February 25, 2020

பரம்பொருள்-பதிவு-139


           பரம்பொருள்-பதிவு-139

சகாதேவன் :
" களப்பலியாகக்
கொடுப்பதற்கு
தகுதி உடையவன்
அரவான்
என்பதையும்  ;
களப்பலி
கொடுப்பதற்கு
உகந்த நாள்
வருகின்ற
அமாவாசை
என்பதையும் ;
குறித்துக்
கொடுத்தேன் ; "

"இதில் தவறு
எதுவும்
இருப்பதாக
எனக்குத்
தெரியவில்லையே ! "

"நான் சொன்னதில்
அரவானைப்
பற்றிய
தனிப்பட்ட
விஷயங்கள்
எதுவும்
இல்லையே ! "

"பொதுவான
விஷயங்கள்
தானே
இருக்கிறது ! "

"சோதிட
சாஸ்திரத்தை
மீறி எந்த ஒரு
சொல்லையும்  
நான் சொல்லவே
இல்லையே  ! "

உலூபி :
"அரவானைப் பற்றி
நீங்கள் சொன்னது
இன்னொருவருடைய
தனிப்பட்ட
விஷயம்
இல்லையா ? "

சகாதேவன் :
"அரவான்
எதிர்காலத்தில்
எப்படி இருப்பான்  ?
அரவானுடைய
எதிர்கால
வாழ்க்கை
எப்படி இருக்கும் ?
என்ற கேள்வி
எழுப்பப்பட்டு
அதற்கு நான்
பதில் சொல்லி
இருந்தால் - அது
அரவானுடைய
தனிப்பட்ட
விஷயங்களை
சொன்னதாக
இருக்கும் "

"அப்போது தான்
நான் சோதிட
சாஸ்திரத்தை
மீறியவனாவேன் "

"ஆனால் நான்
களப்பலி
கொடுப்பதற்கு
தகுந்த ஆள்
அரவான்
என்பதையும்  ;
வருகின்ற
அமாவாசை
தினத்தன்று
களப்பலி
கொடுப்பதற்கு
உகந்த நாள்
என்பதையும்  ;
குறித்துக்
கொடுத்தேன் ;"

"இது எப்படி
அரவானுடைய
தனிப்பட்ட
விஷயங்களை
நான் சொன்னதாக
எடுத்துக் கொள்ள
முடியும் "

"அரவானைப்
பற்றிய
பொதுவான
விஷயங்களைத்
தானே
சொல்லியிருக்கிறேன் "

"இது எப்படி
தவறாகும்  "

"நான் தவறு
எதுவும்
செய்யவுமில்லை "

"சோதிட
சாஸ்திரத்தை
மீறவும் இல்லை "

"எந்த ரகசியத்தை
சொல்ல வேண்டும்
எந்த ரகசியத்தை
சொல்லக்கூடாது
என்று
சோதிட சாஸ்திரம்
வகுத்து வைத்த
விதியின் படி
தான் சொன்னேன் ;
சோதிட சாஸ்திர
விதிகளுக்குக்
கட்டுப்பட்டுத்தான்
சொன்னேன் ; "

"சோதிட
சாஸ்திரத்தை
மீறி நான்
எந்த ஒரு
சொல்லையும்
சொல்லவேயில்லை  !

உலூபி :
"ஆனால்
உங்களுடைய
செயலால்
எத்தகைய
விளைவுகள்
ஏற்பட்டிருக்கிறது
என்பதைப்
பார்த்தீர்களா ? "

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 25-02-2020
//////////////////////////////////////////