October 22, 2016

2.இயேசு கிறிஸ்து-வால்மீகர்-சிவசிவா பதினென்பேர் -பதிவு-78(பாகம்-2)

2.இயேசு கிறிஸ்து-வால்மீகர்-சிவசிவா பதினென்பேர் -பதிவு-78(பாகம்-2)


""""பதிவு எழுபத்துஎட்டை விரித்துச் சொல்ல
ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்""""

வால்மீகர்

"""""சிவசிவா பதினென்பேர் பாடற் கெல்லாம்
திறவுகோல் வால்மீகன் பதினா றாகும்
சிவம்பெத்த சித்தரெல்லா மென்னூல் பார்த்துச்
சிவனோடே கோள்சொன்னார் சினந்தான் நாதன்
அவமாகிப் போகாமல் சிவனுத் தார
அருளினால் திறந்து சொன்னேன் உலகுக்காக
நவமான நவக்கிரகந் தன்னுள் ளேயே
நாக்குவாய் செவிமூக்கு மத்திக் கப்பால்

நாக்குவாய் செவிமூக்கு மத்திக் கப்பால்
நடுவீதி குய்யமுதல் உச்சி தொட்டுத்
தாக்குவாய் அங்கென்றே அதில் முட்டுத்
தாயாரைப் பூசித்து வேதம் ஓது
வாக்குவாய் அசையாமல் மவுனங் கொண்டு
வாசிவரு மிடத்தில்மனம் வைத்துக் காத்து
நீக்குவாய் வாசியொடு மனந்தான் புக்கு
நினைவதனி லடங்கிவரும் வரிசை காணே"""""

-----வால்மீகர்
---வால்மீகர் அருளிச் செய்த சூத்திர ஞானம்-16

சமுதாயத்தில் பெரும்பாலானவர்களுக்கு
முக்தி என்றால் என்ன என்றும்
முக்தி அடையும் வழிகள் எவை என்றும்
முக்தி அடைவது எப்படி என்றும்
தெரியாமல் இருக்கின்றனர்.


ஆனால்,
சித்தர்கள், மற்றும் நம் முன்னோர்கள்
முக்தி அடையக்கூடிய
வழிகளைத் தெரிந்து அதை அடைந்தும்
இருக்கின்றனர்.

மிக உயர்வான நிலையான முக்தியை
ஆன்மீகத்தில் உயர்வான நிலை அடைபவர்களுக்கு
கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்
பழமொழிகளிலும்,
கவிதைகளிலும்,
பாடல்களிலும்,
குறியீடுகளாகவும்
சங்கேதக் குறிகளாகவும்
மறைபொருளாக மறைத்து வைத்துள்ளனர்.

ஆன்மீகத்தில் உயர்வான நிலைகளை
அடையாமல் முக்தி என்பதையும்
முக்தி அடைவதற்கான
வழிமுறைகளையும்
நாம் கண்டுபிடிக்கவும் முடியாது
முக்தியை அடையவும் முடியாது.


"சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி"

இந்தப் பழமொழி வேடிக்கைக்காகச் சொல்லப் படுகிறது
அதுமட்டுமல்ல,
வேடிக்கையாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால், இந்தப் பழமொழி
மிக உயர்ந்த அர்த்தத்தை தன்னுள் கொண்ட
மிக உயர்ந்த பழமொழி - என்பதை
நாம் உணர்ந்து கொள்வதே இல்லை.

ஆண்டி என்றால்,
உயிர் என்பதையும் குறிக்கும்;
மனிதன் என்பதையும் குறிக்கும்;
இந்த இடத்தில்,
ஆண்டி என்றால் மனிதனைக் குறிக்கும்.

நம் உடலில் உள்ள ஜீவாத்மா
பல லட்சக்கணக்கான பிறவிகளாக
மாறுபாடு  அடையாமல்
ஒரே நிலையில் ஒரே விதத்தில்
நடைபெற்றுக் கொண்டிருக்கிறது;
அதாவது ஒரே விதத்தில்
இயங்கிக் கொண்டிருக்கிறது;

அந்த ஜீவாத்மாவை
எந்த நிலையில் மாற்றினால்,
எந்த நிலைக்கு மாற்றினால்,
எந்த நிலைக்கு கொண்டு வந்தால்,
எந்த நிலையுடன் தொடர்பு கொண்டால்,
எந்த நிலையை அடையலாம் என்பதை உணராமல்
மனிதன்  ஒரே நிலையில்
பல பிறவிகளாக இயங்கிக் கொண்டு வருகிறான்.

கெடுத்தல் என்றால்,
அழித்து விடுதல்
அல்லது
அழிதல் என்று பொருள் அல்ல.

இந்த இடத்தில்
கெடுத்தல் என்ற சொல்லுக்கு பொருள்,
ஒரு நிலையிலிருந்து மற்ற நிலைக்கு மாறுதல்
அதாவது
ஒரு நிலையிலிருந்து புதிய நிலைக்கு மாறுதல்
அதாவது
ஒன்று மன்றொன்றாக மாறுதல்
அதாவது
ஒன்று தன் பழைய நிலையிலிருந்து
புதிய ஒன்றாக பரிணமித்தல்
அதாவது

பழைய ஒன்று புதிய ஒன்றாக மாறுதல்
என்று பொருள்.

நம் உடலில் இருக்கும் ஜீவாத்மா
பரமாத்மாவாக மாறுவதற்கு பெயர் தான்
ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாறுவது
அதாவது
ஜீவாத்மா பரமாத்மாவாக மாறுவது
அதாவது
ஜீவாத்மா பரமாத்மாவாகவே மாறுவது
இது தான் ஒன்று மற்றொன்றாக மாறுவது.

கெடுத்தல் என்றால்,
பல்லாயிரக்கணக்கான பிறவிகளாக
ஜீவாத்மா பரமாத்மாவாக மாறாமல்,
ஜீவாத்மா பரமாத்மாவுடன் தொடர்பு கொள்ளாமல்,
ஜீவாத்மா பரமாத்மாவாகவே மாற்றமடையாமல்,
ஜீவாத்மா பரமாத்மா என்ற நிலையை
அடையாமல் இருந்தது,
தற்போதைய நிலையில் ஜீவாத்மா
பரமாத்மா என்ற நிலையை
அடைந்து விட்டது என்று பொருள்.

ஜீவாத்மா, பரமாத்மா என்ற நிலையை
அடைய வேண்டுமானால்,
ஜீவாத்மா தன் பதிவுகள்
அனைத்தையும் கழிக்க வேண்டும்
முன்வினை, பின்வினை என்று சொல்லப்படக்கூடிய
சஞ்சித கர்மம், பிராரப்த கர்மம், ஆகாம்ய கர்மம்
ஆகியவற்றைக் கழிக்க வேண்டும்.
அனைத்து கர்மாக்களும் கழிந்தால் தான்
ஜீவாத்மாவில் பதிந்துள்ள
அனைத்து கர்மாக்களும் கழிந்தால் தான்
ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைய முடியும்.



அவ்வாறு ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைவதற்கு
ஜீவாத்மா பரமாத்மாவாகவே மாறுவதற்கு

கர்மாவைக் கழிப்பதற்கான
ஒரு பயிற்சி தான் வாசியோகம்
அந்த வாசியோகத்தை முறையாகச் செய்தோமேயானால்
கர்மாக்கள் களையப்பட்டு
ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணையும்.
ஜீவாத்மா பரமாத்மாவாகவே மாறும்.

வாசியோகத்தை நாம்
முறைப்படி தொடர்ந்து செய்யும் போது
பல்லாயிரம் பிறவிகளாக
ஜீவாத்மாவில் கழிக்காமல் இருந்து வந்த
கர்மாக்கள் கழிய ஆரம்பிக்கும்.

சும்மா கிடந்த சங்கை என்றால்,
கர்மாவைக் கழிக்காமல் சும்மா இருந்த
அதாவது ஜீவாத்மாவில் பதிந்துள்ள
கர்மாவைக் கழிக்க
எந்தவித முயற்சியும் மேற்கொள்ளாமல்
பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள்
சும்மா இருந்த ஜீவாத்மா என்று பொருள்.

ஊதிக் கெடுத்தல் என்றால்,
வாசியோகத்தை முறையாகச் செய்து
ஜீவாத்மாவில் பதிந்துள்ள
கர்மாவைக் கழித்து
ஜீவாத்மாவை பரமாத்மா என்ற
நிலைக்கு மாற்றுதல் என்று பொருள்.

ஆண்டி என்றால்,
மனிதன் என்று பொருள்.

சும்மா கிடந்த சங்கை என்றால்,
பல்லாயிரம் பிறவிகளாக
மனிதப் பிறப்பெடுத்து வரும் - மனிதன்
தன்னுள் இருக்கும் ஜீவாத்மாவில்
பதிந்துள்ள கர்மாவின் பதிவுகளைக்
கழிக்காமல் சும்மாவே இருந்தான்
என்று பொருள்.

ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்றால்,
மனிதன் வாசியோகத்தை முறையாக
தொடரந்து செய்து,
ஜீவாத்மாவில் பதிந்துள்ள கர்மாவைக் கழித்து
பரமாத்மாவாகவே மாறுகிறான்
என்று பொருள்.

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம்
ஆண்டி என்றால்,
பல்லாயிரம் பிறவிகளாக
மனிதப் பிறப்பெடுத்து வரும் - மனிதன்
தன்னுள் இருக்கும் ஜீவாத்மாவில்
பதிந்துள்ள கர்மாவின் பதிவுகளைக்
கழிக்காமல் சும்மா இருந்தவன்
வாசியோகத்தை முறையாக தொடரந்து செய்து,
ஜீவாத்மாவில் பதிந்துள்ள கர்மாவைக் கழித்து
பரமாத்மாவாகவே மாறுகிறான்
என்று பொருள்.


"காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே"

இது புகழ் பெற்ற சொல்
பட்டினத்தார் இந்த வரிகளைக் கண்டு
படித்து உணர்ந்ததால் தான்
ஞானம் வந்ததாகச் சொல்வார்கள்.

இந்த வரிகளின் அர்த்தத்தை
உணர்ந்ததால் தான்
ஞானம் வந்ததாகக் கதை - ஆனால்
அது அப்படியல்ல.


பட்டினத்தார் வாழ்வில்
ஞானத்திற்கான விதை
என்றோ விதைக்கப்பட்டு விட்டது.
அது படிப்படியாக வளர்ந்து,
பூ விட்டு ;காய் விட்டு; கனியாகி;
இந்த வார்த்தைகளைக் கேட்டு
கீழே விழுந்து இருக்கிறது
அவ்வளவு தான்.

நன்கு பழுத்தது கீழே விழுந்து தான் ஆக வேண்டும்
காற்று அடித்ததால் தான்
பழம் விழுந்து விட்டது என்பார்கள்
காற்று என்பது ஒரு காரணம் தானே ஒழிய
அதுவே காரணமல்ல.

பழம் கீழே விழப்போகிறது
அப்போது காற்று அடித்தது
அவ்வளவு தானே ஒழிய
காற்று அடித்ததால் தான்
பழம் கிழே விழ வில்லை.

அதைப்போல,
பட்டினத்தார் மனதில் எப்போதோ
ஞானத்திற்கான விதை விதைக்கப்பட்டு விட்டது
அவர் வெளியே போக வேண்டிய சமயம்
அதாவது
அவர் அனைத்தையும் துறந்து விட்டு
செல்ல வேண்டிய நேரம்
அவர் வீட்டை விட்டு வெளியே
செல்ல வேண்டிய காலம்
அப்பொழுது தான்  அவர் கையில்
"காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே"
என்ற வார்த்தை கிடைத்தது
அவர் வெளியே செல்கிறார்.
  

அந்த வார்த்தை ஒரு காரணம் தானே தவிர
அதுவே பட்டினத்தார்
வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு
முழு முதற்காரணம் அல்ல.

புத்தர் வாழ்க்கையிலும்
இது தான் நடந்தது.
ஞானத்திற்கான விதை
எப்போதோ விதைக்கப்பட்டு விட்டது.
அவர் கண்ட காட்சியின் விளைவாக
வெளியே செல்லவில்லை
அது ஒரு காரணம் தான் - ஆனால்
அதுவே தான் முழுமுதற் காரணம் அல்ல.

ஆனாலும்
"காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே"
என்ற வரிகள்
அதிக அர்த்தம் பொதிந்தவை
இதற்கு கீழ்க்கண்டவாறு அர்த்தம்
சொல்லப்படுகிறது.

மிகச் சிறிய பொருள் ஊசி
ஊசி எப்போது பயன்படும் என்றால்,
அதன் காது நல்ல நிலையில்
இருந்தால் மட்டுமே பயன்படும்.
ஊசியில் நூல் நுழைக்கும் இடம்
காது  எனப்படுகிறது.
காது உடைந்து விட்டால் அது பயன்படாது.
அந்த காது நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே
நூல் கோர்த்து துணி தைக்க முடியும்;
காது உடைந்து விட்டால்
ஊசியால் துணியை தைக்க முடியாது;
காதற்ற ஊசி
அதாவது காது உடைந்த ஊசி
துணி தைப்பதற்கு பயன்படாது.
காதற்ற ஊசி ஒன்றுக்கும் பயன்படாது.
காதற்ற ஊசி எதற்கும் பயன்படாது.

ஒன்றுக்கும் பயன்படாத காதற்ற ஊசி கூட
நாம் இறந்த பிறகு கொண்டு செல்ல முடியாது
என்று பொருள்.
மேற்கண்ட வரிகளுக்கு
இதைத் தான் அர்த்தமாக சொல்வார்கள்.

இதற்கு கீழ்க்கண்டவாறு அர்த்தம் சொல்லலாம்

காதற்ற ஊசி கடைவழி செல்ல பயன்படாது என்றால்,
காதுள்ள ஊசி தானே கடைவழி செல்ல பயன்படும்.

கடைவழி என்றால்,
இறுதி நிலை என்று பொருள்.

கடைவழிக்கே என்றால்,
முக்தி அடைவதற்கு
என்று பொருள்.

காதுள்ள ஊசி தான் கடைவழிக்கு பயன்படும்
அதாவது
முக்தி அடைய வேண்டும் என்றால்
காதுள்ள ஊசி தான் பயன்படும்.

பொருள் நிலையில் உள்ளவர்களுக்கு
காதற்ற ஊசியும்
அருள் நிலையில் உள்ளவர்களுக்கு
காதுள்ள ஊசியும்
உவமைகளாக சொல்லப்பட்டுள்ளது.

அழியும் நிலையில் உள்ள
பொருள்களின்  மேல் பற்று கொண்டு
சிற்றின்பத்தின் பால் செல்பவர்களுக்கு
அதாவது பொருள் நிலையில் உள்ளவர்களுக்கு
காதற்ற ஊசி
உவமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

அழியாத நிலையில் உள்ள
பொருளின் மேல் பற்று கொண்டு
பேரின்பத்தில் பால் செல்பவர்களுக்கு
அதாவது அருள் நிலையில் உள்ளவர்களுக்கு
காதுள்ள ஊசி
உவமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

காதற்ற ஊசி
பொருள் நிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே
உவமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
நாம் தான் அந்த வரிகளை
நினைவுக்குக் கொண்டு வரவேண்டும்;
நினைவில் கொள்ள வேண்டும்;
சிந்தனை செய்ய வேண்டும்;
அப்படி சிந்தனை செய்யா விட்டால்
அந்த வரிகளில் உள்ள அர்த்தத்தை
அப்படி எடுத்துக் கொண்டு விடுவோமேயானால்
நாம் பொருள் நிலையுடன் நின்று விடுவோம்.

உண்மை நிலையையும்,
உண்மை பொருளையையும்,
அந்த வரிகள் சொல்ல வந்த
உண்மைகளையும் நாம்
அறியாமல் விட்டு விடுவோம்.

இந்த வரிகளில்,
நாம் முக்கியமான ஒன்றை சிந்திக்க வேண்டும்
காதற்ற ஊசி கடைவழிக்கு வராது என்றால்,
எது வரும் என்று யோசிக்க வேண்டும்
அப்படி யோசித்தோமேயானால்
காதற்ற ஊசிக்கு எதிர்ப்பதம்
காதுள்ள ஊசி தானே
அப்போது எது வரும் கடைவழிக்கு
காதுள்ள ஊசி தானே கடைவழிக்கு வரும்

எனவே நாம்
முதலில் நினைவில் கொள்ள வேண்டியது
காதற்ற ஊசி கடைவழிக்கு வராது

காதுள்ள ஊசி மட்டுமே கடைவழிக்கு வரும்
என்பதைத் தான்.

முக்தி அடைய வேண்டும் - என்று
விருப்பம் கொண்டு
அதற்கான முயற்சியை மேற்கொள்பவர்கள்
அனைவரும் தெரிந்து வைத்திருக்க
வேண்டிய வார்த்தைகள்,
சாகாக் கால்
வேகாத் தலை
போகாப் புனல்;
ஊசி முனை வாசல்,
நெருப்பாறு மயிர்ப்பாலம் கடந்து,
இந்த வார்த்தைகளின்
அர்த்தம் தெரிந்தால் மட்டுமே
முக்தி அடைவதற்கான  வழிகளை
மேற்கொள்ள முடியும்.

காதுள்ள ஊசி ஒன்றை எடுத்துக் கொள்வோம்.
ஊசியை நன்றாக உற்றுப் பாருங்கள்
ஊசியில் இரண்டு முனைகள் இருக்கும்.
ஒரு முனையில் துளை இருக்கும்;
மற்றொரு முனையில் துளை இருக்காது;
ஊசியில் ஒரு முனையில் துளை இருக்கும் பகுதி
ஊசி முனை வாசல் எனப்படுகிறது.
அந்த ஊசி முனை வாசலுக்குள்
நூல் ஒன்றை செலுத்துகிறோம்.
இப்போது அது துணி தைப்பதற்கு
தயாராகி விட்டது.
காதுள்ள ஊசியினுள் நூலை விடும்போது
நன்றாக உற்று பாருங்கள்.
நூல் எப்படி
அந்த துளையில் எப்படி செல்கிறது என்று
நன்றாக கவனியுங்கள்.

சாகாக்கால்; வேகாத் தலை; போகாப்புனல் அறிந்து,
நெருப்பாறு மயிர்ப்பாலம் கடந்து,
ஊசி முனை வாசலுக்குள் சென்று
பரமாத்மாவுடன் ஜீவாத்மா
இணைந்து விட்டால் முக்தி.

ஊசியினுடைய துளை இருக்கிறதே
அந்த துளையைத் தாண்டி
மறுபுறம் இருப்பது பரமாத்மா.
ஊசியினுள் செலுத்தப்படும் நூல் ஜீவாத்மா
ஊசியின் துளையின் மறுபுறம் இருப்பது
பரமாத்மா

ஊசியினுள் நூலை செலுத்துங்கள்
அப்படி செலுத்திய பிறகு
இரண்டு முனைகளையும்
மேல் நோக்கி ஒன்றாக தூக்கி
முடிச்சு போட்டு கட்டுங்கள் கட்டுங்கள்
இப்பொழுது நன்றாக பாருங்கள்

மேலிருந்து கீழாக
இவ்வாறு இருக்கும்
நூலினால் போடப்பட்ட முடிச்சு
நூல் முடிச்சுக்குக் கீழ்
நீளமான நூல்
ஊசி துளைக்குள்
நூல் நுழைக்கப்பட்டிருக்கும்
நீளமான ஊசி
இறுதியில் ஊசி முனை.

கயிறு மேல் நோக்கி இருக்கும்
ஊசி கீழ் நோக்கி இருக்கும்
இந்த நிலையில்
ஊசியை வைத்துக் கொள்ளுங்கள்.

ஜீவாத்மா என்ற நூல்,
பரமாத்மா என்ற ஊசியின்
துளைக்குள் செல்லும் போது,
ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு
என்று இல்லாமல்,
ஜீவாத்மா பரமாத்மாவுடன்
ஒன்றாக கட்டப்படும்போது;
அதாவது ஜீவாத்மா பரமாத்மாவுடன்
ஒன்றாக இணையும் போது;
அதாவது ஜீவாத்மா பரமாத்மாவின்
தன்மைகளைப் பெறும்போது;
அதாவது ஜீவாத்மா பரமாத்மாவாக
மாறும் போது;
அதாவது
ஜீவாத்மா பரமாத்மாவாகவே
மாற்றம் அடையும் போது;
மேலே உள்ள
முடிச்சுப் போடப்பட்ட கயிறு வழியாக
அதாவது
பிரபஞ்சத்தின் உற்பத்தி மையத்திலிருந்து
அமிர்தம் சுரக்கும்
அப்படி சுரக்கும் அமிர்தம்
உடல் என்ற
ஊசி முழுவதும் பரவும்.

இந்த நிலை நம் உடலுக்குள்
ஆன்மீகத்தில் உயர் நிலை அடையும்போது
நடைபெறுகிறது;
இந்த நிலை நம் உடலுக்குள்
ஆன்மீகத்தில் உயர் நிலை அடையும்போது
நடைபெறுகிறது என்பதை
உணரும்போது ஞானியாகிறான்;
இந்த நிலை நம் உடலுக்குள்
ஆன்மீகத்தில் உயர்வடையும் நிலையில்
நடைபெறும்போது முழுமையடைகிறான்;

ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைய வேண்டுமானால்
காதுள்ள ஊசி தான் தேவை
காதற்ற ஊசி பயன்படாது.

எனவே தான் காதற்ற ஊசி
முக்தி அடைய பயன்படாது என்று
நம் முன்னோர்கள் சொன்னார்கள்.

காதுள்ள ஊசியின் அர்த்தம் நமக்கு தெரிந்தால்
முக்தி அடைவதற்கான வழி
நமக்கு தெரியும் என்பதை
நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எனவே நாம் காதுள்ள ஊசியின்
ரகசியத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.


கர்ணன் - கிருஷ்ணன்

கர்ணன் அர்ச்சுனனுடன்
போரிட்டுக் கொண்டிருக்கும் போது
அர்ச்சுனனின் பாணத்தால்
கர்ணன் காயம்பட்டு கீழே விழுந்தான்.
மறுபடியும், மறுபடியும்
தொடர்ந்து அர்ச்சுனன் அம்பு எய்தாலும்
அம்புகள் கர்ணனைத் துளைக்காமல்
அவன் மேல் மலர் மாலையாக விழுந்தது.

கர்ணன் அம்பினால் ஏற்பட்ட
காயத்தால் கீழே சரிந்தான்;
தேர்ச் சக்கரத்தில் சாய்ந்திருந்தான்;
தேர்ச் சக்கரத்தில் காயமுற்று கிடந்தான்;
இதைக் கண்ட அர்ச்சுனன்
கண்ணனிடம்
கண்ணா என்ன ஆனது,
கர்ணன் சாகவில்லை,
கர்ணன் சாகமாட்டேன் என்கிறான்;
நான் விடும் அம்புகள் அனைத்தும்
கர்ணன் மேல் மலர் மாலையாக விழுகிறதே.
என்ன காரணம் என்றான்.

அதற்கு கண்ணன்,
அர்ச்சுனா
கர்ணன் அவன் செய்த தர்மம்
அவனைக் காக்கிறது
அதனால் தான் அவன் சாகவில்லை
அதனால் தான் அவன் உயிர் போகவில்லை
என்றான்.
அவன் உயிர் உடலில்
ஊசலாடிக் கொண்டு இருக்கிறது
என்றான்.

அதற்கு கண்ணன்
கர்ணன் செய்த தர்மம்
அவனைக் காப்பாற்றுகிறது
ஒருவருடைய பாவப்பதிவுகள்
கழிந்தால் மட்டும்
முக்தி அடைய முடியாது;
அவருடைய புண்ணியப் பதிவுகளும்
கழிய வேண்டும்
அப்படி கழிந்தால் மட்டுமே ஒருவரால்
முக்தி அடைய முடியும்.

கர்ணன்,
தன் வாழ்நாளில்,
வாழும் காலத்தில்,
அவமானங்கள்; அசிங்கங்கள்; இழப்புகள்;
சோகங்கள்; துயரங்கள்; கவலைகள்
கண்ணீர்கள்; துரோகங்கள்;
ஆகியவற்றை வாழ்க்கையில் தாங்கி
மனதினால் வேதனைப்பட்டு
துன்பப்பட்டு; துயரப்பட்டு;
கவலைப்பட்டு; வேதனைப்பட்டு; வெட்கப்பட்டு;
கர்ம வினைகளில்
பாவப்பதிவுகளை கழித்து விட்டான்.

அவன் செய்த செயல்களால்
கிடைத்த புண்ணியம்
பற்பல பிறவிகளாக வந்த புண்ணியம்
ஆகிய மொத்த
புண்ணியப் பதிவுகளையும் கழிக்க வேண்டும்.

புண்ணியப் பதிவுகளை கழிக்க வேண்டுமானால்
உடலில் உயிர்
புத்துணர்ச்சியோடு இருக்க வேண்டும்
உயிர் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே
கர்ம வினைகளில் ஒன்றான
புண்ணியப் பதிவுகளை கழிக்க முடியும்.

போர்க்களத்தில் இறுதி கட்டத்தில்
உயிர் போகாமல்
ஊசலாடிக் கொண்டிருக்கும் தருணத்தில்
புண்ணியத்தை எப்படி கழிக்க முடியும்;
புண்ணியத்தை செயல்களின் மூலம் கழிக்க
கர்ணன் இருக்கும் நிலையில் முடியாது;
பாவத்தை தானமாகக் கொடுத்தால்
யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்;
ஆனால் புண்ணியத்தை தானமாக கொடுத்தால்
ஏற்றுக் கொள்வார்கள்;

கடவுள் மட்டுமே
பாவம் என்றாலும் ஏற்றுக் கொள்வார்;
புண்ணியம் என்றாலும் ஏற்றுக் கொள்வார்;
பாவத்தையும் புண்ணியத்தையும்
ஏற்றுக் கொள்பவர் கடவுள் மட்டுமே
கடவுள் மட்டுமே,
பாவத்தையும் புண்ணியத்தையும்
ஏற்றுக் கொள்வார்
மனிதர்கள் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அதனால் தான் கர்ணன்
புண்ணியத்தை செயல்களின் மூலம்
கழிக்க முடியாது
தற்போது இருக்கும் நிலையில்

அது முடியாது என்பதை உணர்ந்து
கொண்ட கிருஷ்ணன்
கர்ணனிடம் சென்றார்.

உன் புண்ணியங்கள் அனைத்தையும்
எனக்கு தர்மம் செய்து விடு என்கிறார்.
கர்ணனும் தன் தர்மங்களை அனைத்தையும்
கிருஷ்ணனிடம் தானம் செய்து விடுகிறான்.

இந்த இடத்தில் சில பேர் கேள்வி கேட்பார்கள்
நல்லவைகளை செய்தால் புண்ணியம் உண்டு
இறக்கும் தருவாயில் கர்ணன்
தான் செய்த  தர்மங்களின்
புண்ணியங்களை எல்லாம் தானம் செய்தால்
அதை விட பெரிய புண்ணியம் தானே
அப்படி இருக்கும் போது
கர்ணன் எப்படி இறக்க முடியும் என்று
கேள்வி கேட்பார்கள்.

ஒருவர் முக்தி அடைய வேண்டும் என்றால்,
பாவமும் கழிய வேண்டும்;
புண்ணியமும் கழிய வேண்டும்;
பாவம் மட்டும் கழிந்தால்
முக்தி அடைய முடியாது;
புண்ணியமும் கழிய வேண்டும்;
பாவம் புண்ணியம்
இரண்டும் கழிந்தால் தான்
முக்தி அடைய முடியும்.

அதனால் தான் கர்ணன்
இறக்கும் தருவாயில் இருந்தாலும்
இறக்காமல் இருக்கும்
கர்ணனிடம்
அவனுடைய புண்ணியங்கள்
அனைத்தையும் கேட்கிறான் கண்ணன்.

ஏற்கனவே கர்ணன் அனைத்து
பாவங்களையும் கழித்து விட்டான்;
புண்ணியத்தை கழித்தால்
முக்தி அடைந்து விடுவான்;
என்பதை உணர்ந்த கண்ணன்
கர்ணனுடைய புண்ணியங்களை
தானமாகக் கேட்கிறான்;
கர்ணன் தருகிறான்;
கண்ணன் வாங்கிக் கொள்கிறான்;
கர்ணன் பாவமும் புண்ணியமும் இல்லாத
வெறுமை நிலைக்கு வருகிறான்;
கண்ணன் விஸ்வரூப தரிசனம் தருகிறான்;
இரண்டறக் கலக்கிறான்;
அவன் அதுவாகவே மாறுகிறான்;
அது அவனாகிறது;

பதினெட்டு சித்தர்கள் எழுதிய பாடல்களுக்கெல்லாம்
நான் எழுதிய வால்மீகன் ஞானம்-16
என்ற பாடல்கள் தான் திறவுகோல்.
பதினெட்டு சித்தர்கள் எல்லாம்
எண்ணிலடங்கா பாடல்களை எழுதியுள்ளனர்.
கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாத
பாடல்களை எழுதி உள்ளனர்.
அது பல்வேறு துறைகளைத் தன்னுள்
கொண்ட பாடல்கள்;
அது பல்வேறு தன்மைகளைக் தன்னுள்
கொண்ட பாடல்கள்;
அது பல்வேறு ரகசியங்களைத் தன்னுள்
கொண்ட பாடல்கள்;
அது பல்வேறு நிலைகளைத் தன்னுள்
கொண்ட பாடல்கள்;
அது பல்வேறு ஆன்மீகத் தன்மைகளைத் தன்னுள்
கொண்ட பாடல்கள்;
அது பல்வேறு ஒழுக்க நிலைகளைத் தன்னுள்
கொண்ட பாடல்கள்;
அது பல்வேறு மறைபொருள்களைத் தன்னுள்
கொண்ட பாடல்கள்;

அது பல்வேறு நிலைகளில்
பெறக்கூடிய ஞானத்தை தன்னுள்
கொண்ட பாடல்கள்;
அது பல்வேறு சிந்தனைகளைத் தன்னுள்
கொண்ட பாடல்கள்;
அது பல்வேறு மருத்துவ நிலைகளைத் தன்னுள்
கொண்ட பாடல்கள்;
அது பல்வேறு வாழ்க்கை தத்துவங்களைத் தன்னுள்
கொண்ட பாடல்கள்;
அது பல்வேறு சோதிடங்களைத் தன்னுள்
கொண்ட பாடல்கள்;
அது பல்வேறு வாழ்க்கைத் தத்துவங்களைத் தன்னுள்
கொண்ட பாடல்கள்;
இந்தப் பாடல்கள் அனைத்தும்
விரிவாக இல்லாமல்,
விளக்கங்களைச் சொல்லாமல்,
ரகசியங்களை வெளிப்படுத்தாமல்,
மறைபொருளை தன்னுள் மறைத்துக் கொண்டு,
சமாதி நிலைகளைத்
தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டு,
முக்திக்கான வழிகளைத்
தன்னுள் ஒளித்து வைத்துக் கொண்டு இருக்கும்.

இவைகள் அனைத்தும்
புரியாத நிலையில்
மறைத்து வைக்கப்பட்டிருக்கும்.
இந்த புத்தகங்கள் அனைத்திலும்
ரகசியங்கள் பூட்டு போட்டு பூட்டப் பட்டிருக்கும்;
சாவி மறைக்கப்பட்டிருக்கும்;
சாவி யார் கைக்கும் கிடைக்காது;
இவ்வாறு சாவி மறைத்து வைக்கப்பட்டு
ரகசியங்கள் பூட்டு பூட்டு போடப்பட்ட நிலையில்,
யாரும் புரிந்து கொள்ள முடியாத நிலையில்,
யாரும் உணர்ந்து கொள்ள முடியாத வகையில்,
ஆன்மீக புத்தகங்களை

பதினெட்டு சித்தர்கள் எழுதி வைத்துள்ளார்கள்.
அவர்கள் எழுதி வைத்து
ரகசியமாகப் பாதுகாக்க
பூட்டு போட்டு மறைத்து வைத்திருக்கும்
புத்தகத்தின் சாவி
என்னுடைய வால்மீகர் ஞானம்-16-ல் இருக்கிறது
என்கிறார் வால்மீகர்.

என்னுடைய புத்தகமான
வால்மீகர் ஞானம்-16-ல் உள்ள 16 பாடல்கள்
ரகசியங்களை பூட்டு போட்டு வைத்திருப்பவைகளை
திறக்கும் சாவி என் பாடல்கள் ஆகும்
இதில் ரகசியங்களைத் திறக்கும் சாவி உள்ளது.
பதினெட்டு சித்தர்கள் மறைத்து வைத்திருக்கும்
ரகசியங்களை அவிழ்க்கும் திறவுகோல் உள்ளது.
இதனைப் படித்த 18 சித்தரெல்லாம் ஒன்றாய் கூடி
சிவனிடம் சென்று கோள் சொன்னார்கள்
ரகசியங்களை ரகசியமாய் வைக்காமல்
வெளிப்படையாக சொல்கிறார்;
மறைபொருளை மறைத்து வைக்காமல்
வெளிப்படையாகச் சொல்கிறார்;
கடவுளை உணரும் நிலைகளை மறைத்து வைக்காமல்
வெளிப்படையாகச் சொல்கிறார்;
கடவுளை அடையும் நிலைகளை மறைத்து வைக்காமல்
வெளிப்படையாகச் சொல்கிறார்;
கடவுளாகவே மாறும் நிலைகளை மறைத்து வைக்காமல்
வெளிப்படையாகச் சொல்கிறார்;
சமாதி என்றால் என்ன என்றும்
சமாதி அடையும் வழிகள் எவை என்றும்
சமாதி அடைவது எப்படி என்றும்
சமாதி காணுவது எப்படி என்றும்
ரகசியங்களை மறைத்து வைக்காமல்
வெளிப்படையாகச் சொல்கிறார்;
முக்தி என்றால் என்ன என்றும்
முக்தி அடைவது எப்படி என்றும்
முக்தி அடையும் வழிகள் எவை என்றும்.
முக்தி அடையும் நிலைகள் எவை என்றும்.
முக்தி உணரும் நிலைகள் எவை என்றும்.
மறைத்து வைக்காமல்
வெளிப்படையாகச் சொல்கிறார்;
பொதுவாக
ஆன்மீகத்தில் மறைத்து வைக்க வேண்டிய
மறைபொருளை மறைத்து வைக்காமல்
வெளிப்படையாகச் சொல்கிறார் - என்று
அனைத்து சித்தர்களும்
சிவம் உணர்ந்த சித்தர்களும்
பதினெட்டு சித்தர்களும்
சிவனிடம் சென்று கோள் சொன்னார்கள்
சிவன் கோபப்பட்டார்.

குறை இரண்டு விதமான தன்மைகளைத் தன்னுள் கொண்டிருக்கிறது

                ஒன்று        குறை இருந்தாலும் குறை இல்லை என்று சொல்வது
இரண்டு     குறை இல்லாவிட்டாலும் குறை என்று சொல்வது

இவர் எனக்கு பிடித்தவர்;
இவர் எனக்கு வேண்டியவர்;
இவர் எனக்கு விருப்பப்பட்டவர்;
இவரால் எனக்கு ஆதாயம் கிடைக்கும்
இவரால் எனக்கு உதவி கிடைக்கும்;
இவரால் எனக்கு விருப்பப்பட்டவைகள் கிடைக்கும்;
இவரால் என் வாழ்க்கைக்குத்
தேவையானவைகள் கிடைக்கும்;
என்று யாரை நினைக்கிறார்களோ
அத்தகையவர்கள்
அத்தகைய நிலையில் உள்ளவர்கள்
ஏதேனும் ஏழுதி அதில் தவறு இருந்தாலோ 
ஏதேனும் செயல்கள் செய்து குறை இருந்தாலோ
ஏதேனும் வேலைகள் செய்து குற்றம் இருந்தாலோ
நிறைய குற்றங்கள் இருந்தாலும்
சமுதாயம் புரிந்து கொள்ளும் வகையில்
குற்றங்கள் இருந்தாலும்
குறை இருந்தால்
குறை இல்லை என்று சொல்லும்
இந்த சமுதாயம்.

ஆனால்,
தனக்கு பிடிக்காதவர்கள்;
சமுதாயத்திற்கு உதவுபவர்கள்;
சமுதாயத்தில் நல்ல நிலையில் இருப்பவர்கள்;
சமுதாயத்தால் போற்றப்படுபவர்கள்;
சமுதாயத்தை முன்னேற்ற நினைப்பவர்கள்;
சமுதாயத்தை மாற்ற நினைப்பவர்கள்;
சமுதாயத்திற்கு உதவுபவர்கள்;
சமுதாயத்தின் வளர்ச்சிக்காக சிந்திப்பவர்கள்;
சமுதாயத்தின் நல்லவைகளுக்காக உழைப்பவர்கள்;
சமுதாயத்தால் வணங்கப்படுபவர்கள்;
சமுதாயத்தால் போற்றப்படுபவர்கள்;
சமுதாயத்தால் நினைக்கப்படுபவர்கள்
சமுதாயத்தால் சிந்திக்கப்படுபவர்கள்;
நல்லது செய்தாலும்
நல்ல எழுத்துக்களை எழுதினாலும்,
சமுதாய நன்மைக்காக
நல்ல கருத்துகளை எழுதினாலும்,
தனக்கு நன்மை இல்லை என்றால்
தனக்கு ஆதாயம் இல்லை என்றால்
அதை பொறுத்துக் கொள்ளாமல்
அவர் பேசும் பேச்சுக்களிலும்
அவர்கள் செய்யும் செயல்களில்
எந்தவித குற்றங்கள் இல்லை என்றாலும்
அவர்களிடம் தவறு உள்ளது
அவர்கள் தவறு செய்கிறார்கள் என்று
குறை கண்டுபிடிக்கும் நிலையில்
குறை இல்லாவிட்டாலும்
குறை கண்டுபிடிக்கும் நிலையில்
எப்போதும் ஒரு கும்பல்
சமுதாயத்தில் இருந்து கொண்டே இருக்கும்.


அதைப்போலத் தான்
வால்மீகரையும் கோள் சொல்லி மூட்டி விட்டது
சினந்தார் சிவன்.
சிவன் அருளினால்
இப்போது ரகசியங்களை சொல்லப்போகிறேன்
இந்த உலகத்திற்காக
இநத் உலக நன்மைக்காக
அந்த உலக மக்ககளுக்காக
என்று சொல்கிறார்.

நமது உடலில் ஒன்பது துளைகள் உள்ளன
அதை ஒன்பது ஓட்டைகள் என்றும் சொல்வர்.
நமது உடலில் உள்ள ஒன்பது ஓட்டைகள்
எவை என்பதையும்,
பத்தாவது வாசல் எது என்பதையும்,
கடவுள் நமது உடலில்
எந்த இடத்தில் இருக்கிறார் என்பதையும்,
உணர்ந்து கொள்ள வேண்டும்.
அறிந்து கொள்ள வேண்டும்.
ஒன்பது ஓட்டைகள் என்பதை
இரண்டு காதுகள்;
இரண்டு கண்கள்;
இரண்டு மூக்குத் துவாரங்கள்;
ஒரு வாய்;
மூத்திர துவாரமான ஒரு லிங்கம்;
மலதுவாரமான ஒரு குதம்;
இவைகள் தான் மனிதன் உடலில் உள்ள
ஒன்பது ஓட்டைகள்
அல்லது ஒன்பது துவாரங்கள்
அல்லது ஒன்பது துளைகள்.

இந்த ஒன்பது ஓட்டைகளும்
திறந்து இருக்கும் போது
பத்தாவது வாசலைத் தாண்டி
உள்ளே இருக்கும் கடவுளை உணர முடியாது


ஒன்பது வாசல் மூடப்படும்போது
எல்லா இடங்களிலும் நிறைந்துள்ள
இறைவனை உணர முடியும்.


இந்த ஒன்பது ஓட்டைகள் மூடினால் தான்
பத்தாவது வாசல் வழியாக
கடவுள் வெளியே வருவார்
கடவுள் பத்தாவது வாசல் வழியாக
வெளியே வர வேண்டுமென்றால்
இந்த ஒன்பது வாசல்கள்
அடைக்கப்பட்டிருக்க வேண்டும்.

கோயில் என்று எடுத்துக் கொண்டால்
அதில் எட்டு வாசல் அனைவரும்
எளிதில் காணும் படி இருக்கும்
ஒன்பது மற்றும் பத்தாவது வாசல்
கர்ப்பக் கிரகத்தில் யாரும்
எளிதில் காணும் விதத்தில் இருக்காது
யாரும் அதை எளிதில் கண்டு பிடிக்கும்
விதத்தில் இருக்காது
நான்கு கோபுரங்கள் இதில் 4 வாசல்கள்
அடுத்து நான்கு கோபுரங்கள் அதில் 4 வாசல்கள்
ஆக மொத்தம் 8 வாசல்கள்
அதனைத் தொடர்ந்து கோயிலுக்குள் சென்றால்
இரண்டு வாசல்கள் இருக்கும்
அதாவது இரண்டு அறைகளுக்கு
இரண்டு வாசல்கள் இருக்கும்.

கடவுள் சிலை  இருக்கும் அறை
கர்ப்பக் கிரகம் எனப்படும்
அந்த கர்ப்பக் கிரகம் சிலை இருக்கும் அறை
திறந்தே இருக்கும்
அதில் கதவுகள்  இருக்காது
ஆனால் வாசல் இருக்கும்
அது தான் பத்தாவது வாசல்.


அதனைத் தொடர்ந்து அடுத்த அறையில்
வாசலும்  இருக்கும்
கதவும் இருக்கும்
இது தான் ஒன்பதாவது வாசல்.

இரவு நேரத்தில்
இந்த ஒன்பது வாசலும்
மூடப்பட்டிருக்கும் நிலையில்
பத்தாவது வாசலுக்குள் இருக்கும்
இறைவன் நகர் வலம் வருவார்
அதாவது அதிகாலை 03.00 மணிக்கு
கடவுள் வருவார் என்று சொல்லப்படுகிறது
அது தான் கோயிலில் உள்ள
ஒன்பது வாசல்கள்  மூடப்பட்டிருக்கும் நிலையில்
பத்தாவது வாசலைக்
கடந்து கடவுள் வெளியே வருவார்.

ஒன்பது வாசல்கள்
அதாவது
4 கோபுரத்தில் உள்ள 4 வாசல்கள்
அடுத்த 4 கோபுரத்தில் உள்ள 4 வாசல்கள்
ஆக மொத்தம் எட்டு வாசல்கள்
கர்ப்பக் கிரகம் வைக்கப்பட்டுள்ள
அறையை ஒட்டி உள்ள அறையில் உள்ள
ஒரு அறையில் உள்ள வாசல்
ஆக மொத்தம் 9 வாசல்கள்
இந்த 9 வாசல்களும்
திறந்து இருக்கும் போது
பத்தாவது வாசல் வழியாக
கடவுள் வெளியே வர மாட்டார்ர்
கடவுள் கோயிலின் உள்ளேயே இருந்து
பக்தர்களுக்கு அருள் வழங்குவார்.

கோயிலின் இந்த
ஒன்பது வாசல்களும்
அடைக்கப்பட்ட நிலையில்
கடவுள் அதிகாலையில்
பக்தர்களுக்கு அருள் வழங்க
வெளியே வருவார்.

ஒன்பது வாசல் அடைக்கப்பட்டால்
பத்தாவது வாசல் வழியாக
கடவுள் வெளியே வருவார்
கடவுள் வர வேண்டுமென்றால்
ஒன்பது வாசல்
அடைக்கப்பட்டிருக்க வேண்டும்.
இதே தான் நம் உடலிலும் நடைபெறுகிறது
நமது உடலில் உள்ள
ஒன்பது ஓட்டைகளும்
அதாவது
ஒன்பது துளைகளும்
அடைக்கப்பட்டால்
பத்தாவது வாசல் வழியாக
கடவுள் வெளியே வந்து
நம்மை ஆசிர்வதிப்பார்
அல்லது
ஒன்பது ஓட்டைகளையும்
நாம் அடைத்து
பத்தாவது வாசலைத் திறந்து
நாம் உள்ளே சென்றால்
இறைவன் அருள் வழங்குவார்
என்பது பொருளாகும்.

அந்த பத்தாவது வாசலைத் தாண்டி
கடவுள் எங்கே இருக்கிறார்;
நமது உடலில்
கடவுள் எந்த இடத்தில் இருக்கிறார்;
எந்த நிலையில் இருக்கிறார்;
அவரை அடையக்கூடிய நிலைகள் என்ன,
அவரை உணரக் கூடிய தன்மைகள் என்ன,
என்பதை உணர்ந்தால் மட்டுமே
கடவுள் நம் உடலில்
எந்த இடத்தில் இருக்கிறார்

அவரை அடையக்கூடிய வழிகள் என்ன
என்று உணர்ந்தால் மட்டுமே
நாம் கடவுளை அடைய முடியும்
கடவுள் அருளைப் பெற முடியும்
கடவுள் நிலை அடைய முடியும்
அதைத் தான்
வால்மீகர் சொல்கிறார்.

நாக்குவாய் செவி மூக்கு மத்திக்கப்பால்
என்பது தான்
கடவுள் இருக்கும் இடம்.

உச்சந்தலையில் இருந்து நேர் கீழே
ஒரு கோடு கற்பனையாக வரைய வேண்டும்
இரண்டு செவிகளையும் இணைக்கும் வண்ணம்
இரண்டு செவிகளுக்குள்ளும் செல்லும் வகையில்
கற்பனையாக ஒரு கோடு போட வேண்டும்
நெற்றிக் கண்ணிலிருந்து நேராக பின்னோக்கி
உள்நோக்கி பின்தலை வரை உள்நோக்கி
கற்பனையாக ஒரு கோடு போட வேண்டும்
இந்த மூன்று கோடுகளும் உட்புறத்தில்
ஒரு புள்ளியில் சந்திக்கும்
இந்த மூன்று புள்ளிகளும் உள்ளே
உட்புறத்தில் சந்திக்கும்
இடம் தான் முச்சந்தி எனப்படும்
இது தான் மையம்.

இந்த முச்சந்திக்கு அப்பால்
முச்சந்திக்கு சற்று மேலே தான்
இறைவன் இருக்குமிடம் ஆகும்.
அதாவது  இறைவன்
அந்த  இடத்தில் இருக்கிறான்.
இது தான்
நாக்குவாய் செவி மூக்கு மத்திக்கப்பால்
என்பதற்கான பொருள்.


அங்கு தான் இறைவன் இருக்கிறான்
இறைவன் இருக்குமிடம்
நாக்குவாய் செவி மூக்கு மத்திக்கப்பால்
ஆகும்.

நாக்குவாய் செவி மூக்கு மத்திக்கப்பால்
உள்ள பரமாத்மாவுடன்
ஜீவாத்மா இணைந்தவுடன் அது அதுவாகிறது
ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைய வேண்டுமானால்
ஜீவாத்மா தன் கர்மா அனைத்தையும் கழிக்க வேண்டும்
ஜீவாத்மா தன் கர்மா அனைத்தையும் கழிக்காவிட்டால்
ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைய முடியாது
ஜீவாத்மா கர்மாக்களை கழித்தால் மட்டுமே
ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணையும்.

ஜீவாத்மா தன் கர்மாக்களை கழிக்க வேண்டுமானால்
அதற்கு பயன்படுத்தப்படும்
ஒரு முறை தான் வாசியோகம்.
வாசியோகம் கர்மாக்களை கழிக்கும்
ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது.
வாசியோகம் செய்ய செய்ய
கர்மாக்கள் படிப்படியாக கழிய ஆரம்பிக்கிறது.

பரமாத்மாவில் இருந்து பிரிந்த
ஜீவாத்மா பிராணனானாக உள்ளேயும்
அபானனாக வெளியேயும் ஓடுகிறது.
அப்படி வெளியில் போகின்ற அபானனை
வெளியில் போக விடாமல்
பிராணனுடன் சேர்த்து உள்ளிலேயே
ஒரே நிலையாய் நேராக நடத்த வேண்டும்
தலையில் இருக்கும் துவாரங்கள்
வழியாக அபானன் வெளியே செல்கிறது
வளைந்து நெளிந்து வெளியே செல்கிறது
பிராணன் நேராக உள்ளுக்குள் ஓடாமல்
வளைந்து துவாரங்கள் வழியாக
வெளியே செல்கிறது.

அப்படி வெளியே போகின்ற அபானனை
வெளியே போக விடாமல் தடுத்தி நிறுத்தி 
தன் உள்ளேயே அடக்கி
மேலும் கீழுமாக ஒரே கதியாய்
நாம் ஓட விடும்போது
கீழ் மேல் ஒரே கதியாய் வரும்போது
பிராணன் நேரே ஆகின்றது
அபானனை வெளியே விடாமல்
பிராணனுடன் சேர்ந்து மேலே கொண்டு
செல்லும்போது
நேரே ஆகின்றது.
இதைத் தான் வாசியோகம்
என்கிறோம்
வாசியோகம் இந்த நிலையில் தான்
செய்யப்படுகிறது
வாசியோகம் இந்த நிலையில் தான்
பயிற்சி செய்யப்படுகிறது.
வாசியோகம் இந்த நிலையில் தான்
செய்ய வேண்டும்

பிராணன் நேராக ஆகும்
பிராணன் நேராக மாறும்
அந்த நிலையைத் தான்
நடுவீதி என்கிறோம்

குய்ய முதல் உச்சி தொட்டு என்றால்
பிராணனானது
குய்ய முதல் உச்சி வரை சென்று
பிரம்மரந்திரத்தை தட்டி
பிரம்மரந்திரம் திறப்பதற்கான
நிலைகளை உருவாக்கும் என்று பொருள்

நடுவீதி குய்ய முதல் உச்சி தொட்டு என்றால்
பிராணனானது
மேலும் கீழும் இயங்கி
நேராக மாற்றப்பட்டால்

குய்யம் முதல் உச்சி வரை
நேராக மாற்றப்பட்டு
இயங்கிக் கொண்டிருக்கும் பிராணனானது
பிரம்மந்திரத்தை தட்டும்.

அது மட்டுமில்லாமல்
"அங்" என்ற மந்திரத்தை
நன்றாக சத்தமிட்டு
வாய் விட்டு சொல்லிப் பாருங்கள்
அது நேராக பிரம்மரந்திரத்தை
சென்று முட்டும்;
சென்று மோதும்;

வாசியோகத்தை மட்டும் செய்யாமல்
அங் என்ற மந்திரத்தை
நன்றாக வாய்விட்டு உச்சரிப்போமேயானால்
பிராணன் பிரம்மரந்திரத்தை தட்டி
முட்டி மோதி
பிரம்மரந்திரம் திறப்பதற்கான
வழிமுறைகளை ஏற்படுத்தி
பரமாத்மாவுடன் இணைவதற்கான
நிலைகளை உருவாக்கும்

தாயார் என்பது
சக்தியைக் குறிக்கும்
சக்தி என்பது
இயக்க நிலையில் உள்ளவைகளைக் குறிக்கும்
ஒரு செயலைச் செய்ய வேண்டுமென்றால்
சக்தி தேவை
சக்தி இல்லை என்றால்
எந்த ஒரு செயலையும் செய்ய முடியாது
எந்த ஒரு பொருளும் இயங்க சக்தி தேவை.
அந்த சக்தியைத் தான்
நாம் தாய்
என்கிறோம்.


தாயார் என்பது,
இயங்கிக் கொண்டிருக்கும்
இயக்க நிலையில் இருக்கும்
பிராணனைக் குறிக்கும்.
தாயாரைப் பூசித்து வேதம் ஓது என்றால்,
இயங்கிக் கொண்டிருக்கும் பிராணனை
நேராக ஓட வைக்க
மேலும் கீழும் பிராணனை
ஓட வைத்து  நேராக மாற்றி
பிரம்மந்திரத்தை தட்டி திறப்பதற்கான வழிமுறைகளை
வாசியோகத்தின் மூலம் மட்டும் செய்யாமல்,
அங் என்ற மந்திரத்தை தொடர்ந்து வாய் விட்டு
ஓதுவதன் மூலம்
பிரம்மரந்திரம் எளிதான திறப்பதற்கான
நிலைகளையும் உருவாக்கும் என்று பொருள்

அமைதி நிலையில்,
வாசியை செய்யும் போது
என்ன என்ன மாற்றங்கள்
நம் உடலில்நம் உயிரில்; நம் வாழ்க்கையில்;
நடைபெறுகிறது
என்பதைக் கவனிக்க வேண்டும்

எந்தவிதமான மாற்றங்கள்
நம் உடலில்; நம் உயிரில்; நம் வாழ்க்கையில்;
நடைபெறுகிறது என்று
தெரிந்து கொண்டால் மட்டுமே
நம்மால் வாசி எவ்வாறு செயல்படுகிறது என்பதையும்
வாசியின் மகத்துவம் என்ன என்பது பற்றியும்
வாசியின் உயர் நிலைகள் என்ன என்பது பற்றியும்
தெரிந்து கொள்ள முடியும்.

எண்ணம், சொல், செயல் அனைத்தையும்
வாசியின் மேல் வைக்க வேண்டும்
அப்பொழுது தான்
மனம் விழிப்பு நிலையில் இருக்கும்.

அப்பொழுது தான் வாசியோகத்தால்
ஜீவாத்மா தன் கர்மாவைக் கழிப்பதை
நாம் நன்றாக உணர முடியும்.
வாசியோகத்தை முறையாகச் செய்ய செய்ய
ஜீவாத்மா தன் கர்மாவைக் கொஞ்சம்
கொஞ்சமாக கழிக்கிறது.
ஜீவாத்மா கர்மாவைக் கழித்து
தூய்மை அடைந்தவுடன்
ஜீவாத்மா பத்தாவது வாசலைக் கடந்து
ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைகிறது
ஜீவாத்மா பரமாத்மாவாகவே மாறுகிறது
என்கிறார் வால்மீகி.


இயேசு கிறிஸ்து - வால்மீகி :

இயேசு கிறிஸ்து,
நம்முடன் வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள்
கூறிய வார்த்தைகளின்
அர்த்தங்களை புரிந்து கொள்ளவில்லை எனில்
நம்மால் மறைபொருளாக
வைக்கப்பட்ட ரகசியங்களை புரிந்து கொள்ள முடியாது
மறை பொருளை அடைய முடியாது
என்கிறார் இயேசு.
அவ்வாறே,
வால்மீகரும்
உண்மைப் பொருள் உணர்ந்து
உண்மைப் பொருளை உரைத்த
உண்மைகளின்
உண்மை வார்த்தைகளின் அர்த்தங்களை
உணர்ந்து கொள்ள
நம்மால் முடியவில்லை எனில்
நம்மால் உண்மைப் பொருளை உணர்ந்து
உண்மை நிலையை அடைய முடியாது
என்கிறார்.



""""போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                               போற்றினேன் பதிவுஎழுபத்துஎட்டுந் தான்முற்றே""""






















No comments:

Post a Comment