March 29, 2022

ஜபம்-பதிவு-720 (சாவேயில்லாத சிகண்டி-54)

 ஜபம்-பதிவு-720

(சாவேயில்லாத

சிகண்டி-54)

 

கர்மவினையைப்

பற்றி

எத்தனை நூல்கள்

படித்தாலும்

எத்தனை பேர்

விளக்கினாலும்

கர்மவினையைப்

பற்றி

புரிந்து கொள்ள

முடியாது

கர்மவினையைப்

பற்றி

உணர்ந்தால் மட்டுமே

கர்மவினையைப்

பற்றி

புரிந்து கொள்ள

முடியும்

 

கர்மவினை எப்படி

செயல்படுகிறது

என்பது தெரியாமல்

கர்மவினையைப்

பற்றி உணராமல்

யாராலும்

ஆன்மீகத்தில்

உயர்நிலை

அடைய முடியாது

 

கர்மவினை எப்படி

செயல்படுகிறது

என்பதை

உணர்ந்தவர்களால்

மட்டுமே

ஞானம், சமாதி.

முக்தி

ஆகியவற்றை

அடைய முடியும்

 

இந்த உலகத்தில்

எந்த ஒரு

குழந்தையும்

எந்த ஒரு இடத்தில்

பிறந்தாலும்

அந்த குழந்தை

அதனுடைய

கர்மவினையைத்

தீர்த்து

பிறவிச் சுழற்சியை

நிறுத்தி

பிறப்பு இறப்பு

அற்ற நிலையை

அடைவதற்காகத்

தான் பிறக்கிறது

என்று பொருள்

 

கர்மவினை எந்த

குழந்தைக்கு

இருக்கிறதோ

அந்த குழந்தை

மட்டுமே

இந்த உலகத்தில்

பிறக்கிறது

கர்மவினை

எந்த குழந்தைக்கு

இல்லையோ

அந்த குழந்தை

இந்த உலகத்தில்

பிறப்பது இல்லை

 

ஒரு குழந்தை

இந்த உலகத்தில்

பிறக்கிறது

என்றால்

அது தன்னுடைய

கர்மவினையைச்

சுமந்து கொண்டு

தான் பிறக்கிறது

 

கர்மாக்கள் தான்

ஒரு குழந்தை

பிறப்பதற்கு

காரணம் ஆகிறது

கர்மாக்கள் தான்

ஒருவருடைய

வாழ்க்கையை

நடத்துகிறது

கர்மாக்கள் தான்

ஒருவருடைய

இன்பத்திற்கும்

துன்பத்திற்கும்

காரணமாக

இருக்கிறது

கர்மாக்கள் தான்

ஒருவர்

இறப்பதற்கும்

இறப்பு இல்லாமல்

இருப்பதற்கும்

ஆதாரமாக

இருக்கிறது

 

நாம் செய்த

செயல்களின்

விளைவுகள்

பாவத்தை உண்டு

பண்ணினால்

நாம் கஷ்டத்தை

அனுபவிப்போம்

அது பாவத்தினால்

வந்த பலன்

 

நான் செய்த

செயல்களின்

விளைவுகள்

புண்ணியத்தை

உண்டு

பண்ணினால்

நாம் இன்பத்தை

அனுபவிப்போம்

அது

புண்ணியத்தினால்

வந்த பலன்

 

நாம் கஷ்டப்படும்

போது பாவத்தினால்

கஷ்டப்படுகிறோம்

என்று

நினைக்கிறோம்

அவ்வாறு

நினைக்கக்கூடாது

நாம் கஷ்டப்படும்

போது

கர்மவினையில்

பாவம் ஒன்று

கழிகிறது என்று

எடுத்துக் கொள்ள

வேண்டும்

 

நாம் இன்பமாக

இருக்கும் போது

எதைப்பற்றியும்

கவலைப்

படுவதில்லை

நமக்கு இன்பம்

நடக்கும் போது

நாம் செய்த

புண்ணியத்தின்

பலனில் ஒன்று

கழிகிறது என்பதைத்

தெரிந்து கொள்ள

வேண்டும்

 

கஷ்டப்படும் போது

எப்படி பாவம்

கழிகிறதோ

அப்படியே இன்பமாக

இருக்கும் போது

புண்ணியமும்

கழிகிறது

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----29-03-2022

-----செவ்வாய்க்கிழமை

////////////////////////////////////////

No comments:

Post a Comment