July 03, 2019

பரம்பொருள்-பதிவு-35


                     பரம்பொருள்-பதிவு-35

“ஒரு இடத்திலிருந்து
வேறொரு இடத்திற்கு
செல்லுகின்ற வழியை
ஒருவர்
பல்வேறு முயற்சிகள்;
பல்வேறு தரப்பட்டவர்களின்
ஆலோசனைகள்;
பல்வேறு தரப்பட்டவர்கள்
மூலம் சொல்லித்தரப்பட்ட
விஷயங்கள் ;
ஆகியவற்றைப் பயன்படுத்தி
ஒரு இடத்திலிருந்து
வேறொரு இடத்திற்கு
செல்லுகின்ற வழியைக்
கண்டுபிடித்து - அந்த
இடத்திற்கு அடிக்கடி
சென்று வருகிறார்;”

“ஒரு இடத்திலிருந்து
வேறொரு இடத்திற்கு
செல்லுகின்ற வழியைக்
கண்டு பிடித்த
அவரால் மட்டுமே
இந்த வழியைத் தெரியாத
வேறு ஒருவருக்கு
சொல்ல முடியும்”

“வழி தெரியாதவர்
வழி தெரியாதவருக்கு
எப்படி வழி
சொல்ல முடியும்
வழி தெரிந்தவர் மட்டுமே
வழி தெரியாதவருக்கு
வழி சொல்ல முடியும்”

“வழி தெரிந்தவர் சொல்லும்
வழியை வைத்துத் தான்
வழி தெரியாதவர்
அந்த வழியைக் கண்டு
பிடித்து செல்ல வேண்டிய
இடத்திற்கு செல்ல முடியும்”

“வழி தெரியாதவருக்கு
வழி தெரிந்தவர்
வழியை சொல்லவில்லை
என்றால்
வழி தெரியாதவர்
செல்ல வேண்டிய
இடத்திற்கு
வழி கண்டுபிடிக்க
முடியாத காரணத்தினால்
செல்ல முடியாமலேயே
போய் விடும்”

“வழி தெரியாதவருக்கு
வழி தெரிந்தவருடைய
உதவி கண்டிப்பாக
தேவை. ;
இல்லை என்றால்
வழி தெரியாதவர்
வழி தெரியாமலேயே
இருந்து விடுவார்”

“இதிலிருந்து வழி
தெரிந்தவர் எவ்வளவு
உயர்ந்தவர் என்பதையும்
அவர் தான்
வழியைக் காட்டும்
வழி காட்டி என்பதையும்
தெரிந்து கொள்ள
வேண்டும்”

“நாம் செல்ல வேண்டிய
இடத்திற்கு நமக்கு வழி
தெரியவில்லை
என்றால் ;
நம்மால் செல்ல
வேண்டிய இடத்திற்கு
வழியைக் கண்டுபிடிக்க
முடியவில்லை
என்றால் ;
வழி தெரிந்தவர் யாரும்
நமக்கு தெரியவில்லை
என்றால் ;
வழி தெரிந்தவர் யாரும்
நமக்கு சொல்லவில்லை
என்றால் ;
நம்மாலும் வழியைக்
கண்டு பிடிக்க
முடியவில்லை
என்றால் ;
நம்முடைய வாழ் நாளில்
நம்மால் செல்ல
வேண்டிய இடத்திற்கு
செல்ல முடியாமல்
போய் விடும் ;”

“சாதாரண வழியைக்
கண்டுபிடிப்பதிலேயே
இவ்வளவு பிரச்சினைகள்
இவ்வளவு சிரமங்கள்
இருக்கிறது என்றால்
இறைவனை அடையக்கூடிய
வழியைக் கண்டுபிடிப்பதில்
எவ்வளவு பிரச்சினைகள்
எவ்வளவு சிரமங்கள்
இருக்கும் - இறைவன்
நம்முடைய உடலில்
நம்முடைய சிரசுக்குள்
எந்த இடத்தில்
இருக்கிறான் என்பதையும்
இறைவனை அடையக்கூடிய
வழியையும் கண்டுபிடிப்பது
என்பது அவ்வளவு
எளிதான காரியமா
இல்லவே இல்லை”

“இதனை உணர்ந்த
நம் முன்னோர்கள் ;
மெய்ஞ்ஞானத்தின்
மூலம் உண்மையை
உணர்ந்தவர்கள் ;
இறைவன்
நம்முடைய உடலில்
நம்முடைய சிரசுக்குள்
எந்த இடத்தில்
இருக்கிறான் என்பதையும்
இறைவனை அடையக்கூடிய
வழியையும்
மக்களும் அனைவரும்
தெரிந்து கொள்ள
வேண்டும் என்ற உயர்ந்த
நோக்கத்துடன் செதுக்கி
வைத்தது தான்
சிவலிங்கம் “

“மிகப்பெரிய பிரம்ம
ரகசியத்தை நம்முடைய
கண்களின் முன்னால்
சிவலிங்கமாக
செதுக்கி வைத்து;
கண்களால்
காணும்படி வைத்து ;
அறிவால் உணர்ந்து
கொள்ளும்படி வைத்து ;
ஞானத்தால் தெளிவு
ஏற்படும்படி வைத்து ;
இறைநிலையுடன்
இரண்டறக்
கலக்கும்படி வைத்து ;
முக்தி கிடைப்பதற்கான
வழி வகைகளைச் செய்து
வைத்துச்;
சென்றுள்ள நம்முடைய
முன்னோர்களின்
அறிவுத் திறனை
போற்ற வேண்டியது
நம்முடைய கடமையாகும் ; “

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 03-07-2019
//////////////////////////////////////////////////////////