October 05, 2018

திருக்குறள்-பதிவு-31


                         திருக்குறள்-பதிவு-31

தாயின் வயிற்றில்
கர்ப்பப்பபை
என்னும் உறையில்
நிறைந்துள்ள நீரில்
தான் கருவானது
உருவாகி வளரும்

இந்த உலகத்தில்
உயிரினங்கள்
முதலில்
நீரிலிருந்து தான்
தோன்றியது என்பதை
இது குறிக்கிறது

குழந்தை தாயின்
வயிற்றிலிருந்து
பிரிந்து
இந்த பூமியில்
நிலத்தில்
விழுகிறது

நீரில் இருந்த
உயிரினம்
நிலத்தில்
வாழ்வதற்குரிய
தகவமைப்பைப்
பெற்றதை இது
குறிக்கிறது

நிலத்தில் வாழ்ந்து
கொண்டு இருந்த
குழந்தை
தவழ்ந்து செல்கிறது

உயிரினங்கள்
நிலத்தில் தவழ்ந்து
செல்வதை இது
குறிக்கிறது

குழந்தை
தாயின் வயிற்றில்
நீரில் இருந்தது
முதல் தரையில்
தவழ்ந்து சென்றது
வரை உள்ள
நிகழ்ச்சியானது,
நீரில் உயிரினங்கள்
தோன்றியதையும்,
விலங்கின்
பரிணாமத்தையும்,
குறிக்கிறது.

தவழ்ந்து சென்ற
குழந்தை எழுந்து
நிற்க முயற்சி
செய்யும் போது
அடிக்கடி கீழே
தரையில் விழுந்தாலும்
குழந்தை
இரண்டு கால்களால்
நிற்பதற்கு தொடர்ந்து
முயற்சி செய்து
நிற்க ஆரம்பிக்கிறது

இது உயிரினங்கள்
எழுந்து நிற்க
முயற்சி செய்து
எழுந்து நின்றதைக்
குறிக்கிறது

இரண்டு கால்களால்
நிற்க ஆரம்பித்த
குழந்தை
இரண்டு கால்களால்
நடந்து முயற்சி
செய்தபின்
இரண்டு கால்களால்
ஓடுகிறது

எழுந்து நின்ற
உயிரினங்கள்
நடந்து சென்றதையும்
பின்பு ஓடியதையும்
இது குறிக்கிறது

தன்னுடைய
அன்றாடத் தேவைகளை
நிறைவேற்றிக் கொள்ள
பிறரின் தயவை
நாடிய குழந்தை
வளர்ந்தவுடன்
தன் அன்றாடத்
தேவைகளை தானே
பூர்த்தி செய்வதற்குரிய
ஆற்றலைப் பெறுகிறது.

எழுந்து நின்ற
குழந்தை முதல்
தன் தேவையை
தானே பூர்த்தி
செய்து கொள்வது
வரை உள்ள
நிகழ்ச்சியானது
விலங்கிலிருந்து
மனிதன்
தோன்றியதையும்
மனிதன் அடைந்த
முழு வளர்ச்சியையும்
இது குறிக்கிறது

இவ்வாறு குழந்தையில்
இருந்து தொடங்கி
குழந்தையின் வளர்ச்சியில்
ஏற்பட்ட மாற்றம் வரை
நாம் யோசித்து
பார்த்தோமேயானால்
உயிரினங்களின்
பரிணாமத்தை நாமே
வெளிப்படுத்துவதை
நாம் உணர்ந்து
கொள்ளலாம்

விஞ்ஞானியான
சார்லஸ் டார்வின்
உலகம் முழுவதும்
சுற்றிப் பார்த்து
தான் புறக்கண்களால்
கண்டதை
ஆராய்ச்சி செய்து
குரங்கிலிருந்து
மனிதன் வந்தான்
அதாவது விலங்கிலிருந்து
மனிதன் வந்தான்
என்று சொன்னார்.

சார்லஸ் டார்வினுக்கு
பல நூற்றாண்டுகளுக்கு
முன்பாகவே
மெய்ஞ்ஞானியான
நம் முன்னோர்கள்
இருக்கும் இடத்தை
விட்டு எங்கும் நகராது
ஒரே இடத்தில்
இருந்து தன்
அகக் கண்களால்
இந்த உலகம்
முழுவதையும் கண்டு
தாங்கள் கண்டதை
தசாவதாரத்தில்
நரசிம்ம அவதாரத்தின்
உருவமான
சிங்கத்தின் தலையும்
மனித உடலையும்
கொண்ட உயிரினத்திலிருந்து
மனிதன் வந்தான்
என்று சொன்னார்கள்

இப்பொழுது நாம்
விலங்கு முகமும்,
மனித உடலும் கொண்ட
உயிரினமான
யாளியிலிருந்து
மனிதன் வந்தான் என்ற
புதியதொரு தகவலைத்
தெரிந்து கொண்டிருக்கிறோம்
என்பதை நினைவில்
கொள்ள வேண்டும்

 --------- இன்னும் வரும்
----------  05-10-2018
//////////////////////////////////////////////////////////