July 09, 2020

அறிய வேண்டியவை-பதிவு-103


                ஜபம்-பதிவு-595
        (அறிய வேண்டியவை-103)

கிருஷ்ணன் :
“ஏனென்றால்
துரியோதனன் ஒரு
உண்மையான வீரன்”

தர்மர் :
“எப்படி
சொல்கிறீர்கள்?”

கிருஷ்ணன் :
“துரியோதனன் தனது
இஷ்டத்திற்கு ஒரு
எதிரியைத் தேர்ந்தெடுத்து
அவருடன் சண்டையிட்டு
வெற்றி பெற்று
விட்டான் என்றால்
இந்த உலகம்
துரியோதனனை
வீரம் இல்லாத
ஒருவனை எதிரியாகத்
தேர்ந்தெடுத்து வெற்றி
பெற்று விட்டான்
என்று  சொல்லும்”

“தேர்ந்தெடுக்கும்
பொறுப்பை அவன்
எதிரியிடமே
ஒப்படைத்து விட்டால்
துரியோதனனுடன்
போரிடுவதற்கு
தகுதியுடையவர் மட்டுமே
போரிடுவதற்கு
சம்மதம் தெரிவித்து
துரியோதனனுடன்
போரிடுவர்
அத்தகையவரை
துரியோதனன் கொன்றால்
இந்த உலகம்
துரியோதனனை
வீரன் என்று பேசும்”

“அதனால் தான்
துரியோதனன் தானே
தன்னுடைய எதிரியைத்
தேர்ந்தெடுக்காமல்
தேர்ந்தெடுக்கும்
பொறுப்பை
எதிரியிடமே
ஒப்படைத்து விட்டான்”

“அதனால் தான்
சொல்கிறேன்
துரியோதனன் உண்மையான
வீரன் என்று”
////////////////////////////////////////

(துரியோதனனும்
பீமனும்
பேசிக் கொள்கின்றனர்)

துரியோதனன் :
“நீயா வருகிறாய்?”

பீமன் :
“ஆமாம் நான்
தான் வருகிறேன்
உன்னை எதிர்த்து
சண்டையிடுவதற்கு
நான் தான் வருகிறேன்
கதாயுதத்தை
எடுத்துக் கொண்டு
சண்டையிடுவதற்கு
நான் தான் வருகிறேன்”

துரியோதனன் :
“கதாயுதத்தை
எடுத்துக் கொண்டு
என்னுடன்
சண்டையிடுவதற்கு
வருகிறேன் என்று
சொல்லாதே
என்னுடைய கதாயுதத்தால்
சாவதற்காக வருகிறேன்
என்று சொல் “ 

பீமன் :
சாவதற்கு
என்றுமே பயப்படாதவன்
இந்த பீமனே !

சாவைக் கண்டு
என்றுமே அஞ்சாதவன்
இந்த பீமனே !

சாவை பிறருக்கு
பரிசளித்தே
பழக்கப்பட்டவன்
இந்த பீமனே !

அந்த சாவை
உனக்கும் பரிசாக
வழங்குவதற்கு தயாராக
வந்திருப்பவனும்
இந்த பீமனே !

“இன்று உன்னுடைய
சாவை யாராலும்
தடுத்து நிறுத்த முடியாது
என்னுடைய கையால்
நீ அடி வாங்கி
சாகப் போவதையும்
யாராலும் தடுத்து
நிறுத்த முடியாது
இந்திரனே உனக்கு
உதவியாக வந்தாலும்
உன்னுடைய சாவை
அந்த இந்திரனாலும்
தடுத்து நிறுத்த
முடியாது துரியோதனா”

“கோழையைப் போல்
தண்ணீரை
ஸ்தம்பனம் செய்து
மடுவிற்குள் ஒளிந்து
கொண்டிருக்கும்
துரியோதனா முதலில்
தண்ணீரை விட்டு
வெளியே வா
சண்டையிடுவதற்கு
தயார் என்றால்
வெளியே வா”

(பீமனின்
வார்த்தைகளைக்
கேட்ட துரியோதனன்
புற்றிலிருந்து சீறி
வெளியே பாய்கின்ற
நாகம் போல் ஸ்தம்பனம்
செய்யப்பட்ட தண்ணீரை
பிளந்து கொண்டு
வெளியே வந்தான் ;

உருக்குமயமானதும்
ஸ்வர்ணத்தால்
அலங்கரிக்கப்பட்டதுமான
பெரிய கதையை
கையில் ஏந்தியவாறு
ஸ்தம்பனம் செய்யப்பட்ட
தண்ணீரை
பிளந்து கொண்டு
துரியோதனன்
வெளியே வந்தான் ;

“சிகரத்துடன் கூடிய
மலை போன்று
இருக்கிறவனும்

மிகுந்த புஜபலத்தைக்
கொண்டவனாய்
இருக்கிறவனும்

சூலத்தைக் கையில்
ஏந்திய ருத்திரரைப்
போல் இருக்கிறவனும்

தண்டத்தைக் கையில்
ஏந்திய அந்தகனைப்
போல் இருக்கின்றவனும்

வஜ்ராயுதத்தைக்
கையில் ஏந்திய
இந்திரனைப் போல்
இருக்கிறவனுமாகிய
துரியோதனன்

நன்றாக ஒளி விடுகின்ற
சூரியனைப் போல்
ஸ்தம்பனம் செய்யப்பட்ட
தண்ணீரை
பிளந்து கொண்டு
வெளியே வந்தான்)

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 09-07-2020
/////////////////////////////////

அறிய வேண்டியவை-பதிவு-102


               ஜபம்-பதிவு-594
        (அறிய வேண்டியவை-102)

“அத்தகைய
சிறப்பு வாய்ந்த
பீமனால் கூட
துரியோதனனை வெற்றி
கொள்ள முடியாது
ஏனென்றால்
பீமனைக் கொல்ல
வேண்டும் என்ற
எண்ணத்தினால்
பீமனைப் போல்
ஒரு உருவத்தை
இரும்பினால் செய்து
13 வருட காலம்
அந்த பீமனின்
இரும்புச் சிலையோடு
முறையாக
சண்டைப் பயிற்சி
செய்து இருக்கிறான்
துரியோதனன்
பீமன் திறமையானவனும்
பலம் வாய்ந்தவனும்
தான் - ஆனால்
பயிற்சி இல்லாதவன்
ஆனால் துரியோதனன்
திறமையும் பலமும்
பெற்றவன் மட்டுமல்ல
பயிற்சியும் செய்தவன்”

“வெற்றி பெற
வேண்டும் என்றால்
திறமையும் பலமும்
இருந்தால் மட்டும்
போதாது - முறையான
பயிற்சியும்
இருக்க வேண்டும்”

“திறமையையும்
பலத்தையும் வைத்துக்
கொண்டு மட்டும்
கதாயுத சண்டையில்
யாராலும் வெற்றி
பெற முடியாது
திறமையுடனும்
பலத்துடனும்
முறையான பயிற்சியும்
இருந்தால் மட்டுமே
கதாயுத சண்டையில்
வெற்றி பெற முடியும்”

“துரியோதனன்
அளவிட முடியாத
திறமையும்
நினைத்துப் பார்க்க
முடியாத பலத்தையும்
கொண்டு முறையான
பயிற்சி செய்து
சண்டையிட
தயாராக இருக்கிறான்
அதனால் தான்
நான் சொல்கிறேன்
பீமனாலேயே
துரியோதனனைக்
கதாயுத சண்டையில்
வீழ்த்தி வெற்றி
கொல்ல முடியாது
என்றால் நகுலனாலோ
சகாதேவனாலோ
அல்லது உங்களாலோ
எப்படி வெற்றி பெற
முடியும் பெரிய அண்ணா “

“துரியோதனனை
கதாயுத சண்டையில்
இந்த உலகத்தில் உள்ள
யாராலும் வீழ்த்தி
வெற்றி பெற முடியாது
என்பதை நினைவில்
கொள்ளுங்கள்
பெரிய அண்ணா”

“துரியோதனன்
பீமனை விட்டு விட்டு
மற்றவர்களைத்
தேர்ந்தெடுத்தால்
என்ன செய்வது
சொல்லுங்கள்
பெரிய அண்ணா
சொல்லுங்கள்
இப்போது என்ன
செய்வதென்று
சொல்லுங்கள்
சொல்லுங்கள்”

தர்மர் :   
“எனக்கு துரியோதனனை
நீருக்குள் இருந்து
வெளியே கொண்டு
வருவதற்கும்
அவனை சண்டையிட
சம்மதம் தெரிவிக்க
வைப்பதற்கும் வழி
எதுவும் தெரியவில்லை
அதனால் தான்
துரியோதனனிடம்
உனக்கு தேவைப்படும்
ஆயுதத்தை எடுத்துக்
கொள் உனக்கு
வேண்டியவரைத்
தேர்ந்தெடுத்து
வேண்டியவருடன்
சண்டையிடு என்றேன்
நீ யாரைத் தேர்ந்தெடுத்து
சண்டையிடுகிறாயோ
அவரைக் கொன்றால்
நீ இந்த நாட்டை
ஆளலாம் என்றேன் “

கிருஷ்ணன் :
“துரியோதனன் யாரைத்
தேர்ந்தெடுக்கிறான்
என்று பார்ப்போம்”

/////////////////////////////////////////
(துரியோதனன் பேசத்
தொடங்கினான்)

துரியோதனன் :
“நீங்கள் எனக்கு
வாய்ப்பு தந்தது போல்
நானும் உங்களுக்கு
வாய்ப்பு தருகிறேன்”

“உங்களில் யார்
ஒருவர் என்னுடன்
சண்டையிட வேண்டும்
என்று விரும்புகிறாரோ
யார் ஒருவர் என்னுடன்
சண்டையிட முடியும்
என்று நினைக்கிறாரோ
யார் ஒருவர் என்னுடன்
சண்டையிட தயாராக
இருக்கிறாரோ
என்னுடைய
திறமையை எதிர்த்து
என்னுடைய
பலத்தை எதிர்த்து
என்னுடைய
கதாயுதத்தை எதிர்த்து
என்னுடன் சண்டையிட
வேண்டும் என்று
யார் நினைக்கிறாரோ
அவர் என்னுடன்
வந்து நேருக்கு
நேராக வந்து
சண்டை புரியலாம்”

பீமன் :
“துரியோதனா உன்னுடன்
சண்டையிடுவதற்கு
நான் தயாராக
இருக்கிறேன்
வா துரியோதனா“

துரியோதனன் :
“சண்டையிடுவதற்கு
தயாராக இருக்கிறேன்
என்று சொல்லாதே
என்னிடம் அடி
வாங்குவதற்கு
தயாரக இருக்கிறேன்
என்று சொல்”
///////////////////////////////////
(தர்மர் கிருஷ்ணனிடம்
தனிமையில் பேசினார்)

தர்மர் :
“துரியோதனன்
ஏன் அவனாகவே
எதிரியை
தேர்ந்தெடுக்காமல்
தேர்ந்தெடுக்கும்
பொறுப்பை
எதிரியிடமே
ஒப்படைத்து விட்டான்”

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 09-07-2020
/////////////////////////////////

அறிய வேண்டியவை-பதிவு-101


               ஜபம்-பதிவு-593
        (அறிய வேண்டியவை-101)

“நான் யாரைக்
கண்டும் பயப்பட
மாட்டேன்
எதற்காகவும்
பயப்பட
மாட்டேன்
யுதிஷ்டிரன்
பீமசேன்
அர்ஜுனன் நகுலன்
சகாதேவன்
வாசுதேவ
கிருஷ்ணன்
பாஞ்சாலர்கள்,
யுயுதானன்
இன்னும் மற்றும்
உள்ள உன்னுடைய
வீரர்கள்
யாரைக் கண்டும்
நான் பயப்பட
மாட்டேன்
பயம் என்பதும்
எனக்கு இல்லை”

“நீங்கள் அனைவரும்
உண்மையான
வீரர்களாக இருந்தால்
தர்மத்தைக்
கடைபிடித்து
போரிடுபவராக
இருந்தால்
தனியாக இருக்கும்
என்னுடன் ஒருவர்
பின் ஒருவராக
நேரடியாக
வந்து போரிடுங்கள்
நீங்கள் அனைவரும்
உண்மையான
வீரர்களாக இல்லை
என்றால்
தர்மத்தைக்
கடைபிடிக்காமல்
போரிடுபவராக
இருந்தால்
கும்பலாகச் சேர்ந்து
அனைவரும்
என்னுடன்
போரிட வாருங்கள்
அதற்கும் நான்
தயாராகத் தான்
இருக்கிறேன்
போரிட
வாருங்கள்”

“நான்
போரிடுவதற்கு
தயாராகத் தான்
இருக்கிறேன்”

(என்று மடுவிற்குள்
மறைந்து கொண்டு
தான் பேசிக்
கொண்டிருந்தான்
துரியோதனன்)

தர்மர் :
“தர்மத்தை அழித்து
அதர்மத்தை நிலை
நாட்ட வேண்டும்
என்பதற்காக
குருஷேத்திரப்
போரை
ஆரம்பித்து
வைத்த நீ
இன்று
தோல்வியின்
எல்லையில்
வந்து நின்று
கொண்டிருக்கிறாய்
இப்போதாவது
அதர்மம் எப்போதும்
எந்த காலத்திலும்
வெற்றி
பெற முடியாது
என்பதைத்
தெரிந்து
கொள்ள
முயற்சி செய்
துரியோதனா”

“போரிடுவதற்கு நீ
முடிவு எடுத்து
விட்டதால் -நீ
விரும்பியபடி
நான் உனக்கு
வாய்ப்பு
அளிக்கிறேன்”

“நீ எந்த
ஒருவனுடன்
சண்டையிட
விரும்புகிறாயோ
அந்த ஒருவனை
எதிர்த்து - நீ
எந்த ஆயுதத்தைப்
பயன்படுத்தி
சண்டையிட
விரும்புகிறாயோ
அந்த ஆயுதத்தை
வைத்துக் கொண்டு
நீ சண்டையிடலாம்
நாங்கள்
அனைவரும்
நடக்கும்
சண்டையை
பார்க்கும்
பார்வையாளர்களாக
இருப்போம் “

“நீ மேலும்
கேட்டுக்
கொண்டபடி
எங்களில்
ஒருவனை
நீ கொன்றால்
அரசனாகி இந்த
நாட்டை ஆளலாம்
எங்களில் ஒருவர்
உன்னைக்
கொன்றால்
நீ சுவர்க்கத்தை
அடைய
வேண்டியது தான் “

துரியோதனன் :
“என்னுடைய ஒரே
ஆயுதம் கதாயுதம்
கதாயுதத்தை
வைத்துத் தான்
நான் சண்டையிட
விரும்புகிறேன் “
///////////////////////////////////////////////////

(கிருஷ்ணன் தர்மர்
அருகில் சென்று
தர்மருடன் ரகசியமாகப்
பேசத் தொடங்கினார்)

கிருஷ்ணன் :
“என்ன பெரியண்ணா
என்ன காரியம்
செய்து விட்டீர்கள்
துரியோதனனுக்கு
இணையாக கதாயுதப்
போர் புரிய தகுதி
உடையவர்
சின்ன அண்ணா
பீமன் மட்டுமே “

“பீமனைத் தவிர யார்
துரியோதனனுடன்
சண்டையிட்டாலும்
அவர்களால்
துரியோதனனுடைய
அடியை தாக்குப்
பிடிக்கவும் முடியாது
உயிர் பிழைக்கவும்
முடியாது
பீமனைத் தவிர
யாராலும்
சிறிது நேரம் கூட
துரியோதனனின்
அடிகளை தாக்குப்
பிடித்துக் கொண்டு
துரியோதனன்
முன்னால் நின்று
கொண்டிருக்க
முடியாது
பீமனைத் தவிர
இந்த உலகத்தில்
உள்ள யாரும்
துரியோதனனுக்கு
இணையாக
கதாயுதப் போர்
புரிய முடியாது”

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 09-07-2020
/////////////////////////////////