July 09, 2020

அறிய வேண்டியவை-பதிவு-94


               ஜபம்-பதிவு-586
         (அறிய வேண்டியவை-94)

“துரியோதனன் இருக்கும்
இடத்தை எனக்கு
சொல்லும்படி கேட்டுக்
கொள்கிறேன்”

“துரியோதனன் உயிரோடு
இருக்கும் செய்தியையும்
துரியோதனன் எந்த
இடத்தில் இருக்கிறான்
என்ற  செய்தியையும்
நீங்கள் சொன்னால்
புண்பட்ட மனதிற்கு
மருந்து போட்டது
போல் இருக்கும்
தங்களுடைய வார்த்தைகள் “

சஞ்சயன் :
“துரியோதனன் இறக்கவில்லை
உயிரோடு தான் இருக்கிறார் “

“தான் இருக்கும் இடம்
ரகசியமாக இருக்க
வேண்டும் யாருக்கும்
தெரியக் கூடாது என்றும் ;

நான் அமைதியாக
இருக்க விரும்புகிறேன்
ஆகவே யாரையும்
நான் பார்க்க
விரும்பவில்லை என்றும் ;

பிறர் என்னை பார்க்க
வருவதை - நான்
விரும்பவில்லை என்றும் ;

என்னை தனிமையில்
இருக்க விடுங்கள்
தனிமை என்னுடைய
மனதிற்கு
தேவைப்படுகிறது என்றும் ;

துரியோதனன் அவர்கள்
கேட்டுக் கொண்டார் “

“இருந்தாலும் அஸ்வத்தாமன்
கிருபர் கிருதவர்மன் ஆகிய
மூவர் என்னைத் தேடி
வந்தால் நான் இருக்கும்
இடத்தை அவர்களுக்கு
சொல்ல வேண்டும் என்றும்
கேட்டுக் கொண்டார்”

“அது மட்டுமல்ல அவர்
இருக்கும் இடத்தை
தந்தைக்குத் தான் முதலில்
தெரிவிக்கச் சொன்னார்”

“இச்செய்தியை அவருடைய
தந்தைக்கு தெரிவிப்பதற்காக
நான் சென்று
கொண்டிருக்கும்போது தான்
நீங்கள் எதிர்பட்டீர்கள்”

அஸ்வத்தாமன் :
“துரியோதனன் எந்த
இடத்தில் இருக்கிறார்?”

சஞ்சயா :
“த்வைபாயனம் என்னும்
மடுவில் தண்ணீரை
ஸ்தம்பனம் செய்து
அதனடியில் இருக்கிறார் “

 “துரியோதனன் உயிரோடு
இருக்கிறான் என்பதையும்
துரியோதனன் எந்த
இடத்தில் இருக்கிறான்
என்பதையும்
துரியோதனனுடைய
தந்தையான
திருதராஷ்டிரன்
அவர்களைச் சந்தித்து
விஷயத்தைச் சொல்ல
வேண்டும் - நான்
அவரைத் தேடி சென்று
கொண்டிருக்கிறேன் “

அஸ்வத்தாமன் :
“துரியோதனன்
உயிரோடு இருக்கிறான்
என்ற செய்தியைச்
சொன்னதின் மூலமும்
துரியோதனன் இருக்கும்
இடத்தை எங்களுக்கு
சொன்னதின் மூலமும்
எங்களுடைய உயிரைக்
காத்தாய் சஞ்சயா ! “

“நன்றி சஞ்சயா நன்றி “

///////////////////////////////////////////
(அஸ்வத்தாமன் கிருபர்
கிருதவர்மன் ஆகிய
மூவரும் துரியோதனன் ஓய்வு
எடுத்துக் கொண்டிருக்கும்
மடுவை அடைந்து
துரியோதனனிடம் பேசத்
தொடங்குகிறார்கள்)

அஸ்வத்தாமன் :
“இளவரசே தாங்கள் இங்கு
வந்து ஓய்வு எடுப்பதற்கான
காரணம் என்ன
தண்ணீரை விட்டு
வெளியே வாருங்கள்
கௌரவர்களில் நாங்கள்
மூவரும் நீங்கள்
ஒருவரும் சேர்த்து
நான்கு பேர்கள் மட்டும்
தான் இப்போது உயிரோடு
இருக்கிறோம் - நான்கு
பேர்கள் தான் இப்போது
மிச்சம் இருக்கிறோம்”

“தாங்கள் ஏன் இந்த
மடுவிற்குள் வந்து மறைந்து
கொண்டிருக்கிறீர்கள்
தங்களைக் காணவில்லை
என்ற காரணத்தினால்
தோல்வி பயத்தால்
துரியோதனன் ஓடிப் போய்
ஒளிந்து கொண்டான்
என்று இந்த உலகம்
உங்களை இகழ்ந்து
கொண்டிருக்கிறது
ஒரு வீரனைப் பார்த்து
என்ன வார்த்தைகளை
சொல்லக் கூடாதோ
அந்த வார்த்தைகளை
சொல்லிக் கொண்டிருக்கிறது
இந்த உலகத்தில்
உள்ளவர்களின் வாயை
அடைக்க வேண்டுமானால்
மடுவை விட்டு
வெளியே வா
துரியோதனா
போரிடுவோம் வா
நாங்கள் மூவர் உங்களுக்கு
துணையாக இருக்கிறோம்
போரிட வாருங்கள்”

“இவர்களைக் கொல்லாமல்
விட்டதால் தான்
இவர்கள் அனைவரும்
ஏராளமான எண்ணிக்கையில்
பாண்டவர் படையில்
உள்ள வீரர்களைக்
கொன்று குவித்துக்
கொண்டு இருக்கிறார்கள்
என்று பாண்டவர்
படையில் உள்ளவர்கள்
அனைவரும் நம்மை
நினைத்து அஞ்சும்
வகையில் போர்
புரிவோம் வாருங்கள்”

“வெற்றியை நோக்கி
நாம் அடியெடுத்து
வைக்கும் போது
வைக்கின்ற ஒவ்வொரு
அடியும் பாண்டவர்
மேல் இடியென இறங்கிக்
கொண்டிருக்கிறது என்று
பாண்டவர் படையில்
உள்ளவர்கள் அனைவரும்
உணரும் வகையில் போர்
புரிவோம் வாருங்கள் “

“அனைவரையும்
வீழ்த்தி விட்டோம்
எஞ்சியிருப்பவர்கள்
நம்மை என்ன செய்ய
முடியும் என்று நினைத்துக்
கொண்டிருக்கும்
பாண்டவர் படைகளை
அச்சத்துடன் மிரண்டு
ஓடும் படிச் செய்வதற்கு
போர் புரிவோம் வாருங்கள்”

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 09-07-2020
/////////////////////////////////


No comments:

Post a Comment