March 29, 2022

ஜபம்-பதிவு-723 (சாவேயில்லாத சிகண்டி-57)

 ஜபம்-பதிவு-723

(சாவேயில்லாத

சிகண்டி-57)

 

ஹோத்திரவாஹனர் :

கர்மவினையின்

விளைவாக

இருப்பவனும்

இறைவன் தான்

நீதிமானாக

இருந்து

நீதி வழங்குவதும்

அவன் தான்

 

கோயில்கள்

இருப்பதும்

கடவுளை நாம்

கும்பிடுவதும்

கர்மவினையின்

விளைவுகளைக்

குறைத்துக்

கொள்வதற்குத்

தான் அதைத்

தடுப்பதற்கு

இல்லை

 

கடவுளை

கும்பிடுவதால்

கர்மவினையின்

விளைவைக்

குறைத்து அதன்

பாதிப்பிலிருந்து

நம்மைக் காத்துக்

கொள்ளலாம்

 

அதற்காகத் தான்

இறைவனை

வணங்குகிறோம்

 

அம்பை :

கர்மவினையைப்

பற்றி

நீங்கள் எவ்வளவு

விளக்கங்கள்

கொடுத்தாலும்

எத்தகைய

விளக்கங்கள்

கொடுத்தாலும்

அதனை ஏற்றுக்

கொள்ளக்கூடிய

மனநிலையில்

நான் இல்லை

 

பீஷ்மரைக்

கொல்ல வேண்டும்

என்ற லட்சியம்

மட்டுமே

என்னுடைய

மனதில்

மேலோங்கி

நிற்கிறது

 

ஹோத்திரவாஹனர் :

உன்னுடைய

லட்சியம்

சரியானதா

தவறானதா

என்று

முடிவெடுத்து

உனக்குத்

தேவையானதை

செய்யக் கூடியவர்

ஒருவர் இருக்கிறார்

அவர் தான்

பரசுராமர்

 

ஜமதக்னியின்

புத்திரரான

பரசுராமர்

 

அவரைப் பார்த்து

உனக்கு என்ன

தேவை என்பதை

கோரிக்கையாக

வைத்தால்

உனக்கு எது

நன்மை பயக்குமோ

அதை பரசுராமர்

நிறைவேற்றுவார்

 

அம்பை :

அவரை

எப்படி நான்

பார்த்து என்

தேவையை

அவரிடம்

சொல்வது

 

ஹோத்திரவாஹனர் :

பரசுராமர் எப்போது
எங்கே இருப்பார்

இப்போது

எங்கே இருக்கிறார்

என்பதை

அறிந்தவர் ஒருவர்

இருக்கிறார்

அவர் பெயர்

அகிருதவ்ரணர்

 

அவர் நாளை இந்த

ஆசிரமத்திற்கு

வருகிறார்

 

அவரிடம்

பரசுராமர்

எங்கே

இருக்கிறார்

என்பதைக்

கேட்டுத் தெரிந்து

கொண்டு

பரசுராமரைச்

சந்திப்பது

பற்றி

முடிவெடுப்போம்

 

அது வரை சற்று

அமைதி கொள்

அம்பையே

 

அம்பை :

அமைதி

இழந்தவளுக்கு

அமைதி

எங்கிருந்து

கிடைக்கப்போகிறது

 

(என்று சொல்லிக்

கொண்டே

அம்பை

அங்கிருந்து

விலகிச் சென்று

பாறையின் மேல்

அமர்ந்து கொண்டு

வானத்தையே

பார்த்துக்கொண்டு

இருந்தாள்)

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----29-03-2022

-----செவ்வாய்க்கிழமை

////////////////////////////////////////

ஜபம்-பதிவு-722 (சாவேயில்லாத சிகண்டி-56)

 ஜபம்-பதிவு-722

(சாவேயில்லாத

சிகண்டி-56)

 

வரும் போதும்

ஒன்றும் கொண்டு

வரவில்லை

போகும் போதும்

ஒன்றும் கொண்டு

போகப்போவதில்லை

என்று சிலர்

சொல்வார்கள்

ஆனால் அந்த

வார்த்தை

தவறான வார்த்தை

 

நாம் வரும் போது

கர்மவினையைக்

கொண்டு

வருகிறோம்

 

வாழும் போதும்

கர்மவினையைக்

கொண்டு தான்

வாழ்கிறோம்

 

வாழும் போது

கர்மவினையைக்

கழிக்கவில்லை எனில்

போகும் போது

கர்மவினையைத்

தான் கொண்டு

போகிறோம்

 

வாழும் போது

கர்மவினையைக்

கழித்து விட்டால்

அடுத்து

பிறப்பு இல்லை

 

பிறப்பு இல்லை

என்றால்

இறப்பு இல்லை

பிறப்பு இறப்பு என்ற

சுழற்சி இல்லை

 

கர்மவினையின்

விளைவுகளை

புரிந்து கொள்ள

முயற்சி செய்

அம்பையே

 

அம்பை :

சில குழந்தைகள்

பிறக்கும் போது

குருடாகவும்,

ஊமையாகவும்,

உடல்

குறைபாடுடன்

பிறக்கிறதே

அதற்குக் காரணம்

அந்தக் குழந்தை

முற்பிறவிகளில்

செய்த செயல்களின்

விளைவால்

உண்டான

சஞ்சித கர்மம்

என்று

சொல்கிறீர்களா

 

ஹோத்திரவாஹனர் :

இல்லை

ஒரு குழந்தை

பிறக்கும் போது

அந்தக் குழந்தை

குறைபாட்டுடன்

பிறக்கிறது என்றால்

அது அந்தக்

குழுந்தை

முற்பிறவிகளில்

செய்த கர்மாவாகவும்

இருக்கலாம்

 

அல்லது

 

குழந்தையின்

பெற்றோர்கள்

செய்த

கர்மாவாகவும்

இருக்கலாம்

 

அல்லது

 

குழந்தையின்

முன்னோர்கள்
செய்த

கர்மாவாகவும்

இருக்கலாம்

 

குழந்தைகள்

பிறக்கும் போதே

குறைபாட்டுடன்

பிறக்கிறது

என்றால்

இதிலிருந்து

தெரிந்து கொள்ள

வேண்டாமா

நம்முடைய

கர்மாக்கள்

மட்டும் நம்மை

இயக்குவதில்லை

நம்முடைய

பெற்றோர்கள்

நம்முடைய

முன்னோர்கள்

ஆகியோர்களின்

கர்மாக்களும்

நம்மை இயக்கிக்

கொண்டிருக்கிறது

என்பதை

 

மேலும் ஒரு

குழந்தை பிறப்பது

அது தன்னுடைய

கர்மாவைக்

கழிப்பதற்குத் தான்

என்பதைத் தெரிந்து

கொள்

 

அம்பை :

ஒரு செயலின்

விளைவை

நாம் தடுக்க

முடியாது என்றால்

அதை

அனுபவித்தே

ஆக வேண்டும்

என்றால்

இறைவனாலும்

அதை தடுக்க

முடியாது என்றால்

கோயில் எதற்கு

கடவுள் எதற்கு

கடவுளை நாம்

ஏன் கும்பிட

வேண்டும்

கடவுளை

கும்பிடுவதால்

ஒரு பயனும்

இல்லையே

 

கடவுளை

எதற்காகக்

கும்பிட வேண்டும்

 

நம்முடைய

கர்மவினையை நாம்

அனுபவித்து விட்டு

போகலாமே

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----29-03-2022

-----செவ்வாய்க்கிழமை

////////////////////////////////////////

ஜபம்-பதிவு-721 (சாவேயில்லாத சிகண்டி-55)

 ஜபம்-பதிவு-721

(சாவேயில்லாத

சிகண்டி-55)

 

நாம் செய்த

செயல்களின்

விளைவினால்

உண்டான பாவம்

புண்ணியம் சேர்ந்த

கர்மவினையின்

விளைவை

மட்டும் நாம்

அனுபவிப்பதில்லை

தாயின்

கர்மவினையின்

விளைவினையும்

தந்தையின்

கர்மவினையின்

விளைவினையும்

சேர்த்துத்தான்

அனுபவிக்கிறோம்

 

உன்னுடைய

தாய் தந்தை

இருவரும்

சேரவில்லை என்றால்

அம்பையே

நீ பிறந்திருக்கவே

முடியாது

நீ பிறப்பதற்கு

இருவர் தேவை

தாயின் கர்மவினையும்

தந்தையின்

கர்மவினையும்

சேர்ந்து தான்

நீ பிறந்திருக்கிறாய்

 

தாயின் கர்மவினை

என்றால்

தாயின் கர்மவினையை

மட்டும் குறிப்பிடாது

தாயின் பெற்றோர்கள்

தாயின் முன்னோர்கள்

என்று

ஆதி முதல்

பல பிறவிகளின்

தொடர்பாக

கருத்தொடராக வந்த

கர்மவினைகளைக்

குறிக்கும்

 

அதைப்போல

தந்தையின்

கர்மவினை என்றால்

தந்தையின்

கர்மவினையை

மட்டும் குறிப்பிடாது

தந்தையின்

பெற்றோர்கள்

தந்தையின்

முன்னோர்கள் என்று

ஆதி முதல்

பல பிறவிகளின்

தொடர்பாக

கருத்தொடராக வந்த

கர்மவினைகளைக்

குறிக்கும்

 

தாய் தந்தை இருவரின்

கர்மவினையின்

விளைவில் தான்

நீ  பிறந்திருக்கிறாய்

தாயின் வயிற்றில்

நீ கருக்கொண்டு

உருக்கொள்ளும் போது

ஆணா பெண்ணா

என்று முடிவெடுத்து

குழந்தையை

உருவாக்குவதும்

அவர்கள்

இருவரில் பதிந்துள்ள

கர்மவினைகள் தான்

 

இருவருடைய

கர்மவினையும்

இல்லை என்றால்

தாயின் வயிற்றில்

கருக்கொண்டு

உருக்கொண்டு

குழந்தை

வளர முடியாது

 

தாயின்

கர்மவினையையும்

தந்தையின்

கர்மவினையையும்

கொண்டு இந்த

உலகத்தில் குழந்தை

பிறக்கும் போது

முந்தைய பல

பிறவிகளில்

சேர்த்து வைத்துள்ள

நல்ல மற்றும்

தீய கர்மாக்களின்

மொத்த மூட்டையான

சஞ்சித கர்மாவைக்

கொண்டு தான்

குழந்தை பிறக்கும்

 

இந்த உலகத்தில்

பிறந்தது முதல்

உயிரோடு வாழ்ந்த

காலம் வரை நாம்

செய்த செயல்களின்

விளைவுகள்

பிராரப்த கர்மம்

எனப்படும்

சஞ்சித கர்மாவின் 

ஒரு சிறு பகுதி தான்

பிராரப்த கர்மா.

இது இந்தப்

பிறவியில்

அனுபவிக்க வேண்டிய

நல்ல மற்றும்

தீய பலன்கள்

 

இந்தப் பிறவியில்

செய்யும்

நல்ல மற்றும்

தீய கர்மாக்கள்

ஆகாம்ய கர்மா

எனப்படும்.

இவை

இந்தப் பிறவியின்

இறுதியில்

சஞ்சித கர்மாவோடு

சேர்க்கப்படும்

 

இந்த மூன்று விதமான

கர்மாக்களைக்

கொண்டு தான்

இந்த உலகத்தில்

வாழும் அனைத்து

மனிதர்களும்

வாழ வேண்டும்

நீயும்

இப்படித் தான்

வாழ்ந்து

கொண்டிருக்கிறாய்

 

நீ கஷ்டப்படுவதற்கு

காரணம்

சஞ்சித கர்மாவாக

இருக்கலாம்

அல்லது

பிராரப்த கர்மாவாக

இருக்கலாம்

அல்லது

ஆகாம்ய

கர்மாவாக

இருக்கலாம்

 

இந்த மூன்று

கர்மாக்களில்

எந்த கர்மாவினால்

கஷ்டப்படுகிறாய்

என்பதை உணர்ந்து

கொள்வது கடினம்

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----29-03-2022

-----செவ்வாய்க்கிழமை

////////////////////////////////////////

ஜபம்-பதிவு-720 (சாவேயில்லாத சிகண்டி-54)

 ஜபம்-பதிவு-720

(சாவேயில்லாத

சிகண்டி-54)

 

கர்மவினையைப்

பற்றி

எத்தனை நூல்கள்

படித்தாலும்

எத்தனை பேர்

விளக்கினாலும்

கர்மவினையைப்

பற்றி

புரிந்து கொள்ள

முடியாது

கர்மவினையைப்

பற்றி

உணர்ந்தால் மட்டுமே

கர்மவினையைப்

பற்றி

புரிந்து கொள்ள

முடியும்

 

கர்மவினை எப்படி

செயல்படுகிறது

என்பது தெரியாமல்

கர்மவினையைப்

பற்றி உணராமல்

யாராலும்

ஆன்மீகத்தில்

உயர்நிலை

அடைய முடியாது

 

கர்மவினை எப்படி

செயல்படுகிறது

என்பதை

உணர்ந்தவர்களால்

மட்டுமே

ஞானம், சமாதி.

முக்தி

ஆகியவற்றை

அடைய முடியும்

 

இந்த உலகத்தில்

எந்த ஒரு

குழந்தையும்

எந்த ஒரு இடத்தில்

பிறந்தாலும்

அந்த குழந்தை

அதனுடைய

கர்மவினையைத்

தீர்த்து

பிறவிச் சுழற்சியை

நிறுத்தி

பிறப்பு இறப்பு

அற்ற நிலையை

அடைவதற்காகத்

தான் பிறக்கிறது

என்று பொருள்

 

கர்மவினை எந்த

குழந்தைக்கு

இருக்கிறதோ

அந்த குழந்தை

மட்டுமே

இந்த உலகத்தில்

பிறக்கிறது

கர்மவினை

எந்த குழந்தைக்கு

இல்லையோ

அந்த குழந்தை

இந்த உலகத்தில்

பிறப்பது இல்லை

 

ஒரு குழந்தை

இந்த உலகத்தில்

பிறக்கிறது

என்றால்

அது தன்னுடைய

கர்மவினையைச்

சுமந்து கொண்டு

தான் பிறக்கிறது

 

கர்மாக்கள் தான்

ஒரு குழந்தை

பிறப்பதற்கு

காரணம் ஆகிறது

கர்மாக்கள் தான்

ஒருவருடைய

வாழ்க்கையை

நடத்துகிறது

கர்மாக்கள் தான்

ஒருவருடைய

இன்பத்திற்கும்

துன்பத்திற்கும்

காரணமாக

இருக்கிறது

கர்மாக்கள் தான்

ஒருவர்

இறப்பதற்கும்

இறப்பு இல்லாமல்

இருப்பதற்கும்

ஆதாரமாக

இருக்கிறது

 

நாம் செய்த

செயல்களின்

விளைவுகள்

பாவத்தை உண்டு

பண்ணினால்

நாம் கஷ்டத்தை

அனுபவிப்போம்

அது பாவத்தினால்

வந்த பலன்

 

நான் செய்த

செயல்களின்

விளைவுகள்

புண்ணியத்தை

உண்டு

பண்ணினால்

நாம் இன்பத்தை

அனுபவிப்போம்

அது

புண்ணியத்தினால்

வந்த பலன்

 

நாம் கஷ்டப்படும்

போது பாவத்தினால்

கஷ்டப்படுகிறோம்

என்று

நினைக்கிறோம்

அவ்வாறு

நினைக்கக்கூடாது

நாம் கஷ்டப்படும்

போது

கர்மவினையில்

பாவம் ஒன்று

கழிகிறது என்று

எடுத்துக் கொள்ள

வேண்டும்

 

நாம் இன்பமாக

இருக்கும் போது

எதைப்பற்றியும்

கவலைப்

படுவதில்லை

நமக்கு இன்பம்

நடக்கும் போது

நாம் செய்த

புண்ணியத்தின்

பலனில் ஒன்று

கழிகிறது என்பதைத்

தெரிந்து கொள்ள

வேண்டும்

 

கஷ்டப்படும் போது

எப்படி பாவம்

கழிகிறதோ

அப்படியே இன்பமாக

இருக்கும் போது

புண்ணியமும்

கழிகிறது

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----29-03-2022

-----செவ்வாய்க்கிழமை

////////////////////////////////////////