செய்து
வைக்கும் போது
இவருக்கு வலது
காது கேக்காது;
எது பேசினாலும்
இடது காதில் தான்
பேச வேண்டும்;
நீங்கள் ஏதாவது
பேச நினைத்தால்
அல்லது கேட்க நினைத்தால்
இடது புறம் இருந்து
பேசுங்கள்; என்று
அறிமுகம் செய்து வைக்கிறார்.

இது தான் ஒருவரை
அறிமுகப் படுத்தும்போது
ஒருவருடைய குறையைச்
சொல்லி அறிமுகப்படுத்துவது.

ஒருவரை
அறிமுகப்படுத்தும்போது
ஒருவரை குறை சொல்லியும்
அறிமுகப்படுத்தக் கூடாது;
ஒருவருடைய குறையைச்
சொல்லியும்
அறிமுகப்படுத்தக் கூடாது;

ஒருவரை குறை சொல்லி
அவமானப்படுத்துவது தவறு
அதைவிட பெரிய தவறு
ஒருவருடைய குறையைச்
சொல்லி அவமானப்
படுத்துவது ஆகும்.
இதனால்
அவமானப் படுத்தப்
படுபவருடைய
மனம் எவ்வளவு
வருத்தப்படும் என்பதை
நினைத்துப் பார்க்க
வேண்டும்

இதைத் தான்
திருவள்ளுவர்
எவ்வளவு சிறியதாயினும்
எக்காலத்திலும்
எவரிடத்திலும்
பிறரை மனம்
வருத்தப்பட வைக்கும்
மனதால் எண்ணி
செய்யக்கூடிய
துன்பச் செயல்களை
செய்யாமல்
இருக்க வேண்டும்
என்பதைத்தான்

“”””எனைத்தானும்
எஞ்ஞான்றும்
யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை””””

என்ற திருக்குறளின் மூலம்
தெரிவிக்கிறார் திருவள்ளுவர்

---------  இன்னும் வரும்
---------  29-08-2018
///////////////////////////////////////////////////