September 30, 2018

திருக்குறள்-பதிவு-28


                   திருக்குறள்-பதிவு-28

இந்த உலகத்தில்
தோன்றிக்
கொண்டிருப்பவைகளை
எல்லாம் இரண்டு
நிலைகளில் பிரித்து விடலாம்

ஒன்று  : பிறப்பால்
         தோன்றிக்
         கொண்டிருப்பவைகள்

இரண்டு : மாற்றத்தால்
  தோன்றிக்
  கொண்டிருப்பவைகள்

விதையிலிருந்து
செடி முளைத்து
வெளி வருகிறது
இதில் செடியை
பிறப்பால் தோன்றியது
எனலாம்

பூவிலிருந்து
காய் வருகிறது
இதில் காயை
மாற்றத்தில் தோன்றியது
எனலாம் அதைப்போல்
காயிலிருந்து கனி
வருகிறது இதில்
கனியை மாற்றத்தில்
தோன்றியது எனலாம்.

ஒன்று முதலில்
தோன்றும் போது
பிறப்பால் தோன்றியது
என்றும்,
பிறப்பால் தோன்றி
வளரும் போது
அதில் மாற்றம்
ஏற்பட்டு தோன்றுவதை
மாற்றத்தால்
தோன்றியது என்றும்
கூறலாம்

விதையிலிருந்து செடி
தோன்றுவது முதலில்
தோன்றியது எனவே
செடியை பிறப்பால்
தோன்றியது என்றும்
செடி வளர்ந்து மரமாகி,
மரத்தில் பூவானது
காயாக மாற்றம்
அடைவதும்
காயானது கனியாக
மாற்றம் அடைவதும்
மாற்றத்தால் தோன்றியது
என்றும் கூறலாம்

மனிதன் மாற்றத்தின்
மூலம் தோன்றியவன்
பிறப்பின் மூலம்
தோன்றியவன் அல்ல

விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலையான
யாளி என்ற
உயிரினத்திலிருந்து
விலங்கு என்ற
நிலை கழிக்கப்பட்டு
மனிதன் தோன்றினான்
அதாவது மனிதன்
மாற்றத்தின் மூலம்
தோன்றினான்
பிறப்பின் மூலம்
தோன்றவில்லை

மாற்றத்தின் மூலம்
மனிதன் தோன்றிய
காரணத்தினால் தான்
மனிதனுடைய
எண்ணம்,சொல், செயல்
நிமிடத்திற்கு நிமிடம்
மாறிக் கொண்டே
இருக்கிறது

மனிதன் மாற்றத்தில்
தோன்றியதால் தான்
தன் சொல்லையும்
செயலையும்
இச்சமுதாயத்தில்
வாழ்ந்து கொண்டிருக்கும்
பெற்றோர்கள், சொந்தக்காரர்கள்,
நண்பர்கள், சுற்றத்தார்கள்
ஆகியோருக்கு ஏற்றபடி
தன் குணத்தை மாற்றிக்
கொண்டே இருக்கிறான்.

காட்டில் விலங்குகளோடு
நாம் எளிதில்
வாழ்ந்து விடலாம்
ஏனென்றால்
எது புலி, எது சிங்கம்,
எது நரி, என்று
நமக்கு தெரியும்
அதனால் காட்டில் புலி,
சிங்கம், நரி
அவைகளுக்கு ஏற்றபடி
அவைகளின் குணத்திற்கு
ஏற்றபடி நாம்
வாழ்ந்து விடலாம்

ஆனால் நாட்டில்
யார் புலி போன்று
இருந்து மனித
இரத்தத்தை குடிப்பவர்;
யார் சிங்கம் போல் இருந்து
பிறரை அழித்து வாழ்பவர்;
யார் நரி போல் இருந்து
பிறர் வாழ்க்கையை
அழிக்க சதி செய்பவர்;
என்பதை நாம்
அறிய முடியாது
எனவே, நாட்டில்
மனிதர்களோடு
வாழ்வதைக் காட்டிலும்
காட்டில் விலங்குகளோடு
நாம் இன்பமாக வாழலாம்

மாற்றத்தின் மூலம்
மனித இனம்
தோன்றும் போது
மூன்று இனங்கள்
தோன்றின

ஒன்று  ; ஆண் இனம்
இரண்டு ; பெண் இனம்
மூன்று  : ஆணும், பெண்ணும்
          சேர்ந்த இனம்

விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலையான
யாளி என்ற
உயிரினத்திலிருந்து
மனிதன் என்ற இனம்
மாற்றம் அடைந்து
தோன்றியபோது
ஆண் இனம், பெண் இனம்,
ஆணும், பெண்ணும்
சேர்ந்த இனம்
என்ற மூன்று இனங்கள்
ஒரே நேரத்தில் தோன்றின

இதில் ஆண் இனமும்
பெண் இனமும் கலந்தால்
பிறப்பு என்பது நிகழ்ந்து
ஆணோ அல்லது
பெண்ணோ பிறக்கிறது
என்பதை உணர்ந்து
கொண்ட ஆண் இனமும்,
பெண் இனமும்
தங்களுடைய இரண்டு
இனமும் இணைந்தால்
பிறப்பு என்பது நிகழ்ந்து
சந்ததிகளை உருவாக்க
முடியும் என்பதை
உண்ர்ந்து கொண்டது

எனவே, ஆண் இனமும்,
பெண் இனமும்
ஒன்றாக அதிக
அளவில் கலந்து
பிறப்பை ஏற்படுத்தி
சந்ததிகளை உருவாக்கி
பெரும்பான்மையாக
வளர்ந்து விட்டது

அப்படி என்றால்
ஆணும், பெண்ணும்
சேர்ந்த இனத்தை
இச்சமுதாயம் என்ன
செய்தது என்பதைப்
பற்றி இனி பார்ப்போம்

--------- இன்னும் வரும்
---------- 30-09-2018
///////////////////////////////////////