May 18, 2014

இயேசு கிறிஸ்து - ஔவையார் - அடைத்திட்ட-பதிவு-67


இயேசு கிறிஸ்து -  ஔவையார் - அடைத்திட்ட-
                    
                         பதிவு-67

“””பதிவு அறுபத்துஏழை விரித்துச் சொல்ல
   ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்”””

இயேசு கிறிஸ்து :

“அப்பொழுது, பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து
என்பவன் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய் :”
---மத்தேயு - 26 : 14

“நான் அவரை உங்களுக்குக் காட்டிக் கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு 

என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது 

வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள்.”
---மத்தேயு - 26 : 15
“அதுமுதல் அவன் அவரைக் காட்டிக் கொடுப்பதற்குச் சமயம்
பார்த்துக் கொண்டிருந்தான்.”
---மத்தேயு - 26 : 16



“சாயங்காலமானபோது, பன்னிருவரோடுங்கூட அவர் பந்தியிருந்தார்.”
---மத்தேயு - 26 : 20

“அவர்கள் போஜனம் பண்ணுகையில், அவர்: உங்களிலொருவன் 

என்னைக் காட்டிக் கொடுப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் 

சொல்லுகிறேன் என்றார்.”
---மத்தேயு - 26 : 21

“அப்பொழுது, அவர்கள் மிகவும் துக்கமடைந்து, அவரை நோக்கி:
ஆண்டவரே, நானோ, நானோ? என்று ஒவ்வொருவராய்க் கேட்கத்
தொடங்கினார்கள்.”
---மத்தேயு - 26 : 22

“அவர், பிரதியுத்தரமாக: என்னோடே கூடத் தாலத்தில்
கையிடுகிறவனே என்னைக் காட்டிக் கொடுப்பான்.”
---மத்தேயு - 26 : 23

“மனுஷகுமாரன் தம்மைக் குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; 

ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக் 

கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ;
அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு
நலமாயிருக்கும் என்றார்.”
---மத்தேயு - 26 : 24

“அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவரை நோக்கி: ரபீ,
நானோ? என்றான்; அதற்கு அவர்: நீ சொன்னபடி தான்
என்றார்.”
---மத்தேயு - 26 : 25



“அவர் இப்படி பேசுகையில், பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் 

வந்தான்;  அவனோடேகூடப் பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் 

அனுப்பின  திரளான ஜனங்கள் பட்டயங்களையும் தடிகளையும்
பிடித்துக்கொணடு வந்தார்கள்.”
---மத்தேயு - 26 : 47

“அவரைக் காட்டிக் கொடுக்கிறவன்: நான் எவனை
முத்தஞ்செய்வேனோ அவன் தான், அவனைப் பிடித்துக்கொள்ளுங்கள்
என்றுஅவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்.”
---மத்தேயு - 26 : 48

“உடனே அவன் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, வாழ்க என்று சொல்லி,
அவரை முத்தஞ்செய்தான்.”
---மத்தேயு - 26 : 49

“இயேசு அவனை நோக்கி: சிநேகிதனே, என்னத்திற்காக வந்திருக்கிறாய் 

என்றார். அப்பொழுது, அவர்கள் கிட்ட வந்து, இயேசுவின் மேல் 

கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள்.”
---மத்தேயு - 26 : 50



“அப்பொழுது, அவரைக் காட்டிக் கொடுத்த யூதாஸ், அவர் 

மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு,
மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசைப் பிரதான
ஆசாரியரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும்பக் கொண்டு வந்து:”
---மத்தேயு - 27 : 3

“குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால்
பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள்.”
---மத்தேயு - 27 : 4

“அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசைத் தேவாலயத்திலே எறிந்து
விட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான்.”
---மத்தேயு - 27 : 5

“பிரதான ஆசாரியர் அந்த வெள்ளிக்காசை எடுத்து: இது
இரத்தக்கிரயமானதால், காணிக்கைப் பெட்டியிலே இதைப் 

போடலாகாதென்று சொல்லி,”
---மத்தேயு - 27 : 6

“ஆலோசனை பண்ணின பின்பு, அந்தியரை அடக்கம் பண்ணுவதற்குக்
குயவனுடைய நிலத்தை அதினாலே கொண்டார்கள்.”
---மத்தேயு - 27 : 7

“இதினிமித்தம் அந்த நிலம் இந்நாள் வரைக்கும் இரத்தநிலம்
என்னப்படுகிறது”
---மத்தேயு - 27 : 8


நம்மிடமுள்ள எந்த சத்தியையும்
பிறரை ஆள்வதற்குப் பயன்படுத்தக் கூடாது.
ஆள்வது என்றால் அடிமைப்படுத்துவது என்று பொருள்.

சக்தி என்றால் அதீத சக்தி என்று பொருள் அல்ல
சக்தி என்றால்  பணம்,பதவி, புகழ், அதிகாரம் என்று பொருள்
நம்மிடமுள்ள சக்தி என்றால் நமக்கு கிடைத்த
பணம்,பதவி, புகழ், அதிகாரம் என்று பொருள்.

நம்மிடமுள்ள சக்தியை பிறரை ஆள்வதற்கு பயன்படுத்தக் கூடாது என்றால்
நமக்கு கிடைத்த பணம்,பதவி, புகழ், அதிகாரம் ஆகியவற்றைப்
பயன்படுத்தி பிறரை அடிமையாக வைத்திருக்கக் கூடாது என்று பொருள்.

நாம் பிறரை அடிமையாக நமக்கு வைத்திருக்கவும் கூடாது;
நாம் பிறரிடம் அடிமையாகவும் இருக்கக் கூடாது;

ஒருவரை அடிமைப்படுத்துவது எளிதான செயல் தான்
பிறரிடம் உள்ள ஏழ்மை, அறியாமை, முடியாமை ஆகியவற்றைப்
பயன்படுத்தி ஒருவரை எளிதாக அடிமைப் படுத்தி விடலாம்.

ஒருவரிடம் உள்ள ஏழ்மையையோ அல்லது
அறிமையையோ அல்லது
முடியாமையையோ அல்லது
தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி
ஒருவரை அடிமைப்படுத்தி விடலாம்.

ஏழ்மை, அறியாமை, முடியாமை இந்த மூன்றில்
எந்த ஒன்று ஒருவரிடம் இருக்கிறதோ
அவரை அடிமைப்படுத்தி விடலாம்.

பழைய ஒன்று புதிய ஒன்றாக மாறும் போது அடிமையாகிறது
புதிய ஒன்று மீண்டும் பழைய ஒன்றாக மாறும் போது
அடிமைத் தனத்திலிருந்து விடுபடுகிறது.

உலகில் உள்ள அனைவரும்
ஒருவரை அடிமைப்படுத்த வேண்டும் என்றால்
ஒரே முறையைத் தான் கையாள்கிறார்.

ஒருவரிடம் உள்ள பழைய எண்ணங்களை
முற்றிலுமாக நீக்கி விட்டு
பழைய எண்ணம் உபயோகமற்றது
எதற்கும் பலனளிக்கக் கூடியது அல்ல;
தேவைகளை நிறைவேற்றக் கூடியது அல்ல;
கனவுகளை மெய்ப்பிக்கக் கூடியது அல்ல;
என்று ஒருவரை நம்ப வைத்து விட்டால்,
அவர் பழைய எண்ணத்திலிருந்து முற்றிலுமாக விடுபட்டு
புதிய எண்ணத்திற்கு வரும் போது

இது தான் உன் வாழ்க்கையை மாற்றக் கூடியது;
ஆசைகளை நிறைவேற்றக் கூடியது;
சோகங்களை ஓட்டக் கூடியது;
கவலைகளை விலக்கக் கூடியது;
கண்ணீரை துடைக்கக் கூடியது;
நிம்மதியான வாழ்க்கை தரக் கூடியது;
என்பதை விதைத்து விட்டால்
அவர் பழைய எண்ணத்திலிருந்து விடுபட்டு
புதிய எண்ணத்திற்கு வரும்போது
அதற்கு அடிமையாகி விடுவார்
அப்பொழுது அவரை நாம்
நமக்கு அடிமையாக வைத்து விடலாம்.

ஒரு பாத்திரம் இருக்கிறது
பாத்திரத்தில் தண்ணீர் முழுவதும் இருக்கிறது
தண்ணீர் முழுவதையும் நீக்கி விட்டு
அதில் தார் ஊற்றினால் அது இறுக்கமாக
பாத்திரத்தை பிடித்துக் கொள்ளும்.

பாத்திரத்தில் உள்ள தண்ணீர்
பாத்திரத்தில் ஓட்டாமல் தனித்து இருக்கிறது.

அதைப்போல ஒருவரிடம் உள்ள
பழைய எண்ணம் நம்பிக்கை இல்லாமல்
வாழ்க்கையுடன் ஆன்மாவுடன் ஒட்டி இருக்கிறது

தண்ணீர் முழுவதும் நீக்கி விட்டால்
பழைய எண்ணம் முழுவதும் நீக்கி விட்டால்
அந்த பாத்திரத்தில் தார் நிரப்பினால்
இறுக்கமாக பிடித்துக் கொள்கிறது
அதைப் போல புதிய எண்ணம்
ஒருவருடைய ஆன்மாவுடன் பிணைந்து விட்டால்
எண்ணத்துடன் இரண்டறக் கலந்து விட்டால்
அந்த புதிய எண்ணத்தை வைத்து
ஒருவரை எளிதாக அடிமைப்படுத்தி விடலாம்

ஒன்று மற்றொன்றாக மாறும்
அனைத்தையும் அடிமைப்படுத்த முடியாது;
கெட்ட ஒன்று நல்ல ஒன்றாக மாறும் போது
அடிமைப்படுத்த முடியாது;
நல்ல ஒன்ற கெட்ட ஒன்றாக மாறும்போது
அடிமைப்படுத்தி விடலாம்;


எந்த ஒன்று, எந்த ஒன்றாக
மாற்றம் அடைகிறது என்பதைப் பொறுத்து
அடிமைப்படுத்தும் வேலை நடை பெற்று வருகிறது.

ஒருவரிடம் அறியாமை, ஏழ்மை, முடியாமை
இந்த மூன்றில்,
ஒன்றோ அல்லது இரண்டோ அல்லது மூன்றோ இருந்தாலும்
அதைப் பயன்படுத்தி
பழைய எண்ணத்திலிருந்து
புதிய எண்ணத்திற்கு மாற்றி விட்டால்
ஒருவரை அடிமைப்படுத்தி விடலாம்.

இசையை ஒரளவு கற்றுக் கொண்ட ஒருவர்
இசையில் சிறிதளவு கற்றுக் கொண்ட ஒருவர்
இசையைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள
இசையை மேலும் அறிந்து கொள்ள
இசை ஓரளவு தெரிந்த ஒருவரிடம்
இசை அனைத்தும் தனக்கு தெரியும்
என்று கூறும் ஒருவரிடம்
இசை கற்றுக் கொள்ள செல்பவர்
இசை கற்றுக் கொடுப்பவர்
இசை ஓரளவு தெரிந்த போலியானவர்
இசை தெரிந்தது போல் நடிப்பவர் என்று உணராமல்
இசை கற்றுக் கொடுப்பவர்
இசையில் வல்லவர் என்று நம்பி
அவர் சொல்லும் தவறான
இசையை கற்றுக் கொண்டு
தனக்கு ஏற்கனவே தெரிந்த
இசை தவறானது என்று நினைப்பாரானால்
அவர் அறியாமையினால்
பழைய எண்ணத்திலிருந்து
புதிய எண்ணத்திற்கு மாற்றப்பட்டு
அடிமையாக்கப்பட்டவர் என்று தெரிந்து கொள்ளலாம்

சண்டை கலையில் திறமை பெற்ற ஒருவர்
சண்டை கலையை அறிந்த ஒருவர்
அதை நல்லதிற்கு பயன்படுத்துபவர்களுக்கு
நான் சொல்லித் தருவேன் என்று
நேர்மையாக இருக்கும் ஒருவரிடம்
ஏழ்மை நிலையில் இருக்கும் ஒருவரிடம்
சண்டை அடிதடியில் ஈடுபடுபவர்கள்
எங்களுக்கு
உங்கள் கலையை கற்றுக் கொடுங்கள்
உங்கள் ஏழ்மையை நீக்குகிறோம்
என்று சொல்லும் போது
தன்னுடைய பழைய கொள்கை
தன் ஏழ்மை நிலையை மாற்றவில்லை என்று நினைத்து
அவருக்கு சண்டை கற்றுத் தருவாரானால்
அவர் ஏழ்மையினால்
பழைய எண்ணத்திலிருந்து
புதிய எண்ணத்திற்கு மாற்றப்பட்டு
அடிமைப்படுத்தப்பபட்டவர் என்று தெரிந்து கொள்ளலாம்

வசதி படைத்த ஒருவர்
பண பரிமாற்றங்களையும், தொழில்களையும்
நேரடியாக பார்த்துக் கொண்ட ஒருவர்
தன்னுடைய வாரிசுகளுக்கு பணத்தின் அருமை தெரியவில்லை;
அவர்களுக்கு சொத்தை பிரித்துக் கொடுத்தால் அழிந்து விடுவார்கள்
தொழிலை பராமரிக்கும் தகுதி
தன்னுடைய வாரிசுகளுக்கு இல்லை;
என்பதை உணர்ந்து,
அவரே அனைத்தையும் பார்த்துக் கொண்டு வரும்போது,
அவருடைய உடல் நலம் குன்றி
முடியாமல் போகும் போது,
இன்னொருவருடைய தயவு தேவை என்ற நிலை வரும்போது,
அவருடைய வாரிசுகள் சொத்தை
எங்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும்
அப்படி கொடுத்தால் தான்
உங்களை கவனிப்போம் என்று கூறும் போது,
வேறுவழி இல்லை என்று தெரியும்போது,
சொத்தை வாரிசுகளுக்கு பிரித்து கொடுத்தால்
அவர் முடியாமையினால்
பழைய எண்ணத்திலிருந்து
புதிய எண்ணத்திற்கு மாற்றப்பட்டு
அடிமைப்படுத்தப்பட்டவர் என்று தெரிந்து கொள்ளலாம்.

அறியாமை, ஏழ்மை, முடியாமை இந்த மூன்றில்
எந்த ஒன்று யாரிடம் இருந்தாலும்
அதை நமக்கு சாதகமாகப் பயன் படுத்தி
ஒருவரை அடிமைப் படுத்தி விடலாம்.

அப்பொழுது பன்னிருவரில் ஒருவனாகிய
யூதாஸ் காரியோத்து என்பவன்
பிரதான ஆசாரியரிடத்திற்குப் போனான்.

ஒருவன் கெட்ட எண்ணத்துடன்
கெட்ட செயல்களைச் செய்வதற்காக
கெட்டவர்களை நாடிப் போனானாகில்
அவன் அறியாமையினால்
மாட்டிக் கொண்டிருக்கிறான்
சிக்கிக் கொண்டிருக்கிறான்
என்று அறிந்து கொள்ளலாம்.

யூதாஸ் காரியோத்து பிரதான ஆசாரியரிடத்தில் போய்
நான் அவரை உங்களுக்குக் காட்டிக் கொடுக்கிறேன்
நீங்கள் எனக்கு என்ன செய்வீர்கள் என்றான்.

அதற்கு அவர்கள் அவனுக்கு 30 வெள்ளிக் காசுகள்
கொடுக்க உடன் பட்டார்கள்.
அது முதல் யூதாஸ் காரியோத்து
யேசுவை காட்டிக் கொடுக்க சமயம் பார்த்துக் கொண்டிருந்தான்.

உண்மையை எது என்ற அறியாததாலும்;
உண்மை எது என்று தெரியாததாலும்;
உண்மையைப் பற்றி புரியாததாலும்;
தெளிவான சிந்தனை இல்லாமல் இருந்ததாலும்;
யூதாஸ் காரியோத்து 
இயேசுவின் அருமை பெருமைகளை உணராமல் இருந்ததாலும்;
இயேசுவின் மகிமை புரியாமல் இருந்ததாலும்;
உண்மைக்கும், பொய்யுக்கும்
வேறுபாடு தெரியாமல் இருந்ததாலும்;
இயேசுவின் மேல் வைத்த
அன்பு சந்தேகத்திற்குரியதாக இருந்ததாலும்;
அறியாமையினால்
இயேசுவை காட்டிக் கொடுக்க தீர்மானித்தான்.

அதனால் தான் யூதாஸ் காரியோத்து
பிரதான ஆசாரியரிடத்தில்
இயேசுவை காட்டிக் கொடுத்தால்
என்ன செய்வீர்கள் என்று கேட்டான்.
அவர்கள் 30 வெள்ளிக் காசு கொடுக்க உடன்பட்டார்கள்.

யூதாஸ் காரியோத்தின் அறியாமையை
தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட
பிரதான ஆசாரியர்கள்
யூதாஸ் காரியோத்தின் மனதில்
ஏற்கெனவே இருந்த,
இயேசுவைப் பற்றிய எண்ணங்கள்
பழைய எண்ணங்களை எடுத்து விட்டு
அவரை காட்டிக் கொடுக்கும் படியான
புதிய எண்ணத்தை விதைத்து விட்டார்கள்.

,இதனால் தான் யூதாஸ் காரியோத்து அறியாமையினால்
இயேசுவின் மேல் வைத்த அன்பு மாறி
இயேசுவை காட்டிக் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு
பிரதான ஆசாரியர்களின்
அடிமையாக மாற்றப்பட்டு
இயேசுவை காட்டிக் கொடுக்க சமயம்
பார்த்துக் கொண்டிருந்தான்.

சாயங்காலமான போது
இயேசு பன்னிருவருங்கூட பந்தியிருந்தார்.
அவர்கள் போஜனம் பண்ணுகையில்
இயேசு அவர்களை நோக்கி,
உங்களிலொருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான்
என்று மெய்யாகவே
உங்களுக்குச் சொல்கிறேன் என்றார்.

இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு
துக்கமடைந்தவர்கள்;
வருத்தமடைந்தவர்கள்;
ஒவ்வொருவராக இயேசுவை நோக்கி,
ஆண்டவரே நானா?
தங்களை காட்டிக் கொடுப்பவன் என்று
கேட்கத் தொடங்கினார்கள்.

அனைவர் உள்ளத்திலும்
சந்தேகம் குடியேறி விட்டது.

எழுதப்பட்டது, எழுதப்பட்டபடி
நடக்க வேண்டி
தாங்கள் ஒரு கருவியாகி விடுவோமே
என்ற கலக்கத்திலேயே
தங்கள் மேல் சந்தேகம் கொண்டனர்.

அவர்கள் கொண்ட சந்தேகம் விலகும் வகையில்
இயேசு பிரதியுத்தரமாக,
என்னோடே கூடத் தாலத்தில் கையிடுகிறவனே
என்னைக் காட்டிக் கொடுப்பான் என்றார்.

மனுஷகுமாரனான இயேசு எழுதியிருக்கிறபடியே போகிறார்
மனுஷகுமாரன் - எந்த
மனுஷனால் காட்டிக் கொடுக்கப் படப் போகிறாரோ - அந்த
மனுஷன் பிறவாமல் இருந்தால்
பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார்.

இயேசுவை காட்டிக் கொடுப்பவன் பிறவாமல் இருந்தால்
இயேசுவை காட்டி கொடுக்க முடியாமல் போயிருக்குமே என்றனர்.

யூதாஸ் காரியோத்து அவரை நோக்கி
ரபி நானோ என்றான்
அதற்கு அவர் நீ சொன்னபடி தான் என்றார்.

கெட்டவர்கள் நல்லவர்களோடு கூட இருக்கையில்
நல்லவர்கள் என்ன செய்கைகளை
என்ன செயல்களை செய்வார்களோ
அந்த செயல்களை தாங்களும் செய்வார்கள்.

நல்லவர்கள் குழுமி இருக்கும் போது கெட்டவர்கள்
நல்லவர்களை பின்பற்றவில்லை எனில்
நல்லவர்கள் செயல்களை பின்பற்றவில்லை எனில்
தங்களை கெட்டவர்கள் என்று அடையாளம் கண்டு கொண்டு
தங்களை விலக்கி வைத்து விடுவார்கள்;
தங்கள் எண்த்தை புரிந்து கொள்வார்கள்;
தங்கள் குணங்களை தெரிந்து கொள்வார்கள்;
என்ற காரணத்தினால் - நல்லவர்கள்
எதை ஏற்றுக் கொண்டார்களோ
எந்த செயல்களை செய்கிறார்களோ
அதையே கெட்டவர்களும் செய்கிறார்கள்.

தங்களை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருக்க
தங்கள் எண்ணங்களை
இந்த சமுதாயம் புரிந்து கொள்ளாமல் இருக்க
கெட்ட எண்ணங்களை மனதில் வைத்துக் கொண்டு
நல்லவர்கள் மத்தியில் நல்லவர் போல் நடிப்பார்கள்.

அதனால் தான் யூதாஸ் காரியோத்து
தன் குணம் வெளிப்படாமல் இருக்க
தன் எண்ணம் வெளிப்படாமல் இருக்க
ரபி நானோ என்றான்
அதற்கு இயேசு நீ சொன்னபடி தான் என்றார்.

கெட்டவர்கள் நல்லவர்கள் மத்தியில் இருந்தாலும்
கெட்டவர்கள் தங்கள்
கெட்ட செயல்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும்
காலம் வரும் வரை கெட்டவர்கள் குணமும் வெளிப்படாது
கெட்டவர்களும் வெளிப்பட மாட்டார்கள்.

பன்னிருவரில் ஒருவனாகிய
யூதாஸ் காரியோத்து வந்தான்
அவனோடே கூடப் பிரதான ஆசாரியரும்
ஜனத்தின் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்கள்
பட்டயங்களையும், தடிகளையும்
பிடித்துக் கொண்டு வந்தார்கள்.

யூதாஸ் காரியோத்து தான் யார் என்று
காட்டக் கூடிய வேளை வந்தது
யூதாஸ் காரியோத்து நான் யாரை முத்தஞ் செய்கிறேனோ
அவர் தான் இயேசு
அவரைப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று
அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்.

யூதாஸ் காரியோத்து அறியாமையினால்
இயேசுவின் மேல் வைத்த பழைய எண்ணங்களான
நல்ல எண்ணங்கள் மாறி
புதிய எண்ணமான
இயேசுவை காட்டிக் கொடுக்க வேண்டும்
என்ற எண்ணம்
அவன் மனதில் குடிபுகுந்து விட்டதால்
கெட்டவர்களுக்கு அடிமையாகி
கெட்டவர்கள் புடை சூழ
இயேசுவை காட்டிக் கொடுக்க முடிவெடுத்து

சதி திட்டம் தீட்டி
அதனை செயல்படுத்தும் முறைகளை
அவர்களுக்குக் கூறி
இயேசுவை பிடிப்பதற்குரிய அடையாளங்களை
அவர்களுக்கு கூறி
அவர்களை அழைத்து வந்திருந்தான்.

யூதாஸ் காரியோத்து இயேசுவினிடத்தில் வந்து
ரபீ வாழ்க என்று சொல்லி
அவரை முத்தமிட்டான்
முத்தம் என்பது ஆழ்ந்த அன்பின் வெளிப்பாடு
அத்தகைய முத்தம்
காட்டிக் கொடுப்பதற்கு பயன்படுத்தப்பட்டது.

இயேசு அவனை நோக்கி,
சினேகிதனே எதற்காக வந்திருக்கிறாய் என்றார்
அப்பொழுது அவர்கள்,
கிட்டே வந்து இயேசுவின் மேல் கையைப் போட்டு
அவரைப் பிடித்தார்கள்.


யூதாஸ் காரியோத்து அறியாமையினால் அடிமையாகி
இயேசுவை காட்டிக் கொடுத்து
இயேசுவை சிறைப்பிடிக்க
வைத்து விட்டான்.

பழைய ஒன்று புதிய ஒன்றாக மாறும்போது
பழைய நல்ல ஒன்று புதிய கெட்ட ஒன்றாக மாறும் போது
குழப்பம் விலகி சிந்தனை தெளிவு அடைந்தால்
புதிய கெட்ட ஒன்று மீண்டும பழைய நல்ல ஒன்றாக  மாறும்

அதாவது
பாத்திரத்தில் உள்ள தண்ணீர் - அது
பழைய நல்ல ஒன்று;

அந்த தண்ணீரை கீழே கொட்டி விட்டு
தாரை நிரப்பினால் - அது
கெட்ட ஒன்று;

தாரை கீழே ஊற்றி மீண்டும் நீரை நிரப்பினால் - அது
புதிய நல்ல ஒன்று


இதே நிலை தான் யூதாஸ் காரியோத்து விஷயத்திலும் ஏற்பட்டது
நல்ல எண்ணத்துடன் இருந்து
கெட்ட எண்ணத்திற்கு மாறி
மீண்டும் நல்ல எண்ணத்திற்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டது.

அவரைக் காட்டிக் கொடுத்த யூதாஸ் காரியோத்து
அவர் மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்ட்டதைக் கண்டு
மனஸ்தாபப்பட்டு
அந்த முப்பது வெள்ளிக் காசைப்
பிரதான ஆசாரியரிடத்திற்கும்
மூப்பரிடத்திற்கும் திரும்பக் கொண்டு வந்து
குற்றமில்லாத இரத்தத்தை
நான் காட்டிக் கொடுத்ததினால்
பாவஞ் செய்தேன் என்றான்

யூதாஸ் காரியோத்து மீண்டும்
பழைய நல்ல நினைவுக்கு
நல்ல எண்ணத்திற்கு
மாறிக் கொண்டு வருவதை
அவனது பேச்சும் செயலும்
உணர்த்திக் கொண்டு வருகிறது

குற்றமில்லாத இரத்தத்தை
நான் காட்டிக் கொடுத்ததினால்
பாவஞ் செய்தேன் என்றான்

அதற்கு அவர்கள்
எங்களுக்கென்ன அது
உன்பாடு என்றார்கள்
அப்பொழுது அவன் அந்த வெள்ளிக்காசைத்
தேவாலயத்தில் எறிந்து விட்டு
புறப்பட்டுப்போய்
நான்று கொண்டு செத்தான்.

யூதாஸ் காரியோத்து
அறியாமையினால்
கெட்டவர்களுக்கு அடிமையாகி
பழைய நல்ல எண்ணத்திலிருந்து
புதிய கெட்ட எண்ணத்திற்கு
மாறிய பிறகு
தான் செய்தது
தவறு என்று உணர்ந்து
மீண்டும் பழைய
நல்ல எண்ணத்திற்கு திரும்பும்போது
தன் செயலுக்காக
தான் செய்த தவறுக்காக
உயிரை விட்டான்

பிரதான ஆசாரியர் அந்த வெள்ளிக்காசை எடுத்து
இது இரத்தக் கிரயமானதால் காணிக்கைப் பெட்டியில்
அதைப் போடக் கூடாதென்று சொல்லி
ஆலோசனை பண்ணின பின்பு
அந்நியரை அடக்கம் பண்ணுவதற்குக்
குயவனுடைய நிலத்தை அதினாலே கொண்டார்கள்.

இதினி மித்தம் அந்த நிலம்
இந்நாள் வரைக்கும் இரத்த நிலம் என்னப்படுகிறது

யூதாஸ் காரியோத்து மனநிலையில் ஏற்பட்ட மாற்றம்
அவனை அறியாமையில் தள்ளி அடிமைப்படுத்தியது
நாம் எடுக்கும் தவறான முடிவுகள்
சில சமயம் நம்மை அழித்து விடும்

தவறுகள் சில சமயம் திருத்தப்படாமல் போகலாம்
திருத்த முடியாத தவறுகள் என்று சில உண்டு
திருத்த முடியாத தவறைத் தான்
யூதாஸ் காரியோத்து செய்தான்.

நல்ல எண்ணத்திலிருந்து கெட்ட எண்ணத்திற்கு மாறி
இயேசுவை காட்டிக் கொடுத்ததின் மூலம்
யூதாஸ் காரியோத்து திருத்த முடியாத தவறைச் செய்தான்

தான் தவறு செய்து விட்டோம் என்று உணரும்போது
அதை திருத்துவதற்கு வழி இல்லாமல் போய் விட்டது

தவறுகளில் இரண்டு நிலை உண்டு
1 தவறை திருத்திக் கொள்வதின் மூலம் தவறை சரி செய்வது
2 தவறை திருத்திக் கொண்டாலும் தவறை சரி செய்ய முடியாமல் போவது

இந்த பரீட்சைக்கு இப்படித்தான் படிக்க வேண்டும்
என்று  உணராமல்
தேர்வில் தேர்ச்சியுறாமல் இருந்து விட்டு
அத்தகைய தவறை மீண்டும் செய்யாமல்
எந்த பரீட்சைக்கு
எப்படி படிக்க வேண்டும் என்று உணர்ந்துபடித்து
பரீட்சையில் வெற்றி பெறுவது
தவறை திருத்திக் கொள்வதின் மூலம் தவறை சரி செய்வது

யூதாஸ் காரியோத்து இயேசுவை காட்டிக் கொடுத்தது
திருத்திக் கொள்ள முடியாத தவறு
இயேசுவை காட்டிக் கொடுத்தது தவறு என்று
யூதாஸ் காரியோத்து உணர்ந்த போது
அந்த தவறு சரி செய்ய முடியாமல் போனது.

ஆகவே தவறு செய்தாலும்
திருத்தக் கூடிய தவறா
திருத்த முடியாத தவறா என்று
உணர்ந்து செய்ய வேண்டும்.
தவறு செய்பவன் அவ்வாறு செய்வதில்லை
அறியாமையினால், ஏழ்மையினால், முடியாமையினால்  - செய்வதால்
செய்யக்கூடிய தவறு
சரி செய்யக் கூடிய தவறா?
சரி செய்ய முடியாமல் போகும் தவறா ?
என்று உணர்ந்து செய்வதில்லை.

யூதாஸ் காரியோத்து அத்தகைய நிலையில் இருந்தான்
இயேசுவுடன் இருந்த போது
நல்ல எண்ணத்தில் இருந்தான்.
அறியாமையினால் கெட்டவர்களுக்கு அடிமையான போது
கெட்ட செயல்களைச் செய்வதற்காக
பழைய நல்ல எண்ணத்திலிருந்து விடுபட்டு
இயேசுவை காட்டிக் கொடுக்கும்
கெட்ட எண்ணமான
புதிய எண்ணத்திற்கு மாறி விட்டான்
தான் செய்தது தவறு என்று உணர்ந்த போது
அந்த தவறை திருத்த சரி செய்ய முற்பட்டான்

தான் செய்த தவறு திருத்திக் கொள்ள முடியாத
சரி செய்ய முடியாமல் போன தவறு
என்று  உணர்ந்த போது
தான் பழைய நிலைக்கு திரும்பி விட்டான்.

தான் செய்தது தவறு என்று உணர்ந்து
சரி செய்ய முடியாத தவறு
என்று உணர்ந்து
மனம் வேதனைப்பட்டு
வருத்தப்பட்டு இறந்தான்.

அறியாமையினால் அடிமைப்பட்டு
நாம் செய்யும் தவறுகள்
சில சமயங்கள்
சரி செய்ய முடியாமல் போகலாம்.
அத்தகைய சரி செய்ய முடியாத
தவறைத் தான் யூதாஸ் காரியோத்து செய்தான்.

இயேசுவின் மேல் வைத்த அன்பு
யூதாஸ் காரியோத்தின்
பழைய எண்ணம் அறியாமையினால்
கெட்டவர்கள்,
கெட்டவைகளுக்கு அடிமைப்பட்டு
இயேசுவை காட்டிக் கொடுக்கும்
கெட்ட எண்ணமான புதிய எண்ணத்திற்கு மாறி விட்டது

இயேசுவை காட்டிக் கொடுத்த பின்பு
மனம் உணர்ந்து
தான் செய்தது தவறு என்று உணர்ந்து
பழைய எண்ணமான நல்ல எண்ணத்திற்கு மாறிய போது
தான் செய்தது திருத்த முடியாத தவறு
சரி செய்ய முடியாத தவறு என்று
உணர்ந்த போது செத்தான் என்கிறது பைபிள்


ஔவையார்:

“”””அடைத்திட்ட வாசலின் மேன்மனம் வைத்து
   படைத்தவன் தன்னையே பார்””””””
              ------ஔவையார்-----ஒவைக்குறள்

ஒருவர் அடிமையாக இருக்கும் விதத்தைப் பொறுத்து
ஒருவரை இரண்டு நிலைகளில் பிரித்து விடலாம்:

ஒன்று        : ஒருவரை வலுக்கட்டாயமாக அடிமைப்படுத்துவது
மற்றொன்று   :ஒருவர் தானாகவே விருப்பப்பட்டு அடிமையாவது

ஒருவரை நாம் வலுக்கட்டாயமாக அடிமைப்படுத்தினால்
நம் அதிகாரம் உள்ள வரை தான்
அவர் நமக்கு
அடிமையாக இருப்பார்

அடக்கி ஆளக்கூடிய அதிகாரம்
நமக்கு இருக்கும் வரை தான்
நாம் ஒருவரை
நமக்கு அடிமையாக வைத்திருக்க முடியும்.
ஒருவரை நீண்ட காலம்
நமக்கு அடிமையாக வைத்திருக்க முடியாது
அவர் சுய அறிவு பெற்று விட்டால்,
சுய சிந்தனை அடைந்து விட்டால்,
விழிப்புணர்வு விழிப்படைந்து விட்டால்,
அடிமை நிலையை உணர்ந்து விட்டால்,
சுதந்திர தாகம் ஏற்பட்டு விட்டால்,
விடுதலைக் காற்றை சுவாசிக்க ஆசைப்பட்டு விட்டால்,
அடிமையாக வைத்திருப்பவரை
எதிர்க்கவும் துணிவார்;
அழிக்கவும் துணிவார்;
எந்த எல்லைக்கும் போகத் துணிவார்;
தன் உயிரை விடவும் தயங்க மாட்டார்;

தன்னை அடிமையாக வைத்திருப்பவர்
உயிரை எடுக்கவும் தயங்க மாட்டார்
அடிமையாக இருப்பவர்.

அடிமை நிலையிலிருந்து விடுபட வேண்டும்
என்று அடிமையாக இருப்பவர் நினைத்துவிட்டால்,
அடிமையாக வைத்திருப்பவரை
அழிக்கவும் துணிந்து விடுவார்.
ஒருவரை வலுக்கட்டாயமாக நாம்
அடிமையாக வைக்கவும் கூடாது;
ஒருவரை வலுக்கட்டாயமாக நாம்
அடிமையாக வைத்திருக்கவும் கூடாது;
அடிமையாக வைக்க நினைக்கவும் கூடாது;

ஒருவரை வலுக்கட்டாயமாக
அடிமையாக வைத்திருப்பது
சில சமயங்களில்
நமக்கே ஆபத்தாக முடிந்து விடும்.

ஆங்கிலேயர்கள் கோடிக்கணக்கான
இந்திய மக்களை
வலுக்கட்டாயமாக அடிமையாக வைத்திருந்தனர்;
அதிகாரத்தால் அடக்கி ஆண்டனர்;
மக்களிடையே பிரிவை ஏற்படுத்தி
தங்கள் கட்டளைக்கு கீழ் அடிபணிந்து
நடக்கும் நிலையை உருவாக்கி வைத்து விட்டனர்.

இம் என்றால் சிறைக்குள்
ஏன் என்றால் மண்ணுக்குள்
என்று இரத்த தாகம் கொண்டிருந்தனர்.
மக்கள் கல்வி அறிவு பெற்று
சுய சிந்தனை பெற்று
அடிமை நிலையிலிருந்து விடுபட வேண்டும்
சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும்
என்று நினைக்கும் வேளையில்,
ஒத்த எண்ணம் கொண்ட
போர்க்குணம் கொண்ட
சுயமரியாதை கொண்ட
விடுதலை வேட்கை கொண்ட
தன்மானச் சிங்கங்கள்
தன்னை இழந்தாவது
தன் தாய் நாட்டை காக்க வேண்டும்
என்று எண்ணம் கொண்ட
போர்ப் படைத் தளபதிகள்;
வீரத்தின் விளை நிலங்கள்;
வெற்றியின் திருவுருவங்கள்;
சீர்திருத்தச் செம்மல்கள்;
உழைப்பின் உதாரணங்கள்;
சிந்தனையின் சீர்திருத்தங்கள்;
அறிவின் விளக்கங்கள்;
ஆளுமையின் எடுத்துக்காட்டுகள்;
முன்னேற்றத்தின் முழுமைகள்;
தியாகத்தின் ஒளிச்சுடர்கள்;
இண்மண்ணில் தோன்றி
தன்மான விதையை விதைத்தனர்;
சுயமரியாதை தீபத்தை ஏற்றி வைத்தனர்;
சுதந்திர தீ கனல் விட்டு எரிந்தது;
புரட்சிக் காற்று புயலென வீசியது;
அடிமைத் தளையை அறுத்தெறியும்
விடிவெள்ளி தோன்றியது;
விடியல் விழித்தது;
அடிவருடிகள் மறைந்தது;

பகத்சிங், சுகதேவ், ராஜகுரு                          
போன்ற இளஞ்சிங்கங்கள்
அடிமையாக வாழ்வதை விட மாள்வதே மேல் என்று
தூக்குக் கயிற்றை முத்தமிட்டு மாண்டனர்.

அவர்களுடைய இரத்தத் துளியில்
போர்க்குணம் கொண்ட
சுதந்தர போராட்ட வீரர்கள் தோன்றி
உயிரை கொடுக்கவும் துணிந்தனர்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின்
அனல் கக்கும் பேச்சு,
தொலை நோக்கு பார்வை,
சுயமரியாதை சிந்தனை,
சுதந்திர போராட்ட வியூகங்கள்,
அரசியல் நெறிமுறைகள்,
மக்கள் செல்வாக்கு,
அறிவுத் திறன்,
ஆங்கிலேயரை மிரள வைத்தது.

உலகத்திலேயே சுதந்திரப் போராட்ட வீரர்
நேதாஜிக்கு இணையாரும் இல்லை என்பதை
ஆங்கிலேயருக்கு உணர வைத்தது.

ஆங்கிலேயர்கள் உலகத்திலேயே
சுதந்திர போராட்ட வீரரைப்
பார்த்து பயந்த
ஒருவர் உண்டு என்றால்
அவர் நேதாஜி தான்.

பிச்சை கேட்டுப் பெறுவதல்ல சுதந்தரம்
போரிட்டு பெறுவது;
அடிமை நிலையிலிருந்து விடுபட வேண்டுமானால்
போரிடவேண்டும்.

பிச்சை கேட்டுபெறுவது சுதந்தரமாகாது
பிச்சை கேட்டுபெறுவது
அடிமையாக இருப்பதற்கு சமம் - என்று
அவர் விதைத்த
சுதந்தர விதை
பல்கிப்பெருகி
சுதந்தர வேட்கை கொண்டவர்களை உருவாக்கியது
ஆங்கிலேயரை எதிர்த்தது.

ஆங்கிலேயர்கள் தங்கள் அதிகாரம்
வலுவிழந்து போகிறது
தங்கள் அதிகாரம் பலனளிக்கவில்லை
என்று உணரும் போது
இந்தியாவிற்கு சுதந்தரம் கொடுத்து விட்டு சென்றனர்.

ஒருவரை வலுக்கட்டாயமாக
நீண்ட நாட்கள் அடிமையாக
வைத்திருக்க முடியாது என்பதற்கு
ஆங்கிலேயர்கள் இந்தியர்களை
அடிமையாக வலுக்கட்டாயமாக
வைத்திருந்ததையும்,
அவர்களே இந்தியர்களை
நீண்டநாட்கள் அடிமையாக வைத்திருக்க முடியாது
என்பதை உணர்ந்து
விடுதலை தந்ததையும் கூறலாம்.

ஒருவர் தானாக விருப்பபப்பட்டு
அடிமையாவது என்பது பெரும்பாலான
மனிதர்கள் வாழ்வில்
தெரிந்தும், தெரியாமலும் அடிமைப்பட்டு இருப்பது.

உலகில் உள்ள ஒவ்வொருவரும்
ஏதோ ஒரு காரணத்திற்காக
ஏதோ ஒன்றிடம் அடிமையாக
தெரிந்தும், தெரியாமலும்
அவர்களுக்கே தெரியாமல்
அவர்களே அறியாமல்
அடிமையாக இருந்து வருகின்றனர்.

நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை
என்று சொல்லிக் கொண்டே
அடிமையாக இருந்து வருகின்றனர்.
ஒருவர் தன்னுடைய
எண்ணத்திற்கும், கொள்கைக்கும், குறிக்கோளுக்கும்
ஒத்த ஒருவர் தன்னுடைய வாழ்வில் எதிர்ப்படும்போது
அவர் மேல் ஒரு ஈர்ப்பு ஏற்படும்.

அவர் ஒரு அரசியல்வாதியாக இருக்கலாம்;
அவர் ஒரு நடிகராக இருக்கலாம்;
அவர் ஒரு தத்துவ மேதையாக இருக்கலாம்;
ஏதாவது ஒரு துறையைச் சார்ந்தவராகவோ
ஏதாவது ஒரு பிரிவைச் சார்ந்தவராகவோ இருக்கலாம்.

அவர் ஒரு மதத் தலைவராகவோ,
அவர் ஒரு சாதித் தலைவராகவோ,
அவர் ஒரு பொருளாதாரத் தலைவராகவோ,
அவர் ஒரு எழுத்தாளராகவோ,
அவர் ஒரு பேச்சாளராகவோ
வியாபாரத்தில்
உயர்ந்த நிலை அடைந்தவராகவோ,
தான் விருப்பபப்டும்
ஏதோ ஒன்று யாரிடம் இருக்கிறதோ
அவர் மேல் ஓர் ஈர்ப்பு ஏற்படுகிறது.

ஈர்ப்பு           ஈர்ப்புடன் நின்று விட்டால் பரவாயில்லை
ஈர்ப்பு          பற்றாகி    
பற்று           வெறியாகி
வெறி          அடிமையாகும் போதுதான்
அடிமை நிலை உருவாகிறது.

சமுதாய அவலங்களைக் கண்டு
சமுதாயத்தை சீர்திருத்த வேண்டும்
என்று எண்ணம் கொண்டு,
சமுதாயத்தை சீர்திருத்தம் செய்வதற்காக
செயல்கள் பல செய்து,
அதற்காக இழப்புகள் பல அடைந்து,
வாழ்வில் கிடைக்க வேண்டிய
அன்றாட இன்பங்களை இழந்து,
சந்தோஷங்களைத் துறந்து,
நாட்டிற்காகவும்
நாட்டு மக்களுக்காகவும் வாழ்ந்து உழைத்து,
ஏதேனும் ஒரு துறையில்
உயர்ந்த நிலை அடைந்தவரை;
உதாரணத்திற்காக
சினிமாத் துறையில்
உயர்ந்தநிலை அடைந்த ஒருவரை
தன் குறிக்கோளுக்கான
தன் எண்ணத்திற்கான
ஒரு நாயகனாக தன் இதயத்தில் வரிந்து கொண்ட
ஒருவர்
அவர் மேல் ஈர்ப்பு கொள்கிறான்
அவர் மேல் உள்ள ஈர்ப்பானது
படிப்படியாக மாற்றம் அடைகிறது.

காலம் ஓடும் போது
ஈர்ப்பின் தன்மை மாறுபடுகிறது.
தன் கதாநாயகனின் ஒவ்வொரு
படம் வெளியாகும் போதும்
அவர் மேல் உள்ள ஈர்ப்பு
வளர்ந்து கொண்டே வருகிறது.
ஈர்ப்பு ஒரு எல்லையைக் கடக்கும் போது
பற்றாக மாறுகிறது.

பணம் இல்லாவிட்டாலும் கடன் வாங்கியாவது
படத்தைப் பார்க்க வேண்டும் - என்று
கடன் வாங்கி படம் பார்க்கும் போது
ஈர்ப்பு பற்றாகி விட்டதை உணர்ந்து கொள்ளலாம்.

கதாநாயகனுக்காக எதையும்
செய்யத் துணிந்து விட்ட
ஒருவனுடைய மனநிலையைத் தான்
இந்த பற்று காட்டுகிறது.

பற்று ஒரு எல்லையைத் தாண்டும் போது
அது வெறியாகிறது
இது மிகவும் ஒரு இக்கட்டான கால கட்டம்.

வெறிதான் அடிமையாவதற்கான
நுழைவு வாயில்
வெறிக்கும், அடிமைத் தனத்திற்கும்
நூலிழை தான் இடைவெளி உண்டு.
வெறி வந்து விட்டால் அவர்
அடிமையாக தயார் ஆகி விட்டார்
என்று தான் பொருள்.

கதாநாயகன் படம் வெளியாகும் போது
அவருடைய ரசிகன்
அவருக்காக
அவர் படம் ஓட வேண்டும் என்பதற்காக
செய்யும் செயல்கள் -
பால் அபிஷேகம்;
காவடி எடுத்தல்;
அலகு குத்துதல்;
மொட்டை அடித்தல்;
ஆணி படுக்கையில் படுத்தல்;
ஆணி காலணியை போட்டுக் கொண்டு நடத்தல்;
போன்ற செயல்களை
இறைவனுடன் இணைவதற்காகவும்;
இறைவனை உணர்ந்து கொள்வதற்காகவும்;
இறைவனிடம் இருந்து ஆசி பெறுவதற்காகவும்;
செய்யப்படும்
இறைவனுக்கான வழிபாட்டு முறைகள்,
இறைவழிபாட்டுக்கான சடங்கு முறைகள்,
இறைத் தன்மையை உணர்வதற்காகவும்,
இறையருளைப் பெறுவதற்காகவும்,
நம் முன்னோர்கள்
இறைத்தன்மையை உணர்ந்தவர்கள்
இத்தகைய சடங்கு முறைகள் மூலம்
இறைவனை அடையலாம்
இறையருளைப் பெறலாம்
இன்புற்று வாழலாம் என்றும்
இறைவனிடமிருந்து அருளைப் பெறுவதற்கான
ஒரு திறவுகோலாக வைத்திருக்கும்
இறை வழிபாட்டு முறைக்கான சடங்கு முறைகளை,
எந்த இடத்தில் பண்ண வேண்டும்;
எந்த காலத்தில் பண்ண வேண்டும்;
எதைக் கொண்டு பண்ண வேண்டும்;
எப்படி பண்ண வேண்டும்;
என்ற நியதிகளை மீறி,
உண்மைகளை உணராமல்
அதை இறை வழிபாட்டுக்கு பயன்படுத்தாமல்
தான் விரும்பும் ஒரு கதாநாயகனுக்காக
பயன்படுத்தும் போது
அவர் அந்த கதாநாயகன் மேல்
வெறியாக இருக்கிறார்
என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

எந்த கதாநாயகனும்
கடவுளுக்கு செய்யப்படும் சடங்குகளை ,
கடவுள் அருள் பெறுவதற்காக
செய்யப்படும் சடங்குகளை,
கடவுள் அருள் பெறுவதற்காக
நம் முன்னோர்கள்
ஆக்கி வைத்த சடங்குகளை ,
தனக்கு செய்ய வேண்டாம்
என்று கூறுவதில்லை.
இந்த இடத்திலேயே ரசிகன்
மனநிலையை மாற்றினால்
அவன் வெறித் தன்மையைக் குறைத்து
அடிமையாவதைத் தடுக்கலாம்.

ஆனால் எந்த கதாநாயகனும்
அதை செய்வதில்லை
ரசிகனை அப்படியே விட்டு வருகின்றனர்.

இதனால் வெறியின் எல்லை தாண்டும் போது
ரசிகன் அந்த கதாநாயகனுக்கு
அடிமையாகி விடுகிறான்.

தன்னை அறியாமையாலே ஒருவன்
அடிமை நிலைக்கு மாற்றப்படுகிறான்;
கதாநாயகன் சொல்லும் சொல்லை
கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றுகிறான்;
எந்த இடையூறு வந்தாலும் செயல்படுத்துகிறான்;

சமுதாயம் சொல்லும் அவதூறு வார்த்தைக்குக் கூட
கலங்காமல் செயல்களைச் செய்கிறான்.

ஓடு என்றால் ஓடுகிறான்
நில் என்றால் நிற்கிறான்

அவன் அந்த கதாநாயகனுக்கு
முழுவதும் அடிமையாகி விடுகிறான்.

கதாநாயகன் மேல் கொண்ட
ஈர்ப்பு         பற்றாகி
பற்று          வெறியாகி
வெறி          அடிமையாகும்
நிலைக்கு கொண்டு வந்து விடுகிறது.

ஒரு பெண்
தன்னைக் கவர்ந்த ஒரு பெண்
தன் எண்ணத்திற்கு ஏற்ற
ஒரு பெண்ணை காணும் ஒருவன்
அவள் மேல் ஈர்ப்பு கொள்கிறான்

தன் எண்ணத்திற்கும், தன் ஆசைக்கும்
அந்த பெண் ஒத்து இருப்பதால்
அவள் மேல் ஈர்ப்பு ஏற்படுகிறது
ஈர்ப்பு அதன் எல்லையைக்
கடக்கும் போது பற்றாகி விடுகிறது

அந்த பெண் தன்னைத் தான் காதலிக்க வேண்டும்
தனக்கு தான் அந்த பெண் சொந்தம்
யாரும் அந்த பெண்ணை காதலிக்கக் கூடாது
தன்னுடையவள் என்று உரிமை கொண்டாடக் கூடாது
என்று எண்ணம் கொள்ளும் போது
அந்த பெண்ணின் மேல் பற்று உண்டாகிறது.

பற்று அதன் எல்லையைக் கடக்கும் போது
வெறியாகி விடுகிறது
அந்த பெண் தன்னைக் காதலிக்கவில்லை என்றால்
அவளை காதல் செய்ய வைப்பதற்காகவும்
காதலை தடுப்பதற்காகவும், இடையூறாகவும்,
யார் வந்தாலும் அழிக்கவும்,
செயல்களைச் செய்யும் நிலைக்கு வந்துவிடுகிறான்.

பெண்ணின் மேல் வெறி வந்த போதே
சிந்தனை கழன்று விடுகிறது.

மனம் எதனையும் செய்ய செயல்களைச் செய்கிறது
வெறியினால் ஒரு குறிப்பிட்ட
எல்லை வரை தான் எதிர்ப்பான்
வெட்கம் மானம் பயந்து செயல்களைச் செய்வான்.

வெறியின் எல்லை முடிந்து
அடிமை நிலைக்கு வரும் போது
அந்த பெண்ணின் மேல் உள்ள ஈர்ப்பு
அடிமை நிலையாக மாற்ற அடையும் போது
அதன் எதற்காகவும்
கவலைப்படுவதில்லை.
அவள் மேல் உள்ள ஈர்ப்பால்
அந்த பெண்
தனக்கு கிடைக்கவில்லை என்றால்
எதையும் செய்யத் துணிகிறான்

ஒரு பெண்ணின் மேல் உள்ள
ஈர்ப்பு பற்றாகி
பற்று வெறியாகி
வெறி அடிமையாகும் நிலை

ஒரு பெண்ணின் மேல் உள்ள
ஈர்ப்பு காதலாக
மாறவில்லை என்றால்
ஈர்ப்பு பற்றாகி
பற்று வெறியாகி
வெறி அடிமை நிலைக்கு
தள்ளி விடும்.

இது நாமே நமக்கு
தோண்டிக் கொள்ளும் படுகுழி
இது நாமே ஒன்றின் மேல் உள்ள ஈர்ப்பால்
அடிமையாகும் நிலை.

பிறர் நம்மை வலுக்கட்டாயாக அடிமைப்படுத்தினாலும்
நாமே வலுக்கட்டாயமாக
பிறருக்கு அடிமையானாலும்
அடிமை அடிமை தான்
அதில் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை

அடிமை என்பது ஒருவருக்கு
கீழே இருப்பது
சமமாக இருப்பது அல்ல.

அடிமையாக இருப்பவனை
யாரும் சமமாக வைத்துப் பார்ப்பதில்லை
தனக்கு சமமாக வைத்துக் கொள்வதில்லை.

அடிமையாக இருக்கும் ஒருவரை
யாரும் தனக்கு
சமமாக வைக்கவும் மாட்டார்கள்;
வைத்திருக்க விரும்பவும் மாட்டார்கள்;

அடிமை நிலையில் இருப்பவர்
அடிமை நிலையில் இருக்க வேண்டியதுதான்

அடிமையாக இருப்பது
தவறா?  சரியா? என்பது முக்கியமில்லை
யாரிடம் நாம் அடிமையாக இருக்கிறோம்
என்பது தான்  முக்கியம்.

மனிதர்கள் எல்லோரும்
யாருக்காகவோ?
எதற்காகவோ?
ஏதோ ஒரு காரணத்திற்காகவோ?
ஒருவரிடம் அடிமையாக இருக்கின்றனர்.

அழிந்துவிடக் கூடியவைகளிடம்
அடிமையாக இருந்தால்
அடிமையாக இருக்க வேண்டியதுதான்;
அழிந்து விடாத ஒன்றிடம்
அடிமையாக இருக்கும் போது தான்
அடிமை நிலையிலிருந்து விடுபட்டு
உயர்ந்த நிலை அடைய முடியும்.

அழிந்து விடக் கூடியவைகளிடம்
அடிமையாக இருப்பதை விட
அழியாத ஒன்றிடம் அடிமையாக இருப்பதே
அடிமை நிலையிலிருந்து விடுபட ஒரே வழி.

ஒருவர் அடிமை நிலையிலிருந்து
விடுபட வேண்டுமானால்
உயர்ந்த நிலை அடைய வேண்டுமானால்
அழியாத ஒன்று எது என்று
அறிய வேண்டும்;
அழியாத ஒன்றை கண்டறிய வேண்டும்;
அழியாத ஒன்று எது என்று ஆராய வேண்டும்;
அழியாத ஒன்றுடன் இணைய வேண்டும்;

அழியாத ஒன்றை கண்டறிந்து
அதனுடன் இணைவதால் மட்டுமே
அடிமை நிலையிலிருந்து விடுபட முடியும்.

அழியும் ஒன்றை நோக்கியே
அழியக் கூடியவைகள்
என்று தெரிந்தும்
அவைகளை நோக்கியே மனித இனம்
அதன் பின்னால் செல்வதாலே
அடிமை மனமும்
அடிமை நிலையும் ஏற்படுகிறது.

அழியக் கூடியவைகளில் இருந்து
அழியாத ஒன்று தோன்ற முடியாது
ஆனால் அழியாத ஒன்றில் இருந்து
அழியக் கூடியது தோன்றும்.

அழியாத ஒன்றில்
அழியக் கூடிய ஒன்று உண்டு
அழியக்கூடிய ஒன்றில்
அழியாதது உருவாகாது
ஒன்றுக்குள் ஒன்று இருக்கும்
எந்த ஒன்றுக்குள
எந்த ஒன்று இருக்கிறது
என்பது தான் முக்கியம்
அதை ஆராய்வது தான் முக்கியம்

அழியாத ஒன்றை அறிய வேண்டுமானால்
அது எங்கே இருக்கிறது
எப்படி இருக்கிறது
எந்த நிலையில் இருக்கிறது
என்பதை அறிய வேண்டும்.

அண்டத்தில் உள்ளது
பிண்டத்தில் என்பதை
நினைவு கூர்ந்து
அண்டத்தில் உள்ளது
பிண்டத்தில் எப்படி இருக்கிறது
என்பதை ஆராய வேண்டும்.

அண்டம் முழுவதும் நீக்கமற
நிறைந்திருக்கும் இறைவன்
பிண்டத்தில் எப்படி இருக்கிறான் ;
எங்கே இருக்கிறான்;
எந்த நிலையில் இருக்கிறான்;
என்று அறியும் போது,
பிண்டத்தில்
இருக்கும் இறைவனுடன்
எப்படி இணைவது,
எவ்வாறு தொடர்பு கொள்ளுவது என்று உணர்ந்து
அதனுடன் இணையும் போது,
அனைத்து அடிமை
நிலையில்  இருந்தும் விடுபட்டு
உயர்நிலையை அடைகிறான்.

ஒன்பது வாசல் அடைபடும்போது
பத்தாவது வாசல் திறக்கிறது;
ஒன்பது வாசல் அடைபடாத போது
பத்தாவது வாசல் திறப்பதில்லை.

பத்தாவது வாசல் திறக்கப்பட வேண்டுமானால்
ஒன்பது வாசல் அடைக்கப்பட வேண்டும்.

ஒன்பது வாசல் மூடப்படும் வரை
பத்தாவது வாசல் திறக்காது;
அது வரை
பத்தாவது வாசல் மூடப்பட்டு தான் இருக்கும்;
அதுதான் சொர்க்க வாசல்.
பத்தாவது வாசல் சென்று
உள் நுழையும் போது தான்
இறைவனுடன் இணைய முடியும்
இறைவனுடன்
இரண்டறக் கலக்க முடியும்.


அடைத்திட்ட வாசல் என்றால்
பத்தாவது வாசல் அடைத்து
வைக்கப்பட்டிருக்கிறது
பத்தாவதுவாசல் மூடப்பட்டிருக்கிறது என்று பொருள்.

ஒரு புழுவானது தன்னைச் சுற்றி
ஒரு கூடு கட்டி
அந்த கூட்டிற்குள் எப்படி இருக்கிறது
அவ்வாறு இறைவனானவன் இருக்கிறான்.
அதாவது மூடப்பட்ட நிலையில்
இறைவன் இருக்கிறான்.

கூடு உடைபட்டு
புழு வெளிவரும் போது தான்
புழு தெரியும்.

கூடு உடையாத வரை
கூட்டுக்குள் புழு இருப்பது தெரியாது.
அதாவது இறைவன்
கூட்டுக்குள் இருப்பது போல் இருக்கிறான்.

கூடு உடைபடும் போது
புழு எப்படி தெரிகிறதோ அப்படியே
பத்தாவது வாசல் திறக்கப்படும்
போது இறைவன் தெரிகிறான்.

கூடு உடையாத வரை
எப்படி புழு தெரியாதோ அவ்வாறே
பத்தாவது வாசல் திறக்காத வரை
இறைவன் தெரிய மாட்டார்.

அதனால் தான் ஔவையார்
அடைத்திட்ட வாசல்
அதாவது பத்தாவது வாசல் என்கிறார்.

மூலாதாரத்தில் உள்ள
குண்டலினி சக்தியை எழுப்பி
ஆறாதாரங்களைத் துளைத்து
சக்தியைப் பெற்று
மேலே சென்று
பத்தாவது வாசல் திறந்து செல்லும் போது
தான் இறைவனுடன் இணைய வேண்டும்.

அழியக்கூடியவைகளிடம்
அடிமையாக இருந்தால்
அடிமையாக இருக்க வேண்டியது தான்;
அழியாத ஒன்றிடம்
அடிமையாக
அதாவது
அழியாத ஒன்றான
ஆண்டவனிடம்
அடிமையாக இருப்பது என்பது
பரிபூரண சரணாகதி அடைவது என்று பொருள்.

அழியும் ஒன்றிடம்
அடிமையாக இருப்பது
அடிமையாக இருப்பது தான்;
அழியாத ஒன்றான இறைவனிடம்
அடிமையாக இருப்பது
அடிமையாக இருப்பது அல்ல
பரிபூரண சரணாகதி அடைவது.

அடைபட்ட வாசலான
பத்தாவது வாசலைத்திறந்து
இறைவனுடன் கலப்பதன் மூலமே
இறைவன் அருளைப் பெறுவதன் மூலமே
அழியக் கூடியவைகளிடம்
இருந்து விடுபட்டு,
அழியக் கூடியவைகளிடம்
அடிமையான நிலையிலிருந்து விடுபட்டு
உயர்வான நிலையை அடைய முடியும்.
அதற்கு
அடைத்திட்ட வாசலான
பத்தாவது வாசலைத் திறப்பதன் மூலமே

இறைவனுடன்
இணைய முடியும்
இரண்டறக் கலக்க முடியும்.
அழியக்கூடியவைகளிடம்
அடிமையாக
இருந்த நிலையில்
இருந்து விடுபட முடியும்.

நான் வேறு; அது வேறு அல்ல;
நானே அது;
அதுவே நான் - என்று
உணர முடியும்.

ஆகவே தான் ஔவையார்,
அடைத்திட்ட வாசலான
பத்தாவது வாசலின் மேல்
மனம் வைத்து
பத்தாவது வாசலைத் திறந்து

இறைவனுடன் கலந்து
நானே அவனாகவும்
அவனே நானாகவும்
படைத்தவன் தானாகவும்
தானே படைத்தவனாகவும்
இருப்பதை பார்த்து
உணர்ந்து
தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.



இயேசு கிறிஸ்து - ஔவையார்:

பைபிள்,
அழியக் கூடியவைகளின்
மேல் பற்று வைப்பவன்
அழிந்து போவான்;
அழியாத ஒன்றின்
மேல் பற்று வைப்பவன்
அழியாமல் இருப்பான் ;
என்கிறது.


அவ்வாறே,
ஔவையாரும்,
அழியக் கூடியவைகளின் மேல்
பற்று வைப்பவன்
அடிமையாக இருந்து
தன் வாழ்க்கையை விரயமாக்கி
அழிந்து போவான்;
அழியாத ஒன்று
எது என்று கண்டறிந்து
அதற்கு அடிமையாக இருப்பவன்
வாழ்வில் உயர்ந்து
அழியாமல் இருப்பான்
என்கிறார்.


“””””போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
              போற்றினேன் பதிவு அறுபத்துஏழு ந்தான்முற்றே”””