May 19, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-5


              நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-5

வாழ்க்கைக்குத் தேவையான
ஐந்து கருத்துக்களை
ஐந்து வாக்கியங்கள்
மூலம்
நம் முன்னோர்கள்
கொடுத்து இருக்கிறார்கள்
அதனை எழுதியவர்
யார் என்று தெரியவில்லை

இருந்தாலும்
உயர்ந்த கருத்துக்கள்
வாழ்க்கையில்
பின்பற்ற வேண்டிய
கருத்துக்கள்
போன்றவற்றை
சொன்னவர்களுடைய
பெயர் தெரியவில்லை
என்றாலும்
பரவாயில்லை
நாம் அதில் சொல்லப்பட்ட
கருத்துக்களை எடுத்துக்
கொண்டு வாழ்க்கையில்
பின்பற்ற வேண்டும்

இந்த ஐந்து வாக்கியங்களில்
சொல்லப்பட்ட கருத்துக்கள்
ஒவ்வொருவருடைய
வாழ்க்கையிலும்
ஒன்றோ அல்லது
இரண்டோ அல்லது
அதற்கு மேற்பட்டோ
நடந்து தான் இருக்கும்
இதில் எதுவுமே
என் வாழ்க்கையில்
எதிர்ப்படவில்லை
நடக்கவில்லை என்று
சொல்பவர்கள்
இந்த சமுதாயத்தில்
இருக்கவே முடியாது
அதில் முதல் வாக்கியத்தை
நாம் பார்ப்போம்

“”“கொண்டு வந்தால் தந்தை”””

அன்றும் இன்றும்
குடும்பத் தலைவர்
என்றால் தந்தையைத்
தான் குறிக்கும்
தந்தையைத் தான்
நாம் குடும்பத் தலைவராக
எடுத்துக்  கொண்டு
இருக்கிறோம்

ஒரு குடும்பம் நன்றாக
சிறப்பாக கவலையற்று
மானத்தோடு இருக்க
வேண்டும் என்றால்
குடும்பத் தலைவர்
ஒழுக்கமாக இருக்க
வேண்டும்

ஒரு வீட்டில்
குடும்பத் தலைவர்
சம்பாதிக்கமால்
குடித்து விட்டு
வீட்டிற்கு வந்து
மனைவியிடமும்,
பிள்ளைகளிடமும்
அனுதினமும்
சண்டையிட்டு கொண்டு
தொடர்ந்து குடிப்பதற்கு
பணம் கேட்டு நச்சரித்து
அது போதாதென்று
தனக்கு தெரிந்தவர்களிடமும்
நண்பர்களிடமும்
சொந்தக்காரர்களிடமும்
கடன் வாங்கி
குடித்து விட்டு
வீட்டை கவனிக்காமல்
இருந்தால்
குடும்பம் எப்படி
நிம்மதியாக
இருக்க முடியும்
இதனால்
குடும்பத்தில்
எப்பொழுதும்
சண்டை சச்சரவு
இருந்து கொண்டே
தான் இருக்கும்
குடும்பத்தில் நிம்மதி
இல்லாமல் தான்
இருக்கும்

எவ்வளவு தான்
மனைவியும், பிள்ளைகளும்
சம்பாதித்து குடும்பத்தை
கவனித்துக் கொண்டாலும்
குடும்பத் தலைவர்
சம்பாதிக்காமல்
சும்மா வீணாக
சுற்றிக் கொண்டும்
குடித்துக் கொண்டும்
சண்டையிட்டுக் கொண்டும்
கடன் வாங்கிக் கொண்டும்
அலைந்து கொண்டிருந்தால்
குடும்பம் எப்படி
நன்றாக இருக்கும்

ஒரு குடும்பம் நன்றாக
இருக்க வேண்டுமென்றால்
குடும்பத் தலைவரான
தந்தை நன்றாக இருக்க
வேண்டும்
குடும்பத் தலைவர்
நேர்மையான வழியில்
சம்பாதித்து
குடும்பத்தை காப்பாற்ற
வேண்டும்
இல்லை என்றால்
குடும்பம் கஷ்டப்படும்
என்ற காரணத்தினால் தான்
கொண்டு வந்தால் தான்
தந்தை
அதாவது சம்பாதித்து
கொண்டு வந்து
வீட்டிற்கு கொடுத்து
குடும்பத்தை நடத்தினால்
குடும்பம் நிம்மதியாக
இருக்கும்
என்ற அர்த்தத்தில் தான்
கொண்டு வந்தால் தந்தை
என்று சொன்னார்கள்

எவ்வளவு உயர்ந்த
கருத்தை பின்பற்ற
சொன்ன நம்
முன்னோர்கள் புத்திசாலிகள்

---------- இன்னும் வரும்
///////////////////////////////////////////////////////