April 01, 2018

இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-பிறவிப்-பதிவு-82-(1)


இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-பிறவிப்-பதிவு-82-(1)

                                  """"பதிவு எண்பத்துஇரண்டைவிரித்துச் சொல்ல
                          ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்""""

இயேசு கிறிஸ்து:

“பரலோகராஜ்யம் தன் குமாரனுக்குக் கலியாணஞ்செய்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது.”
-------மத்தேயு –  22 : 2

“அழைக்கப்பட்டவர்களைக் கலியாணத்திற்கு வரச்சொல்லும்படி அவன் தன் ஊழியக்காரரை அனுப்பினான்; அவர்களோ வர மனதில்லாதிருந்தார்கள்.”
-------மத்தேயு –  22 : 3

“அப்பொழுது அவன் வேறு ஊழியக்காரரை அழைத்து நீங்கள் போய், இதோ, என் விருந்தை ஆயத்தம்பணினேன், என் எருதுகளும்  கொழுத்த ஜெந்துக்களும் அடிக்கப்பட்டது, எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது; கலியாணத்திற்கு வாருங்கள் என்று அழைக்கப்பட்டவர்களுக்குச் சொல்லுங்களென்று அனுப்பினான்.”
-------மத்தேயு –  22 : 4

“அழைக்கப்பட்டவர்களோ அதை அசட்டைபண்ணி, ஒருவன் தன் வயலுக்கும், ஒருவன் தன் வியாபாரத்துக்கும் போய்விட்டார்கள்.”
-------மத்தேயு –  22 : 5

“மற்றவர்கள் அவன் ஊழியக்காரரைப் பிடித்து, அவமானப்படுத்தி, கொலை செய்தார்கள்.”
-------மத்தேயு –  22 : 6

“ராஜா அதைக் கேள்விப்பட்டு, கோபமடைந்து, தன் சேனைகளை அனுப்பி, அந்தக் கொலைபாதகரை அழித்து, அவர்கள் பட்டணத்தையும் சுட்டெரித்தான்.”
-------மத்தேயு –  22 : 7

“அப்பொழுது, அவன் தன் ஊழியக்காரரை நோக்கி: கலியாண விருந்து ஆயத்தமாயிருக்கிறது, அழைக்கப்பட்டவர்களோ அதற்கு அபாத்திரராய்ப் போனார்கள்.”
-------மத்தேயு –  22 : 8

“ஆகையால், நீங்கள் வழிச்சந்திகளிலே போய், காணப்படுகிற யாவரையும் கலியாணத்திற்கு அழைத்துக் கொண்டு வாருங்கள் என்றான்.”
-------மத்தேயு –  22 : 9

“அந்த ஊழியக்காரர் புறப்பட்டு, வழிகளிலே போய், தாங்கள் கண்ட நல்லார் பொல்லார் யாவரையும் கூட்டிக் கொண்டு வந்தார்கள்; கலியாணசாலை விருந்தாளிகளால் நிறைந்தது.”
-------மத்தேயு –  22 : 10

“விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே பிரவேசித்தபோது, கலியாண வஸ்திரம் தரித்திராத ஒரு மனுஷனை அங்கே கண்டு: “
-------மத்தேயு –  22 : 11

“சிநேகினே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான்.”
-------மத்தேயு –  22 : 12

“அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை நோக்கி:  இவனைக் கையுங்காலும்  கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும்  உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள்  என்றான்.”
-------மத்தேயு –  22 : 13

“அந்தப்படியே, அழைக்கப்பட்டவர் அநேகர், தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.”
-------மத்தேயு –  22 : 14


காதல் என்பது
மூன்று விதமான நிலைகளைத்
தன்னுள் கொண்டது
     ஒன்று  : ஆரம்ப நிலை
    இரண்டு :  இடை நிலை
     மூன்று : முடிவு நிலை

ஆரம்ப நிலை என்பது
காதல் ஆரம்பமாவதைக்
குறிக்கும்

இடை நிலை என்பது
காதல் செய்வதைக்
குறிக்கும்

முடிவு நிலை
என்பது காதல் வெற்றி
பெற்றதா அல்லது
தோல்வி அடைந்ததா
என்பதைக் குறிக்கும்


ஆரம்ப நிலை :
காதல் என்பது தோன்றுவது
அது இரண்டு நிலைகளைத் தன்னுள்
கொண்டிருக்கும்
ஒன்று  : எதிர்பார்ப்புடன் கூடிய காதல்
       இரண்டு : எதிர்பார்ப்பு அற்ற காதல்

தான் விரும்பும் ஒரு பெண்
இத்தகைய அழகுடன்
இருக்க வேண்டும்
இத்தகைய குணத்துடன்                                                    
இருக்க வேண்டும்
இத்தகைய செல்வ வளத்துடன்
இருக்க வேண்டும் - என்று
நீண்ட நாட்கள் கனவு
கண்ட பையனுக்கு
அந்த எண்ணத்துக்கு உரிய
பெண் கிடைத்தால்
அது தான் எதிர்பார்த்த
பெண் காதலியாகக் கிடைப்பது
இது தான் எதிர்பார்ப்புடன்
கூடிய காதல்.

ஒரு பெண் எதிரில் வருகிறாள்
ஒரு பெண்
இத்தகைய அழகுடன்
இருக்க வேண்டும்
இத்தகைய குணத்துடன்
இருக்க வேண்டும்
இத்தகைய செல்வ வளத்துடன்
இருக்க வேண்டும்
என்ற நினைவுகளை
மனதில் நிறுத்தாமல்
பையனுக்கு எதிரில் ஒரு பெண்
வரும்போது காதல் வருகிறது
அந்த பையன் சொல்கிறான்
அந்த பெண்ணைப் பார்த்தவுடன்
காதல் வந்து விட்டது
அது எப்படி வந்தது
என்று தெரியவில்லை
ஆனால் வந்து விட்டது
என்கிறான்
இது தான்
எதிர்பார்ப்பு அற்ற காதல்.

இந்த இரண்டு நிலைகளில் தான்
காதல் என்பது ஏற்படுகிறது

ஆண் மட்டும் காதலிப்பது
(அல்லது)
பெண் மட்டும் காதலிப்பது
என்று ஒரு பக்க
காதல் என்று இல்லாமல்
ஆண், பெண் என்ற
இரண்டு பக்கங்களும்
இணைந்து விட்டால்
காதல் என்பது
ஆரம்பமாகிறது
இது தான் காதல்
என்பது ஆரம்பமாகும்
இது தான் காதல்
என்பதின் ஆரம்ப நிலை

இடை நிலை
காதலின் இடைப்பட்ட நிலை என்பது
காதல் செய்வதைக் குறிக்கும்
வீட்டிற்குத் தெரியாமல்,
பெற்றோருக்குத் தெரியாமல்,
உறவினர்களுக்குத் தெரியாமல்,
சுற்றத்தாருக்குத் தெரியாமல்,
காதல் செய்யும்
ஆணும், பெண்ணும்
வெளி இடங்களுக்கு
சுற்றித் திரிவதும்,
காதல் சிறகை விரித்து
காதல் வானில் பறப்பதைக்
குறிக்கும்.

அந்த சமயத்தில்
காதல் செய்யும் போது
அவர்களுக்கு
தங்களைச் சுற்றி
என்ன நடக்கிறது
என்பதே தெரியாது
காதல் செய்யும் போது
காலம் என்பதே இருக்காது
இது இடைப்பட்ட நிலை

முடிவு நிலை
முடிவு நிலை என்பது
காதல் வெற்றி பெற்றதா
அல்லது
தோல்வி அடைந்ததா
என்பதைக் குறிக்கும்


காதல் தோல்வியுறுவது
என்பது இரண்டு நபர்களால்
ஏற்படுகிறது.

ஒன்று காதலிக்கும் ஆணால்
                 ஏற்படுகிறது

இரண்டு காதலிக்கும் பெண்ணால்
                  ஏற்படுகிறது

ஒன்று
நேற்று இந்த நிலையில் இருந்தோம்
நாளை திருமணம் செய்தால்
இந்த நிலைக்கு ஆளாவோம்
சாதி சண்டை ஏற்படும்
குடும்பத்தில் அமைதி
இழப்பு ஏற்படும்
பெரிய துன்பங்கள்
ஆகியவை ஏற்படும்
என்ற காரணத்தினால்
காதல் வேண்டாம் என்று சொல்வது

இரண்டு
இவரைத் திருமணம் செய்தால்
பிற்காலம் நன்றாக இருக்கும்
பணக்காரன்,
நல்ல வேலை
சுகமாக வாழலாம்
என்று நினைத்தால்
ஆகியவை இல்லை
எனவே
காதல் வேண்டாம்
என்று சொல்வது

காதலிக்கும் ஆணோ (அல்லது) பெண்ணோ
மேற்கண்ட இரண்டு காரணங்களினால்
காதல் வேண்டாம் என்று
சொல்வார்கள்

இது காலம் என்ற ஒன்றுக்குள்
அடைபட்ட காதல்
எனவே,
இந்த காதல் வெற்றி பெறாது
இந்த காதல்
இறந்த காலத்தையும்
நிகழ் காலத்தையும்
எதிர் காலத்தையும்
ஆகிய மூன்றையும்
தன்னுள் கொண்டதால்
இது காலத்திற்கு உட்பட்ட காதல்

அதாவது
மேற்கண்ட இரண்டு காரணங்களினால்
ஒரு பெண்
ஒரு ஆணை வேண்டாம்  
என்று சொன்னாலோ
(அல்லது)
மேற்கண்ட இரண்டு காரணங்களினால்
ஒரு ஆண்
ஒரு பெண்ணை வேண்டாம் என்று
சொன்னாலோ
(அல்லது)
மேற்கண்ட இரண்டு காரணங்களினால்
இருவருமே வேண்டாம் என்று
சொன்னாலோ
அத்தகைய காதலை
காலத்திற்கு உட்பட்ட காதல்
என்று சொல்லலாம்

காலத்திற்கு உட்படாத காதல் என்பது
இறந்த காலம்,
நிகழ்காலம்,
எதிர்காலம்
மூன்றும் இல்லாதது
அதாவது காதலிப்பவர்
காலம் என்ற ஒன்றிற்குள்
இல்லாமல் இருப்பார்
அதாவது
நேற்று - இப்படி இருந்தோம்
இன்று - இப்படி இருக்கிறோம்
நாளை - எப்படி இருப்போம்
என்பதை யோசிக்காமல்
காதலை மட்டும் யோசித்து
முடிவு எடுப்பது
காலத்திற்கு உட்படாத
காதல்

ஒரு ஆண்
மேற்கண்ட காரணங்களினால்
ஆழ்ந்து இருந்து
பெண் இல்லை என்றால்
அதாவது
ஆண்ணிணுடைய காதல்
காலத்திற்கு உட்படாத
காதலாக இருந்து
பெண்ணிணுடைய காதல்
காலத்திற்கு உட்பட்ட
காதலாக இருந்தால்
காதல் தோல்வியுறும்

அதேபோல்
பெண்ணிணுடைய காதல்
காலத்திற்கு உட்படாத
காதலாக இருந்து
ஆண்ணிணுடைய காதல்
காலத்திற்கு உட்பட்ட
காதலாக இருந்தால்
காதல் வெற்றி பெறாது

ஆனால்
பெண்ணிணுடைய காதல்
காலத்திற்கு உட்படாத
காதலாக இருந்து,
ஆண்ணிணுடைய காதலும்
காலத்திற்கு உட்படாத
காதலாக இருந்தால்
காதல் வெற்றி பெறும்

அதாவது,
முக்காலத்தையும்
நினைக்காமல்
காதல் ஒன்றையே நினைத்து
காதலுக்காகவே இருக்கும்
காதல் மட்டுமே வெற்றி பெறும்

வெற்றி பெற்ற காதல்
அனைத்தையும்
உற்று பார்த்தால்
வெற்றி பெற்ற காதலர்களைப் பார்த்தால்
வெற்றி பெற்ற காதலர்களே
தங்களை பார்த்துக் கொண்டால்
வெற்றி பெற்ற காதல்
காலத்திற்கு உட்படாத
காதலாகத்
தான் இருக்கும்

தோல்வியுற்ற காதல் அனைத்தும்
காலத்திற்கு உட்பட்ட
காதலாகத் தான் இருக்கும்

இன்னொன்று காதலர்கள்
இச்சமுதாயத்தில் வாழ
முடியவில்லை என்றால்
இச் சமுதாயம் காதலர்களை
வாழ விடவில்லை என்றால்
காதல் நிறைவேறவில்லை - என்று
தற்கொலை செய்து கொண்டால்
அத்தகைய காதல்
வெற்றி பெற்ற காதலா (அல்லது)
தோல்வியுற்ற காதலா
என்ற ஐயம் ஏற்படும்
இதில் ஐயம் என்பதே
ஏற்படக்கூடாது
இது வெற்றி பெற்ற காதல் தான்
காதலும் வெற்றி பெற்றது
காதலர்களும் வெற்றி பெற்றார்கள்

சிலர் சொல்வார்கள்
காதலர்கள் தான் இறந்தார்கள்
காதல் இறப்பதில்லை
இந்த வார்த்தையே தவறானது.

அந்த வார்த்தையே
தவறானது மட்டுமல்ல
அந்த கருத்தே
மிகத் தவறானது

ஒரு அரசன் எதிரி நாட்டுடன்
போரிட்டு வெற்றி பெற்றால்
அந்த அரசனும் வெற்றி பெற்றான்
நாடும் வெற்றி பெற்றது
என்று  சொல்கிறோம்.
அதைப்போல ஒரு அரசன்
எதிரி நாட்டுடன் போரிட்டு
தோற்றுப் போனால்
அந்த அரசனும் தோற்றான்
அந்த நாடும் தோற்றது என்கிறோம்.

எப்படி என்றால்
காதலர்கள் தற்கொலை செய்து கொண்டால்
அவர்கள் காலத்திற்கு
உட்படாத காதலை
இருவருமே செய்திருக்கிறார்கள்
என்று அர்த்தம்
அதனால் தான்
இருவரும் தற்கொலை
செய்து கொண்டார்கள்
எனவே, காதலும் வெற்றி பெற்றது
காதலர்களும் வெற்றி
பெற்றார்கள்.
இவர்கள் காலத்திற்கு
உட்படாத காதலை செய்து இறந்தார்கள்
இது வெற்றி பெற்ற காதல்

அதே போல்,
காலத்திற்கு உட்படாத
காதலைச் செய்து
இருவர் திருமணம்
செய்து கொண்டு வாழ்ந்தாலும்
அதுவும் வெற்றி பெற்ற
காதல் தான்.

காலத்திற்கு உட்படாத
காதலை புரிந்தவர்கள்
காதலில் வெற்றி பெற்று
திருமணம் புரிந்து
வாழ்ந்தாலும்,
காலத்திற்கு உட்படாத
காலத்தை புரிந்தவர்கள்
இறந்தாலும்
காதலர்களும் வெற்றி பெற்றார்கள்
காதலும் வெற்றி பெற்றது
எனக் கொள்ள வேண்டும்

காலத்திற்கு உட்படாத
காதல் இறந்தாலும் வெற்றியே
காலத்திற்கு உட்படாத
காதல் வாழ்ந்தாலும் வெற்றியே
என்பதை நினைவில்
கொள்ள வேண்டும்

இவ்வாறு காதல் என்பது
ஆரம்ப நிலை
இடை நிலை
முடிவு நிலை
என்ற மூன்று நிலைகளைத்
தன்னுள் கொண்டு இருக்கிறது

---------இதன் தொடர்ச்சி
     இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-பிறவிப்-பதிவு-82-(2)
      ------------பார்க்கவும், படிக்கவும்







இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-பிறவிப்-பதிவு-82-(2)


இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-பிறவிப்-பதிவு-82-(2)

                                  """"பதிவு எண்பத்துஇரண்டை விரித்துச் சொல்ல
                          ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்""""

இயேசு கிறிஸ்து:

காதல் திருமணம் மட்டும்
புனிதமானது அல்ல
பெற்றோர்களாலும்
செய்யப்படும்
திருமணமும்
புனிதமானது ஆகும்.

திருமணத்தில் இரண்டு செயல்கள்
நடைபெறுகிறது

 ஒன்று : திருமணத்திற்கு அழைப்பவர்கள்
இரண்டு : திருமணத்திற்கு வருபவர்கள்

திருமணத்திற்கு அழைப்பவர்களை
இரண்டு நிலைகளில் பிரித்து விடலாம்

ஒன்று   : திருமணத்திற்கு தனது தகுதிக்கு
            தகுந்தவர்களை அழைப்பவர்கள்
இரண்டு : திருமணத்திற்கு தனது தகுதி பார்க்காமல்
           அனைவரையும் அழைப்பவர்கள்


திருமணத்திற்கு வருபவர்களை
இரண்டு நிலைகளில் பிரித்து விடலாம்

ஒன்று   : தனது தகுதிக்கு தகுந்தவர்கள்
            திருமணத்திற்கு வருபவர்கள்
இரண்டு : தனது தகுதிக்கு தகுந்தவர்கள்
           திருமணம் என்று பார்க்காமல்
           அனைவர் திருமணத்திற்கும் வருபவர்கள்


திருமணத்திற்கு அழைப்பவர்கள்
தங்கள் தகுதிக்கு
தகுதியானவர்களை
திருமணத்திற்கு அழைப்பார்கள்
அதாவது
தங்கள் தகுதிக்கு
தங்கள் செல்வாக்குக்கு
தங்கள் அந்தஸ்துக்கு
தகுதியானவர்களை
திருமணத்திற்கு அழைப்பார்கள்
ஒரு பிரிவினர்

திருமணத்திற்கு அழைப்பவர்களில்
மற்றொரு பிரிவினர்
தங்கள் தகுதிக்கு
தகுதியானவர்களை
மட்டும் அல்லாமல்
அனைவரையும்
திருமணத்திற்கு அழைப்பார்கள்
அதாவது
தங்கள் தகுதிக்கு
தங்கள் செல்வாக்குக்கு
தங்கள் அந்தஸ்துக்கு
தகுதியானவர்களை
மட்டும் அல்லாமல்
அனைவரையும்
திருமணத்திற்கு அழைப்பார்கள்

திருமணத்திற்கு வருபவர்களில்
ஒரு பிரிவினர்
தங்கள் தகுதிக்கு
தகுந்தவர்கள்
திருமணத்திற்கு மட்டும்
வருவார்கள்
அதாவது
தங்கள் தகுதிக்கு
தங்கள் செல்வாக்குக்கு
தங்கள் அந்தஸ்துக்கு
தகுந்தவர்கள்
திருமணத்திற்கு
மட்டும் வருவார்கள்

திருமணத்திற்கு வருபவர்களில்
மற்றொரு பிரிவினர்
தங்கள் தகுதிக்கு
தகுந்தவர்கள்
திருமணத்திற்கு மட்டும்
அல்லாமல்
அனைவருடைய
திருமணத்திற்கும்
அதாவது
தங்கள் தகுதிக்கு
தங்கள் செல்வாக்குக்கு
தங்கள் அந்தஸ்துக்கு
தகுந்தவர்கள்
திருமணத்திற்கு
மட்டும் வராமல்
அனைவருடைய
திருமணத்திற்கும்
வருவார்கள்.

திருமணத்தில்
இந்த இரண்டு
முக்கியமான செயல்
நடை பெறுகிறது

இயேசு
அவர்களிடம்
உவமைகளாய் பேசினார்

பரலோகராஜ்யம்
தன்  குமாரனுக்கு
கல்யாணம் செய்த
ராஜாவுக்கு
ஒப்பாயிருக்கிறது

ராஜா தன் குமாரன்
கல்யாணத்திற்கு அழைக்கப்
பட்டவர்களை
அழைத்து வரும்படி
தன் ஊழியக்காரனை
அனுப்பினான்

அழைக்கப்பட்டவர்களோ
கல்யாணத்திற்கு
வர மனம் இல்லாதவர்களாக
இருந்தார்கள்

அப்பொழுது ராஜா வேறு
ஊழியக்காரர்களை அனுப்பி
நீங்கள் போய்
விருந்துக்கு ஏற்பாடு செய்து
இருக்கிறேன்
எருதுகளும், கொழுத்த
ஜெந்துகளும்
விருந்துக்காக தயார்
செய்யப்பட்டிருக்கிறது
என்று சொல்லி
திருமணத்திற்கு அழைக்கப்
பட்டவர்களுக்கு சொல்லி
திருமணத்திற்கு
அழைத்து வாருங்கள்
என்றான்.

திருமணத்திற்கு
அழைக்கப் பட்டவர்கள்
அதை ஏற்றுக் கொள்ளாமல்
அதை அசட்டை பண்ணி
ஒருவன் தன் வயலுக்கும்,
ஒருவன் தன் வியாபாரத்துக்கும்
போய் விட்டான்

அதோடு நிற்காமல்
மற்றவர்கள்
ராஜாவின் ஊழியக்
காரனைப் பிடித்து,
அவனை அவமானப்
படுத்தி
கொலை செய்தார்கள்

மனிதன் பிறறை வருத்தப்பட வைப்பதில்
இரண்டு விதமான
செயல்களைச் செய்கிறான்
ஒன்று  : வார்த்தையின் மூலம் பிறரை
                   வருத்தப்பட வைப்பது
      இரண்டு  : செய்யும் செயல்களின் மூலம்
                   பிறரை வருத்தப்பட வைப்பது

சமுதாயத்தில் ஒரு சிலர்
எப்பொழுதும் தன்னைப் பற்றியே
சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்
பிறருடைய சூழ்நிலையைப்
பற்றி அவர்கள் சிந்திப்பதே இல்லை
பிறர் எத்தகைய நிலையில் இருக்கிறார்
எத்தகைய இக்கட்டான
சூழ்நிலையில் இருக்கிறார்
எத்தகைய செயல்களைச் செய்து
கொண்டு இருக்கிறார்
எதனை சிந்தித்துக் கொண்டு
இருக்கிறார்
எத்தகைய வேலைகளை
செய்து கொண்டிருக்கிறார்
என்பதை அவர்கள்
சிந்திப்பதே இல்லை

தன்னுடைய வேலை முடிய வேண்டும்
மற்றவர்களைப் பற்றி
அவர்கள் கவலைப் படுவது இல்லை
தன்னுடைய வேலை முடிய வேண்டும்
அதற்கு என்ன செயல்களைச்
செய்ய வேண்டுமோ
அந்த செயல்களைச் செய்கின்றனர்

முதல் நபர் இரண்டாம் நபருக்கு
போன் செய்கிறார்
முதல் நபர் தனக்கு உள்ள
பிரச்சினைகளை
இரண்டாவது நபரிடம் சொல்ல ஆசைப்படுகிறார்
அவரிடம் இருந்து உதவியை எதிர்பார்த்துத்தான்
போன் செய்கிறார்
ஆனால், முதல் நபர் முக்கியமான ஒரு
செயலைச் செய்து கொண்டிருக்கிறார்
சிந்தனையில் இருக்கிறார்
மனக்குழப்பதில் இருக்கிறார்
தனது வேலை சம்பந்தமாக
தான் செய்யும் வேலை சம்பந்தமாக
இரண்டு மூன்று நபர்களிடமிருந்து
போன் கால்களை
எதிர்பார்த்துக்
காத்துக் கொண்டிருக்கிறார்

அதனால்
முதல் நபர் போன் செய்யும் போது
இரண்டாம் நபர் போன் காலை
எடுக்கவில்லை
இரண்டு மூன்று முறை
முதல் நபர்
இரண்டாம் நபருக்கு போன் செய்கிறார்
பிறகு பேசிக்கொள்ளலாம் என்று
இரண்டாம் நபர்
போன் எடுக்கவில்லை

அதனால் முதல் நபர்
தன்னுடைய வேலை
முடிய வேண்டும் என்பதற்காக
சுய சிந்தனை இல்லாமல்
தொடர்ந்து போன் செய்து கொண்டிருக்கிறார்

முதல் நபர்
இரண்டாவது நபரைப் பற்றிக் கவலைப்படாமல்
இரண்டாவது நபர்
எந்த வேலை செய்து கொண்டிருக்கிறார்
என்று கவலைப்படாமல்
இரண்டாவது நபர் எந்த நிலையில்
இருப்பாரோ
இரண்டாவது நபர்
எந்த வேலை செய்து கொண்டிருப்பாரோ
என்பதை நினைத்துக் கூட பார்க்காமல்
தன்னைப் பற்றி மட்டுமே
நினைத்துக் கொண்டு
தொடர்ந்து  முதல் நபர்
இரண்டாவது நபருக்கு போன்
செய்து கொண்டிருக்கிறார்

இரண்டாவது நபரும்
வேலையின் காரணமாக
போனை எடுக்க வில்லை
பேசவில்லை
அதனால் இரண்டாம் நபர்
வேறு ஒரு நம்பரில் இருந்து
போன் செய்கிறார்
முதல் நபர் இரண்டாம் நபருக்கு
தெரியாத ஒரு நம்பரிலிருந்து
போன் செய்கிறார்.

வேறு ஒரு போனுக்காக
காத்துக் கொண்டிருந்த
இரண்டாம் நபர்
முதல் நபர் அடித்த போன்காலை எடுக்கிறார்
முதல் நபர் தான் போனில் இருக்கிறார்
முதல் நபர் தான் போனில் பேசுகிறார்
என்பதை தெரிந்து கொண்ட
இரண்டாம் நபர்
நாம் வேலையில் இருக்கிறேன்
பிறகு வேலை முடித்தவுடன்
பேசுகிறேன்
இப்போது நான் வேலையில்
பிசியாக இருக்கிறேன்
என்று போனை
வைத்து விடவா என்கிறார்.

ஆனால் அதை தவறாக
புரிந்து கொண்ட
முதல் நபர்
இரண்டாவது நபரிடம்
நான் ரொம்ப நேரமாக
போன் செய்து
கொண்டிருக்கிறேன்
உன்னை தொடர்பு கொள்ள முயற்சி
செய்து கொண்டிருக்கிறேன்
ஒரு விஷயத்தை சொல்ல
போன் செய்து கொண்டிருக்கிறேன்
முக்கியமான விஷயத்திற்காக
போன் செய்து கொண்டிருக்கிறேன்
நீ எடுக்க வில்லை
என் நம்பர் போட்டேன்
நீ எடுக்கவில்லை
ஆனால் வேறு நம்பரிலிருந்து
போன் போட்டேன் நீ எடுக்கிறாய்
என் நம்பர் என்றால்
எடுக்க மாட்டாயா
என்று கோபித்துக் கொள்கிறார்

அதோடு நிறுத்தாமல்
தெரிந்த நபர் எல்லோரிடமும் சொல்லி
முதல் நபர்
இரண்டாம் நபரை குறை சொல்கிறார்
இதுதான்
பிறருடைய நிலை தெரியாமல்
பிறருடைய சூழ்நிலை புரியாமல்
பிறரை வார்த்தையால் வருத்தப்பட
வைப்பது ஆகும்.

இது தான் வார்த்தையின் மூலம்
பிறரை மனம் வருத்தப்பட
வைப்பது ஆகும்

முதல் நபர்,
இரண்டாம் நபர்,
மூன்றாம் நபர்,
என்று மூன்று
நபர்களை எடுத்துக் கொள்வோம்
மூன்று நபர்களும்
ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள்
நண்பர்கள்.

முதல் நபர் இரண்டாம் நபரிடம்
சொல்கிறார்
மூன்றாம் நபர் நல்லவரில்லை
அவரிடம் நல்ல பழக்கவழக்கங்கள் இல்லை
நல்ல எண்ணம் இல்லை
நல்லது செய்வதில்லை
கெட்டதை நினைக்கிறார்
கெட்டதை செய்கிறார்
கெட்டவர்களிடம் நட்பு கொண்டு இருக்கிறார்
எனவே, அவரிடம்
பழகாதீர்கள் அவரிடம் போகாதீர்கள்
அவரிடம் பேசாதீர்கள்
அவரிடம் பழக்கம் வைத்துக் கொள்ளாதீர்கள்
அவரிடம் நட்பு வைத்துக் கொள்ளாதீர்கள்
என்று சொல்கிறார்
ஆனால், இரண்டாம் நபர்
சொன்னதை முதல் நபர்
எடுத்துக் கொள்ளவில்லை

முதல் நபர்
இரண்டாம் நபர் சொன்னதை
எடுத்துக் கொள்ளாமல்
வழக்கம் போல்
மூன்றாம் நபரிடம்
பேசிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் சில நாட்கள் கழித்து
(அல்லது)
சில மாதங்கள் கழித்து
(அல்லது)
சில வருடங்கள் கழித்து
முதல் நபர்
இரண்டாம் நபரை விட்டு விட்டு
முதல் நபர்
மூன்றாம் நபரிடம் சென்று
சேர்ந்து விடுகிறார்

முதல் நபர்
மூன்றாம் நபர் ஆகிய இருவரும்
ஒன்றாக இருக்கிறார்கள்
இரண்டாம் நபர் தனியாகி விடுகிறார்
தனிமையில் விடப்படுகிறார்.

முதல் நபர், மூன்றாம் நபர்
ஆகிய இருவரும்
ஒன்றாக இணைந்திருக்கிறார்கள் என்பது
இரண்டாவது நபருக்கு தெரியும்

ஆனால் முதல் நபர்
இரண்டாம் நபரிடம்
மூன்றாம் நபரைப் பற்றி
தரக்குறைவாக பேசினார்
இழிவாகப் பேசினார் என்பது
மூன்றாம் நபருக்கு
தெரியாது

முதல் நபர்
இரண்டாம் நபரிடம்
மூன்றாம் நபரைப் பற்றி
தரக்குறைவாகப் பேசினார் என்பதை
இரண்டாம் நபர்
மூன்றாம் நபரிடம்
சொல்லவில்லை
இரண்டாம் நபர் பெருந்தன்மையாக
நடந்து கொண்டார்

முதல் நபர்
மூன்றாம் நபரைப் பற்றி
இரண்டாம் நபரிடம்
தவறாக பேசியதை
இரண்டாம் நபர்
மூன்றாம் நபரிடம்
சொல்லாத காரணத்தினால்
மூனறாம் நபர்
முதல் நபர்
தன்னைப் பற்றி தவறாக
பேசியது தெரியாத காரணத்தினால்
மூன்றாம் நபர்
முதல் நபருடன் நட்பு வைத்துக்
கொண்டார்

முதல் நபர்
இரண்டாம் நபரை விட்டு விட்டு
வந்து விட்டார் என்பது
மூன்றாம் நபருக்கு தெரிந்து இருந்தும் கூட
மூன்றாம் நபர்
இரணடாம் நபரிடம் சொல்லாமல்
முதல் நபரிடம் நட்பை
வளர்த்துக் கொண்டார்

இரண்டாம் நபர் மன வேதனைப்பட்டு
முதல் நபர் தன்னிடம் காரியம்
முடிந்தவுடன்
தன்னிடம் நடக்க வேண்டிய
வேலைகள் முடிந்தவுடன்
தன்னை விட்டு சென்று விட்டார்
என்று மன வேதனைப் பட்டார்.

முதல் நபர்
மூன்றாம் நபரைப் பற்றி
தவறாக பேசி விட்டு
மூன்றாம் நபரைப் பற்றி
இழிவாக பேசி விட்டு
மூன்றாம் நபரிடம் பேசாதீர்கள்
என்று சொல்லிவிட்டு
மூன்றாம் நபரிடம் பழகாதீர்கள்
என்று சொல்லிவிட்டு
மூன்றாம் நபரைப் பற்றி
தரக்குறைவாக பேசிவிட்டு
மூன்றாம் நபரிடம் நட்பு கொண்டிருக்கிறார்
என்றால்
அவர் ஏதோ ஒரு காரியம் ஆக வேண்டும்
என்று நட்பு கொண்டிருக்கிறார்
என்று இரண்டாம் நபர் நினைக்கிறார்


இரண்டாம் நபர்
முதல் நபர் தன்னிடம்
ஏதோ காரியம் ஆக வேண்டும் என்று
ஏதோ ஒரு வேலை முடிய வேண்டும்
என்று தன்னுடன் இருந்தார்
இப்பொழுது பிரிந்து சென்றார்
அதுவும் யாரைப் பற்றி
குறை சொன்னாரோ
யாரைப்பற்றி இழிவாகப் பேசினாரோ
யாரைப்பற்றி தவறாகப் பேசினாரோ
யாருடன் சேர வேண்டாம்
என்று சொன்னாரோ
அவரிடம் சென்று சேர்ந்து விட்டார்
என்று வருத்தப்படுகிறார்

இது தான்
பிறருடைய நிலை தெரியாமல்
ஒருவரை செயலின் மூலம்
வருத்தப்பட வைப்பது ஆகும்

இது தான் செய்யும் செயல்களின் மூலம்
பிறரை வருத்தப்பட வைப்பது
ஆகும்

இப்படித் தான் கல்யாணத்திற்கு
அழைக்கப்பட்டவர்களின்
செயலும் இருந்தது

அதாவது செய்யும்
செயல்களின் மூலம்
பிறரை வருத்தப்பட
வைப்பது ஆகும்.
     
           ---------இதன் தொடர்ச்சி
          இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-பிறவிப்-பதிவு-82-(3)
                  ------------பார்க்கவும், படிக்கவும்