February 29, 2020

பரம்பொருள்-பதிவு-143


           பரம்பொருள்-பதிவு-143

உலூபி  :
“நான் இறுதியாக
ஒரே ஒரு
விஷயத்தைத் தான்
கேட்க விரும்புகிறேன் “

“அரவானைப்
பெற்றெடுத்த தாயாக
இருப்பதால்
கேட்க விரும்புகிறேன் ; “

“பிள்ளைப் பாசத்தால்
துடித்துக்
கொண்டிருக்கும்
ஒரு தாயாக
இருப்பதால்
கேட்க விரும்புகிறேன் ; “

“களப்பலியை
தடுக்க முடியாத
ஒரு தாயாக
இருப்பதால்
கேட்க விரும்புகிறேன் ; “

“என் மகன் விடும்
சுவாசக் காற்றில்
வாழ்ந்து
கொண்டிருக்கும்
ஒரு தாயாக
இருப்பதால்
கேட்க விரும்புகிறேன் ; “

“என்னுடைய
மகனுடைய கதி
என்னவாகும் என்ற
கேள்விக்கு விடை
தெரியாமல்
தவித்துக்
கொண்டிருக்கும்
ஒரு தாயாக
இருப்பதால்
கேட்க விரும்புகிறேன் ; ‘

“அரவானைக்
களப்பலியிலிருந்து
காப்பாற்றவே
முடியாதா ? “

சகாதேவன்  :
“முடியாது
முடியவே முடியாது “

“அரவானைக்
களப்பலியிலிருந்து
காப்பாற்றவே
முடியாது “

“அரவானுடைய
கர்மா
தன் வேலையை
செய்யத் தொடங்கி
விட்டது “

“அரவானுடைய
கர்மா
செயல்படுவதற்கு
ஏற்ற வகையில்
காலத்தின்
அனைத்து
கதவுகளும்
திறக்கப்பட்டு
விட்டது  

“இதனால்
கர்மா
எந்தவிதமான
தடங்கலும்
இல்லாமல்
இயங்குவதற்கு
ஆரம்பித்து
விட்டது “

“அரவானின்
கர்மா
கச்சிதமாக
தன்னுடைய
வேலையை
முடித்து விட்டால்
தவறான
விளைவுகள் ஏற்பட்டு
விடும் என்ற
காரணத்தினால் தான்

அரவானுடைய
கர்மா
நிகழ்த்தப் போகும்
செயல்களை மாற்றி
அமைக்க
பரந்தாமன் கிருஷ்ணன்
முயற்சி செய்து
கொண்டிருக்கிறார் “

உலூபி :
“அரவான்
களப்பலியாகப்
போவது யாருக்காக ? “

சகாதேவன் :
“ அது நீங்கள்
அளிக்கப் போகும்
ஒப்புதலைப்
பொறுத்துத்
தான் இருக்கிறது “

“நீங்கள்
அளிக்கப் போகும்
ஒப்புதலுக்காக
அனைவரும்
எப்படி காத்துக்
கொண்டிருக்கிறார்களோ
அப்படியே
நானும் காத்துக்
கொண்டிருக்கிறேன் “

“பாண்டவர்கள்
சார்பாக
அரவானைக்
களப்பலியாகக்
கொடுப்பதற்கு
ஒப்புதல் அளிப்பீர்களா “

உலூபி :
(உலூபி எதுவும்
சொல்லாமல்
அமைதியாக இருந்தாள்)

சகாதேவன் :
(சகாதேவன் உலூபியையே
பார்த்துக் கொண்டிருந்தான்)

(சோதிட சாஸ்திரம்
மூலம் அரவானைப்
பற்றி ஓரளவு
விவரங்களைத்
தெரிந்து கொண்ட
உலூபி
தன்னுடைய கணவன்
அர்ஜுனனைப் பார்த்தாள்.

உலூபியின்
பார்வையை
நேருக்கு நேர்
சந்திக்க முடியாமல்
தன்னுடைய கண்களை
வேறு பக்கம்
திருப்பிக் கொண்டான்
அர்ஜுனன்

அர்ஜுனனின்
முன்னால் போய்
நின்றாள் உலூபி)


----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 29-02-2020
//////////////////////////////////////////


February 28, 2020

பரம்பொருள்-பதிவு-142


           பரம்பொருள்-பதிவு-142

உலூபி :
“ஒருவருடைய
ஜனன கால
ஜாதகத்தை வைத்து
ஒருவருடைய
இறப்பை
கணிக்க முடியுமா ? ”

சகாதேவன் :
“ஒருவருடைய
இறப்பை
மட்டுமல்ல
பிறப்பு
வாழ்க்கை முறை
அனைத்தையும்
கணிக்க முடியும் “

உலூபி :
“அப்படி என்றால்
எனக்காக நீங்கள்
ஒன்றை கணித்துச்
சொல்ல வேண்டும் “

சகாதேவன் :
“நீங்கள் என்ன
கேட்கப்
போகிறீர்கள்
என்பதை என்னால்
ஓரளவுக்கு யூகிக்க
முடிகிறது
இருந்தாலும்
பரவாயில்லை
கேளுங்கள் !
எனக்கு
சோதிடத்தில்
தெரிந்த அளவு
சொல்கிறேன்
கேளுங்கள் !
நீங்கள் என்ன
விருப்பப்
படுகிறீர்களோ
அதை நீங்கள்
தாரளமாக
கேட்கலாம் “

உலூபி :
“அரவானின் இறப்பை
கணித்துச் சொல்ல
வேண்டும்
ஆமாம்
அரவானின் இறப்பு
எப்படி இருக்கும் ? “

சகாதேவன் :
“நான் எதிர்பார்த்தது தான்”

பரந்தாமன்
கிருஷ்ணன்
என்னுடைய
அண்ணன் அர்ஜுனன்
ஆகிய இருவரும்
தாங்கள்
களப்பலியாகத்
தயாராக
இருக்கிறோம் ;
எங்களை களப்பலி
கொடுங்கள் என்று
ஒப்புதல்
அளித்தாலும்
அவர்களுடைய
ஒப்புதலை
ஒருவரும் ஏற்றுக்
கொள்ளவில்லை “

“அவர்கள்
இருவரையும்
களப்பலி கொடுக்க
ஒருவரும்
சம்மதிக்கவில்லை “

“பரந்தாமன்
கிருஷ்ணனையும்
என்னுடைய
அண்ணன்
அர்ஜுனனையும்
களப்பலியாகக்
கொடுக்காமல்
மறுப்பதற்கு
பல்வேறு தரப்பினர்
பல்வேறு
காரணங்களைச்
சொன்னாலும்
சோதிட ரீதியாக
ஒரே ஒரு காரணம்
தான் உண்டு “

“ஆமாம்
களப்பலியாக
வேண்டும் என்பது
இருவருடைய
ஜாதகத்திலும்
இல்லை ;
அரவானின்
ஜாதகத்தில்
மட்டுமே
களப்பலியாக
வேண்டும்
என்பது உள்ளது “

“களப்பலியாகக் கூடிய
முழுத் தகுதியும்
தற்போது இந்த
உலகத்தில்
அரவான்
ஒருவனுக்கு
மட்டுமே உள்ளது ;
வேறு யாருக்கும்
அந்தத் தகுதி
இல்லை ;”

“இந்த உலகத்தில்
களப்பலியாகக்
கொடுப்பதற்கு
அனைத்து
தகுதிகளையும்
பெற்று வாழ்ந்து
கொண்டு இருப்பது
அரவான்
ஒருவன் மட்டுமே “

“அரவானின்
களப்பலி
தவறாகப் போய்
விடக்கூடாது
என்பதற்காகத் தான்
பரந்தாமன்
கிருஷ்ணன்
பாண்டவர்கள்
சார்பாக
அரவானைக்
களப்பலியாகக்
கொடுப்பதற்கு
முயற்சிகள் செய்து
கொண்டிருக்கிறார் “

“அவர் செய்து
கொண்டிருக்கும்
முயற்சி
சரியானது என்பதை
நான் உணர்ந்த
காரணத்தினால் தான்
நான் ஒப்புதல்
அளித்தேன் “

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 28-02-2020
//////////////////////////////////////////




February 27, 2020

பரம்பொருள்-பதிவு-141


              பரம்பொருள்-பதிவு-141

உலூபி :
“பரவாயில்லை
நீங்கள் சொல்லலாம்”

சகாதேவன் :
“நான் சொல்வதால்
எனக்கு எந்த
பிரச்சினையும்
ஏற்படப் போவதில்லை ;
ஆனால், உங்களுக்கு
எந்த பிரச்சினையும்
ஏற்பட்டு விடக்கூடாது
என்பதற்காக யோசித்தேன் “

“நீங்களே ! கேட்கும் போது
சொல்லவேண்டியது
என்னுடைய கடமை
சொல்கிறேன் கேளுங்கள் “

“ஒருவர் இந்த உலகத்தை
கட்டி காப்பாற்றிக்
கொண்டிருக்கும்
பரந்தாமன் கிருஷ்ணன் “

“இன்னொருவர்
என்னுடைய அண்ணனும்
உங்களுடைய
கணவருமாகிய அர்ஜுனன் “

உலூபி  :
(ஐயோ ! என்று
சொல்லிக் கொண்டே
தன்னுடைய இரண்டு
காதுகளையும் மூடிக்
கொண்டாள் உலூபி)

சகாதேவன்  :
“நான் சொன்னேன் அல்லவா
நீங்கள் காதை மூடிக்
கொள்வீர்கள் என்று?”

உலூபி  :
( உலூபி தன்னுடைய
காதுகளில் இருந்து
தன்னுடைய இரண்டு
கைகளையும் எடுத்து
விட்டு சகாதேவனைப்
பார்த்தாள் - சகாதேவன்
பேசுவது எதுவும்
உலூபியின் காதுகளில்
விழவே இல்லை ;
அவளுடைய காதுகளுக்கு
எந்தவிதமான சத்தமும்
விழவே இல்லை ;

உலூபி எதுவும் சொல்ல
முடியாமல் மௌனமாக
இருந்தாள் - அவளை
அறியாமல் அவள்
கண்களிலிருந்து
கண்ணீர் வந்தது - அதைத்
துடைத்துக் கொண்டாள் )

சகாதேவன்  :
“நீங்கள் உங்களுடைய
வாயை மூடிக் கொண்டிருந்தால்
காதுகளை மூட வேண்டிய
அவசியம் உங்களுக்கு
ஏற்பட்டிருக்காது “

“நீங்கள் உங்களுடைய
வாயை மூடவில்லை
அதனால் உங்களுடைய
காதுகளை மூட வேண்டிய
அவசியம் ஏற்பட்டு விட்டது. “

தர்மர்  :
“சகாதேவா…………………….?”

சகாதேவன் :
“என்ன அண்ணா ? “

தர்மர்  :
“உன் முன்னால் நிற்பது
உன்னுடைய அண்ணி
என்பதை உணர்ந்து கொண்டு
வார்த்தையை அளந்து பேசு “

“மகனைப் பற்றிய கவலையில்
இருக்கும் ஒரு தாயிடம்
பேசிக் கொண்டிருக்கிறோம்
என்பதை உணர்ந்து
கொண்டு பேசு “

சகாதேவன் :
“உண்மையைத் தானே
அண்ணா பேசினேன் “

தர்மர் :
“உண்மை எல்லா இடங்களிலும்
இனிப்பாக இருக்காது ;
சில இடங்களில் உண்மை
கசப்பாகத் தான் இருக்கும் ;
என்பதை உணர்ந்து
கொண்டு பேசு“

“நீ பேசும் உண்மைகள்
தாய்ப்பாசத்தால்
வாடிப்போயிருக்கும்
ஒரு தாயின் இதயத்தை
காயப்படுத்துவது போல்
இருக்கக் கூடாது “

“அமைதியாக பேசு”

“அதே நேரத்தில்
நிதானமாகப் பேசு”

சகாதேவன்  :
“அப்படியே ஆகட்டும்
அண்ணா ! “

உலூபி :
(சகாதேவனைப் பார்த்து
உலூபி பேசத் தொடங்கினாள்)

“நீங்கள் என்ன
நினைக்கிறீர்களோ-அதை
தாராளமாகப் பேசலாம் ;
நான் எதையும் தவறாக
எடுத்துக் கொள்ள மாட்டேன்  
மிகப்பெரிய இடியையே
தாங்கிக் கொண்டிருக்கும்
என்னுடைய இதயம்
உங்களுடைய சூடான
வார்த்தைகளையா தாங்காது “

சகாதேவன் :
“நான் பேசிய எந்த
வார்த்தையாவது
உங்களுடைய மனதை
புண்படுத்தி இருந்தால்
அதற்காக நான் மன்னிப்பு
கேட்டுக் கொள்கிறேன் “

உலூபி :
“உங்களை மன்னிக்கும்
அளவிற்கு நீங்கள் - எந்த
தவறான சொல்லையும்
சொல்லவில்லை ;
காலம் என்ன சொல்ல
நினைத்ததோ - அதைத்
தான் நீங்கள் சொன்னீர்கள் ;
காலம் செய்து கொண்டிருக்கும்
தவறுக்கு உங்களை எப்படி
குற்றம் சொல்ல முடியும் “

“எனக்கு சோதிட
சாஸ்திரத்தில் ஒரு சந்தேகம்
இருக்கிறது - அதை
உங்களால் தீர்க்க முடியுமா ? “

சகாதேவன் :
“என்னால் முடிந்த அளவு
உங்களுடைய சந்தேகத்தை
தீர்க்கிறேன் கேளுங்கள்
உங்கள் சந்தேகம் என்ன ?”


----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 27-02-2020
//////////////////////////////////////////