October 22, 2016

1.இயேசு கிறிஸ்து-வால்மீகர்-சிவசிவா பதினென்பேர் -பதிவு-78(பாகம்-1)

1.இயேசு கிறிஸ்து-வால்மீகர்-சிவசிவா பதினென்பேர் -பதிவு-78(பாகம்-1)


""""பதிவு எழுபத்துஎட்டை விரித்துச் சொல்ல
ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்""""

இயேசு கிறிஸ்து:

"ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான்."
-------லூக்கா - 16 : 19

"லாசரு என்னும் பேர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து,"
-------லூக்கா - 16 : 20

"அவனுடைய மேஜையிலிருந்து விழுந் துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று"
-------லூக்கா - 16 : 21

"பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான்"
-------லூக்கா - 16 : 22

"பாதாளத்திலே அவன் வேதனைப் படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்துதூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்."
-------லூக்கா - 16 : 23

"அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப் பண்ணும்படி அவனை அனுப்ப வேண்டும்; இந்த அக்கினிஜுவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான்."
-------லூக்கா - 16 : 24



"அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப் படுகிறாய்"
-------லூக்கா - 16 : 25

"அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்பொருட்டு"
-------லூக்கா - 16 : 27

"நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்"
-------லூக்கா - 16 : 28

"ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவி கொடுக்கட்டும் என்றான்"
-------லூக்கா - 16 : 29

"அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றான்"
-------லூக்கா - 16 : 30

"அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார்."
-------லூக்கா - 16 : 31


ஐசுவரியம் நிறைந்த
ஒரு மனுஷன் அதிக மதிப்பு வாய்ந்த
ஆடை அணிந்து சந்தோஷமாக
வாழ்ந்து கொண்டிருந்தான்;
சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருந்தான்;
இன்பங்களை நுகர்ந்து கொண்டிருந்தான்;
மகிழ்வுகளை தரிசித்துக் கொண்டிருந்தான்;
சந்தோஷங்களை ரசித்துக் கொண்டிருந்தான்;
அதே சமயத்தில்,
லாசரு என்ற தரித்திரன் ஒருவன் இருந்தான்;
அவன் பருக்கள் நிறைந்தவனாய் இருந்தான்;
பார்க்க முடியாதவனாய் இருந்தான்
அருவெறுக்கத் தக்கவனாய் இருந்தான்;
விகாரமாய் இருந்தான்;
ஐசுவரியவான் மேஜையிலிருந்து
விழும் துணிக்கைகளாலே
தன் பசியை போக்குபவனாய் இருந்தான்
நாய்கள் அவன் பருக்களை
நக்கும் நிலையில் இருந்தான்.

ஐசுவரியவானும் மரித்தான்
லாசரும் மரித்தான்
லாசர் தேவதூதரால்  ஆபிரகாம்
மடியிலே போடப்பட்டான்;
ஐசுவரியவான் பாதாளத்தில் போடப்பட்டான்;

ஐசுவரியவான் பாதாளத்திலே
கஷ்டப்படுகிறபோது
வருத்தப் படுகிறபோது,
துன்பப் படுகிறபோது,
துயரப் படுகிறபோது,
லாசரு ஆபிரகாம் மடியிலே
இருப்பதைக் கண்டான்.

துன்பச் சகதியில் மாட்டிக் கொண்டிருக்கும்,
வேதனையில் வாடிக் கொண்டிருக்கும்,
வலியால் வேதனைப் பட்டுக் கொண்டிருக்கும்,
கஷ்டத்தால் வருத்தப் பட்டுக் கொண்டிருக்கும்,
ஐசுவரியவான் ஆபிரகாமை நோக்கி,
ஆபிரகாமே
நீர் எனக்காக இரங்க வேண்டும்
நீர் எனக்காக இரங்கி
லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து,
என் நாவைக் குளிரப் பண்ணும்படி
அவனை அனுப்ப வேண்டும்

இங்கே நான்
அதிக வேதனைப்படுகிறேன் என்றான்.
அதற்கு ஆபிரகாம்
மகனே
நீ பூமியில் உயிரோடிருக்கும் போது
நன்மைகளை அனுபவித்தாய்
லாசரு தீமைகளை அனுபவித்தான்.

இப்பொழுது இங்கே
லாசரு நன்மைகளை அனுபவிக்கிறான்
நீ தீமைகளை அனுபவிக்கிறாய்.

வாழும் காலத்தில்
நாம் நன்றாக இருக்கிறோம் என்பதற்காக,
நாம் சந்தோஷமாக இருக்கிறோம் என்பதற்காக,
நாம் நலமாக இருக்கிறோம் என்பதற்காக,
நாம் உயர்வாக இருக்கிறோம் என்பதற்காக,
நாம் இன்பங்களை நுகர்ந்து கொண்டு
இருக்கிறோம் என்பதற்காக,
நாம் மகிழ்ச்சிகளின் எல்லைகளை
பார்த்துக் கொண்டு இருக்கிறோம் என்பதற்காக,
நாம் துன்பமற்று இருக்கிறோம் என்பதற்காக,
நாம் கவலையற்று இருக்கிறோம் என்பதற்காக,

நம்மை விட தாழ் நிலையில் இருப்பவர்களை,
வாழ்விழந்து  இருப்பவர்களை,
பசியால் துடித்துக் கொண்டு இருப்பவர்களை,
திருமணம் ஆகவில்லை - என்று
கவலை கொண்டு இருப்பவர்களை,
வயதாகி விட்டது
சரியான வேலை கிடைக்கவில்லை - என்று
வருத்தப்பட்டுக் கொண்டிப்பவர்களை,
கடனில் தள்ளாடிக் கொண்டிருப்பவர்களை,
ஏமாற்றுக் காரர்களால் ஏமாற்றப்பட்டு
மனம் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களை - கண்டு
எள்ளி நகையாடாமல்,
ஏளனம் செய்யாமல்,
வருத்தப்பட வைக்காமல்,
கிண்டல் செய்யாமல்,
இருந்தாலே போதும்
உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை.
ஆனால்,
நாம் நன்றாக இருக்கிறோம் என்பதற்காக
மற்றவரை வருத்தப்பட வைப்பது
மிகப் பெரிய பாவம்.
நாம் நன்றாக இருக்கும் போது
நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை
தீமை செய்யாமல் இருந்தாலே போதும்.

ஐசுவரியவான் நன்றாக வாழும் காலத்தில்
நல்லதை செய்யாமல் இருந்த காரணத்தினால்
தீமைகளை செய்த காரணத்தினால்
பாழும் நரகத்தில் வீழ்ந்து தள்ளாடுகிறான்
பாவங்கள் எந்த நிலையிலும் உருவாகலாம்
தன் உழைப்பை
பிறர் மேல் திணிப்பவர்களை
பாவங்கள் செய்பவர்கள்
பட்டியலில் சேர்க்கலாம்.

தன் உழைப்பை பிறர் மேல் திணிப்பவர்களை
மூன்று நிலைகளில் பிரித்து விடலாம்

ஒன்று  :   வேலை தெரியாதவர்கள்
            வேலை   சொல்லிக்  கொடுத்தாலும்
                                       வேலை கற்றுக் கொள்ளும் அளவுக்கு தகுதி 
                 இல்லாதவர்கள்

இரண்டு:     வேலை தெரியாதவர்கள், வேலை
           சொல்லிக் கொடுத்தால்
                                      கற்றுக் கொள்ளும் தகுதி உண்டு
                                     ஆனால் கற்றுக் கொள்ள மாட்டார்கள்.

மூன்று :    தன்னுடைய வேலையும் தெரியும் பிறருடைய பிற
          வேலைகளும்  தெரியும் ஆனால் செய்ய மாட்டார்கள். 
        வேலை தெரியும். ஆனால், வேலை தெரியாதது மாதிரி 
        நடிப்பார்கள், வேலை சொல்லிக் கொடுத்தால் கற்றுக் 
        கொள்ளும் தகுதி உண்டு, ஆனால் வேலை சொல்லிக்     
        கொடுத்தால் வேலை கற்றுக் கொள்ள மாட்டார்கள்.   
        தன்னுடைய வேலைகளை பிறர் மேல் சுமத்தி விட்டு பிறர்              கால் பிடித்து சுற்றிக் கொண்டு வருவார்கள்.

முதல் நிலையில் உள்ளவர்கள்

தன்னுடைய உழைப்பை பிறர் மேல் திணிப்பவர்களில்
வேலை தெரியாதவர்கள்
தன்னுடைய வேலை தனக்கு தெரியாது - என்று
சொல்ல மாட்டார்கள்.
தன்னுடைய வேலை தனக்கு அருமையாகத் தெரியும் என்றும்,
தன்னுடைய வேலை தனக்கு விளக்கமாகத் தெரியும் என்றும்,
தன்னுடைய வேலையை தன்னைத் தவிர
வேறு யாராலும் செய்ய முடியாது என்றும்,
தன்னுடைய வேலையைச் செய்வதற்கு
திறமையான ஆள் இல்லை என்றும்,
தன்னுடைய வேலையை
தன்னைப் போல் யாரும்
திறமையாக செய்ய முடியாது என்றும்,
தன்னுடைய வேலையில்
தான் மட்டும் தான் சிறந்தவர் என்றும்,
பேசிக் கொண்டு திரிவர்;
சொல்லிக் கொண்டு திரிவர்;
வேலை செய்வது போல நடிப்பர்;

தான் மட்டுமே அந்த வேலையிலேயே
திறமைசாலி போலவும்,
தன்னை விட்டால் தன் வேலையை
செய்வதற்கு ஆள் இல்லை என்பது போலவும்,
ஊரெல்லாம் சொல்லி திரிவர்.

தான் மட்டுமே திறமையானவர் என்பதை
அனைவரும் அறிய வேண்டும் என்று
சொல்லிக் கொண்டு திரிவர்;
தன் புகழை அனைவரிடமும் பாடுவர்;
புகழ் தேடுவர்;
மரியாதை எதிர்ப்பார்ப்பர்;

இவர்களிடம் மற்ற வேலைகளைக் கொடுத்து
செய்யச் சொன்னால் செய்ய மாட்டார்கள்;
கற்றுக் கொடுக்கிறோம்;
சொல்லிக் கொடுக்கிறோம்;
கற்றுக் கொண்டு செய் என்று
சொன்னாலும் செய்ய மாட்டார்கள்.



மற்ற வேலைகளை கற்றுக் கொடுத்தாலும்
கற்றுக் கொள்ளும்
அறிவு அவர்களுக்கு கிடையாது.

மற்ற வேலைகளைக் கற்றுக் கொள்ளும்
அறிவு தனக்கு இல்லை என்பதை
வெளியில் காட்டிக் கொள்ளாமல்,

மற்ற வேலைகளை கற்றுக் கொள்ளும்
திறமை தனக்கு இல்லை என்பதை
வெளியில் காட்டிக் கொள்ளாமல்,

மற்ற வேலைகளை புரிந்து கொள்ளும்
திறமை தனக்கு இல்லை என்பதை
வெளியில் காட்டிக் கொள்ளாமல்,

மற்ற வேலைகளைக் கற்றுக் கொடுத்தாலும்
புரிந்து செய்யும் திறமை தனக்கு இல்லை
என்பதை வெளியில் காட்டிக் கொள்ளாமல்,

மற்ற வேலைகளைச் செய்து காட்டி
செய்யச் சொன்னாலும்
அதை புரிந்து செய்யும் திறமை
தனக்கு இல்லை என்பதை
வெளியில் காட்டிக் கொள்ளாமல்,

மற்ற வேலைகளை கூடவே இருந்து
செய்து காட்டி; செய்யச் சொல்லி;
செய்யச் சொன்னாலும் செய்யாமல்,
தனக்கு செய்ய முடியவில்லை என்பதை
வெளியில் காட்டிக் கொள்ளாமல்,

தனக்கு அதிகப்படியான வேலை இருக்கிறது;
தன்னுடைய வேலையே அதிகமாக இருக்கிறது;
தன்னுடைய வேலையை முடிக்க காலம் இல்லை
இந்த நிலையில்,


நான் எப்படி வேறு வேலைகளைக்
கற்றுக் கொண்டு வேலை செய்ய முடியும்
என்று கூறிக் கொண்டு
சும்மாவாகவே ஒரு வேலையை செய்து கொண்டிருப்பர்.

அந்த வேலை குறைந்தது
ஒரு 10 நிமிடத்தில் முடிக்கக் கூடிய
வேலையாக இருக்கும்
ஆனால் அதையே
திரும்ப  திரும்ப செய்து கொண்டிருப்பர்.

ஆனால் மற்ற வேலைகளைக் கற்றுக் கொண்டு
செய்யும் அளவுக்கு
தனக்கு திறமை இல்லை என்பதை
வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள்.

இத்தகையவர்கள்
எப்போதும் மற்ற வேலைகளைக்
கற்றுக் கொள்ள மாட்டார்கள்;
மற்ற வேலைகளைச் செய்ய முற்பட மாட்டார்கள்;
இதையெல்லாம் செய்வதற்கு
தனக்கு திறமை இல்லை என்பதை
வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள்;

இவர்கள் எப்போதும் யாருக்காகவாவது
அடிமையாகத் தான் இருப்பார்கள்;
இவர்களை அடிமைகள் என்று சொல்லாம்
யார் காலையாவது பிடித்துக் கொண்டு வாழும்
நிலையில் உள்ளவர்கள் இவர்கள்;
அதனால் பெரும்பாலான அலுவலகங்கள்
இத்தகையவர்களை,
சில குறிப்பிட்ட வேலைகளுக்கு அமர்த்தி
தன் பேச்சை கேட்க வைத்து
அடிமையாக வைத்து வேலை வாங்குகிறது.
இவர்களை சுருக்கமாக அடிமைகளாக இருக்கும்
சோம்பேறிகள் என்று சொல்லலாம்.


இரண்டாம் நிலையில் உள்ளவர்கள்:

முதல் நிலையில் உள்ளவர்கள்
சோம்பேறிகள் என்றால்
இரண்டாவது நிலையில்  உள்ளவர்கள்
குறுக்கு புத்தி உள்ளவர்கள்.

இவர்களுக்கு வேலை தெரியாது
ஆனால் வேலை கற்றுக் கொடுத்தால்
வேலை கற்றுக் கொள்வார்கள்
ஆனால் வேலை கற்றுக்கொள்ள மாட்டார்கள்.

முதல் நிலையில் உள்ளவர்களுக்கு
வேலை கற்றுக் கொடுத்தாலும்
அதை கற்றுக் கொண்டு
வேலை செய்வதற்கான  அறிவு
அவர்களுக்கு கிடையாது.
ஆனால்,
இரண்டாவது நிலையில் உள்ளவர்களுக்கு
வேலை கற்றுக் கொடுத்தால்
வேலை கற்றுக் கொண்டு வேலை செய்வார்கள்
ஆனால் வேலை கற்றுக் கொண்டு
வேலை செய்ய மாட்டார்கள்.

முதல் நிலையில் உள்ளவர்களுக்கு
அவர்கள் வேலையும் சரியாகத் தெரியாது
அவர்கள் வேலையிலேயே
திறமை இல்லாமல் இருப்பார்கள்.
தன்னுடைய வேலை தனக்கு தெரியாது
என்று காட்டிக் கொள்ள மாட்டார்கள்.
மற்ற வேலைகளைச் சொல்லிக் கொடுத்தாலும்
கற்றுக் கொண்டு செய்யக் கூடிய
திறமை தனக்கு இல்லை என்பதைக்
காட்டிக் கொள்ள மாட்டார்கள்.

ஆனால்,
இரண்டாம் நிலையில் உள்ளவர்களுக்கு
தன்னுடைய வேலை தெரியும்
தன்னுடைய வேலையை நன்றாகச் செய்வார்கள்;
தன்னுடைய வேலையில் திறம்படச் செய்வார்கள்;
தன்னுடைய வேலையில் சரியாகச் செய்வார்கள்;
தன்னுடைய வேலையில் கவனமாகச் செய்வார்கள்;
தன்னுடைய வேலையை
தவறு இல்லாமல் செய்வார்கள்;
தன்னுடைய வேலையை
எந்த வித பிழையும் இல்லாமல் செய்வார்கள்;
தன்னுடைய வேலையை
அற்புதமாகச் செய்து முடிப்பார்கள்;
தன்னுடைய வேலையில்
எந்தவித குற்றமும் குறையும்
இல்லாமல் செய்வார்கள்;
வேலையை நன்றாகச் செய்கிறாரே
மற்ற வேலைகளை கற்றுக் கொடுத்து
செய்யச் சொல்லலாம் என்று
கற்றுக் கொடுத்து செய்யச் சொன்னால்
செய்ய மாட்டார்கள்.

மற்ற வேலைகள்
தங்களுக்கு புரியாதது மாதிரி நடிப்பார்கள்;
மற்ற வேலைகள் புரியவில்லை என்ற சொல்வார்கள்;
மற்ற வேலைகள் தெரியவில்லை என்று சொல்வார்கள்;
மற்ற வேலைகளை புரிந்து கொள்வது
கடினமாக இருக்கிறது என்று சொல்வார்கள்;
மற்ற வேலைகள்  தன்னுடைய
அறிவுக்கு எட்டவில்லை
என்று சொல்வார்கள்;
மற்ற வேலைகள்
அறிவுக்கு அப்பாற்பட்டது என்று சொல்வார்கள்;
மற்ற வேலைகள் செய்வது கடினம்
என்று சொல்வார்கள்;
மற்ற வேலைகளை தவறாக
புரிந்து கொண்டு செய்யப்போகிறேன்
அதனால் கற்றுக் கொள்ள மாட்டேன்
என்பார்கள்;
மற்ற வேலைகளை தவறாக செய்து
தவறாக முடிந்து
இரண்டு வேலை வைத்து விடும் - எனவே
வேறு யாரையேனும் வேலை
தெரிந்தவர்களைச் செய்யச்
சொல்லுங்கள் என்பார்கள்.

தனக்கு தெரியாத
மற்ற வேலைகளைச் செய்வதால்
காலம் விரையம்;
நேரம் விரையம்;
உழைப்பு விரையம்;
வேலை சரியாக
முடியுமா? முடியாதா? தெரியாது
எனவே மற்ற வேலைகளைக்
கற்றுக் கொண்டு
வேலை செய்ய மாட்டேன்
என்று சொல்வார்கள்.

தன்னுடைய வேலையை மட்டும் செய்கிறேன்
மற்ற வேலைகளைச் செய்வதால்
ஏதேனும் தவறு நேர்ந்தால்
தான் அதற்கு பொறுப்பு இல்லை
என்று சொல்வார்கள்.

மற்ற வேலைகளை கற்றுக் கொண்டு
செய்யக் கூடிய திறமை அவர்களுக்கு
இருக்கும்,
ஆனால் கற்றுக் கொள்ள மாட்டார்கள்;
கற்றுக் கொண்டு செய்ய மாட்£ர்கள்;
கற்றுக் கொண்டு செய்ய
அவர்கள் விரும்ப மாட்டார்கள்;
எங்கே,
மற்ற வேலைகளைக்
கற்றுக் கொண்டு செய்தால் - தொடர்ந்து
அதே வேலையை
தன்னுடைய தலையில் கட்டி விடுவார்களோ;
அதே வேலையை தன்னை செய்யச் சொல்லி
தொந்தரவு செய்வார்களோ;
அதே வேலையை தொடர்ந்து
தன்னைச் செய்யச் சொல்வார்களோ;
அதே வேலையை தன்னுடைய வேலையாக
மாற்றி விடுவார்களோ;
அவருக்கு அந்த வேலை தெரிகிறது
எனவே அவரை
அந்த வேலையைச்
செய்யச் சொல்லாலாம் - என்று
தன்னை வேலை செய்யச் சொல்லி
வேலை கொடுத்து விடுவார்களோ - என்று
அச்சப்பட்டு,
தனக்கு அந்த வேலை தெரியாது என்றும்,
தனக்கு அந்த வேலையைக்
கற்றுக் கொள்ள அறிவு இல்லை என்றும்,
தான் அந்த வேலையை
கற்றுக் கொண்டு செய்யும் அளவிற்கு
தனக்கு திறமை இல்லை என்றும்,
மற்றவர்களை நம்பவைத்து
மற்ற வேலைகளைக் கற்றுக் கொள்ளாமல்
விலகி இருப்பர்;
தன் வேலையைத் தான் பார்ப்பர்;

முதல் நிலையில் உள்ளவர்களுக்கு
தன் வேலை தெரியாது
ஆனால் தன் வேலை தனக்கு தெரியாது
என்று காட்டிக் கொள்ள மாட்டார்கள்;
ம்ற்ற வேலைகளை கற்றுக் கொடுத்து
செய்யச் சொன்னாலும்
கற்றுக் கொண்டு செய்யும் அளவிற்கு
தனக்கு திறமை இல்லை  என்பதை
வெளியில் காட்டிக் கொள்ளாமல்
தனக்கு வேலை அதிகம் என்று நழுவி விடுவார்கள்;

இரண்டாம் நிலையில் உள்ளவர்களுக்கு
தன்னுடைய வேலை தெரியும்
மற்ற வேலைகளைக் கற்றுக் கொண்டு
செய்யக் கூடிய திறமை இருக்கும்
ஆனால் கற்றுக் கொள்ள மாட்டார்கள்;
மற்ற வேலைகளைச் செய்ய மாட்டார்கள்;
மற்ற வேலைகளைக் கற்றுக் கொண்டு
செய்யக் கூடிய அளவிற்கு
தனக்கு திறமை இல்லை என்பதை சொல்லி
நழுவி விடுவார்கள்;
எங்கே கற்றுக் கொண்டால்
அனைத்து வேலைகளையும்
தன் தலையில் கட்டி விடுவார்களோ - என்று
பயந்து தனக்கு
தன்னுடைய வேலை மட்டும் செய்யத் தெரியும்
மற்ற வேலைகளை கற்றுக் கொண்டு
செய்யக் கூடிய திறமை
தனக்கு இல்லை என்பதை கூறி
வேலையை கற்றுக் கொண்டு செய்யாமல்
நழுவி விடுவர்.

இரண்டாம் நிலையில் உள்ளவர்களுக்கு
தன்னுடைய வேலை தெரியும்
பிற வேலைகளை கற்றுக் கொடுத்தால்
புரிந்து கொண்டு செய்வார்கள்
ஆனால் மற்ற வேலைகளை
கற்றுக் கொள்ள மாட்டார்கள்
மற்ற வேலைகளைச் செய்ய மாட்டார்கள்
இவர்களை குறுக்கு புத்தி உள்ளவர்கள்
என்று சொல்லலாம்.


மூன்றாம் நிலையில் உள்ளவர்கள்:

மூன்றாம் நிலையில் உள்ளவர்கள்
மிகவும் ஆபத்தானவர்கள்
இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்;
இவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்;
இவர்களிடம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்;
இவர்களிடம் சரியாக இருந்தாலும் தவறு;
இவர்களிடம் தவறாக இருந்தாலும் தவறு;
சரியாக இருந்தால் அழித்து விடுவர்;
தவறாக இருந்தால் நாம் அழிந்து விடுவோம்;
வேலைகளை தெரிந்து வைத்துக் கொண்டு
தெரியாதது மாதிரி இருக்கும் இவர்கள்
மிகவும் ஆபத்தானவர்கள்;

இவர்களிடம் நட்பு கொள்ளும் போது
எச்சரிக்கையாக இருக்க வேண்டும்;
இவர்களிடம் பழக்கம் கொள்ளும் போது
கவனமாக இருக்க வேண்டும்;
இவர்களிடம் உறவு கொள்ளும் போது
விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்;
இவர்களிடம் தவறாக நடந்து கொண்டால்
நம்மை அழித்து விடுவர்;
இவர்களிடம் சரியாக நடந்து கொண்டால்
நம்மை அடிமையாக வைத்துக் கொள்வர்;

இவர்களை பகைத்துக் கொண்டால்
நம்மை அழிக்க நேரம் பார்ப்பர்;
நம்மை மட்டம் தட்ட நேரம் பார்ப்பர்;
நம்மை இழிவு படுத்த நேரம் பார்ப்பர்;
நம்மை அவமானப் படுத்த நேரம் பார்ப்பர்;

நாலு பேர் முன்னிலையில் நம்மை
அழிக்க நேரம் பார்ப்பர்;

நாலு பேர் முன்னிலையில் நம்மை
அவமானப் படுத்த நேரம் பார்ப்பர்;

நாலு பேர் முன்னிலையில் நம்மை
அசிங்கப் படுத்த நேரம் பார்ப்பர்;

நாலு பேர் முன்னிலையில் நம்மை
இழிவு படுத்த நேரம் பார்ப்பர்;

நாலு பேர் முன்னிலையில் நம்மை
தவறாக சித்தரிக்க நேரம் பார்ப்பர்;

நாலு பேர் முன்னிலையில் நம்மை
குறை சொல்ல நேரம் பார்ப்பர்;

அவர்களிடம் எச்சரிக்கையாக
இருக்க  வேண்டும்;
இத்தகையவர்களிடம்
நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்;

இவர்களை பகைத்துக் கொண்டு
விரோதம் கொண்டு மனம் வேதனைப்படுவதைவிட,
இவர்களை கண்டு கொள்ளாமல்
நம் வேலைகளைப் பார்த்துக் கொண்டு
வருத்தப்படுவதைவிட,
இவர்களுடன் உறவு கொண்டு
அடிமையாக இருப்பது மேல் என்று தோன்றும்.

அது ஓரளவிற்கு உண்மைதான்
இவர்களை பகைத்துக் கொண்டால்
மனம் வேதனைப் பட வேண்டியிருக்கும்
இவர்கள் பலபேரை அவர்களுடைய
ஆசைகளை நிறைவேற்றி
அடிமையாக வைத்திருக்கின்ற காரணத்தினால்
யாரை வைத்தும்
எந்த காரியத்தையும் செய்வார்கள்
இவர்கள் மானம் மரியாதை பற்றி
கவலைப்பட மாட்டார்கள்.
எதற்கும் துணிந்தவர்கள்
எந்த இழிவான செயலையும்
துணிந்து வெட்கப்படாமல் செய்வார்கள்
அதனால் நாம் தான் அவர்களிடம்
இருந்து விலகி இருக்க வேண்டும்.

ஆனால் விலகி இருந்தாலும்
அவர்கள் நம்மை விட மாட்டார்கள்
அவர் தான்
உயர் நிலையில் இருக்க வேண்டும்
என்று விரும்புவார்கள்;
அவர் தான் உயர்ந்தவர் என்று
காட்ட விரும்புவார்கள்- எனவே
அனைவரும் தனக்கு கீழே தான்
இருக்க வேண்டும்
என்று நினைப்பார்கள்;
அதனால் நாம் அவருக்கு
அடிமையாக இருக்க வேண்டும்என்று
தான் நினைப்பார்கள்;
நாம் இத்தகைய நிலையில் உள்ளவர்களுக்கு
அடிமையாக இருந்தால்
நாம் அலுவலகத்தில்
நிம்மதியாக வேலையை
நம்முடைய வேலையை
செய்ய முடியும்
நாம் அடிமையாக இருக்க மாட்டோம் என்றால்
நம்மால் நிம்மதியாக அங்கே
வேலை செய்ய முடியாது.

எனவே, மூன்றாவது நிலையில் உள்ளவர்களிடம்
நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மூன்றாவது நிலையில் உள்ளவர்களை
குரூரத் தன்மை உள்ளவர்கள் என்று சொல்லலாம்.

முதல் நிலையில் உள்ளவர்கள்
சோம்பேறிகள் தன் வேலை தெரியாது
வேலை கற்றுக் கொடுத்தாலும் புரியாது

இரண்டாம் நிலையில் உள்ளவர்கள்
குறுக்கு புத்தி உடையவர்கள்
தன்னுடைய வேலை தெரியும்
பிற வேலைகளை கற்றுக் கொடுத்தாலும்
புரிந்து கற்றுக் கொள்வார்கள்
ஆனால் கற்றுக் கொள்ள மாட்டார்கள்.

மூன்றாவது நிலையில் உள்ளவர்களுக்கு
தன்னுடைய வேலையும் தெரியும்
பிறருடைய பிற வேலைகளும் தெரியும்
ஆனால் செய்ய மாட்டார்கள்.
தன்னுடைய வேலைகளை
பிறர் மேல் சுமத்தி விட்டு
பிறர் கால் பிடித்து
சுற்றிக் கொண்டு வருவார்கள்.
இத்தகைய மூன்று நிலைகளில் உள்ளவர்களை
தெரிந்தும் தெரியாமலும்
துணிந்து பாவங்கள் செய்பவர்கள்
பட்டியலில் சேர்த்து விடலாம்.

பாவத்தினால் தான் இப்படி கஷ்டப்படுகிறோம்
என்பதை உணர்ந்து கொண்ட ஐசுவரியவான்
ஆபிரகாமே, தந்தையே,
எனக்கு ஐந்து பேர் சகோதரர் இருக்கிறார்கள்.
அவர்களும் என்னைப் போல்
பாவங்கள் செய்யாமல் இருக்க,
எல்லாம் இருக்கிறது என்ற தைரியத்தில்
துணிந்து பாவங்கள் செய்யாமல் இருக்க,
அவர்களுடைய அறிவுக் கதவு திறக்கப் பெற,
அவர்களுடைய புத்தி சுயநினைவு பெற,
அவர்களுடைய சிந்தனை விழிப்பு பெற,
அவர்களுடைய வாழ்வு மறுமலர்ச்சி பெற,
அவர்களுடைய எதிர்காலம் ஒளி பெற,
வேதனைகள் நிறைந்த;
துன்பங்கள் சூழ்ந்த;
கவலைகள் தோய்ந்த;
இந்த இடத்திற்கு வராதபடிக்கு அவர்களுக்கு
இதையெல்லாம் அறிவிக்கும் பொருட்டு,
இதையெல்லாம் தெரிவிக்கும் பொருட்டு,
நீர் அவனை என் தகப்பன் வீட்டிற்கு
அனுப்பும்படி உம்மை
வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்
என்றான்.

அதற்கு ஆபிரகாம்
ஐசுவரியவானை நோக்கி,
மோசேயின் வார்த்தைகள் இருக்கின்றன;
மோசேயின் வழிகாட்டுதல்கள் இருக்கின்றன;
மோசேயின் தீர்க்கதரிசனங்கள் இருக்கின்றன;
மோசேயின் அருள் இருக்கின்றன;
அதுமட்டுமில்லை
தீர்க்கதரிசிகள் உள்ளனர்.
அவர்களின் தீர்க்க தரிசனங்கள் இருக்கின்றன;
அதை அவர்கள் கேட்டாலே
உண்மை எதுபொய் எது;
நன்மை எது; தீமை எது;
புண்ணியம் எது; பாவம் எது;
என்பது தெரிந்து விடும்
அதனால் அவர்கள்
முதலில் மோசேயின் வார்த்தைகளுக்கும்
தீர்க்கதரிசிகளும் வார்த்தைகளுக்கும்
செவி கொடுக்கட்டும் என்றான்.

இவர்கள் சொல்லிய வார்த்தைகள் மட்டுமின்றி
உயர்நிலையில் இருப்பவர்கள்
நல்ல சிந்தனை கொண்டவர்கள்
விரிந்த நோக்கு கொண்டவர்கள்
சொல்லிய வார்த்தைகளில் உள்ள
விஷயங்களை
இந்த சமுதாயம்
புரிந்து கொள்வதில்லை.

சமுதாயம் சில விஷயங்களை
புரிந்து கொள்ளாத காரணத்தினால் தான்
ஒரு விஷயத்தை இரண்டு விதமாக
எடுத்துக்  கொள்கிறது.

ஒன்று    சமுதாயத்தில் ஒரு தவறான விஷயம்
                      சரியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது
இரண்டு  சமுதாயத்தில் ஒரு சரியான விஷயம்
                         தவறாக எடுத்துக் கொள்ளப்படுகிறது

இதில் ஒரு வேதனையான விஷயம்
அதை சிலர் தொடர்ந்து பின்பற்றி வருவது தான்

ஒன்று
சமுதாயத்தில் ஒரு தவறான விஷயம் சரியாக
எடுத்துக் கொள்ளப்படுகிறது.

"""பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்
             ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக                                    இருக்கட்டும்""""

என்ற வரிகள் சரியான வரிகள் என்று
தவறாக நினைத்துக் கொண்டு இருக்கிறது சமுதாயம்.

இந்த உலகத்தில் எந்த மூலையில் பிறந்தாலும்
எந்த மனிதனாக இருந்தாலும்
அனைவருக்கும்
பிறப்பு என்பது ஒரு சரித்திரம் ஆகும்.
ஆனால் இறப்பு தான் சிலருக்கு
சம்பவமாக இருக்கலாம்;
சிலருக்கு சரித்திரமாக இருக்கலாம்;

ஒரு விந்தணு கோடானு கோடி
விந்தணுக்களுடன் போரிட்டு
சண்டையிட்டு வெல்கிறது.
வெற்றி பெறும்
அந்த ஒரு விந்தணுவே,
வெற்றி வாகை சூடும்
அந்த ஒரு விந்தணுவே,
போரிட்டு வெற்றி வாகை சூடும்
அந்த ஒரு விந்தணுவே,
அண்டத்துடன் இணைகிறது
அது தான் குழந்தையாகிறது
கோடிக்கணக்கான விந்தணுக்களுடன்
போரிட்டு வெல்லும்
அந்த ஒரு விந்தணுவே,
அண்டத்துடன்  இணைந்து
குழந்தை பிறக்க காரணமாகிறது
அந்த விந்தணுவே தான் ;

நாம் பிறப்பதற்கே
நாம் கோடிக்கணக்கான விந்தணுக்களுடன்
போரிட்டு பிறகு தான் பிறக்கிறோம்;
அப்போது நாம் பிறப்பதே
ஒரு சரித்திரம் தானே!

இதே போல் தான்
உலகில் உள்ள அனைத்து பிறப்புகளும்
கோடிக்கணக்கான விந்தணுக்களுடன்
போரிட்டு வெற்றி பெற்ற
அந்த ஒரு விந்தணுவே
அண்டத்துடன் சேர்கிறது.

அப்போது
அனைவருடைய பிறப்பும்
ஒரு சரித்திரம் தானே
எவ்வாறு சம்பவமாக இருக்க முடியும்.

உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனின்
பிறப்பும் சம்பவம் அல்ல
சரித்திரம் ஆகும்.
பிறப்பு அனைவருக்கும் சரித்திரம் ஆகும்
ஆனால் இறப்பு தான் சிலருக்கு
சம்பவமாக இருக்கலாம்;
சிலருக்கு சரித்திரமாக இருக்கலாம்;

ஒருவர் இறந்தால்
லட்சக்கணக்கான மக்கள் கூட்டம் கூடுவதாலோ,
மக்கள் வேதனையில் வாடுவதாலோ,
மக்கள் அவரை நினைத்துக் கொண்டிருப்பதாலோ,
மக்கள் அவர் புகழை பாடுவதாலோ,
மக்கள் அவர் சிறப்பை பேசுவதாலோ,
மக்கள் அவர் நினைவால் வாடுவதாலோ,
புகைப்படம் வைத்து வணங்குவதலோ,
இறப்பு ஊர்வலத்தில்
பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவதாலோ,
பல்லாயிரக்கணக்கான மக்கள்  கண்ணீர் வடிப்பதாலோ,
செய்தித் தாள்களில் பக்கம் பக்கமாக
விளம்பரங்கள் இடுவதாலோ,
வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில்
அவரைப் பற்றியே பேசுவதாலோ,
அவர் புகைப்படத்தை வைத்து வணங்குவதாலோ
அவர் இறப்பு ஒரு சரித்திரம் என்று
எடுத்துக் கொள்ள முடியாது.
இந்த இறப்பு ஒரு சரித்திரம் அல்ல.

பொங்கியெழும் எரிமலை,
கோபத் தாண்டவமாடும் கடல்,
அறிவின் கலங்கரை விளக்கம்,
அனைத்துலகும் வணங்கும் அறிவு மேதை,
ஏதென்ஸ் அளித்த காலத்தின் கருத்து பெட்டகம்,
கிரேக்கம் தந்த தத்துவத்தின் தவப்புதல்வன்
சாக்ரடிஸ்,
"அவர் சொன்னார் இவர் சொன்னார்
என்று அறிவிழந்து தடுமாற வேண்டாம்
எவர் சொன்ன சொல்லானாலும்
உன் பகுத்தறிவால் எண்ணிப்பார்"
என்று நம்மைப் பார்த்து அழைத்தான்
தான் கொண்ட கொள்கைக்காக
இச்சமுதாயத்திற்காக
விஷத்தை உண்டு இறந்தான்.

தனக்காக இறக்காமல்
பிறருக்காக இந்த
சமுதாயத்தின் நலனுக்கான
சமுதாயம் உயர்வடைய வேண்டும்;
சமுதாயம் விழிப்புணர்வு பெற வேண்டும்;
சமுதாயம் சிந்தனைப் பெற வேண்டும்;
சமுதாயம் நல்ல நிலை அடைய வேண்டும்;
சமுதாயம் முன்னேற்றம் அடைய வேண்டும்;
என்று விஷம் உண்டு
இறந்த சாக்ரடிஸின் இறப்பு ஒரு சரித்திரம்.

சாக்ரடிஸ் இறப்பை சரித்திரம் என்று சொல்லாம்
மற்ற இறப்பு சம்பவம் என்று
எடுத்துக் கொள்ள வேண்டும்.

எந்த இறப்பு சம்பவம்
எந்த இறப்பு சரித்திரம்
எவருடைய இறப்பு சம்பவம்
எவருடைய இறப்பு சரித்திரம்
என்பதை அறிந்திருக்க வேண்டும்.

உலகில் உள்ள
அனைவருக்கும் பிறப்பு என்பது சரித்திரம் தான்.
இறப்பு மட்டும் தான்
சிலருக்கு சம்பவம்;
சிலருக்கு சரித்திரம்;
என்பதை சரியாக உணர்ந்து கொள்ளாமல்
வார்த்தைகளின் அர்த்தங்களை
நாம் தவறாக எடுத்துக் கொள்கிறோம்.


இரண்டு

""""பிற நாட்டு விருது வாங்குவதை பெருமையாகக் கருதுகிறோம்"""

இந்த தவறான விஷயத்தை
சரி என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
               
திரைப்படத் துறையைப் பொறுத்தவரை
ஒவ்வொரு நாட்டிலும்
விருதுகள் அந்த அந்த நாட்டில்
அந்த நாட்டின்
திரைப்படங்களுக்காக வழங்கப்படுகிறது;
உலகில் பல்வேறு நாடுகளில்
அந்த அந்த மொழிப்படங்களுக்கு
விருதுகள் வழங்கப்படுகிறது;
தமிழ்நாட்டில் விருது வழங்கப்படுகிறது;
இந்தியாவில் விருது வழங்கப்படுகிறது;
இந்தியாவில் திரைப்படத் துறைக்கென்று
மிக உயர்ந்த விருதுகள் வழங்கப்படுகிறது;

இந்தியாவில் ஒவ்வொரு மொழிக்கென்று
அந்த அந்த மாநிலத்தில்
விருதுகள் வழங்கப்படுகிறது;
மாநிலங்கள் அனைத்துக்கும் சேர்த்து
இந்தியாவில் மிக உயர்ந்த விருதுகள் வழங்கப்படுகிறது;

அதைப்போல உலகில் உள்ள ஒவ்வொரு
நாட்டிலும் அந்த நாட்டில்
தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு
விருதுகள் வழங்கப்படுகிறது.
அந்த நாடுகளில் வழங்கப்படும்
அந்த விருதுகளின் பெருமையை
அந்த நாடுகள்
உலக அளவில்
பிரபலப்படுத்தி வைத்து இருக்கின்றன.
சில நாடுகள் தங்கள் நாட்டில் தரப்படும்
விருதுகளை உயர்ந்த விருதுகளாக
இந்த உலகத்தில் பிரபலப்படுத்தி
வைத்திருக்கின்றன.

தங்கள் விருதுகள் உயர்ந்தவை என்றும்,
தங்கள் விருதுகள் சிறந்தவை என்றும்,
தங்கள் விருதுகள் அப்பழுக்கற்றவை என்றும்,
தங்கள் விருதுகள் பெருமை வாய்ந்தவை என்றும்,
தங்கள் விருதுகள் கண்ணியம் மிக்கவை என்றும்,
தங்கள் விருதுகள் சிறப்பு வாய்ந்தவை என்றும்,
உலக அளவில் ஏற்படுத்தி வைத்திருக்கின்றன,

இதனால் தங்கள் நாட்டில் வழங்கப்படும்
விருதுகள் தான் உயர்ந்தவை என்ற
மாயையை மக்கள் மத்தியில்
ஏற்படுத்தி வைத்திருக்கின்றன.
இதனை உண்மை என்று நம்பி
அந்த விருதைப் பெறுவதை
தங்கள் லட்சியம் என்றும்,
அந்த விருதைப் பெறுவதை
தங்கள் பாக்கியம் என்றும்,
அந்த விருதைப் பெறுவதை
தங்கள் கனவாகவும் கொண்டு
சிலர் நம் நாட்டில் உள்ளனர்.

திரைப்படத்திற்கென்று வழங்கப்படும்
விருதுகளில் அந்த அந்த
நாட்டில் வழங்கப்படும் விருதுகள்
அந்த அந்த நாட்டில் உயர்ந்தவை.
அந்த விருதைப் பெற
நாம் ஏன் முயல வேண்டும்.
நமக்கு எதற்கு
மற்ற நாட்டில் உள்ள விருதுகள்;
நமக்கு எதற்கு அந்த பாராட்டுகள்;
நமக்கு எதற்கு அந்த விருதுகள்;
நமக்கு எதற்கு அந்த விருதைப் பெற கனவுகள்;
நமக்கு எதற்கு அந்த விருதைப் பெற லட்சியங்கள்;
நமக்கு எதற்கு அந்த விருதைப் பெற நினைவுகள்;

அதை நாம் விலக்க வேண்டும்
அந்த விருதைப் பெறுவதை
நாம் உயர்வாகக் கருதக் கூடாது.

வெளி நாட்டில் உள்ளவர்கள்
நம் நாட்டில் திரைப்படத்திற்கென்று வழங்கப்படும்
உயர்ந்த விருதுகளை வாங்க
வேறு நாட்டில் உள்ளோர்
ஆசைப்படுகிறார்களா இல்லையே.
நம் விருதை பெருமையாக நினைக்கிறார்களா.
நாம் மட்டும் ஏன் ஆசைப்பட வேண்டும்;
நாம் மட்டு ஏன் கனவு காண வேண்டும்;
நாம் மட்டும் என் அதைப் பெறுவதை
மரியாதையாக கருத வேண்டும்;
நாம் மட்டும் ஏன் அதைப் பெறுவதை
உயர்வாகக் கருத வேண்டும்;
நாம் மட்டும் ஏன் அதைப் பெறுவதை
கனவாகக் கருத வேண்டும்;
நாம் மட்டும் ஏன் அதைப் பெறுவதை
லட்சியமாகக்  கருத வேண்டும்;
நாம் மட்டும் ஏன் அதைப்
பெற்றதை உயர்வாகக் கருத வேண்டும்;

நம் நாட்டில் திரைப்படத்திற்கென்று
தரப்படும் விருதுகளை
உயர்ந்த விருதுகளாக
மற்ற நாடுகள் பார்க்கும் வகையில்
நம் திரைப்பட விருதுகள் உருவாக்கப்பட வேண்டும்;
நம் திரைப்பட விருதை
மற்ற நாடுகள் போட்டி போட்டு
வாங்கும் நிலையை உருவாக்க வேண்டும்;

மற்ற நாடுகளில் தரப்படும்
விருதுகளை உயர்வாகக் கருதி
அதன் பின்னால் சென்று கொண்டிருந்தால்
நாம் எப்போதும்
மற்ற நாட்டு விருதைகளைப் பெறுவதையே
உயர்வாகக் கருதுவோம்.

மற்ற நாடுகளின் விருதுகளை
நாம் உயர்வாகக் கருதுவது என்பது,
நம் நாட்டில் தரப்படும் விருதுகளை
நாம் இழிவாக நினைப்பதற்கு சமம்.
நம் நாட்டில் தரப்படும் விருதுகளை
நாம் மதிக்கவில்லை என்று பொருள்;
நம் நாட்டில் தரப்படும் விருதுகளை
நாம் அவமதிக்கிறோம் என்று பொருள்;
நம் நாட்டில் தரப்படும் விருதுகளை
நாம் உதாசீனப் படுத்துகிறோம் என்று பொருள்;
நம் நாட்டில் தரப்படும் மரியாதையை
நாம் அவமதிக்கிறோம் என்று பொருள்;
நம் நாட்டில் தரப்படும் உயர்வுகளை
நாம் இழிவாகக் கருதுகிறோம் என்று பொருள்;
நம் நாட்டில் தரப்படும் சிறப்புக்களை
நாம் உதாசீனப்படுத்துகிறோம் என்று பொருள்;
நம் நாட்டில் தரப்படும் சந்தோஷங்களை
நாம் ஏற்கவில்லை என்று பொருள்;
நம் நாட்டில் தரப்படும் மகிழ்வுகளை
நாம் மதிக்க வில்லை என்று பொருள்;
நம் நாட்டில் தரப்படும் இன்பங்களை
நாம் வேண்டாம் என்று சொல்கிறோம் என்று பொருள்;
சுருங்கச் சொல்வோமானால்,

நாம் நம் நாட்டை மதிக்கவில்லை என்றும்
பிற நாட்டை மதிக்கிறோம் என்றும்;

நாம் நம் நாட்டு கலைகளை மதிக்கவில்லை என்றும்
பிற நாட்டு கலைகளை மதிக்கிறோம் என்றும்;

நாம் நம் நாட்டு விருதுகளை மதிக்கவில்லை என்றும்
பிற நாட்டு விருதுகளை மதிக்கிறோம் என்றும்;

நாம் நம் நாட்டை உயர்வாகக் கருதவில்லை என்றும்
பிற நாட்டை உயர்வாகக் கருதுகிறோம் என்றும்;

நாம் நம் நாட்டை  விரும்பவில்லை என்றும்
பிற நாட்டை விரும்புகிறோம் என்றும்;

பொருள்.
மொத்தத்தில் நமக்கு நம் நாடு
நமக்கு பிடிக்கவில்லை என்று பொருள்.

எனவே,
பிற நாடுகள் எப்படி
தங்கள் நாட்டு திரைப்பட விருதுகள்
மற்றும் பிற துறை சார்ந்த விருதுகளை
உயர்வான நிலையில் வைத்து
மற்ற நாடுகள் அதை விரும்படிச் செய்து
வைத்துள்ளனவோ,
அவ்வாறே
நாமும் நம் நாட்டில்
தரப்படும் திரைப்படத் துறைக்கான
விருதுகள் மட்டுமின்றி
பிற துறைக்கென்று தரப்படும்
விருதுகளை உயர்வானதாக்கி
பிற நாடுகள் இந்தியாவில் தரப்படும் விருதுகளை
வாங்க ஆவலைத் தூண்ட வேண்டும்.

பிற நாடுகள் நம் நாட்டு விருதை
வாங்க வாழ்க்கையின் குறிக்கோளாகக்
கொள்ளும் அளவு நம் விருதுகள்
தரமானதாக்கப்பட வேண்டும்.

பிற நாடுகள் போட்டி போட்டு
வாங்கும் அளவுக்கு
நம் நாட்டு விருதுகள்
உயர்வானதாகவும்; சிறப்பானதாகவும்;
தரம் உள்ளதாகவும்; மாற்றப்பட வேண்டும்.

அவ்வாறு மாற்றப்படும்போது
நம் நாட்டு திரைப்படத் துறைக்கென்று
தரப்படும் விருதுகள் மட்டுமின்றி
பிற துறைக்கென்று தரப்படும் விருதுகளை
பிற நாடுகள் பெற ஆவலாய் இருக்கும்
இல்லையேல்
இந்தியா தான் பிற நாட்டு விருதுகளை
பெற ஓடிக் கொண்டிருக்கும்
என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

நாம் சரியான விஷயத்தை தவறாகவும்
தவறான விஷயத்தை சரியாகவும்
எடுத்துக் கொண்ட காரணத்தினால்
உண்மையின் தத்துவம் நமக்கு புரிவதில்லை
எது பாவம் எது புண்ணியம் என்று
தெரிவதில்லை.

ஆபிரகாம் கூறியதற்கு மறுமொழியாக
ஐஸ்வரியவான் தகப்பனாகிய ஆபிரகாமே,
மரித்தோரிலிருந்து எழுந்த ஒருவன்
அவர்களிடத்தில் போனால்,
அவர்கள் மனந்திரும்புவார்கள் என்றான்.


அதற்கு ஆபிரகாம்
அவர்கள் மோசேயின் வார்த்தைகளை
அறிந்து உணர்ந்து
எது நல்லது; எது  கெட்டது;
என்பதை தெரிந்து கொள்ளவில்லை எனில்
எது பாவம்; எது புண்ணியம்;
என்பதை அறிந்து கொள்ளவில்லை எனில்
தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை
உணர்ந்து அதன்படி நடக்கவில்லை எனில்
என்ன பயன்
ஒரு பயனும் இல்லை.

மோசேயின் வார்த்தைகளையும்
தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளையும்
உண்மை என்று
உணர்ந்து கொள்ள முடியாதவர்களால்
மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்து சென்று
அவர்களுக்கு உண்மையை உரைத்தாலும்
பலன் இல்லை என்றார் ஆபிரகாம்.

இதன் மூலம்
உண்மையை உணர முடியாதவர்களுக்கு
உண்மையை உணர வேண்டும்
என்று நினைக்காதவர்களுக்கு
உண்மையை உணர்த்தினாலும்
உண்மையை உணர மாட்டார்கள்
என்கிறார் இயேசு.

---------இதன் தொடர்ச்சி
இயேசு கிறிஸ்து-வால்மீகர்- சிவசிவா பதினென்பேர் -பதிவு-78(பாகம்-2)


------------பார்க்கவும், படிக்கவும்