April 01, 2018

இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-பிறவிப்-பதிவு-82-(5)



இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-பிறவிப்-பதிவு-82-(5)

         """"பதிவு எண்பத்துஇரண்டை விரித்துச் சொல்ல
              ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்""""

திருவள்ளுவர்:

“”’”ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்
தன் பிள்ளை தானே வளரும் “”””””

என்பதற்கு
பல்வேறு விதமான அர்த்தங்கள்
சொல்லப்பட்டு வருகிறது

இந்தப் பழமொழி திருக்குறளுடன்
நெருங்கிய தொடர்புடைய
ஒரு திருக்குறளை
அடிப்படையாகக் கொண்டது
அதாவது,
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்
தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்
என்பதின் அர்த்தத்துடன் தொடர்புடையது
அந்த அர்த்தத்தையும் தாங்கி வருவது
பிறருக்கு நாம் என்ன செய்கிறோமா
அதாவது நன்மை செய்தால் நன்மையும்
தீமை செய்தால் தீமையும்
வந்து சேரும் என்பதை
இத்திருக்குறள்
விளக்குகிறது

அதைப்போலத் தான்
இப்பழமொழியும் விளக்குகிறது

உலகில் உள்ள அனைத்து பிள்ளைகளும்
பிறருடைய பிள்ளைகள் தான்
அதாவது இன்னொருவர்
பெற்றெடுத்த பிள்ளை
அதைத்தான் நாம்
ஊரான் பிள்ளை என்கிறோம்
ஊரான் பிள்ளை என்றால்
தன் பிள்ளை இல்லை
இன்னொருவர் பெற்றெடுத்த பிள்ளை

நாம் ஆசிரியராக இருக்கிறோம்
ஓர் ஏழை மாணவன்
படிப்பதற்கு கஷ்டப்படும் மாணவன்
ஏழ்மையில் கஷ்டப்படும் மாணவன்
ஆனால் நன்றாக படிக்கக் கூடிய மாணவன்
நல்ல திறமைசாலி
நல்ல அறிவாளி
நல்ல உழைப்பாளி
கஷ்டப்படும்
அந்த மாணவன்
நம்மிடம் வந்து ஐயா
எனக்கு பாடத்தில் ஏற்பட்டால்
சொல்லித் தர யாரும் இல்லை
நீங்கள் சொல்லித் தந்தால்
எனக்கு நன்றாக இருக்கும்
தாங்கள் எனக்கு இந்த உதவியை
செய்தால் நன்றாக இருக்கும்

எங்கள் வீட்டில் படித்தவர்கள்
யாரும் இல்லை
நான் தான் படிக்கிறேன்
என் பெற்றோர்களுக்கு
படிப்பைப் பற்றி அவ்வளவாக
தெரியாது

என் சொந்தக் காரர்களும்
அவ்வளவாக படித்தவர்கள் இல்லை
எனக்கு தெரிந்தவர்கள் யாரும்
என் சந்தேகத்தை தீர்க்க
மாட்டேன் என்கிறார்கள்
டியூஷன் சேர்ந்தால் சந்தேகத்தை
தீர்த்துக் கொள்ளலாம் என்கிறார்கள்
எனக்கு டியூஷன் வைத்து
படிக்கும் அளவிற்கு
பண வசதி இல்லை
என் சந்தேகத்தை
தாங்கள் தீர்த்தால்
எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்
என்று நம்மிடையே வந்து
உதவிகள் கேட்கிறான்

நமக்கு பள்ளியிலேயே
நிறைய வேலை
வீட்டிற்கு வந்தால்
ஓய்வு எடுக்கவும்
வீட்டு வேலை செய்வதற்கு
மட்டும் தான் வேலை இருக்கிறது
அதனால் தம்பி எனக்கு
அதிக வேலை இருந்தாலும்
நான் உனக்கு சொல்லித் தருகிறேன்
உனக்கு எப்பொழுதெல்லாம்
சந்தேகம் வருகிறதோ
அப்பொழுதெல்லாம் என்னை வந்து பார்
நான் உன் சந்தேகங்களை தீர்க்கிறேன்
என்று சொல்கிறோம்

ஏழை மாணவன் நம்மால்
இயன்ற உதவி செய்வோம்
படித்து நன்றாக வந்தால்
அவன் குடும்பத்திற்கு நல்லது தானே
அவன் குடும்பத்தை பார்த்துக் கொள்வான்
என்று
அவனுக்கு நாம்
உதவி செய்கிறோம்

அவனுக்கு உதவி செய்வதால்
ஒரு குடும்பம் வாழும்
ஒரு குடும்பத்தை வாழ வைத்த
சந்தோஷம் கிடைக்கும்
அவன் ஒரு நல்ல வேலை கிடைத்து
சென்று விட்டால்
ஒரு குடும்பம் வாழும்
என்ற நினைப்பில் நாம்
உதவி செய்கிறோம்

நம் கஷ்டங்களைக் கூட பார்க்காமல்
நம் துயரங்களைக் கூட பார்க்காமல்
நாம் உதவி செய்கிறோம்

இவனுக்கு உதவி செய்வதால்
நமக்கு என்ன லாபம்
என்று பார்க்காமல்
ஏழை என்று புறக்கணிக்காமல்
ஏழை என்று உதாசீனப்படுத்தாமல்
இவனுக்கு உதவி செய்வதால்
நமக்கு ஒரு லாபமும் இல்லை
என்று நினைத்து
உதவி செய்யாமல்
பணக்கார பையனாக இருந்தால்
அவர் தந்தையின் மூலமாக
நமக்கு உதவி வரும்
இவனுக்கு உதவி செய்வதால்
நமக்கு ஒன்றும் கிடைக்காது
என்று நினைக்காமல்
உதவி செய்ய வேண்டும்

இது தான் ஊரார் பிள்ளையை
ஊட்டி வளர்ப்பது
ஊரார் பிள்ளையை
ஊட்டி வளர்ப்பது என்றால்
ஊரார் பிள்ளைகளின்
கஷ்டத்தை உணர்ந்து
அவர்கள் வாழ்வில்
நல்ல நிலையை அடைவதற்கு
தேவையான உதவிகளைச்
செய்வது என்று பொருள்

நாம் பாவம் செய்தால்
பாவம் கிடைக்கும்
புண்ணியம் செய்தால்
புண்ணியம் கிடைக்கும்
நாம் பிறருக்கு என்ன செய்கிறோமோ
அது நமக்கு அப்படியே கிடைக்கும்
நாம் எத்தகைய செயல்களைச் செய்கிறோமோ
அந்த செயலுக்குரிய விளைவுகள்
தான் கிடைக்கும்
அந்த விளைவுகளை
நாம் அனுபவித்துத் தான் ஆக வேண்டும்
வினைக்குரிய விளைவுகளிலிருந்து
நாம் தப்ப முடியாது
நாம் நல்ல செயல்களைச் செய்தால்
நல்ல விளைவுகள் கிடைக்கும்
நாம் தீய செயல்களைச் செய்தால்
தீய விளைவுகள் கிடைக்கும்
நாம் எத்தகைய
செயல்களைச் செய்தோமோ
அந்த செயல்களுக்குரிய
விளைவுகள் தான் கிடைக்கும்

அது மட்டுமல்ல
நாம் சொத்து சேர்த்து வைத்திருக்கிறோம்
மகன்கள் அந்த சொத்தை
வைத்துக் கொண்டு
சந்தோஷமாக இருப்பார்கள்
எப்படி சொத்து சேர்த்து வைத்தால்
பிள்ளைகளுக்கு பயன் படுமோ
அது போல்
நாம்  செய்து வைக்கும்
பாவம் புண்ணியங்களுக்கு
ஏற்றபடி
விளைவுகள் கிடைக்கும்
பயன்கள் கிடைக்கும்
பலன்கள் கிடைக்கும்

ஊரார் பிள்ளையை
ஊட்டி வளர்ப்பது என்றால்,
ஊரார் பிள்ளைகளின்
கஷ்டத்தை உணர்ந்து
அவர்கள் வாழ்வில் நல்ல
நிலையை அடைவதற்கு
தேவையான உதவிகளைச்
செய்வது என்று பொருள்

அவ்வாறு
நாம் நல்ல செயல்களைச்
செய்தோமேயாகில்
நாம் செய்த
அந்த புண்ணியத்தின் பயனால்
நம் பிள்ளைகள்
அந்த புண்ணியத்தால்
நன்றாக இருக்கும் என்பது தான்
தன் பிள்ளைகள் தானே வளரும்
என்பதற்கான பொருள்

ஊரார் பிள்ளையை
ஊட்டி வளர்த்தால்
தன் பிள்ளை தானே வளரும்
என்பதற்கு பொருள்
ஊரார் பிள்ளைகளின்
கஷ்டத்தை உணர்ந்து
அவர்கள் வாழ்வில்
நல்ல நிலையை அடைவதற்கு
தேவையான உதவிகளைச் செய்தால்
செய்தவருடைய பிள்ளைகள்
அந்த புண்ணியத்தால்
புண்ணியம் செய்தவருடைய
பிள்ளைகளின்  வாழ்க்கை
நன்றாக  இருக்கும்
என்று  பொருள்



“””””கொன்றால் பாவம்
   தின்றால் போகும்”””””

மனிதனுக்கு ஆறு வகை
குணங்கள் உண்டு
அவை காம, குரோத,
லோப, மோக,மத,மாச்சரியம்
அதாவது
பேராசை, சினம், கடும்பற்று,
முறையற்ற பால் கவர்ச்சி,
உயர்வு தாழ்வு மனப்பான்மை,
வஞ்சம்
இந்த ஆறுவகை குணங்களினால்
மனிதன் ஐந்து வகை
பஞ்சமா பாகங்களான
பொய், சூது, கொலை, கொள்ளை
கற்புநெறி பிறழ்தல்
ஆகியவற்றை
அறியாமை, அலட்சியம்,
உணர்ச்சி வயப்படுதல்
ஆகியவைகளின்
மூலம் செய்கிறான்
இதனால் பாவம் என்பது
ஏற்படுகிறது.

பாவத்திற்கும், புண்ணியத்திற்கும்
சிறிதளவு வேறுபாடு மட்டுமே உண்டு
பாவம் இல்லாத செயல் புண்ணியம்
புண்ணியம் இல்லாத செயல் பாவம்

ஒரு உயிரைக் கொல்வது
மட்டும் பாவம் அல்ல
நாம் செய்யக் கூடிய
செயல்களில் புண்ணியத்தை
உண்டு பண்ணாத செயல்கள்
அனைத்தும் பாவம்
அதாவது
நீதிக்கும், நேர்மைக்கும்,
தர்மத்திற்கும், ஒழுக்கத்திற்கும்
மாறுபட்டு செயயப்படும்
செயல்கள்
புண்ணியத்தை கொன்று
செய்யப்படும் செயல்கள்
அனைத்தும்
பாவம்

இது தான்
கொன்றால் பாவம்
அதாவது
நீதியையும், நேர்மையையும்,
நியாயத்தையும், தர்மத்தையும்,
ஒழுக்கத்தையும்
கொன்று செய்யப்படும்
செயல்களால் ஏற்படக்கூடிய
செயல்கள்
கொன்றால் பாவம்

பாவத்தின் செயல்கள்
ஏற்படக்கூடிய
பிறவியினால்
பல்வேறு துன்பங்கள்
ஏற்படக் காரணமாகி
இருக்கின்றன.

இத்தகைய பாவங்களைக்
கழிக்க வேண்டுமானால்
அதாவது எரிக்க வேண்டுமானால்
அதற்கு
பல்வேறு முறைகள்
பின்பற்றப்படுகின்றன

மூச்சுப் பயிற்சி
பிராணாயாமம்
வாசிப்பயிற்சி போன்ற
முறைகள்
பின்பற்றப்படுகின்றன

மூச்சுப்பயிற்சி
மூச்சை உள்ளே இழுத்தால்
பூரகம்
மூச்சை உள்ளே இழுத்து
அடக்கி வைத்தால்
கும்பகம்
மூச்சை வெளியே விட்டால்
இரேசகம்
இந்த மூன்றின் மூலம்
மூச்சுப் பயிற்சி
செய்யப்படுகிறது

பிராணாயாமம்
இது ஒருவிதமான
மூச்சுப் பயிற்சி ஆகும்
மூச்சை உள்ளே
இழுக்கும் போது
8 அங்குலம் காற்று
உள்ளே செல்கிறது
மூச்சை வெளியே
விடும்போது 12 அங்குலம்
காற்று வெளியே
விடப்படுகிறது
வெளியே செல்லும்
அதிகப்படியான 4 அங்குல
காற்றை
வெளியே சென்று வீணாகாமல்
குறைத்து
வெளியே செல்லும் காற்றை
8 அங்குலமாக மாற்றி
தொடர்ந்து குறைதத்து
கொண்டே வர வேண்ம்
இது பிராணாயாமம்
ஆகும்

வாசி
வாசி என்பது
மூச்சுப் பயிற்சி அல்ல
அது வெளியே செல்லும்
காற்றை முறைப்படுத்தி
உள்ளுக்குள் நேராக மாற்றி
மூச்சு எங்கிருந்து தோன்றியதோ
அந்த இடத்திற்கே
திருப்பி அங்கே வைப்பது
வாசி

இந்த முக்கியமான மூன்று
நிலைகள் மட்டுமின்றி
பல்வேறு நிலைகள்
மூலமாக மட்டுமின்றி
தவத்தினாலும்
தவக்கனல் ஏற்படும்
தவக்கனலில் பாவங்கள் எரியும்

நெருப்பில் எந்த பொருளை
வைத்தாலும் எரித்து விடும்
விறகை போட போட
எவ்வளவு போட்டாலும்
அனைத்தையும் எரித்து விடக்
கூடியது நெருப்பு

நாம் தெரிந்து செய்த பாவங்கள்
நாம் தெரியாமல் செய்த பாவங்கள்
ஆகியவற்றை நினைத்து
நாம் பாவங்கள் செய்ததை
நினைத்து வருந்தி
நாம் பாவங்கள் செய்ததை
நினைத்து கவலைப்பட்டு
பாவங்களை கழிக்க வேண்டும்
என்பதற்காக
பாவங்களை எரிக்க வேண்டும்
என்பதற்காக
தவம்,
மூச்சுப் பயிற்சி.
பிராணாயாமம்,
வாசியோகம்
ஆகியவற்றைச் செய்யும் போது
ஏற்படக்கூடிய தவக்கனல் நெருப்பானது
பாவங்கள் அனைத்தையும் எரித்து விடும்
அதாவது பாவங்கள் அனைத்தையும்
தின்று விடும்.

கொன்றால் பாவம் என்றால்
நீதியையும், நியாயத்தையும்,
தர்மத்தையும் கொன்று
செய்யப்படும் செயல்கள்
அனைத்தும் பாவம்
இது தான் கொன்றால் பாவம்

தின்றால் போகும் என்றால்
தவம், பிராணாயாமம்,
வாசி போன்றவற்றால் ஏற்படக்கூடிய
தவக்கனலால்
பாவங்கள் தின்னப்பட்டு
அழிக்கப்படும்
இது தான் தின்றால் போகும்

இது தான் கொன்றால் பாவம்
தின்றால் போகும்
என்பதற்கான பொருள்.

நாம் வார்த்தைகளின்
அர்த்தத்தை தெரிந்து கொண்டோமேயாகில்
வாழ்க்கையைத் தெரிந்து கொள்ளலாம்

---------இதன் தொடர்ச்சி
         இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-பிறவிப்-பதிவு-82-(6)
------பார்க்கவும், படிக்கவும்



No comments:

Post a Comment