January 26, 2019

திருக்குறள்-பதிவு-89


                       திருக்குறள்-பதிவு-89

கார்டினல் சார்டோரி :
“ Father Bruno………………!
Father Bruno……………….!
பல்வேறு விதமான
குற்றங்களைச் செய்து
இருக்கிறீர்கள்………
நீங்கள் குற்றவாளி
என்று ஒத்துக்
கொள்கிறீர்களா………..? “

ஜியார்டானோ புருனோ :
“ நான் எப்போது
எந்த இடத்தில்
எந்த குற்றங்களைச்
செய்தேன் ?
நான் குற்றவாளி
என்று ஒத்துக்
கொள்வதற்கு ”

பெல்லரமினோ :
“ நீங்கள்
குற்றமற்றவரா………….?
நீங்கள்
குற்றம் எதுவும்
செய்யவில்லையா………..?

“ உங்களை நீங்களே
குற்றமற்றவர் என்றும் ;
உங்களை நீங்களே
குற்றவாளி
இல்லை என்றும் ;
கூறிக் கொள்வதில்
எந்தவிதமான
ஆச்சரியமும் இல்லை “

ஜியார்டானோ புருனோ :
“ ஒரு குற்றவாளியே
தன்னை குற்றவாளி
என்று ஒத்துக்
கொள்ளாத நிலையில்…………….
எந்த குற்றமும்
செய்யாத என்னை
குற்றவாளி என்று கூறி
குற்றத்தை ஒப்புக்
கொள்ளச் சொல்வது தான்
ஆச்சரியமாக இருக்கிறது ............ ?

பெல்லரமினோ :
“ குற்றவாளி யாரும்
தான் செய்த
குற்றத்தையும் ;
தன்னை குற்றவாளி
என்றும் :
எப்போதும்
எந்தக் காலத்திலும்
ஒத்துக் கொண்டதே
இல்லை - என்பது
இந்த உலகத்தில்
காலம் காலமாக
வழக்கத்தில் இருந்து
வரும் நடைமுறை ;
அதையே நீங்களும்
உங்கள் வாயால்
சொல்வது என்பது
ஆச்சரியப்படுத்தும்
ஒன்றல்ல “

ஜியார்டானோ புருனோ :
“ குற்றம் செய்யாதவனை
பிடித்து பல்வேறு
விதமான குற்றங்களை
அவன் மேல் சுமத்தி
அவனை குற்றவாளி
என்று நிரூபிப்பதற்காக
பல்வேறு விதமான
செயல்களைச்
செய்வது என்பது
உலகம் கடைபிடித்து
வரும் நடைமுறை
அதையே நீங்களும்
செயல்படுத்துவது என்பது
ஆச்சரியப்படுத்தும்
ஒன்றல்ல “

பெல்லரமினோ :
“ ஒரு குற்றவாளியை
இவ்வளவு சுதந்திரமாக
பேச அனுமதி
அளித்ததில் இருந்து
நீங்கள் எங்களுடைய
பரந்த மனப்பான்மையை
புரிந்து கொள்ள வேண்டும்
நீங்கள் புரிந்து
கொள்ளவில்லை எனில்
புரிந்து கொள்ளுங்கள் “

ஜியார்டானோ புருனோ :
“ பறவையின் சிறகை
ஒடித்து அதனை
கூண்டில் அடைத்து
உன்னை சுதந்திரமாக
வைத்திருக்கிறேன்
என்று கிளியிடமே
சொல்வது
போல் இருக்கிறது
நீங்கள் பேசுவது “

பெல்லரமினோ :
“ நீங்கள் என்ன
சொல்ல வருகிறீர்கள்……..?

ஜியார்டானோ புருனோ :
“ குற்றவாளி என்று
நிரூபணம் ஆவதற்கு
முன்பாகவே
பல்வேறு விதமான
சித்திரவதையால்
என்னை துன்புறுத்தியும் ;
விசாரணை என்ற
பெயரால் தேவையற்ற
கேள்விகளைக்
கேட்டு என்னை
அலைக்கழித்ததில்
இருந்தும் ;
நீங்கள் செய்த
செயல்கள் யாவும்
உங்களுடைய பரந்த
மனப்பான்மையையும்
காட்டவில்லை ;
நீங்கள் எனக்கு
சுதந்திரம் அளித்ததையும்
காட்டவில்லை ;
என்பது உங்களுக்கு
புரியவில்லையா..........? “

“ உங்களுக்கு
புரியவில்லை என்றால்
சொல்லுங்கள் நான்
உங்களுக்கு புரிய
வைக்கிறேன்………………….!”

பெல்லரமினோ :
“ நீங்கள் எங்களுக்கு
என்ன புரிய
வைக்கப் போகிறீர்கள் “

(ஜியார்டானோ புருனோவின்
பதில்களால்
பெல்லரமினோ
தடுமாறுவதைப் பார்த்த
கார்டினல் சார்டோரி
கேள்விகளைக்
கேட்கலானார்)

கார்டினல் சார்டோரி :
Father Bruno……………………..!
போதும்………………………..

“ கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபையின்
மத நம்பிக்கைகளுக்கு
எதிராக செயல்பட்டுள்ளீர்கள் “

ஜியார்டானோ புருனோ :
 “கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபையின்
நம்பிக்கைக்கு எதிராக
செயல்பட்டேன் ;
நம்பிக்கைக்கு எதிராக
செயல்பட்டேன் ;
என்று தொடர்ந்து
சொல்லிக் கொண்டே
இருக்கிறீர்கள் ;
நான் எப்போது……?
எந்த இடத்தில்……..?
எந்த வகையில்…..?
மத நம்பிக்கைகளுக்கு
எதிராக செயல்பட்டேன்
என்று சொல்லுங்கள் ;
ஒரு முறைகூட
அதைச் சொல்லாமல்
மத நம்பிக்கைக்கு
எதிராக செயல்பட்டேன் ;
என்று மட்டும்
சொல்லிக் கொண்டே
இருக்கிறீர்கள்………….? “

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  26-01-2019
/////////////////////////////////////////////////////////////