March 29, 2022

ஜபம்-பதிவு-723 (சாவேயில்லாத சிகண்டி-57)

 ஜபம்-பதிவு-723

(சாவேயில்லாத

சிகண்டி-57)

 

ஹோத்திரவாஹனர் :

கர்மவினையின்

விளைவாக

இருப்பவனும்

இறைவன் தான்

நீதிமானாக

இருந்து

நீதி வழங்குவதும்

அவன் தான்

 

கோயில்கள்

இருப்பதும்

கடவுளை நாம்

கும்பிடுவதும்

கர்மவினையின்

விளைவுகளைக்

குறைத்துக்

கொள்வதற்குத்

தான் அதைத்

தடுப்பதற்கு

இல்லை

 

கடவுளை

கும்பிடுவதால்

கர்மவினையின்

விளைவைக்

குறைத்து அதன்

பாதிப்பிலிருந்து

நம்மைக் காத்துக்

கொள்ளலாம்

 

அதற்காகத் தான்

இறைவனை

வணங்குகிறோம்

 

அம்பை :

கர்மவினையைப்

பற்றி

நீங்கள் எவ்வளவு

விளக்கங்கள்

கொடுத்தாலும்

எத்தகைய

விளக்கங்கள்

கொடுத்தாலும்

அதனை ஏற்றுக்

கொள்ளக்கூடிய

மனநிலையில்

நான் இல்லை

 

பீஷ்மரைக்

கொல்ல வேண்டும்

என்ற லட்சியம்

மட்டுமே

என்னுடைய

மனதில்

மேலோங்கி

நிற்கிறது

 

ஹோத்திரவாஹனர் :

உன்னுடைய

லட்சியம்

சரியானதா

தவறானதா

என்று

முடிவெடுத்து

உனக்குத்

தேவையானதை

செய்யக் கூடியவர்

ஒருவர் இருக்கிறார்

அவர் தான்

பரசுராமர்

 

ஜமதக்னியின்

புத்திரரான

பரசுராமர்

 

அவரைப் பார்த்து

உனக்கு என்ன

தேவை என்பதை

கோரிக்கையாக

வைத்தால்

உனக்கு எது

நன்மை பயக்குமோ

அதை பரசுராமர்

நிறைவேற்றுவார்

 

அம்பை :

அவரை

எப்படி நான்

பார்த்து என்

தேவையை

அவரிடம்

சொல்வது

 

ஹோத்திரவாஹனர் :

பரசுராமர் எப்போது
எங்கே இருப்பார்

இப்போது

எங்கே இருக்கிறார்

என்பதை

அறிந்தவர் ஒருவர்

இருக்கிறார்

அவர் பெயர்

அகிருதவ்ரணர்

 

அவர் நாளை இந்த

ஆசிரமத்திற்கு

வருகிறார்

 

அவரிடம்

பரசுராமர்

எங்கே

இருக்கிறார்

என்பதைக்

கேட்டுத் தெரிந்து

கொண்டு

பரசுராமரைச்

சந்திப்பது

பற்றி

முடிவெடுப்போம்

 

அது வரை சற்று

அமைதி கொள்

அம்பையே

 

அம்பை :

அமைதி

இழந்தவளுக்கு

அமைதி

எங்கிருந்து

கிடைக்கப்போகிறது

 

(என்று சொல்லிக்

கொண்டே

அம்பை

அங்கிருந்து

விலகிச் சென்று

பாறையின் மேல்

அமர்ந்து கொண்டு

வானத்தையே

பார்த்துக்கொண்டு

இருந்தாள்)

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----29-03-2022

-----செவ்வாய்க்கிழமை

////////////////////////////////////////

No comments:

Post a Comment