July 24, 2016

இயேசு கிறிஸ்து-தாயுமானவர்-அங்கிங்கெனாதபடி-பதிவு-76(பாகம்-2)

இயேசு கிறிஸ்து-தாயுமானவர்-அங்கிங்கெனாதபடி-பதிவு-76(பாகம்-2)

""""பதிவு எழுபத்துஆறை விரித்துச் சொல்ல
ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்""""

தாயுமானவர்
"""""அங்கிங் கெனாதபடி எங்கும்ப்ர காசமாய்
                                ஆனந்த பூர்த்தியாகி
      அருளொடு நிறைந்ததெது, தன்னருள் வெளிக்குளே
                                அகிலாண்ட கோடியெல்லாம்

தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்
                தழைத்ததெது, மனவாக்கினில்
  தட்டாமல் நின்றதெது, சமயகோ டிகளெலாந்
                தம்தெய்வம் எம்தெய்வமென்(று)

எங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது,
                எங்கணும் பெருவழக்காய்
  யாதினும் வல்லவொரு சித்தாகி இன்பமாய்
                என்றைக்கும் உள்ளதெது,மேல்

கங்குல்பக லறநின்ற எல்லையுள தெது,அது
                கருத்திற் கிசைந்தததுவே
  கண்டன எலாம்மோன வுருவெளிய தாகவுங்
                கருதிஅஞ்சலி செய்குவாம்"""""""
                                                --------தாயுமானவர்
                                                -------தாயுமான சுவாமிகள் அருளிய திருப்பாடல்கள்
               
வார்த்தைகள் நான்கு நிலைகளுடன்
தொடர்பு கொண்டிருந்தாலும்
தொடர்பு கொண்டிருப்பவைகளை வைத்து
வார்த்தைகளின் அர்த்தம் புரிந்து கொள்ளப் படுகிறது.

வார்த்தைகளின் அர்த்தம்
நான்கு நிலைகளுடன்
சம்பந்தப்பட்டு இருக்கிறது.

ஒன்றுடன் ஒன்று தொடர்பு இல்லாமல்
வார்த்தைகளின் அர்த்தம் புரிந்து கொள்ளப் படுவதில்லை;
வார்த்தைகளின் அர்த்தம் புரிந்து கொள்ளப்பட வேண்டுமானால்
நான்கு நிலைகளுடன் தொடர்பு கொள்ளப்பட வேண்டும்;

நான்கு நிலைகளும்
ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளும்போது,
வார்த்தைகளின் அர்த்தம்
ஒரே மாதிரியாகவும் இருக்கலாம்; - அல்லது
வேறு மாதிரியாகவும் இருக்கலாம்;
வார்த்தைகளின் அர்த்தம் ஒரே மாதிரியாக இருக்கும் என்றோ;
வார்த்தைகளின் அர்த்தம் வேறு மாதிரியாக இருக்கும் என்றோ ;
சொல்ல முடியாது.

வார்த்தைகளின் அர்த்தம் ஒரே மாதிரியாகவும் இருக்கலாம்  ;
அல்லது
வேறு மாதிரியாகவும் இருக்கலாம் ;
வார்த்தைகளின் அர்த்தம் கீழ்க்கண்ட
நான்கு நிலைகளைப் பொறுத்து அமைகிறது :
ஒன்று  : பேசுபவர் நிலை
இரண்டு : கேட்பவர் நிலை
மூன்று : பேசப்படும் சூழ்நிலை
நான்கு : பேசப்படும் கால நிலை

இந்த நான்கும் தான்
வார்த்தைகளின் அர்த்தத்தை நிர்ணயம் செய்கின்றன ;
வார்த்தைகளில் உள்ள
அர்த்தங்களை நிர்ணயம் செய்ய வேண்டுமானால் ;
வார்த்தைகளில் உள்ள
அர்த்தங்களைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் ;
நான்கு நிலைகளும் ஒன்றுடன் ஒன்று
¬ண்ந்து செயல்பட வேண்டும்.

ஒருவர் அதாவது - எழுதுபவர்
ஒரு பழமொழியையோ,
ஒரு கவிதையையோ,
ஒரு குறிப்பிட்ட காலத்தில்;
ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில்;
எழுதி விட்டு சென்று விடுகிறார்.
வேறு ஒரு காலகட்டத்தில்;
வேறு ஒரு சூழ்நிலையில்;
அதை படிக்க நேர்பவர்
அதை புரிந்து கொள்ளும் நிலை
எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது.

எழுதியவர் எந்த அர்த்தத்தில் எழுதினாரோ
அதே அர்த்தத்தைத் தான்
வேறு ஒரு சூழ்நிலையில்;
வேறு ஒரு காலகட்டத்தில்;
படிக்க நேர்பவர்
எடுத்துக் கொள்வார் என்று சொல்ல முடியாது.
எழுதப்பட்டதின் அர்த்தம்
எழுதப்பட்டவரின் அர்த்தத்துடன் ஒத்திருக்கலாம் அல்லது
வேறுமாதிரியாகவோ இருக்கலாம் என்றோ
சொல்ல முடியாது.

சமுதாயத்தில்
பல்வேறு விதமான பாடல்கள், கவிதைகள் ,
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் திருக்குறள்,
முக்கியமாக சித்தர் பாடல்கள்,
மற்றும் பல்வேறு வகையான உயர் படைப்புகள்,
இத்தகைய நிலையில் தான்
தவறான பொருள் கொள்ளப்பட்டு
சரியான அர்த்தமா
தவறான அர்த்தமா - என்று
புரிந்து கொள்ள முடியாத
சூழ்நிலையை உண்டாக்கி வைத்து விடுகிறது.

உண்மைப் பொருள் உணர்ந்தவர்கள் ;
உண்மை நிலையை எடுத்துரைப்பவர்கள் ;
உண்மை நிலையை உணராமல்;
உண்மைப் பொருளை உணராமல்;
தவறான பொருள் கொள்பவர்களால் ;
தவறான நிலையிலேயே பாடல்கள்
இச்சமுதாயத்தில்
பொருள் கொள்ளப்பட்டு வருகிறது.

எது உண்மை
எது பொய் என்று தெரியாமல்
உண்மையை உணராதவர்களால் சொல்லப்படும்
தவறான அர்ததங்களால்
இது தான் உண்மை என்று நம்பி,
அதனை பின்பற்றுபவர்களால் தான்
பொய் நிறைந்த நாடாக
பொய் நிறைந்த  சமுதாயமாக
இச்சமுதாயம் மாறிவிட்டது.

தவறானவர்களால் வழிகாட்டப்பட்டு
தவறானவர்களால் இச்சமுதாயம் நிரம்பி விட்டது.

தவறானவர்களால்
இச்சமுதாயத்திற்கு வழிகாட்டப்பட்டதால்
இச்சமுதாயம் தவறான பாதை நோக்கி
சென்று கொண்டிருக்கிறது.
தவறானவர்கள் கண்டு கொள்ளப்பட்டு
புறக்கணிக்கப்பட வில்லையெனில்
சமுதாயம் தவறானவர்களால் நிரம்பி வழியும்.

இந்த நிலை மாற வேண்டுமானால்;
இந்த குறை நீக்கப்பட வேண்டுமானால்;
இந்த குற்றங்கள் களையப்பட வேண்டுமானால்;
இந்த இழிவுகள் அகற்றப்பட வேண்டுமானால்;
இந்த களங்கங்கள் மாற்றப்பட வேண்டுமானால்;
இந்த அழுக்குகள் நீக்கப்பட வேண்டுமானால்;
இந்த அசுத்தங்கள் சுத்தப்படுத்தப் பட வேண்டுமானால்;
தவறானவர்களை அடையாளம் காணும்
நிலை உருவாக்கப்பட வேண்டும்.

ஒவ்வொருவரும் தனிப்பட்ட ஒவ்வொருவரும்
உண்மை நிலை உணர்ந்தவரை,
உண்மைப் பொருள் உரைப்பவரை,
அடையாளம்கண்டு உண்ரந்து கொண்டாலே
தவறானவர்கள் புறக்கணிக்கப் படுவர்.
தவறானவர்களை
நாம் கண்டுபிடித்து விலக்க வேண்டியதில்லை.
உண்மையை உணர்ந்தாலே ;
உண்மையை உணர்ந்தவரை உணர்ந்தாலே;
உண்மைப் பொருளை உணர்ந்தவரை உணர்ந்தாலே;
உண்மையின் தன்மையை உணர்ந்தாலே;
தவறானவர்களை  தவறுகளை வைத்து
பிழைப்பு நடத்துபவர்,
தவறான வழிகாட்டுபவர்,
தவறான வழி செல்ல பாதை காட்டுபவர்,
தவறான நிலையில்
தவறானவைகளைப் புரிந்து கொண்டு
தவறு என்று தெரிந்தும் தைரியமாக
தவறை உரைப்பவர் ,
தவறு செய்தாலும்
தவறானவைகளைச் சொன்னாலும்
இச்சமுதாயம் ஏற்றுக் கொள்ளும் - என்று
தைரியம் இருப்பதாலேயே
உண்மையை உணராமலே;
உண்மையை உணராமல்
தவறானவைகளைச் சொல்லி
தவறான வழியில்
மக்களை அழைத்துச் செல்கின்றனர்.

தவறானவைகளை
தவறானவர்கள் சொல்லும்போது
இது தவறானது சொல்பவர் தவறானவர் - என்று
சமுதாயம் உணர்ந்து கொள்ளும் போது
தவறானவர்கள் புறக்கணிக்கப்படுவதோடு
இச்சமுதாயத்தில் இருந்து புறக்கணிக்கப்படுவதோடு
இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விடுவார்கள்
தவறான பொருள் சொல்லும் நிலையும்
மாறிப் போகும்.

உண்மையை உணர்ந்தவர்களால் உரைக்கப்படும்
உண்மைப் பொருள் மட்டும் நிலைத்து நிற்கும்.

வார்த்தைகளின் அர்த்தம்
நான்கு நிலைகளுடன் தொடர்பு கொண்டாலும்
உண்மையாக இருப்பவர்கள்
உண்மையை உணர்ந்வர்களால் மட்டும்
உண்மைப் பொருளை உணர முடியும்.

" ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணம் செய்ய வேண்டும்"
என்று அந்த காலகட்டத்தில்
ஒருவரால்
ஒரு சூழ்நிலையில் சொல்லப்பட்டு
ஒரு அர்த்தத்துடன் சொல்லப்பட்டு
எழுதி வைக்கப்பட்டது.
இன்றைய காலகட்டத்தில்
வேறு ஒரு சூழ்நிலையில்
கேட்கும் ஒருவர் - அதை
வேறு விதமாக பொருள் கொள்வர்.

ஒரு சிலர்
ஆயிரம் சொல்லி ஒரு திருமணம் செய்ய வேண்டும்
என்று சொல்வில்லை
ஆயிரம் பேரிடம் போய் சொல்லி திருமணம் செய்ய வேண்டும்
என்று  தான் சொல்லி இருக்கிறார்கள் என்று சொல்லி
அர்த்தத்தை கூட மாற்றாமல்
வார்த்தைகளையே மாற்றி விடுகின்றனர்.

ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணம்
செய்ய வேண்டும் என்ற சொல்
தவறு என்று தெரிந்திருந்தால்
அன்றே அவர்கள்
ஆயிரம் பேரிடம் போய் சொல்லி
ஒரு திருமணத்தை நடத்த வேண்டும்
என்ற சொல்லி இருப்பார்களே
ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்த வேண்டும்
என்று சொல்லி இருக்க மாட்டார்கள்.

ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்த வேண்டும்
என்பது சரி என்று உணர்ந்த காரணத்தினால் தான்
என்று தெரிந்து இருந்த காரணத்தினால் தான்
ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்த வேண்டும்
என்று சொன்னார்கள்.

அன்று சொன்ன வார்த்தைகளின்
அர்த்தத்தை புரிந்துகொள்ள முடியாத சிலர்
அர்த்தத்தை மாற்றாமல்
வார்த்தைகளையே மாற்றி விட்டனர்.

ஒரு கல்யாணத்தை பண்ணும் போது
பலரிடம் பொய் சொல்லித் தான்
திருமணத்தை செய்ய முடியும்
பொய் சொல்லாமல் எந்த திருமணத்தை
யாராலும் நடத்த முடியாது.

இந்த இடத்தில் பொய் சொல்வது என்பது
ஏமாற்றுதல் என்ற பொருளில் சொல்லப்பட்டது அன்று
ஒரு பிரச்சினையை சுமூகமாக தீர்த்தல்
என்ற பொருளில் சொல்லப் பட்டது.
சுமூகமாக நடத்துவதற்கு தேவையான சாத்தியக்கூறுகளை
உண்டாக்க வேண்டும் என்று பொருள்.
ஏமாற்றுதல் என்ற பொருளை விலக்கி
சுமூகமாக நடத்துதல் என்ற பொருளை
எடுத்துக் கொள்ளவேண்டும்.

நம் வீட்டில் திருமணம்
நடத்துகிறோம் என்றால்,
திருமணப் பத்திரிக்கை  - முதலில்
யாருக்கு கொடுக்க வேண்டும் என்ற பிரச்சினை வரும்.

இரண்டு மூன்று முறை பேர் முக்கியமானவர்கள் என்றால்
யாருக்கு முதல் பத்திரிக்கை கொடுக்க வேண்டும்
என்ற பிரச்சினை வரும்
இதனை சுமூகமாக தீர்க்க வேண்டுமென்றால்
ஒருவர் மாற்றி ஒருவரிடம்
ஒருவருக்கு தெரியாமல்
மற்றொருவரிடம்
உங்களுக்குத் தான் முதல் பத்திரிக்கை
கொடுக்கிறேன் என்று
பொய் சொல்லித் தான் ஆக வேண்டும்.

ஒருவருக்கு தெரியாமல் மற்றவரிடம்
பொய் சொல்லுவதன் மூலம்
பத்திரிக்கை யாருக்கு முதலில் கொடுக்க வேண்டும்
என்ற பிரச்சினை
பொய் சொல்லுதல் மூலம்
சுமூகமாக முடித்து வைக்கப்படும்
இந்த இடத்தில் பொய் சொல்லுதல் என்பது
சுமூகமாக பிரச்சினையை முடித்து வைத்தல்
என்ற நிலையில் பயன் படுத்தப் பட்டது.

ஒருவர் மனமும் புண்படாமல் கோபப்படாமல்
சுமூகமாக ஒரு செயல் நடக்க
இந்த இடத்தில் பொய் பயன் படுத்தப் பட்டது.

நம் உறவினர்களில் ஒருவர் சமையல் செய்கிறார்
நிறைய விஷேசங்களுக்கு
சமையல் ஆர்டர் எடுத்து செய்கிறார்
திருமணம் மற்றும் பல்வேறு விசேஷங்களுக்கு
சமையல் ஆர்டர் எடுத்து செய்கிறார்
என்று வைத்துக் கொள்வோம்.
ஆனால்
அவரை நாம் நம் திருமணத்திற்கு புக் செய்யாமல்
வேறு ஒருவரை செய்துவிட்டோம்.

இதைக் கேள்விபட்ட
அந்த உறவினர் கோபப்பட்டு
நான் இருக்கும்போது
வேறு ஒருவரை புக் செய்து விட்டாய்;
என்னை அவமானப் படுத்தி விட்டாய்;
என்று கோபம் கொண்டு
உன் உறவு எனக்கு வேண்டாம்;
உன்னுடன் கொண்ட உறவு போதும்;
என்னுடன் சேர்ந்தவர்கள் யாரும்
இனி உன் வீட்டிற்கு வர மாட்டார்கள்;
என்னைச் சேர்ந்தவர்களும் வர மாட்டார்கள்;
என் உறவினர்கள் யாரும்
உன் விசேஷங்களுக்கோ,
உறவு முறை கொண்டாவோ,
வர மாட்டார்கள் என்று கோபப்படுகிறார்
அவர் கோபத்தை தணிக்க வேண்டும்;
அவர் மனதை அமைதிப் படுத்த வேண்டும்;
என்றால்,
இந்த இடத்தில் பொய் சுமூகமாக தீர்த்தல்
என்ற நிலையில் பயன்படுத்தப் பட வேண்டும்.

இந்த இடத்தில் நாம்
சமையல் வேலைக்கு
இந்த சமையல் காரரை தான் புக் செய்ய
செய்ய வேண்டும் என்று சொன்னது
மாப்பிளை வீட்டார்
அவர்கள் சொல்லி நாம் செய்யாமல் இருக்க முடியுமா
செய்து தானே ஆகவேண்டும்
நான் உங்களைப் பற்றி சொல்லியும்
அவர் கேட்கவில்லை - என்று
பொய் சொல்லி
பிரச்சினையை சுமூகமாக தீர்க்கிறோம்
இந்த இடத்தில் பொய் சொல்லுவதன் மூலம்
ஒரு பெரிய பிரச்சினை
சுமூகமாக தீர்க்கப்படுகிறது.
இந்த இடத்தில் பொய்
ஒரு பிரச்சினையை சுமூகமாக தீர்த்தல்
என்ற அடிப்படையிலேயே பயன்படுத்தப் பட்டது.

ஆயிரம் பொய் சொல்லி என்பது
குறிப்பிடுவது இதைத்தான்
அதாவது  ஏமாற்றுதல் என்ற பொருளில்
பொய் பயன் படுத்தப்படவில்லை.
ஒரு பிரச்சினையை சுமூகமாக தீர்த்தல்
என்ற அடிப்படையிலேயே
பொய் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு திருமணம் நடத்தும் போது
ஒரு பிரச்சினையை சுமூகமாக தீர்த்தல் என்ற
நிலையிலேயே பொய் பயன்படுத்தப் படுகிறது
என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆயிரம் பொய் சொல்லி திருமணம்
நடத்த வேண்டும் என்பது சரியே
என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

"இன்றைக்கு செத்தா நாளைக்கு பால்"
என்பதும் ஒரு உயரிய வார்த்தை
இதற்கு
பிணத்தை புதைத்து விட்டால்
மறுநாள் சென்று பால் ஊற்றுவது என்பதைக் குறிக்கிறது
என்று சொல்லுவர்.

ஆனால் இது பல்வேறு காலகட்டங்களை
பல்வேறு பிறவிகளை;
பல்வேறு ஜென்மங்களை;
பல்வேறு நிகழ்வுகளை;
பல்வேறு சூழ்நிலைகளை;
பல்வேறு நிலைகளை;
ஒன்றாக இணைப்பது.
மிகப்பெரிய மறைபொருள் ரகசியத்தை தன்னுள் கொண்டது;
ஆன்மீகக் கருத்தை தன்னுள் கொண்டது;
மெய்ஞ்ஞான விளக்கத்தை தன்னுள் கொண்டது;
உயரிய விளக்கத்தை தன்னுள் கொண்டது;
பிரபஞ்ச ரகசியத்தை தன்னுள் கொண்டது;
மறை பொருள் விளக்கத்தை தன்னுள் கொண்டது;
என்பதை அறியும் போது
அறிவு தெளிவு பெறும் ;
சிந்தனை உயர்வு பெறும்;
புத்தி உணர்வு பெறும்;

ஒருவன் இந்த பிறவியில்
தன் கர்மாவை கழிக்கவில்லை எனில்
அந்த கர்மாவினால்
அவனுக்கு இன்னொரு பிறவி உண்டு
கர்மாவைக் கழிக்கவில்லை எனில்
கர்மாவைக் கழிக்க
பிறவி எடுத்துத் தான் ஆக வேண்டும்.

கர்மாவைக் கழிக்கும்வரை
பிறவியானது நீண்டு கொண்டே செல்லும்;
கர்மாவைக் கழித்துவிட்டால்
பிறவி என்பது இல்லை;
கர்மா இருக்கும் வரை பிறவி உண்டு;
கர்மாவைக் கழித்து விட்டால் பிறவி இல்லை;

கர்மா இல்லை என்றால்
இறப்பும் இல்லை ; பிறப்பும் இல்லை;
கர்மா இருந்தால்
இறப்பும் உண்டு ; பிறப்பும் உண்டு;

கர்மாவைக் கழிப்பதற்கு முன்பே
ஒருவர் இறந்து விட்டால்
அவர் பிறக்கிறார்.
அப்படி பிறப்பதன் மூலமே
அவர் கர்மாவைக் கழிக்க
முயற்சிகள் எடுக்க முடியும்.

பிறப்பதே கர்ம வினையினால் தான்;
கர்ம வினை இருப்பதால் தான்;
கர்ம வினையைத் தீர்ப்பதற்குத் தான் ;

ஒருவர் பிறக்கிறார் என்றால்,
அவர் கர்ம வினை இருப்பதால் பிறக்கிறார்;
கர்ம வினையைத் தீர்க்க பிறக்கிறார்;
என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கர்மவினையினால் பிறந்து விட்ட குழந்தைக்கு
வாழ்வதற்கு தேவையான
உணவு என்பது முதலில் பால் தான்.

இந்தப் பிறவியில்
கர்மவினையைக் கழிக்காமல்  இறந்து விட்டால்
அடுத்த பிறவியில்
கர்ம வினையினால் பிறக்கும் போது
அளிக்கப்படுவது பால்.

இந்தப் பிறவியில் செத்தால்
அடுத்த பிறவியில் உயிர் வாழ்வ்தற்கு
அளிக்கப்படுவது முதலில் பால்.

கர்ம வினையைக் கழித்தவருக்கு
இறப்பும் இல்லை பிறப்பும் இல்லை
ஆனால்
கர்மவினையைக் கழிக்காமல் விட்டவருக்கு
இறப்பு உண்டு
பிறப்பும் உண்டு

கர்ம வினையினால்
அடுத்த பிறவி உண்டு
அப்பிறவியில் உயர் வாழ
பால் அளிப்பது உண்டு.

இதைத் தான்
"இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்"
என்கிறார்கள்.

எவ்வளவு உயர்ந்த கருத்தை
அர்த்தத்தை தன்னுள் கொண்டிருக்கிறது
இந்த வார்த்தை என்பதை நாம்
உணர்ந்து கொள்ள வேண்டும்

இதைப் போலத்தான்
பல்வேறு பழமொழிகள்
சித்தர் பாடல்கள்
மிக உயர்ந்த ரகசியங்களைத்
தன்னுள் கொண்டிருக்கிறது - என்பதை
நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அந்த இடம் இந்த இடம் என்று இல்லாமல்
எல்லா இடங்களிலும்
நீக்கமற நிறைந்திருப்பவன் இருப்பவன்.

அந்த இடம், இந்த இடம் என்று இல்லாமல்
இல்லாத இடமே இல்லை என்று சொல்லும்படி
அனைத்திற்குள்ளும் புறமும்
அனைத்துமாகவும்
நீக்கமற நிறைந்திருப்பவன் இறைவன்.

ஆன்+அந்தம் = ஆனந்தம்
ஆனந்தம் என்றால்,
மனிதன் முடியக்கூடிய இடம் என்று பொருள்.
மனிதன் முடியக்கூடிய இடம் என்றால்
மனிதன் இறக்கக்கூடிய இடம் என்று பொருள்.
மனிதன் இறக்கக்கூடிய இடம் என்றால்
மனிதன் முடிந்து கடவுள் நிலை
தொடங்கும் நிலை என்று பொருள்.
கடவுள் நிலை தொடங்கும் நிலை என்றால்
மனிதன் கடவுளாக மாறும் நிலை என்று பொருள்.
கடவுளாக மாறும் நிலை என்றால்
மனிதன் நிலை முற்றிலும் முடிந்து விட்டது என்று பொருள்.
மனிதன் நிலை முற்றிலும் முடிந்து விட்டது என்றால்
மனிதன் கடவுளாக மாறி விட்டான் என்று பொருள்.

மனிதனுக்கு முழுமையான ஆனந்தம்
எப்பொழுது வரும் என்றால்,
மனிதன் நிலை முற்றிலுமாக முடியும் போது
மனிதன் நிலை முற்றிலுமாக மாறும் போது
மனிதன் நிலை முற்றிலுமாக அழியும் போது
மனிதனுக்கு முழுமையான உண்மையான நிரந்தரமான
ஆனந்தம் வரும்.
வாழ்க்கையில் அவ்வப்போது குறுக்கிடும் ஆனந்தங்கள்
அனைத்தும் நிரந்தரமான ஆனந்தங்கள் அல்ல
மனிதன் நிலை முடியும் போது வரும்
ஆனந்தமே உண்மையான நிரந்தரமான ஆனந்தம்.

அருள் என்ற சொல்லுக்கும்,
ஏவல் என்ற சொல்லுக்கும்,
வேறுபாடு இருக்கிறது.
நமக்கு மேலே இருப்பவர்களிடம்
நாம் இரந்து கேட்க
மேலே இருப்பவர் நமக்கு கொடுப்பது அருள்
நமக்கு கீழே இருப்பவரை
ஒரு வேலையைச் செய்யச் சொல்ல
நாம் கட்டளையிடுவது தான் ஏவல்.

அருள் என்பது இறைவனால் அளிக்கக் கூடியது
ஏவல் என்பது மனிதனால் செய்யக் கூடியது.

அன்பும், கருணையும்
யார் மனதில் இருக்கிறதோ,
அவரால் தரப்படுவது தான் அருள்;
அன்பும், கருணையும்
யார் மனதில் இல்லையோ
அவரால் செய்யப்படுவது தான் ஏவல் ;

அன்பும் கருணையும் வாரி வழங்கும்
வள்ளலாக இருக்கும் அருள் படைத்தவர் 
இறைவன் என்பதை¢நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மனிதன் தன் தரத்தை உயர்த்தும் போது கடவுளாகிறான்;
மனிதன் தன் தரத்தை தாழ்த்தும் போது மிருகமாகிறான்;

மனிதன் மனதில் அருள் நிரம்பும் போது
அவன் கடவுளாகிறான்;
மனிதன் மனதில் ஏவல் நிரம்பும் போது
அவன் மிருகமாகிறான்;

எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து
நிரந்தரமான ஆனந்தத்தை அளித்து
அருள் பாலிப்பவன் இறைவன்
என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

பென்சில் எதன் மேல் இருக்கிறது
மேசை மேல் இருக்கிறது
பென்சிலுக்கு மேசை ஆதாரம்;

மேசை எதன் மேல் இருக்கிறது
தரை மேல் இருக்கிறது
மேசைக்கு தரை ஆதாரம்;

தரை எதன் மேல் இருக்கிறது
பூமி மேல் இருக்கிறது
தரைக்கு பூமி ஆதாரம்;

பூமி எதன் மேல் இருக்கிறது
வெட்டவெளியில் இருக்கிறது
பூமிக்கு வெட்டவெளியே ஆதாரம்;

வெட்டவெளி எதன் மேல் இருக்கிறது
வெட்டவெளி எதன் மீதும் இல்லை
ஆதாரம் என்ற ஒன்று இல்லாதது;

அனைத்திற்கும் ஆதாரம் என்ற ஒன்று உண்டு
ஆதாரம் என்ற ஒன்று இல்லாததால்
அநாதி ஆனது.

அநாதி என்ற சொல்லிலிருந்து தான்
அநாதை என்ற சொல் வந்தது
யாருமே இல்லாததால் அநாதை
அநாதை என்றால் ஆதாரம் என்ற
ஒன்று இல்லாதது என்று பொருள்
வெட்டவெளிக்கு ஆதாரம் இல்லை.

பூமியை விட சூரியன் பெரியது
சூரியனை விட பல லட்சம் மடங்கு
பெரியதாக உள்ள நட்சத்திரங்கள்
அந்த வெட்டவெளியில் மிதந்து கொண்டு சுற்றி வருகின்றன.

இவைகள் அனைத்துமே
இந்த வெட்டவெளியில் தான் இருக்கின்றன
சுற்றிக் கொண்டும் மிதந்து கொண்டும்
ஒன்றை ஒன்று ஈர்த்தும் விலக்கியும்
கொண்டு செயல்படுகின்றன.

கோடிக்கணக்கான நட்சத்திரங்களை
தன்னுள் சுமந்து கொண்டிருக்கும்
வெட்டவெளியைப் பற்றி யோசித்துப் பார்த்தோமேயாகில்
வெட்டவெளி எவ்வளவு
வலிமை வாய்ந்தது என்பது நமக்கு புலப்படும்.

வெட்டவெளி என்று சொல்லக்கூடிய சுத்தவெளி
ஆதி, அநாதி, பிரம்மம், கடவுள், இறைவன்
என்று பலவாறாக அழைக்கப்படும்.

வெட்டவெளி
படைத்தல், காத்தல், அழித்தல் - என்ற
மூன்று முக்கியமான தொழில்களை செய்து கொண்டு;
இந்த அவனியை தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டு;
நீதி பரிபாலனம் செய்து கொண்டு ;
பிரபஞ்ச ரகசியத்தை மறைத்து கொண்டு;
அனைத்து உயிர்களுக்கும் அருள் வழங்கிக் கொண்டு;
இருப்பவன் இறைவன் என்பதை
நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இயக்கமற்ற நிலை சுத்தவெளி
அதில் பின்னமாகிய உயிர் நிலை
அதாவது இயக்கநிலை
சுத்தவெளியும் உயிரும்
ஓர் குறிப்பிட்ட நிலையில் கூடும்போது
பஞ்ச பூதங்கள் தோன்றுகின்றன
இந்த பஞ்ச பூதங்கள் எந்த இடங்களில்
சரியான அளவுகளில் இருக்கிறதோ
அந்த இடங்களில் உயிரினங்கள் தோன்றுகின்றன.

இயக்கமற்ற நிலையான சுத்தவெளியே
இயக்கமுள்ள உயிராக மாற்றமடைந்து
அவை சரியான விகிதத்தில் கூடி
பஞ்ச பூதங்களை உருவாக்கி
பஞ்ச பூதங்களின் சரியான கூட்டமைப்பு
எந்த இடத்தில் இருக்கிறதோ
அந்த இடங்களில் உயிர் தோன்ற காரணமாகின்றன.

இயக்கமற்ற நிலை தான் ஆனால்
அனைத்தையும் தன்னுள் கொண்ட பரம்பொருள்.
இந்த அகில உலகத்தையும்
தன்னுள் தங்கும்படி வைத்து
உயிரினங்களை படைத்து, காத்து, அழித்து, வரும்
உயர்ந்த நிலை எது என்பதை
உணர்ந்து கொள்ள வேண்டும்.

கடவுள் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்
வெட்டவெளி பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது
இறைவன் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும்
அவைகள் குறிப்பிடுவது மூலம் ஒன்றைத் தான்.
அதாவது
ஆதி நிலை, முதல் நிலை , மூல நிலைகளைத் தான்.

ஆதி   = முதல் நிலை , மூல நிலை
அநாதி = ஆதாரம் என்ற ஒன்று இல்லாதது
பிரம்மம் = நித்தியமாயிருக்கின்ற பொருள்
இறைவன் = அரசன் தலைவன்

கடவுள்
கட+உள்=கடவுள்
மனதை அடக்கிக் கொண்டே உள்ளே சென்றால்
மனதின் அடித்தளமாக இருப்பு நிலையாக
உள்ள இறைவனை கண்டு கொள்ளலாம் என்பதே
கட+உள்= கடவுள் என்பது ஆகும்

ஆண்டவன்
ஈண்டுஇங்கே ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்
ஆண்டு = விரிந்த எல்லையில்லாத
ஆண்டு+அவன் = ஆண்டவன்
ஆண்டவன் என்றால் விரிந்தவன், எல்லையில்லாதவன்
என்று பொருள்.

பகவன்
இலகு = சிறிய, எளிய
பகு   = பெரிய, மதிப்புமிக்க
பகு+அவன்=பகவன் என்றால்
பெரியவன், மதிப்பு மிக்கவன் என்று பொருள்

பூரணம்
அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டிருக்கும்
காலம் வரும்போது வெளிப்படுத்துவது என்று பொருள்.

பரம் 
நேர் இல்லாதது
உவமை இல்லாதது
அதற்கு இணை என்ற ஒன்று இல்லாதது
அதற்கு மேல் என்ற ஒன்றும் இல்லாதது
பரம்+சிவன்=பரமசிவன்
பரம்+சக்தி=பராசக்தி
இயக்க நிலையில் பராசக்திக்கு மேல் ஒன்றும் இல்லாதது
இயக்கமற்ற நிலையில் பரமசிவனுக்கு மேல் ஒன்றும் இல்லாதது

இவ்வாறு வெட்டவெளி பல்வேறு
பெயர்களில் அழைக்கப்பட்டாலும்
அவைகள் குறிப்பிடுவது ஒன்றே ஒன்றைத் தான்
மூலமான பரம்பொருளைத் தான்
அந்த பரம்பொருளைத் தான்
சமுதாயம் பல்வேறு பெயர்களில் அழைக்கிறது.

சமயத்திற்கும், மதத்திற்கும் வேறுபாடு இருக்கிறது
சம+இயம்=சமயம்
சமயம் என்றால்
அனைவரையும் சமமாகப் பாவித்து
ஒருவருக்கொருவர் ஒத்தும், உதவியும் வாழ வேண்டும்
என்று சொல்லுவது.

மதம் என்றால்
ஏற்றத்தாழ்வு மனப்பான்மை பாராட்டுவது என்று பொருள்.

இன்றைய கால கட்டங்களில் சமயம் என்பது இல்லை
மதம் மட்டுமே இருக்கிறது
மனிதன் மனிதனாக இருந்து
மனிதனை மனிதன் நேசிக்கணும் என்று
சொல்பவை மதங்கள்.
இன்று அவைகள் உண்டா என்பது கேள்விக்குறி.

பரம்பொருள் ஒன்று என்றாலும்
அது பல்வேறு பெயர்களில்
பல்வேறு தரப்பட்ட மனிதர்களால்,
பல்வேறு கால கட்டங்களில்,
பல்வேறு சூழ்நிலைகளில் அழைக்கப்பட்டாலும்,
மனத்தாலும், சிந்தனையாலும் நினைக்கப்பட்டாலும்,
வார்த்தைகளால் சொல்லப்பட்டாலும்,
வார்த்தைகளால் வாதிடப்பட்டாலும்,
அவைகள் அனைத்தையும் குறிப்பிடுவது ஒன்றைத் தான்
பரம்பொருளைத் தான் என்பதை
உணர்ந்து கொள்ள வேண்டும்.
அது மட்டுமல்லாமல்
இந்த உலகம் முழுவதிலும்
என் தெய்வம், உன் தெய்வம் என்று
மாற்றி, மாற்றி கூறிக் கொண்டு
பேசிக் கொண்டு;
வாதிட்டுக் கொண்டு ;
போராடிக் கொண்டு;
சண்டையிட்டுக் கொண்டு;
நடந்து கொண்டிருக்கும் நிலையில்
தன்னை மறைத்துக் கொண்டு;
படைத்தல், காத்தல், அழித்தல்,
வேலைகளைச் செய்து கொண்டு;
இந்த உலகம் யாவையும்
தன் அன்பு, கருணையினால் அரவணைத்து
அருள் செய்து கொண்டிருக்கும்
எல்லாம் வல்ல பரம்பொருள் எது என்பதை
உணர்ந்து கொள்ள வேண்டும்.

இயக்கமற்ற நிலைக்கு
பிறப்பு என்பது கிடையாது;
இறப்பு என்பது கிடையாது;
எல்லை என்பது கிடையாது;
உருவம் என்பது கிடையாது;
நாமம் என்பது கிடையாது;
காலம் என்பது கிடையாது;
இவைகள் அனைத்தும் இயக்கமற்ற நிலை
இயக்க நிலைக்கு வரும்போது உண்டு.

இயக்க நிலையில்
இவைகள் அனைத்தும் உண்டு என்றால்,
இயக்கமற்ற நிலையில்
அவை அதற்குள் இருந்து நானே ஆக வேண்டும்.

இல்லாதது தோன்றாது;
இருப்பதே தோன்றும்;
எல்லாம் வல்ல பரம்பொருளான
இயக்க மற்ற நிலை,
இயக்க நிலைக்கு வரும்போது
அவைகள் வெளிப்படுத்தப் படுகின்றன.

இயக்கநிலையில் உள்ளவைகளை மட்டுமே
நம்மால் உணரமுடியும்
ஏனென்றால் நாமும் இயக்க நிலையிலேயே இருக்கிறோம்.

நாம் இயக்கமற்ற நிலைக்கு வரும்போது தான்
நாம் இயக்கமற்ற நிலையை உணர முடியும்.

சக்தி நிலை வரை இயக்கநிலை தான்
சிவநிலை வரும்போது தான்
இயக்கமற்ற நிலை.
நாம் இயக்கநிலையில் இருக்கும் வரை
இயக்கநிலையைத் தான் உணர முடியும்
நாம் இயக்கமற்ற நிலைக்கு வந்தால் தான்
நாம் இயக்கமற்ற நிலையை உணர முடியும் என்பதை
உணர்ந்து கொள்ள வேண்டும்.

கடவுள்  இந்த உலகத்தில்
மூன்று நிலைகளில் இயங்கிக் கொண்டிருக்கிறான்
அரூபம், ரூபம், அருபாரூபம்
தண்ணீரை சூடுபடுத்தினால் ஆவியாகிறது அது அரூபம்
தண்ணீர் அரூபாரூபம்
கடவுள் இந்த பிரபஞ்சத்தில்
இந்த மூன்று நிலைகளில் இயங்கிக் கொண்டிருக்கிறான்

இயக்கமற்ற நிலையில்
மௌன நிலையில் இருந்த பரம்பொருள்
இயக்க நிலையான
ஒலி நிலைக்கு வந்து மீண்டும்
இயக்கமற்ற நிலையான
மௌன நிலைக்கே வருவது தான் பரம்பொருள்.

இயக்கமற்ற நிலை
இயக்கநிலைக்கு வந்து மீண்டும்
இயக்கமற்ற நிலைக்கு வருவது தான் பரம்பொருள்.

இப்பிரபஞ்சத்தில் நடை பெற்றவைகளை
இப்பிரபஞ்சத்தில் நடை பெற்றுக் கொண்டிருப்பவைகளை
நாம் உற்று நோக்கினால்
சிந்தித்துப் பார்த்தோமேயாகில்
இந்த செயல் தான் நடைபெற்று வருகிறது
என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

உலகில் உள்ள எந்தப் பொருளும் நிலை இல்லை
உருவாகிறது ,இருக்கிறது, அழிகிறது
எங்கிருந்து வந்ததோ
அங்கேயே செல்கிறது.
ஆதியும், அந்தமும் ஒன்றுதான்
எங்கே பிறப்போ அங்கேதான் இறப்பும் இருக்கிறது.

உலகில் உள்ள அனைத்தும்
எங்கிருந்து வந்ததோ
அங்கேயே சென்று சேர்கிறது
என்பதை
அறியும் போது ஞானம் பிறக்கிறது
அதுவாகவே மாறும் போது முக்தி பிறக்கிறது.


ஞானத்திற்கும், முக்திக்கும் வேறுபாடு இருக்கிறது.
ஒரு கிணற்றில் தண்ணீர் இருக்கிறது
அதை கடவுள் பரம்பொருள் என்று வைத்துக் கொள்வோம்
வாளியில் தண்ணீரை எடுத்துக் குடித்தால்
அதற்குப்  பெயர் ஞானம்;
கிணற்றில் விழுந்து நாம் தண்ணீராகவே மாறி விட்டால்
அதற்குப் பெயர் முக்தி;

ஞானத்திற்கும், முக்திக்கும் உள்ள
மிகப்பெரிய வேறுபாடு இது தான்.
ஞானம் என்ற ஒன்றை தொட்டு விட்டால்
முக்தி என்ற நிலையை அடையலாம் ;
ஞானம் என்ற ஒன்றை அடைந்தவர்களால்
முக்தி என்ற ஒன்றை எல்லோராலும்
அடைய முடியும் என்று சொல்ல முடியாது;
ஞானம் அடைந்தவர்கள்
முக்தி அடைவார்கள் - என்று
சொல்ல முடியாது.

ஞானம் என்ற மரம் இரண்டு
கிளைகளைக் கொண்டது
ஒன்று  சமாதி
இரண்டு முக்தி

சமம்+ஆதி=சமாதி
சமாதி என்ற சொல்
ஆதி நிலைக்குச் சமமாக
மனிதன் உயர்தல் என்பதைக் குறிக்கிறது.

சமாதி நிலையில் இருப்பவர்கள்
குறிப்பிட்ட காலம் கழிந்த பின்பு மீண்டும்
வெளியே வருவார்கள்;
தங்கள் கடமையை முடித்து விட்டு
மீண்டும் சமாதிக்குள் சென்று விடுவார்கள்;
இதைப் போல எத்தனை முறை வேண்டுமானாலும்
சமாதியிலிருந்து வெளியே வந்து விட்டு
மீண்டும் சமாதிக்குள் சென்று விடுவார்கள்;
முக்தி என்பது மீண்டும் வர முடியாது
அதுவாக இருந்தது
அதுவாகவே மாறுவது தான் முக்தி;

உயிரை உடலில் வைத்துக் கொண்டு மனதை
இந்த பிரபஞ்சம் முழுவதும்
விரிந்த நிலையில் வைத்துக் கொண்டு
இருப்பது சமாதி;
உடல் அணுக்களும்
உயிர் அணுக்களும் பிரிந்து
சுத்தவெளியுடன் கலந்து விடுவது
சுத்தவெளியாகவே மாறுவது
சுத்தவெளியாகவே மாறி விடுவது முக்தி;

சமாதி என்றால் மீண்டும் வரலாம்;
முக்தி என்றால் மீண்டும் வர முடியாது;

சிலர் சமாதி வரை செல்வார்கள்;
சமாதி அடைய முயற்சி செய்வார்கள்;
கோடியில் ஒருவரால் மட்டுமே
சமாதி அடைய முடியும்
கோடியில், கோடியில், கோடியில்  ஒருவரால் மட்டுமே
முக்தி அடைய முடியும்.

சமாதி அடைவதற்கான வழிமுறைகள் பலபேருக்கு தெரியும்
அதை அடைய முயற்சி செய்வார்கள்;
முக்தி அடையும் வழிமுறை தெரியாத காரணத்தினால்
முக்தி அடைய யாரும் முயற்சி செய்வதில்லை;

ஞானம் என்ற ஒன்றை அடைந்து
சமாதியை உணர்ந்து
முக்தி நிலை அடைவதற்காக
வழிமுறைகளை ஆராய்ந்து
பரம்பொருள் நிலையை உணர்ந்து
பரம்பொருளாகவே மாற வேண்டும்
என்கிறார் தாயுமானவர்.

இயேசு கிறிஸ்து-தாயுமானவர்
தேவையுடைய செயல் எது என்றும்
தேவையற்ற செயல் எது என்றும்
உணரும் போது தான்
உண்மை எது
பொய் எது என்று தெரிந்து
உண்மை நிலை அறிய முடியும் என்கிறது
பைபிள்
அவ்வாறே,
தாயுமானவரும்
உண்மைக்கும்
பொய்யுக்கும் உள்ள வேறுபாடு
தெரியும் போதுதான்
உண்மை நிலை தெரியும்
என்கிறார்.

""""போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
          போற்றினேன் பதிவுஎழுபத்துஆறுந் தான்முற்றே""""