May 14, 2019

பரம்பொருள்-பதிவு-15


                     பரம்பொருள்-பதிவு-15

"அஷ்ட பந்தனம் செய்து
கடவுள் சிலையை
பீடத்துடன்
இணைப்பதற்கு முன்பு
பயன்படுத்தப்படும்
மந்திரம்,யந்திரம்,தந்திரம்
ஆகிய மூன்றும்
இரண்டு நிலைகளில்
பயன்படுத்தப்படுகிறது"

ஒன்று
கும்பாபிஷேகத்திற்கு
முன்

இரண்டு
கும்பாபிஷேகத்திற்கு
பின்

ஒன்று
"அஷ்ட பந்தனம் செய்து
கடவுள் சிலையை
பீடத்துடன்
இணைப்பதற்கு முன்
மந்திரம்,யந்திரம்,தந்திரம்
ஆகிய மூன்றும்
ஒன்றுக் கொன்று
தொடர்பு கொண்டு
இயங்கும் விதத்தில்
அமைக்கப்பட வேண்டும்"

"கர்ப்பக் கிரகத்தில் உள்ள
கடவுள் சிலைக்கு
எந்த மந்திரத்தை
பயன்படுத்தி பூஜை
செய்யப் போகிறோமோ ?
அந்த மந்திரத்தை
எடுத்துக் கொண்டு
அந்த மந்திரத்திற்குரிய
யந்திரம் தங்கம்
அல்லது வெள்ளி
போன்ற உலோகங்களில்
அதற்கு என்று
வரையறுக்கப்பட்ட
முறைகளைப் பயன்படுத்தி
யந்திரம் எழுதப்பட
வேண்டும்"

"மந்திரத்திற்கு ஏற்ற
விதத்தில் யந்திரம்
எழுதப் பட வேண்டும்
சொல்லப்படும் மந்திரத்தை
ஏற்றுக்கொண்டு இயங்கும்
விதத்தில் யந்திரம்
எழுதப்பட வேண்டும்"

"மந்திரம் சொல்லப்படும்
போது மந்திரத்திற்கும்,
யந்திரத்திற்கும்
தொடர்பை ஏற்படுத்தி
மந்திரத்தின் மூலம்
யந்திரம் செயல்பட்டு
யந்திரமானது சக்தியை
வெளியிடும் வகையில்
மந்திரமும், யந்திரமும்
ஒன்றொக்கொன்று
தொடர்பு கொண்டு
இயங்கும் விதத்தில்
யந்திரம் எழுதப்பட
வேண்டும்"

"சொல்லப்படும்
மந்திரத்திற்கு
ஏற்றவிதத்தில்
மந்திரத்தின் ஒலியை
உள்வாங்கிக் கொண்டு
யந்திரம் இயக்கம் பெற்று
சக்தியை வெளியிடும்
வேலையை யந்திரம்
செய்வதற்கு தந்திரம்
உதவி செய்கிறது"
  
"அதாவது சொல்லப்படும்
மந்திரத்திற்கு ஏற்ற
விதத்தில் யந்திரம்
இயங்குவதற்கு தேவையான
செயல்களைச் செய்வதற்கு
தந்திரம் உதவுகிறது"

"அதைப் போல்
யந்திரத்திலிருந்து
வெளிப்படும் சக்தியானது
கர்ப்பக்கிரகத்தில்
வைக்கப்பட்டுள்ள
கடவுள் சிலைக்கு
அளிக்கப்படுவதும் ;
கடவுள் சிலை அந்த
சக்தியை ஏற்றுக் கொண்டு
அந்த சக்தியை
கோயிலுக்குள் செலுத்தி
சக்தியை உற்பத்தி
செய்வதும் தந்திரம்"

"அதாவது சொல்லப்பட்ட
மந்திரத்திற்கு ஏற்ப
யந்திரம் இயக்கம் பெற்று
சக்தியை வெளியிடுவதும் ;
யந்திரத்திலிருந்து
வெளிப்பட்ட சக்தியை
கடவுள் சிலை
பெற்றுக்கொண்டு
பெற்றுக் கொண்ட சக்தியை
கோயிலுக்குள் செலுத்தி
கோயிலுக்குள் சக்தியை
உற்பத்தி செய்வதும்
தந்திரம் ஆகும் ;"
  
"மந்திரம், யந்திரம், தந்திரம்
ஆகியவை ஒன்றுக்கொன்று
ஒன்றுபட்டு ஒன்றாக
இயங்க வேண்டும் அவ்வாறு
ஒன்றுபட்டு ஒன்றாக  
இயங்கினால் மட்டுமே
மந்திரம்,யந்திரம்,தந்திரம்
ஆகியவற்றினால் சக்தியானது
உற்பத்தி செய்யப்பட்டு
கடவுள் சிலையின்
மூலமாக சக்தியானது
கோயிலுக்குள் செலுத்தப்பட்டு
சக்தியை கோயிலுக்குள்
உற்பத்தி செய்ய முடியும் ;
இல்லை என்றால்
கோயிலுக்குள் சக்தியை
உற்பத்தி செய்ய முடியாது ; "

"கும்பாபிஷேகம்
செய்யப்படுவதற்கு முன்
கடவுள் சிலையை பீடத்துடன்
இணைக்க வேண்டும்"
  
"கடவுள் சிலையை
பீடத்துடன் இணைப்பதற்கு
முன் கடவுள் சிலைக்குரிய
மந்திரத்தை தேர்ந்தெடுத்து
அந்த மந்திரத்திற்குரிய
யந்திரத்தை எழுதி
சொல்லப்படும் மந்திரத்திற்கு
ஏற்ப யந்திரத்திலிருந்து
வெளிப்படும் சக்தியை
கடவுள் சிலை பெற்று
கடவுள் சிலையின்
மூலமாக சக்தியானது
கோயிலுக்குள் செலுத்தப்பட்டு
கடவுள் சிலையின்
மூலமாக சக்தியானது
கோயிலுக்குள் உற்பத்தி
செய்யப்படுகிறதா என்று
சோதித்து அறிந்த பின்னரே
யந்திரத்தை சிலையின்
கீழ் வைத்து பீடத்துடன்
கடவுள் சிலையை
அஷ்ட பந்தனம் மூலம்
இணைக்க வேண்டும்”
  
--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
---------  14-05-2019
/////////////////////////////////////////////////////