January 12, 2019

திருக்குறள்- பதிவு-84


                      திருக்குறள்- பதிவு-84

விசாரணைக் குழு :
“ இயேசு கிறிஸ்து
சிலுவையில்
அறையப்படவில்லை ;
அவர் தூக்கில் இடப்பட்டார் ;
அவர் இறக்க  
விரும்பவில்லை ;
அவருடைய
விருப்பத்திற்கு
மாறாகத் தான்
அவர் இறந்தார் ;
அவர் ஒரு
சோகமான மனிதர் ;
அவர் மக்களை
கவருவதற்காக
அற்புதங்களை செய்ய
விருப்பப் பட்டார் ;என்று
நீங்கள் எழுதி
இருக்கிறீர்கள் “

விசாரணைக் குழு :
“ கன்னியர்கள்
(Convents)
குருக்கள் (Priests)
ஆகியோரிடம் உள்ள
அனைத்து
வருமானங்களையும்
திரும்பப் பெற வேண்டும்
ஏனென்றால் அவர்கள்
இந்த உலகத்தை இழிவு
படுத்துபவர்கள் என்று
நீங்கள் எழுதி
இருக்கிறீர்கள் “

விசாரணைக் குழு :
“குருக்கள் திருமணம்
செய்வது என்பது
தேவாலயத்தை
அசிங்கப்படுத்துவது
போன்றது
மற்றும்
அது ஒரு பாவச்
செயல் என்று
கருதப்பட்டு வருகிறது
உண்மையில்  
திருமணம் என்பது
இயற்கையின் ஒரு
அற்புதமான பரிசு என்று
நீங்கள் எழுதி
இருக்கிறீர்கள் “

விசாரணைக் குழு :
“ தற்போது
உள்ள எந்த
ஒரு மதத்தையும்
உத்தமமான மதம் என்று
ஏற்றுக் கொள்ள முடியாது
ஏனென்றால் ஒவ்வொரு
மதமும் மனிதனை
அடிமையாக வைத்து
தனக்குத் தேவையானதை
நிறை வேற்றிக் கொள்ளும்
ஒரு மாபெரும் சக்தியாகத்
தான் மதம்
இருந்து வருகிறது
( என்றும் )
ஒற்றுமையை குலைத்து
பிரிவினையை ஏற்படுத்தி
உறவுகளை பிரிக்கும்
மோதலை உண்டாக்கும்
ஒரு மாபெரும்
சக்தியாகத் தான் மதம்
இருந்து வருகிறது
( என்றும் )
தனது மதத்தை
நிலை நிறுத்துவதற்காக
பிற மதத்தையும்
பிற மதத்தைச் சார்ந்த
மக்களையும் பிற
நாட்டையும் இரக்கமின்றி
அழிக்கக் கூடிய
ரத்தப் போர்களை
உண்டாக்கக் கூடிய
ஒரு மாபெரும்
சக்தியாகத் தான் மதம்
இருந்து வருகிறது
( என்றும்)
நீங்கள் எழுதி
இருக்கிறீர்கள் “

விசாரணைக் குழு :
“ கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபைகள் பயன்படுத்தும்
செயல்முறைகள்
அப்போஸ்தலர்கள்
பயன்படுத்தும்
முறைகளைப் போல்
இருப்பது இல்லை என்று
நீங்கள் எழுதி இருக்கிறீர்கள் “

ஜியார்டானோ புருனோ :
“ ஏனென்றால்
அப்போஸ்தலர்கள்
நல்ல உதாரணங்களைக்
கொண்டு மக்களுக்கு
உபதேசம் செய்வார்கள்
ஆனால் நீங்கள்
அப்படி செய்வதில்லை “

ஜியார்டானோ புருனோ :
“நீங்கள்
என் மேல்
தொடர்ந்தாற்போல்
பல்வேறு விதமான
குற்றச் சாட்டுக்களைச்
சுமத்தி வார்த்தை
ஜாலங்களைப் பயன்படுத்தி
பல்வேறு விதமான
கேள்விகளைக் கேட்டுக்
கொண்டே வருகிறீர்கள்
நீங்கள் கேட்கும்
கேள்விகளை தவறு
என்று நிரூபிக்க என்
சார்பாக என் தரப்பு
நியாயங்களை
எடுத்துக் கூறி
வாதிடுவதற்குக் கூட
நீங்கள் எனக்கு வாய்ப்பு
அளிக்காமல் தொடர்ந்து
கேள்விகளைக் கேட்டுக்
கொண்டே இருக்கிறீர்கள் “

“ நீங்கள் தொடர்ந்தாற்போல்
கேள்விகளைக் கேட்டு
என்னை பதில் சொல்ல
விடாமல் தடுப்பதன் மூலம்
எனக்காக நான்
வாதிடுவதற்குக் கூட
நீங்கள் என்னை
அனுமதிக்கவில்லை
என்பதிலிருந்து
என்னை நீங்கள்
குற்றவாளியாக்க முயற்சி
செய்து கொண்டிருக்கிறீர்கள்
என்பது தெள்ளத்
தெளிவாக தெரிகிறது “

“ நான் நிறைய புத்தகங்களை
எழுதி இருக்கிறேன்
மக்களுக்கு பயன்படும்
வகையில் அறிவியல்
கண்டுபிடிப்புகளை
தத்துவங்களை
என்னுடைய
புத்தகங்களின் வாயிலாக
நல்ல கருத்துக்களை
நல்ல விவாதங்களாக
எழுதி இருக்கிறேன் “

“ நான் எழுதியுள்ள
பல்வேறு புத்தகங்களில்
உள்ள வார்த்தைகளை
வெட்டி எடுத்து
உங்களுக்கு எத்தகைய
அர்த்தங்கள்
தேவைப்படுகிறதோ
அத்தகைய அர்த்தங்களுக்கு
ஏற்ப வார்த்தைகளை
ஒன்றாகக் கோர்த்து
வரிசையாக அடுக்கி
கேள்விகளை உருவாக்கி
அவைகளைக் கேட்டு
என்மேல் குற்றச்
சாட்டுக்களைச் சுமத்தி
என்னை கிறிஸ்தவ
மதத்திற்கு
எதிரானவன் என்ற
நிலையை உருவாக்க
உங்களால் என்ன
என்ன செயல்களைச்
செய்ய முடியுமோ அந்த
செயல்களை எல்லாம்
நீங்கள் திறம்படச் செய்து
இருக்கிறீர்கள் என்பது
நீங்கள் கேட்கும்
கேள்விகளில் இருந்து
தெள்ளத் தெளிவாக
தெரிகிறது “

விசாரணைக் குழு :
போதும்…………………!
போதும்…………………!
போதும்………………..!

---------  இன்னும் வரும்
---------  12-01-2019
/////////////////////////////////////////////////////////////