February 06, 2020

பரம்பொருள்-பதிவு-126


         பரம்பொருள்-பதிவு-126

கிருஷ்ணன் :
“நான் சொல்வதை
பொறுமையாகக்
கேள் உலூபி !”

“போரில் வெற்றி
பெற வேண்டும்
என்பதற்காக
துரியோதனன்
களப்பலி
கொடுப்பதற்காக
தகுந்த நாளையும் ;
களப்பலியாக
கொடுப்பதற்கு
சரியான ஆளையும் ;
தெரிந்து கொள்ள
வேண்டும் என்பதற்காக
சோதிட மேதை
சகாதேவனை
சந்தித்தான் ; “

“சோதிட மேதையான
சகாதேவனும்
களப்பலி கொடுப்பதற்கு
தகுந்த நாளாக வருகின்ற
அமாவாசை நாளையும் ;
களப்பலியாக கொடுப்பதற்கு
உகந்த ஆட்களில் ஒருவனாக
அரவானையும்; குறித்துக்
கொடுத்து விட்டான் “

“அதனால் துரியோதனன்
அரவானை சந்தித்து
தான் போரில்
வெற்றி பெறுவதற்காக
வருகின்ற அமாவாசை
தினத்தன்று தனக்காக
களப்பலியாக வேண்டும்
என்று அரவானை கேட்க
அரவானும் வருகின்ற
அமாவாசை தினத்தன்று
துரியோதனனுக்காக
களப்பலியாக
சம்மதித்து விட்டான் “

உலூபி :
“அரவான் ஏன்
இவ்வாறு செய்தான் “

கிருஷ்ணன் :
“பொறு உலூபி பொறு “

“முதலில் நான்
சொல்வதை
முழுமையாகக் கேள் “

“துரியோதனனுக்காக
அரவான்
களப்பலியாகி
துரியோதனன்
குருஷேத்திரப் போரில்
வெற்றி பெற்று
விட்டான் என்றால்
வருங்காலத்தில்
உலகம் இருள்
மயமானதாகி விடும் ;
அதற்கு காரணமான
அரவானையும்
வசைபாடக் கூடிய
நிலை ஏற்படும் ; “

“ஆனால்,
பாண்டவர்களுக்காக
அரவான்
களப்பலியாகி
பாண்டவர்கள் போரில்
வெற்றி பெற்று விட்டால்
வருங்கால உலகம்
ஒளிமயமானதாக
இருக்கும் ;
அரவானை தெய்வமாக
வணங்கக் கூடிய
நிலை ஏற்படும் ;
என்ற விஷயங்களை
எடுத்துச் சொல்லி
வருகின்ற அமாவாசை
தினத்தன்று
துரியோதனன் அரவானை
களப்பலியாகக் கேட்டு
வரவில்லை என்றால்
பாண்டவர்களுக்காக
களப்பலியாகிறாயா
என்று அரவானை
நான் கேட்டதற்கு
அரவானும் சரி
என்று சம்மதம்
தெரிவித்து விட்டான் “

“வருகின்ற அமாவாசை
தினத்தன்று
துரியோதனன்
களப்பலியாக
அரவானைக் கேட்டு
வரவில்லை என்றால்
பாண்டவர்கள் சார்பாக
அரவானை
களப்பலியாகக்
கொடுப்பதற்கு
உன்னிடம் ஒப்புதல்
பெறவே வந்தேன் “

உலூபி :
“நாட்டை ஆளும்
மன்னனின் மகன்
வந்து கேட்டார்
என்ற காரணத்தினால்
களப்பலியாவதற்கு
அரவான் சரி
என்று சொன்னது
தவறானது தான் “

“நடந்து விட்ட தவறை
நீங்கள் சரி செய்யாமல்
மேலும் ஒரு தவறை
நீங்களும் சேர்ந்து
செய்து இருக்கிறீர்கள் “

“அறியாதவர்கள் செய்த
தவறை அனைத்தும்
அறிந்த நீங்கள்
திருத்தியிருக்க
வேண்டும்  ;
ஆனால் நீங்களும்
அவர்கள் செய்த
தவறை திருத்தாமல்
அவர்களுடன்
சேர்ந்து நீங்களும்
தவறை செய்து
இருக்கிறீர்கள் ;”

“தவறை திருத்த
வேண்டிய - நீங்களே
தவறு செய்தால்
தவறை திருத்துவது யார் “

கிருஷ்ணன்  :
“தவறு செய்யத்
தூண்டியவன்
துரியோதனன் “

“தவறு செய்தவன்
அரவான் “

“தவறு நேர்ந்து
விடக்கூடாது
என்பதற்காக அதை
மாற்றி அமைக்க
முயற்சி செய்தவன் நான் “

“தவறு செய்த
துரியோதனன் , அரவான்
ஆகியோர்களை விட்டு
விட்டு நல்லது
செய்வதற்கு முயற்சி
செய்த என்னை
தவறு செய்தவன்
என்கிறாய் “

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
------------ 06-02-2020
//////////////////////////////////////////