March 06, 2019

திருக்குறள்-பதிவு-120


                    திருக்குறள்-பதிவு-120

“மூன்று கூறுகளாக
பிரிக்கப்பட்டுள்ள
ஜியார்டானோ
புருனோவின்
முழு உருவ
வெண்கல சிலை  ;
மூன்று விதமான
தன்மைகளைக்
கொண்டு ;
மூன்று விதமான
முக்கிய செய்திகளைச்
சொல்கிறது ; “  

“ முதல் கூறில்
ஜியார்டானோ
புருனோவின் முழு
உருவ வெண்கல
சிலை உள்ளது  

“ இரண்டாவது கூறில்
ஜியார்டானோ
புருனோவுடன்
சம்பந்தப்பட்ட 8
நபர்களின் உருவங்கள்
பொறிக்கப்பட்டுள்ளது,  

“ மூன்றாவது கூறின்
மூன்று பக்கங்களில்
ஜியார்டானோ
புருனோவின்
வாழ்க்கையில் நடந்த
மூன்று முக்கியமான
நிகழ்ச்சிகளும்,  

“ மூன்றாவது கூறின்
நான்காவது பக்கத்தில்
ஒரு முக்கிய
வாசகமும் இடம்
பெற்றுள்ளது, “

“ ஜியார்டானோ
புருனோ
சிலையின்
மூன்றாவது
கூறின் நான்காவது
பக்கத்தில்
எழுதப்பட்டுள்ள
எழுத்துக்கள்
இது தான். “

ITALIAN

IX GIVGNO
MDCCCLXXXIX
A BRVNO
IL SECOLO DA
LVI DIVINATO
QVI
DOVE IL ROGO
ARSE

ENGLISH

TO BRUNO-
FROM THE AGE
HE PREDICTED
HERE WHERE
THE FIRE BURNED

தமிழ்

சிலையின்
விவரங்களைப் பற்றி
தெரிவிக்கும் விதத்தில்
அமைந்துள்ள இந்த
வார்த்தைகளில்
இடம்பெற்றுள்ள
முக்கியமான ஒரு
வாசகம் இது தான்

“நெருப்பை
நெருப்பால்
எரித்த இடம்
இங்கு தான்”

இந்த மூன்று
கூறுகளும்
இணைந்தது தான்
ஜியார்டானோ
புருனோவின் முழு
உருவ வெண்கல சிலை.

“ ஜியார்டானோ புருனோ
என்பவர் யார்……..……..?
அவர் எத்தகைய
கொள்கைகளைக்
கொண்டவர் ;
அவர் தன்னுடைய
வாழ்க்கையை
எத்தகைய
போராட்டங்களுக்கு
மத்தியில் வாழ்ந்தவர் ;
அவர் எதற்காக
கொல்லப்பட்டார் ;
அவரைக்
கொன்றவர்கள்
யார்…………………..?
அவர்கள்
அனைவரும்
எத்தகைய
தன்மைகளைக்
கொண்டவர்கள் ;
ஆகியவற்றை
மட்டுமல்ல
ஜியார்டானோ
புருனோவின்
வாழ்க்கை வரலாற்றை
பற்றி தெரிந்து கொள்ள
வேண்டுமானால் ,
சிலையின் அனைத்து
கூறுகளில் உள்ள
ஆழமான
அர்த்தங்களைத்
தெரிந்து கொண்டாலே
போதும் ;”

“ 1889-ஆம் ஆண்டு
எட்டோர் ஃபெராரி
(Ettore Ferrari)
காம்போ டி ஃபியோரி
(Campo dei Fiori)
மீது ஜியார்டானோ
புருனோவின் சிலையை
வடித்து முடித்தார் “

“ ஜியார்டானோ
புருனோவின் சிலை
1889-ஆம் ஆண்டு
ஜுன்மாதம்
9-ம் தேதி திறக்க
முடிவு செய்யப்பட்டது, “

“ ஆனால்,
ஜியார்டானோ
புருனோவின் சிலையை
திறக்கக்கூடாது - என்று
எதிர்ப்புக் குரல்கள்
ஓங்கி ஒலிக்கத்
தொடங்கியது
சண்டைகள்
நெருப்பென பற்றி
எரியத் தொடங்கியது “

“ ஜியார்டானோ
புருனோவின்
ஆரவாளர்களுக்கும் ;
ஜியார்டானோ
புருனோவின்
எதிர்ப்பாளர்களுக்கும் ;
இடையே மிகப்
பெரிய போர்
மூளத் தொடங்கியது ; “

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  06-03-2019
//////////////////////////////////////////////