March 23, 2019

திருக்குறள்-பதிவு-130


                      திருக்குறள்-பதிவு-130

“ 2000-ஆம் ஆண்டு
ஜியார்டானோ புருனோ
உயிரோடு எரித்து
கொல்லப்பட்ட
400-வது இறந்த தினம் ;
இந்த 400-வது
இறந்த தினத்தை
ஜியார்டானோ
புருனோவின்
ஆதரவாளர்கள் ;
ஜியார்டானோ
புருனோவை
பின்பற்றுபவர்கள் ;
அனைவரும்
புனித ஆண்டாக
கொண்டாடி மகிழ்ந்தனர்; “

“ ஜியார்டானோ
புருனோவின்
400-வது இறந்த
ஆண்டான
2000-ஆம் ஆண்டில்
கார்டினல்
ஏஞ்ஜலோ சோடானோ
(Cardinal Angelo
Sodano)
ஜியார்டானோ புருனோ
உயிரோடு எரித்துக்
கொல்லப்பட்ட செயல் ;
ஒரு சோகமான
அத்தியாயம் ;
(Bad Episode)
என்று கூறி நடந்த
செயலுக்கு வருத்தம்
தெரிவித்தார் ; “

“ அதே வருடத்தில்
போப் ஜான் பால்-II
(Pope John Paul-II)
அவர்கள்
இயேசு கிறிஸ்துவின்
மீது அளவற்ற
பக்தியும் ;
பைபிளின் மீது
அளவற்ற மரியாதையும் ;
கிறிஸ்தவ மதத்தின்
மேல் அளவற்ற
அன்பையும் ;
வைத்திருந்த
உண்மையான
கிறிஸ்தவர்கள் ;
தங்களுடைய வாழ்க்கையை
சத்தியத்தின் சேவைக்காக
ஈடுபடுத்திக்
கொண்டிருந்த
கிறிஸ்தவர்கள் ;
தங்களுடைய
சத்தியத்தின்
சேவையில் நிகழ்த்திய
வன்முறைகளுக்காக ;
ஒரு பொது
மன்னிப்பு கேட்டார். “

“ கார்டினல்
ஏஞ்ஜலோ சோடானோ
(Cardinal Angelo
Sodano)
ஜியார்டானோ
புருனோ உயிரோடு
எரித்துக் கொல்லப்பட்ட
செயலுக்கு
வருத்தம் தெரிவித்தார் ;
போப் ஜான் பால்-II
(Pope John Paul-II)
ஜியார்டானோ புருனோ
உயிரோடு எரித்துக்
கொல்லப்பட்டதற்கு
மன்னிப்பு கேட்டார்; ‘

“ ஆனால் இருவரும்
ஜியார்டானோ புருனோ
உயிரோடு எரித்துக்
கொல்லப்பட்ட செயல்
தவறான செயல்
என்றும் ,
அவரை கிறிஸ்தவர்கள்
உயிரோடு எரித்துக்
கொன்ற செயல்
தவறான செயல்
என்றும் ,
சொல்லாமல்
வருத்தப்படுகிறோம் ;
மன்னிப்பு கேட்கிறோம் ;
என்று மட்டுமே
சொன்னார்கள் ; “

“ஜியார்டானோ
புருனோ
உயிரோடு எரித்துக்
கொல்லப்பட்ட
செயலுக்கு
போப் மன்னிப்பு
கேட்டார் என்றால்
உலகில் உள்ள
அனைத்து
கிறிஸ்தவர்கள்
சார்பாக மன்னிப்பு
கேட்டார் என்று
அர்த்தம் ;
அதாவது
உலகத்தில் உள்ள
கோடானு கோடி
கிறிஸ்தவர்களும்
ஜியார்டானோ
புருனோ
உயிருடன் எரித்து
கொல்லப்பட்ட
சம்பவத்திற்கு
மன்னிப்பு கேட்டனர் ;
என்று அர்த்தம் ; “

“ ஜியார்டானோ
புருனோ
உயிரோடு எரித்துக்
கொல்லப்பட்டு 400
ஆண்டுகள் கழித்து
போப் மன்னிப்பு
கேட்டார் என்றால்,
மக்கள் மத்தியில்
நினைத்து கூட
பார்க்க முடியாத
அளவிற்கு
ஜியார்டானோ புருனோ
எவ்வளவு செல்வாக்கு
பெற்ற ஒரு மனிதராக
இருந்திருக்கிறார்
என்பதை அறிந்து
கொள்ளலாம் “

“மக்கள் செல்வாக்கு
பெற்ற ஒருவரை
அவர் இறந்த
பிறகும்
அவரை ஒன்றும்
செய்ய முடியாது
என்பதற்கு
வாத்திகன் நகரத்தைப்
பார்த்தவாறு 2000-ஆம்
ஆண்டிலும் நின்று
கொண்டிருக்கும்
ஜியார்டானோ
புருனோவின்
முழு உருவ
வெண்கல
சிலையே சாட்சி “

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  22-03-2019
/////////////////////////////////////////////////////