February 27, 2020

பரம்பொருள்-பதிவு-141


              பரம்பொருள்-பதிவு-141

உலூபி :
“பரவாயில்லை
நீங்கள் சொல்லலாம்”

சகாதேவன் :
“நான் சொல்வதால்
எனக்கு எந்த
பிரச்சினையும்
ஏற்படப் போவதில்லை ;
ஆனால், உங்களுக்கு
எந்த பிரச்சினையும்
ஏற்பட்டு விடக்கூடாது
என்பதற்காக யோசித்தேன் “

“நீங்களே ! கேட்கும் போது
சொல்லவேண்டியது
என்னுடைய கடமை
சொல்கிறேன் கேளுங்கள் “

“ஒருவர் இந்த உலகத்தை
கட்டி காப்பாற்றிக்
கொண்டிருக்கும்
பரந்தாமன் கிருஷ்ணன் “

“இன்னொருவர்
என்னுடைய அண்ணனும்
உங்களுடைய
கணவருமாகிய அர்ஜுனன் “

உலூபி  :
(ஐயோ ! என்று
சொல்லிக் கொண்டே
தன்னுடைய இரண்டு
காதுகளையும் மூடிக்
கொண்டாள் உலூபி)

சகாதேவன்  :
“நான் சொன்னேன் அல்லவா
நீங்கள் காதை மூடிக்
கொள்வீர்கள் என்று?”

உலூபி  :
( உலூபி தன்னுடைய
காதுகளில் இருந்து
தன்னுடைய இரண்டு
கைகளையும் எடுத்து
விட்டு சகாதேவனைப்
பார்த்தாள் - சகாதேவன்
பேசுவது எதுவும்
உலூபியின் காதுகளில்
விழவே இல்லை ;
அவளுடைய காதுகளுக்கு
எந்தவிதமான சத்தமும்
விழவே இல்லை ;

உலூபி எதுவும் சொல்ல
முடியாமல் மௌனமாக
இருந்தாள் - அவளை
அறியாமல் அவள்
கண்களிலிருந்து
கண்ணீர் வந்தது - அதைத்
துடைத்துக் கொண்டாள் )

சகாதேவன்  :
“நீங்கள் உங்களுடைய
வாயை மூடிக் கொண்டிருந்தால்
காதுகளை மூட வேண்டிய
அவசியம் உங்களுக்கு
ஏற்பட்டிருக்காது “

“நீங்கள் உங்களுடைய
வாயை மூடவில்லை
அதனால் உங்களுடைய
காதுகளை மூட வேண்டிய
அவசியம் ஏற்பட்டு விட்டது. “

தர்மர்  :
“சகாதேவா…………………….?”

சகாதேவன் :
“என்ன அண்ணா ? “

தர்மர்  :
“உன் முன்னால் நிற்பது
உன்னுடைய அண்ணி
என்பதை உணர்ந்து கொண்டு
வார்த்தையை அளந்து பேசு “

“மகனைப் பற்றிய கவலையில்
இருக்கும் ஒரு தாயிடம்
பேசிக் கொண்டிருக்கிறோம்
என்பதை உணர்ந்து
கொண்டு பேசு “

சகாதேவன் :
“உண்மையைத் தானே
அண்ணா பேசினேன் “

தர்மர் :
“உண்மை எல்லா இடங்களிலும்
இனிப்பாக இருக்காது ;
சில இடங்களில் உண்மை
கசப்பாகத் தான் இருக்கும் ;
என்பதை உணர்ந்து
கொண்டு பேசு“

“நீ பேசும் உண்மைகள்
தாய்ப்பாசத்தால்
வாடிப்போயிருக்கும்
ஒரு தாயின் இதயத்தை
காயப்படுத்துவது போல்
இருக்கக் கூடாது “

“அமைதியாக பேசு”

“அதே நேரத்தில்
நிதானமாகப் பேசு”

சகாதேவன்  :
“அப்படியே ஆகட்டும்
அண்ணா ! “

உலூபி :
(சகாதேவனைப் பார்த்து
உலூபி பேசத் தொடங்கினாள்)

“நீங்கள் என்ன
நினைக்கிறீர்களோ-அதை
தாராளமாகப் பேசலாம் ;
நான் எதையும் தவறாக
எடுத்துக் கொள்ள மாட்டேன்  
மிகப்பெரிய இடியையே
தாங்கிக் கொண்டிருக்கும்
என்னுடைய இதயம்
உங்களுடைய சூடான
வார்த்தைகளையா தாங்காது “

சகாதேவன் :
“நான் பேசிய எந்த
வார்த்தையாவது
உங்களுடைய மனதை
புண்படுத்தி இருந்தால்
அதற்காக நான் மன்னிப்பு
கேட்டுக் கொள்கிறேன் “

உலூபி :
“உங்களை மன்னிக்கும்
அளவிற்கு நீங்கள் - எந்த
தவறான சொல்லையும்
சொல்லவில்லை ;
காலம் என்ன சொல்ல
நினைத்ததோ - அதைத்
தான் நீங்கள் சொன்னீர்கள் ;
காலம் செய்து கொண்டிருக்கும்
தவறுக்கு உங்களை எப்படி
குற்றம் சொல்ல முடியும் “

“எனக்கு சோதிட
சாஸ்திரத்தில் ஒரு சந்தேகம்
இருக்கிறது - அதை
உங்களால் தீர்க்க முடியுமா ? “

சகாதேவன் :
“என்னால் முடிந்த அளவு
உங்களுடைய சந்தேகத்தை
தீர்க்கிறேன் கேளுங்கள்
உங்கள் சந்தேகம் என்ன ?”


----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 27-02-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment