August 27, 2018

திருக்குறள்-பதிவு-8


                        திருக்குறள்-பதிவு-8

பாண்டிய மன்னன்
தமிழ்ச் சங்கத்தில்
உள்ள புலவர்களைப்
பார்த்து புலவர்களே
தமிழ் மூதாட்டி
ஔவையார்
இந்த சங்கத்திற்கு
வந்திருக்கிறார்
வள்ளுவர் குறள்
அனைத்து மக்களுக்கும்
தேவையான
உயர்ந்த படைப்பு என்று
அவர் கூறுகிறார்
வள்ளுவர் குறளை
சங்கம் கேட்க வேண்டும்
என்று அவர்
கேட்டுக் கொண்டுள்ளார்
என்றான்
பாண்டிய மன்னன்

தமிழ்ச்சங்கத்தில்
உள்ள புலவர்கள்
திருவள்ளுவரை நோக்கி
திருவள்ளுவரே
உமக்கு
இலக்கணம் தெரியுமா
அந்தாதி பாடுவீரா     
உமக்கு சிலேடை
வருமா என்று
பல்வேறு விதமாக
கேள்விகளைக் கேட்டு
திருவள்ளுவரை
அவமானப்படுத்த
வேண்டும்
என்ற நோக்கத்தில்
பல்வேறு விதமான
கேள்விகளைக்
கேட்டனர்

இந்நிகழ்வு நடந்து
கொண்டிருக்கும் சமயத்தில்
பாண்டிய மன்னன்
வள்ளுவர் இயற்றிய
நூலை கேட்கலாம்
என்று கேட்டுக்
கொண்டதற்கிணங்க
வள்ளுவர் திருக்குறளை
வாசிக்கத் தொடங்கினார்

திருக்குறளின்
ஒரு பாடலைக்
கேட்டவுடனேயே
தமிழ்ச்சங்கத்தில்
உள்ளவர்கள் திருக்குறளை
ஆடசேபம்
செய்யத் தொடங்கினர்
இது செய்யுள்
இலக்கணத்தை
மீறி இருக்கிறது
வெண்பா என்றால்
நான்கு அடி இருக்க
வேண்டும்
ஈரடி வெண்பாவை
ஏற்க முடியாது
சங்கத்தின் விதிகளுக்கு
முரண்பாடாக இருக்கிறது
திருக்குறளை ஏற்றுக்
கொள்ளவே
முடியாது என்று
தமிழ்ச்சங்கத்தில்
உள்ள தமிழ்ப் புலவர்கள்
பல்வேறு குற்றச்
சாட்டுக்களையும்,
பல்வேறு குறைகளையும்
சுட்டிக் காட்டி
திருக்குறளை
அவமானப்படுத்தி
திருவள்ளுவரை
இழிவு படுத்தி
திருக்குறளை
அரங்கேற்றம்
செய்யவிடாமல்
தடுத்தனர்.

தமிழ்ச்சங்கத்தில்
உள்ள தமிழ்ப்புலவர்கள்
செய்த செய்கைகளை
கண்டு வெகுண்டெழுந்த
ஔவையார்

மதுரை தமிழ்ச்சங்கத்தில்
உள்ள தமிழ்ப்
புலவர்களைப் பார்த்து
தன்னலம் மிக்க
புலவர்களே
உங்களுடைய
தன்னலம் மிக்க
செயல்பாட்டால்
திருக்குறளை
அரங்கேற்றம் செய்ய
விடாமல் தடுத்து
மக்களுக்கு
கிடைக்க வேண்டிய
உயர்ந்த படைப்பை
கிடைக்க விடாமல்
செய்கிறீர்கள்
இந்தச் சங்கத்தில்
உள்ள புலவர்களிடம்
தன்னலம் தான்
நிரம்பி இருக்கிறது
இந்த தன்னலம்
மிக்க புலவர்களிடம்
பேசிக் கொண்டிருப்பதால்
ஒரு பயனும்
விளையப் போவதில்லை

இதற்கு மேல்
பேசி பயன் இல்லை
நான் பொற்றாமரையை
பொங்கச் செய்கிறேன்
சங்கப்பலகையை
வரவழைக்கின்றேன்
அதில் வள்ளுவர்
குறளை வைப்போம்
அந்த ஈசன் என்ன
சொல்கிறார் பார்ப்போம்
என்றார் ஔவையார்

ஔவையார்
சொன்னவாறே
பொற்றாமைரையை
பொங்கச் செய்தார்
சங்கப்பலகை
திருக்குறளை
ஏற்றுக் கொண்டது
ஈசன் அருட்குரல்
கேட்டது
வள்ளுவன் வாக்கு
என் வாக்கு என்று
கேட்டது

ஈசனே ஏற்றுக் கொண்ட
பிறகு எந்தவித
தடையும் இல்லை
என்ற முடிவு
அனைவராலும்
எடுக்கப்பட்டு
மதுரை தமிழ்ச்சங்கத்தில்
திருக்குறள்
திருவள்ளுவரால்
அரங்கேற்றம் செய்யப்பட்டது

இன்று உலகப்பொதுமறை
என்று அனைவராலும்
பெருமையாக
அழைக்கப்படும் திருக்குறள்
உலகம் முழுவதும்
அதிக மக்களால் படித்து
பின்பற்றப்படும் திருக்குறள்
அன்றைய தமிழ்ச்சங்கத்தால்
ஏற்றுக் கொள்ளப்படவிலை
மனிதர்களால்
புறக்கணிக்கப்பட்டது என்பது
எத்தனை பேருக்குத்
தெரியும்

மனிதர்களால்
புறக்கணிக்கப்பட்ட
திருக்குறள்
இறைவனால் ஏற்றுக்
கொள்ளப்பட்டது
என்பதை நினைத்தாலே
திருக்குறளின்
பெருமை நமக்கு
தெள்ளத் தெளிவாக
விளங்கும்

---------  இன்னும் வரும்
---------  27-08-2018
///////////////////////////////////////////////////////////