March 29, 2022

ஜபம்-பதிவு-719 (சாவேயில்லாத சிகண்டி-53)

 ஜபம்-பதிவு-719

(சாவேயில்லாத

சிகண்டி-53)

 

ஆனால் நான்

எந்த ஒரு பாவமும்

செய்யவில்லை

அப்படி

இருக்கும் போது

எனக்கு ஏன்

இத்தனை கஷ்டங்கள்

எதற்காக இப்படி

கஷ்டப்படுகிறேன்

நான் ஏன்

கஷ்டப்பட வேண்டும்

 

ஹோத்திரவாஹனர் :

அம்பையே

உனக்கு நேர்ந்த

இந்த கஷ்டங்கள்

சென்ற பிறவிகளில்

நீ செய்த

கர்ம வினையினால்

உனக்கு நேர்ந்த

கஷ்டங்களாக

இருக்கலாம்

 

அல்லது

 

உன்னுடைய

பெற்றோர்கள்

உன்னுடைய

முன்னோர்கள்

செய்த செயல்களால்

உண்டான

கர்மவினையின்

விளைவாகக்

கூட இருக்கலாம்

 

அம்பை :

நான் செய்த

கர்மவினையின்

விளைவுகளை

நான் அனுபவித்தால்

ஏற்றுக் கொள்ளலாம்

அதை சரி என்று

கூட சொல்லலாம்

 

ஆனால்

மற்றவர்கள் செய்த

கர்மவினையின்

விளைவுகளை

நான் ஏன் ஏற்றுக்

கொள்ள வேண்டும்

அது தவறல்லவா

 

எனக்கு சம்பந்தம்

இல்லாத

கர்மவினையின்

விளைவுகளை

நான் ஏன்

அனுபவிக்க

வேண்டும்

 

ஹோத்திரவாஹனர் :

அம்பையே

கர்மவினையைப்

பற்றி நீ கேட்ட

இந்த

கேள்வியைத் தான்

இந்த உலகத்தில்

உள்ள

அனைவரும்

கேட்டுக்

கொண்டிருக்கிறார்கள்

 

இந்த கேள்விக்கான

பதிலை கேட்டுத்

தெரிந்து

கொள்ள முடியாது

உணர்ந்து தான்

தெரிந்து

கொள்ள முடியும்

 

கர்மவினையைப்

பற்றி

படித்தவர்களால்

இந்த கேள்விக்கு

பதிலளிக்க

முடியாது

கர்மவினையைப்

பற்றி

உணர்ந்தவர்கள்

மட்டுமே இந்த

கேள்விக்கு

பதிலளிக்க முடியும்

 

கர்மவினையைப்

பற்றி

உணர்ந்தவர்கள்

சொன்னாலும்

உணர்ந்தால்

மட்டுமே

கர்மவினையைப்

பற்றி

மற்றவர்கள் புரிந்து

கொள்ள முடியும்

உணராமல்

கர்மவினையைப்

பற்றி புரிந்து

கொள்ளவே முடியாது

 

கர்மவினையைப்

பற்றி

பெரும்பாலும்

யாரும்

எழுதியிருக்க

மாட்டார்கள்

கர்மவினையைப்

பற்றி

கேள்விகள்

கேட்டால்

பெரும்பாலானவர்கள்

பதில் தெரியாததால்

சொல்லவும்

மாட்டார்கள்

கர்மவினையைப்

பற்றி

கேள்விகள் கேட்டாலே

பெரும்பாலானவர்கள்

அதைத் தவிர்த்து

விட்டுச் சென்று

விடுவார்கள்

 

ஆன்மீகத்தில்

உயர்நிலையில்

இருப்பதாக தங்களைக்

காட்டிக் கொள்பவர்கள்

கர்மவினை

சம்பந்தப்பட்ட

கேள்விகளை மட்டும்

கேட்காதீர்கள்

என்று தடையே

போட்டு

வைத்திருப்பவர்களும்

உண்டு

 

கர்வினையைப் பற்றி

கேள்விகள் கேட்டாலே

ஓடி ஒளிந்து

கொள்பவர்களும்

உண்டு 

 

ஆன்மீகத்தில்

உயர்ந்தவர்கள் என்று

தங்களைச் சொல்லிக்

கொள்பவர்களில்

பெரும்பாலானவர்கள்

கர்மவினையைப்

பற்றி

உணராதவர்களாகத்

தான் இருக்கிறார்கள்

ஏனென்றால்

கர்மவினையைப்

பற்றி

அறிந்தவர்கள் அதிகம்

உணர்ந்தவர்கள்

குறைவு

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 -----29-03-2022

-----செவ்வாய்க்கிழமை

////////////////////////////////////////

No comments:

Post a Comment