September 08, 2019

பரம்பொருள்-பதிவு-61


                 பரம்பொருள்-பதிவு-61

" கோயிலுக்குள் உற்பத்தி
செய்யப்பட்டு
இயங்கிக் கொண்டும் ;
நகர்ந்து கொண்டும் ;
இருக்கும்
கடவுள் சக்தியை ;
படைத்து, காத்து,
அழித்து, மறைத்து ,
அருள் செய்து,
ஐம்பெரும்
தொழிலை செய்து
கொண்டிருக்கும்
கடவுள் சக்தியை ;
இந்த உலகம்
அனைத்தையும்
காப்பாற்றி ,வழி
நடத்திக் கொண்டிருக்கும்,
கடவுள் சக்தியை ;
கோயிலுக்குள் ஒரு
குறிப்பிட்ட எல்லைக்குள்
குவித்து வைப்பதற்காக
ஒரு விதியைக்
கண்டுபிடித்து - அந்த
விதியைப் பயன்படுத்தி
கோயிலுக்குள் உற்பத்தி
செய்யப்பட்ட
கடவுள் சக்தியை
கோயிலுக்குள் ஒரு
குறிப்பிட்ட எல்லைக்குள்
குவித்து வைத்தனர் ;
இந்திய நாட்டில் வாழ்ந்த
மெய்ஞ்ஞானம்
உணர்ந்தவர்களாகிய
நம்முடைய முன்னோர்கள்"

நம்முடைய முன்னோர்கள்
கண்டு பிடித்து
பயன்படுத்திய விதி தான்

"இயங்கிக் கொண்டும்
நகர்ந்து கொண்டும்
இருக்கக்கூடிய
கடவுள் சக்தியில்
உள்ள கடவுள்
தன்மையானது
கோயிலுக்குள் ஒரு
குறிப்பிட்ட எல்லைக்குள்
குவித்து வைக்கப்படும்
போதும் இருக்க
வேண்டுமானால்
கோயிலுக்குள் உற்பத்தி
செய்யப்பட்ட கடவுள்
சக்தியைக் கொண்டு
கோயிலுக்குள்
ஒரு குறிப்பிட்ட
எல்லைக்குள்
சுற்றிக் கொண்டே
இருக்கும்படியான
சக்தி வட்டத்தை
உருவாக்க வேண்டும்"

"இந்த விதியைப்
பயன்படுத்தி தான்
கோயிலுக்குள்
உற்பத்தி செய்யப்பட்ட
கடவுள் சக்தியை
கோயிலுக்குள்
ஒரு குறிப்பிட்ட
எல்லைக்குள் சுற்றிக்
கொண்டே
இருக்கும்படியான
சக்தி வட்டத்தை
உருவாக்கினர்
நம்முடைய முன்னோர்கள்"

"சக்தி வட்டத்தை
உருவாக்கினால் மட்டுமே
கோயிலுக்குள்
உற்பத்தி செய்யப்பட்ட
கடவுள் சக்தியானது
கோயிலுக்குள்
அப்படியே இருக்கும் ;
கோயில் இருக்கும் வரை
எத்தனை நூற்றாண்டுகள்
கடந்தாலும் கடவுள்
சக்தியானது கோயிலுக்குள்
அப்படியே இருக்கும் "

"கோயிலுக்குள் ஒரு
குறிப்பிட்ட எல்லைக்குள்
சுற்றிக் கொண்டே
இருக்கும் சக்தி
வட்டத்திற்குள்
பிரவேசிக்கும் பக்தர்கள்
தங்களுடைய தேவையைப்
பூர்த்தி செய்து
கொள்வதற்காக
தங்களுக்கு
தேவையானதை சுற்றிக்
கொண்டே இருக்கும்
சக்தி வட்டத்திலிருந்து
பெற்றுக் கொண்டு
தங்களுடைய தேவையை
பூர்த்தி செய்து
கொள்கின்றனர்"

"கோயிலுக்குள் ஒரு
குறிப்பிட்ட எல்லைக்குள்
கடவுள் சக்தியை
சுற்றும் படியான
சக்தி வட்டத்தை
உருவாக்கி
குவித்து
வைக்கவிலையெனில்
கடவுள் சக்தியானது
கோயிலுக்குள்
அப்படியே இருக்காது ;
மக்கள் கோயிலுக்கு
வந்து தங்களுடைய
தேவையைப் பூர்த்தி
செய்து கொள்ள முடியாது ;"

“கோயிலுக்குள்
சுற்றிக் கொண்டே
இருக்கும்படியான
கடவுள் சக்தியைக்
கொண்ட சக்தி வட்டம்
இருந்தால் மட்டுமே
கோயிலானது சக்தி
ஏறப்பெற்றதாக இருக்கும் ;
உயிர்த் துடிப்பு
கொண்டதாக இருக்கும் ;
ஆற்றல் நிறைந்த
களமாக இருக்கும் ;
புனிதத் தன்மை
உடையதாக இருக்கும் ;
பக்தர்கள் தங்களுடைய
தேவைவை பூர்த்தி
செய்து கொள்ளும்
புனிதத் தலமாக
இருக்கும் ; “

"கோயிலுக்குள் ஒரு
குறிப்பிட்ட எல்லைக்குள்
கடவுள் சக்தியைக்
கொண்டு சுற்றும்
படியான சக்தி
வட்டத்தை எப்படி
உருவாக்கி வைத்தார்கள்
என்று தெரியுமா…………………………? ”

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
----------- 08-09-2019
//////////////////////////////////////////////////////////