February 20, 2012

இயேசு கிறிஸ்து - அழுகுணிச் சித்தர்-ஊற்றைச்- பதிவு-13





      இயேசு கிறிஸ்து-அழுகுணிச் சித்தர்-பதிவு-13
      
                    “”பதிவு பதிமூன்றை விரித்துச் சொல்ல
                                                 ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :
இயேசு மறுபடியும் பிறத்தல் என்பதைப் பற்றி , அவற்றைப் பற்றி விளக்கமாக கீழ்க்கண்ட வசனங்கள் மூலம் விளக்குகிறார்:

இயேசு நிக்கொதேமுவிடம் மறுபடியும் பிறத்தல் பற்றி பேசுகிறார்:

வசனம் - 1:
ஒருவன் மறுபடியும் பிறவா விட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காண மாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்கிறேன் என்றார்.”
                                                                                ------யோவான்-3:3

நம்முடைய பாவங்கள் அனைத்தும் கழிக்கப்பட்டால் ,
நம்முடைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டால் ,
கடவுள் நம்முடைய பாவங்களை ஏற்றுக் கொண்டு
மன்னித்து நம்மை ஏற்றுக் கொண்டால் ,
கடவுளுடைய குழந்தையாக நம்மை ஏற்றுக் கொண்டால் ,
நாம் புதியதாகப் பிறப்பு எடுத்தவர்களாவோம் ;
அதாவது புதியதாகப் பிறந்தவர்களாவோம் ;
அதையே மறுபடியும் பிறத்தல் என்ற வார்த்தையின்
மூலம் குறிப்பிடுகிறார்  இயேசு .

இவ்வாறு ஒருவன் ஒரு மனுஷன்
கடவுளுடைய ஆசி பெற்று மறுபடியும் பிறந்தால் மட்டுமே ,
கடவுளுடைய ராஜ்யத்தைக் காண்பான் .
இவ்வாறு ஒருவன் மறுபடியும் பிறக்காவிட்டால்
கடவுளுடைய ராஜ்யத்தைக் காண மாட்டான் .
என்பதை உண்மையாக உனக்குச் சொல்கிறேன் ;
சத்தியமாக உனக்குச் சொல்கிறேன் ;
மெய்யாக உனக்குச் சொல்கிறேன் ;
என்று நிக்கொதேமுவிடம் கூறுகிறார்  இயேசு .



வசனம்-2 :
இயேசு சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரிந்து கொள்ளாத ,
உண்மை உணர முடியாத ,
விளக்கம் பெற முடியாத ,
அறிவு தெளிவு பெறாத ,
யோசிக்கும் நிலையில் இல்லாத ,
நிக்கொதேமு ,

அதற்கு நிக்கொதேமு : ஒரு மனுஷன் முதிர்  வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக் கூடுமோ என்றான்.
                                                                                -----யோவான்-3:4

இயேசுவின் வசனத்தின் வார்த்தைகளின்
அர்த்தத்தை தவறாக புரிந்து கொண்டு
சிந்தனை தடுமாறி ,
குழப்பத்தில் தள்ளப்பட்டு ,
அறியாமையில் உழன்று ,
மறுபடியும் பிறத்தல் என்றால்
இரண்டு முறை தாயின் வயிற்றில் பிறக்க
வேண்டும் என்று புரிந்து கொண்டு ,
தவறாக அர்த்தம்  எடுத்துக் கொண்டு ,
ஒரு மனுஷன் வயதாகி விட்டால் மீண்டும் எப்படி பிறக்க முடியும் ?

மேலும் அவன் தன்னுடைய தாயின் கர்ப்பத்தில்
இரண்டாவது தடவையாக உட்பிரவேசித்து
எப்படி பிறக்க முடியும் என்று கேட்கிறார் .



வசனம்-3 :
மறுபடியும் பிறத்தல் என்பதைப் பற்றி விளக்கம் தந்த
இயேசுவின் வார்த்தைகளை தவறாக புரிந்து கொண்ட
நிக்கொதேமுவின் வார்த்தைகளுக்கு 

எவ்வாறு மறுபடியும் பிறக்க வேண்டும் என்பதைப் பற்றியும் ,
மறுபடியும் பிறப்பதன் பலன் என்ன என்பதைப் பற்றி இயேசு விளக்கம் தருகிறார் .

இயேசு பிரதியுத்தரமாக : ஒருவன் ஜலத்தினாலும் , ஆவியினாலும் பிறவா விட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்கிறேன்.
                                                                                --------யோவான்-3:5

ஒருவன் நீரினாலும் , ஆவியினாலும் மறுபடியும் பிறந்தால்
தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பான்
ஒருவன் நீரினாலும் , ஆவியினாலும் மறுபடியும் பிறவா விட்டால்
தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான் ,
என்று உண்மையாக உனக்குச் செல்கிறேன் என்றார் .

இதனால் தான் மனுஷனுடைய
பாவங்கள் மன்னிக்கப் பட்டு ,
கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டு ,
கடவுளால் ஏற்றுக் கொள்ளப்பட்டு ,
மறுபடியும் பிறத்தல் என்பற்கு அடையாளமாக
ஜலத்தினாலும் , ஆவியினாலும்
ஏற்றுக் கொள்ளப்படும் முறை கடை பிடிக்கப் பட்டு
நடை முறையில் பயன் படுத்தப் பட்டு வருகிறது .

ஒருவன் தன் பாவங்களை நீக்கி மறுபடியும் பிறந்தால் மட்டுமே
தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியும் என்கிறார்  இயேசு .



அழுகுணிச் சித்தர் :
               “”””ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
                     மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
                     மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால்
                     ஊற்றைச் சடலம்விட்டே என்கண்ணம்மா
                                           ஊன்பாதஞ் சேரேனோ””””
                                                                           -------அழுகுணிச் சித்தர்-------

                              “ ஊற்றைச் சடலமடி
உடலில் உயிர்  இருக்கும் வரை தான் உடலுக்கு உடல் என்று பெயர் .
உடலை விட்டு உயிர்  பிரிந்தால் பிணம் என்று பெயர் .

உடலை விட்டு உயிர்  பிரிந்தால்
ஒரு சில மணி நேரங்களிலேயே நாற்றமடிக்கிறது ;
புதைத்தால் அரிக்கப்படுகிறது ;
எரித்தால் சாம்பலாகிறது ;

உயிர்  உடலில் இருக்கும் வரை
என்ன செயல்களை செய்யக் கூடாதோ அத்தனையும் செய்யும் மனிதன்
உயிர்  உடலை விட்டுப் பிரிந்தால் ஒன்றுக்கும் உதவாத பிணம் .



                               “உப்பிருந்த பாண்டமடி
பாண்டம் என்றால் பாத்திரம் என்று பொருள் .
பாண்டம் என்றால் பெரும்பாலும் மண்ணால் செய்யப் பட்ட பாத்திரம் என்று பெரும்பாலும் பொருள் கொள்ளப்படுகிறது .

உப்பு வைக்கப் பட்ட பாத்திரமானது
அரிக்கப்படும் தன்மையை அடைகிறது ;
அழிந்து விடுவதற்குரிய நிலையை எட்டி விடுகிறது ;


பாண்டம் எனப்படுகிற பாத்திரம்  நமது உடலையும் ,
உப்பு என்பது நமது கர்ம வினைப் பதிவுகளையும் குறிக்கிறது .


பாத்திரமாகிற நமது உடலில்
உப்பாகிய கர்ம வினை
இருக்கின்ற காரணத்தினால் தான்
நமது உடல்
ஜென்மம் ஜென்மமாக பிறப்பெடுப்பதற்கும் ;
பிறப்பு - இறப்பு சுழற்சியில் சிக்குவதற்கும் ;
துன்பச் சகதியில் சிக்குண்டு வருந்துவதற்கும் ;
காரணமாக அமைகின்றது ;
அடிப்படையாக இருக்கின்றது ;
ஆதாரமாக இருக்கின்றது ;
மூலமாக இருக்கின்றது ;



                    “ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
உயிரில் பதிந்துள்ள கர்மவினைப் பதிவுகளே
மனிதன் என்னும் பிறப்பெடுத்து ,
ஜென்மம் - ஜென்மமாக , பிறப்பு - இறப்பு என்ற வாழ்க்கைச் சூழலில் சிக்கி ,
துன்பங்கள் , துயரங்கள் , கவலைகள் உன்ற சகதியில் மாட்டி ,
உறவினர்கள் , சுற்றத்தார் , குடும்பத்தார்  என்ற குடும்பச் சுமையைத் தாங்கி ,
சொல்ல முடியாத துன்பம் ,
வெளிக் காட்ட முடியாத மனம் ,
ஆகியவற்றில் மாட்டி
துயரக் கடலில் நீந்த வேண்டி இருக்கிறது .



            “””””மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை””””
மனிதனாகப் பிறப்பு எடுத்தால்
மனிதன் அடையத் தக்க எல்லா விதமான நிலைகளையும்
அடைய வேண்டி இருக்கிறது .

கர்ம வினைப் பதிவுகளை கழிக்கத் தெரியவில்லை ;
கர்ம வினைப் பதிவுகளால் ஏற்படும் பிறப்பை நிறுத்தத் தெரியவில்லை ;
பிறப்பு-இறப்பு என்ற சூழலை அறுக்கத் தெரியவில்லை ;
முக்தி என்னும் நிலையை அடையும் வழி தெரியவில்லை ;

முக்தி என்னும் நிலையை அடைவதற்கு
உரிய வழியை ஆராய்ந்து பார்த்தேன் .

அந்த நிலை அடைந்தவர்களையும் காண முடியவில்லை;
அந்த நிலை அடைந்தவர்களும் அதை சொல்லவில்லை;

அதை நான் தேடுகிறேன்,
தேடினேன் , தேடிக் கொண்டே இருக்கிறேன் .

முக்தி அடைவதற்கு உரிய வழிமுறைகள்
தெரியவும் இல்லை
கிடைக்கவும் இல்லை



               “””மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால்”””
கர்ம வினைகளைக் களைந்து ,
ஜென்மம் -ஜென்மங்களாக தொடர்ந்து வரும்
பிறப்பு-இறப்பு என்ற சுழற்சியை அறுத்து ,
முக்தி என்னும் நிலையை அடைந்து ,
மனிதன் என்னும் நிலை இறந்து ,
தானே அவனாக மாறும் நிலையைத் தான்
மாற்றிப் பிறத்தல்என்று வார்த்தையால்
குறிப்பிடுகிறோம் .

இவ்வாறு மாற்றிப் பிறந்தால் பிறந்து விட்டால்
புறப்பு-இறப்பு என்ற சுழற்சி கிடையாது .


மனிதனாகப் பிறந்தால்
கர்ம வினை உண்டு ,
பிறப்பு-இறப்பு என்ற சுழற்சி உண்டு ,
ஜென்மங்கள் உண்டு ,
இவையனைத்தும் உண்டு ,

இவையனைத்திலும் மாட்டிக் கொள்ளாமல் இருக்க
மனிதனாகப் பிறக்கும் பிறப்பை அறுத்து
புதிதாக பிறக்க வேண்டும் .
மனிதன் என்ற நிலையை மாற்றிப் பிறக்க வேண்டும் .

முக்தி என்ற நிலை அடைந்து தானே அவனாக மாறி பிறந்தால்
மட்டுமே மனிதப் பிறப்பை தடுக்க முடியும்

இவ்வாறு மாற்றிப் பிறப்பதற்கு உரிய வழி
எனக்குக் கிடைத்தால் என்ன செய்வேன் என்பதை கூறுகிறார்
அழுகுணிச் சித்தர் .



“””ஊற்றைச் சடலம் விட்டே என் கண்ணம்மா
                         உன்பாதஞ் சேரேனோ””
மாற்றிப் பிறப்பதற்கு உரிய வழி எனக்கு கிடைத்தால்
அதனுடைய ரகசியம் எனக்குத் தெரிந்தால்
அதனைப் பயன்படுத்தி ,
செயல்படுத்தி ,
பிறப்பு - இறப்பு அறுத்து ,
கர்ம வினைகளை களைந்து ,
இனி எடுக்கப் போகும் பல ஜென்மங்களை எரித்து ,
மனிதப் பிறவிகளை உடைத்து ,
இந்த உடலை விட்டு விட்டு
எல்லாம் வல்ல தெய்வீகத்துடன்
இறைநிலையுடன்
சுத்த வெளியுடன் கலந்து
அமைதி பெறுவேன் என்கிறார் அழுகுணிச் சித்தர் .



இயேசு கிறிஸ்து- அழுகுணிச் சித்தர் :
இயேசு , மறுபடியும் பிறந்தால் மட்டுமே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியும் என்றார் .

அவ்வாறே ,
அழுகுணிச் சித்தரும் , தான் மறுபடியும் பிறக்கும் ரகசியம் தெரிந்து கொண்டால் , அதை செயல்படுத்தி எல்லாம் வல்ல இறைநிலையுடன் இணைவேன் என்கிறார் .


                               “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                                   போற்றினேன் பதிவுபதிமூன் றுந்தான்முற்றே “”