September 11, 2018

திருக்குறள்-பதிவு-18


                      திருக்குறள்-பதிவு-18

ஒருவர் பேசிய
கருத்துக்களை மக்கள்
ஏற்றுக் கொண்டார்களா
அல்லது
ஏற்றுக் கொள்ளவில்லையா
என்பதை மக்கள்
எழுப்பும்
கரகோஷத்தை வைத்து
தெரிந்து கொள்ளலாம்.

கர+கோஷம்=கரகோஷம்
கர என்றால்
கையினால்
எழுப்பப்படும் ஒலி என்று
பொருள் எடுத்துக்
கொள்ள வேண்டும்

கோஷம் என்றால்
வாயினால் எழுப்பப்படும்
ஒலி என்று பொருள்
எடுத்துக் கொள்ள
வேண்டும்

கரகோஷம் என்றால்
கையினாலும், வாயினாலும்
ஒரே சமயத்தில்
எழுப்பப்படும் ஒலி
என்று பொருள்
எடுத்துக் கொள்ள
வேண்டும்

மக்கள் எழுப்பும்
கரகோஷத்தை இரண்டு
நிலைகளில் பிரிக்கலாம்

ஒன்று  : அறிந்து
         எழுப்பப்படும்
         கரகோஷம்

இரண்டு :அறியாமல்
         எழுப்பப்படும்
         கரகோஷம்

அறிந்து எழுப்பப்படும்
கரகோஷம் என்பது
உணர்வுடன்
எழுப்பப்படுவது

அறியாமல் எழுப்பப்படும்
கரகோஷம் என்பது
உணர்வு இல்லாமல்
எழுப்பப்படுவது

அறிந்து எழுப்பப்படும்
கரகோஷம் என்பது
பிடித்தும் இருக்கலாம்
பிடிக்காமலும்
இருக்கலாம்
ஆனால்,
அறியாமல் எழுப்பப்படும்
கரகோஷம் என்பது
பிடித்தால் மட்டுமே
எழுப்பப்படுவது ஆகும்

அறிந்து எழுப்பப்படும்
கரகோஷத்தை இரண்டு
நிலைகளில் பிரிக்கலாம்


ஒன்று:
ஒருவர் பேச்சை
முடித்தவுடன்
பிடித்திருந்தாலும்
பிடிக்காவிட்டாலும்
எழுப்பப்படும்
கரகோஷம் அறிந்து
எழுப்பப்படும் கரகோஷம்
எனப்படும்

இரண்டு:
ஒருவர் பேசிக்
கொண்டிருக்கும் போது
அவருடைய பேச்சு
பிடித்திருந்தாலும்
பிடிக்காவிட்டாலும்
எழுப்பப்படும் கரகோஷம்
அறிந்து எழுப்பப்படும்
கரகோஷம் எனப்படும்


அறியாமல் எழுப்பப்படும்
கரகோஷம் என்பது ஒரே
ஒரு நிலையை மட்டும்
தான் தன்னுள்
கொண்டிருக்கும்

ஒன்று:
ஒருவர் பேசிக்
கொண்டிருக்கும் போது
பேசுபவருடைய
பேச்சில் கவரப்பட்டு
மெய்மறந்து
நம்மை அறியாமல்
எழுப்பப்படும்
கரகோஷம்
அறியாமல் எழுப்பப்படும்
கரகோஷம் எனப்படும்

ஒருவர் பேசிக்
கொண்டிருக்கிறார்
அவருடைய பேச்சு
பிடித்து போய்
விட்டதால் ஏற்பட்ட
மகிழ்ச்சியில்
கரகோஷம் எழுப்பினால்
அது அறிந்து
எழுப்பப்படும் கரகோஷம்
பேசிக்
கொண்டிருப்பவருடைய
பேச்சு பிடிக்கவில்லை
என்றால் பேசுபவருடைய
பேச்சை நிறுத்தச்
சொல்லி
கலாட்டா செய்து
எழுப்பப்படும்
கரகோஷம்
அறிந்து எழுப்பப்படும்
கரகோஷம்
பேசிக்
கொண்டிருப்பவருடைய
பேச்சு அற்புதமாக
இருந்து
தன்னை மறந்து
அதாவது மெய்மறந்து
எழுப்பப்படும் கரகோஷம்
அறியாமல் எழுப்பப்படும்
கரகோஷம்
பேசுபவர் பேசி
முடித்து விடும்போது
அற்புதமாக பேசினார்
என்று கரகோஷம்
எழுப்பினால் அது
அறிந்து எழுப்பப்படும்
கரகோஷம்
பேசிக் கொண்டிருந்தவர்
பேசி முடித்தவுடன்
பேசி முடித்தான்
கழுத்தை அறுத்து
விட்டான் பாவி
என்று வெறுப்புடன்
எழுப்பப்படும்
கரகோஷம்
அறிந்து எழுப்பப்படும்
கரகோஷம் எனப்படும்

அறிந்து எழுப்பப்படும்
கரகோஷம்
விரும்பினாலும்
விரும்பாவிட்டாலும்
பேச்சின்
இடையிலும்
பேச்சின் முடிவிலும்
எழுப்பப்படும்
ஆனால்
அறியாமல் எழுப்பப்படும்
கரகோஷம் பேச்சிற்கு
இடையில் மட்டுமே
எழுப்பபப்படும்

ஹக்ஸ்லிக்கு
மக்கள் எந்தவிதமான
கரகோஷத்தை
எழுப்பினார்கள் என்பதை
இனி பார்ப்போம்.

--------- இன்னும் வரும்
--------- 11-09-2018
/////////////////////////////////////////////////////