April 10, 2021

பதிவு-5-முயற்சி- பழமொழி

 

பதிவு-5-முயற்சி-

பழமொழி

 

தண்ணீரை

பம்பில்

ஊற்றலாமா

வேண்டாமா

என்ற

கேள்விகள்

அவன் மனதில்

எழுந்த வண்ணம்

இருந்தது

காலம் போய்க்

கொண்டே

இருந்தது

 

வாழ்வோ

சாவோ

நான் அந்தத்

தண்ணீரை

பம்பில் ஊற்றி

முயற்சி செய்து

பார்க்கலாம்

தண்ணீர்

வந்தால்

பலன்

கிடைத்தது

என்று

எடுத்துக்

கொள்ளலாம்

தண்ணீர்

வரவில்லை

என்றால்

அனுபவம்

கிடைத்தது

என்று

எடுத்துக்

கொள்ளலாம்

 

முயற்சி

செய்தால்

இரண்டில்

ஒன்று

கிடைக்கும்

ஏமாற்றம்

ஒன்று

கிடைக்காது

என்று முடிவு

எடுத்தான்

 

தண்ணீரை

அந்தப் பம்பில்

ஊற்றினான்

அடித்தான்

அடித்தான்

சிறிது நேரம்

தண்ணீர்

வரவில்லை

இருந்தும்

அந்தப் பயணி

அடித்தான்

பம்பை

அடித்தான்

தண்ணீர் வரத்

தொடங்கியது

தண்ணீரை

எடுத்தான்

தாகம்

தீரும் வரை

குடித்தான்

தன்னுடைய

பிரயாணத்திற்கு

தேவையான

அளவு

தண்ணிரை

நிரப்பி

எடுத்துக்

கொண்டான்

அந்த ஜக்கில்

மீண்டும்

தண்ணீரை

நிரப்பி

வைத்தான்

மீண்டும்

அந்த

அட்டையை

அந்த பம்பின்

கழுத்தில்

தொங்க விட்டு

சென்றான்

 

முயற்சியுடையார்

இகழ்ச்சி

அடையார்

என்றால்

முயற்சி

செய்பவருக்கு

வெற்றி

கிடைத்தால்

முன்னேற்றமும்

தோல்வி

கிடைத்தால்

அனுபவமும்

ஆக மொத்தம்

இரண்டில்

ஒன்று

கிடைக்கும்

ஏமாற்றம்

என்ற

ஒன்று

கிடைக்காது

என்பது தான்

பொருள்

 

-------முயற்சி பழமொழி

அர்த்தம் நிறைவு

 

-------என்றும் அன்புடன்

--------எழுத்தாளர்

K.பாலகங்காதரன்

 

--------- 10-04-2021

////////////////////////////////

பதிவு-4-முயற்சி- பழமொழி

 பதிவு-4-முயற்சி-

பழமொழி

 

பம்பின் கழுத்தில்

ஒரு அட்டையில்

வாசகம் எழுதி

மாட்டப்பட்டிருந்தது

அந்த அட்டையில்

“ஜக்கில் உள்ள

தண்ணீரை

இந்தப் பம்ப்

செட்டில் ஊற்றி

அடித்தால்

தண்ணீர் அதிக

அளவில் வரும்

தேவையான

அளவிற்கு

குடித்து விட்டு

பிரயாணம்

செய்யும்

அளவிற்கு

எடுத்துக்

கொண்டு

மறுபடியும்

ஜக்கில்

தண்ணீரை

நிரப்பி வைத்து

விட்டுச்

செல்லவும்

உன்னைப் போல

தாகத்துடன்

வரும் ஒரு

மனிதனுக்காக”

என்று எழுதி

வைக்கப்பட்டிருந்தது

 

அந்த பம்ப் செட்

மிகவும்

பழமையானதாக

இருந்தது அந்தத்

தண்ணீரை

ஊற்றினால்

அது இயங்குமா

தண்ணீர் வருமா

என்பது

அவனுக்கு

சந்தேகமாக

இருந்தது

அது இயங்கா

விட்டால் அந்தத்

தண்ணீர் வீணாகி

விடும். அதற்குப்

பதிலாக அந்தத்

தண்ணீரை

குடித்து விட்டால்

தாகமும் தணியும்,

உயிர்

பிழைப்பதற்கு

உத்திரவாதமும்

உள்ளது.

 

ஜக்கில் உள்ள

தண்ணீரைக்

குடித்து

விடலாமா

அல்லது

அந்த பம்ப்

செட்டில்

ஊற்றி

அடிக்கலாமா

என்று

அந்தப்

பயணி

யோசித்தான்

 

வாழ்க்கையில்

எல்லோருக்கும்

இதைப்

போல ஒரு

சூழ்நிலை வரும்

என்ன முடிவு

எடுப்பது என்று

திண்டாடக் கூடிய

நிலை வரும்.

வாழ்வா

சாவா

என்று

யோசிக்கக் கூட

முடியாத

நிலை வரும்

இத்தகைய

நிலைகள்

வாழ்க்கையில்

எப்போதாவது

ஒரு தடவை

தான் வரும்

இத்தகைய

நிலையில்

எடுக்கும்

முடிவானது

நம்முடைய

வாழ்க்கையையே

மாற்றக்

கூடியதாக

இருக்கலாம்

இத்தகைய

நிலையில்

துணிந்து

முடிவு எடுத்து

முயற்சி

செய்தவர்கள் தான்

வாழ்க்கையில்

உயர்ந்த

நிலையை

அடைந்து

இருக்கிறார்கள்

 

காலத்தை

வென்று

நிற்பவர்கள்

அனைவருமே

வாழ்வா சாவா

என்ற நிலை

வந்த போது

எது வந்தாலும்

பரவாயில்லை

என்று

முயற்சி

செய்தவர்கள்

தான்

 

அந்தப் பயணி

யோசித்தான்

அந்தத்

தண்ணீரை

அந்தப் பம்பில்

ஊற்றி தண்ணீர்

அடித்தால்

தேவையான

தண்ணீர் வரும்

அந்தத்

தண்ணீரைக்

குடிப்பதன் மூலம்

தன்னுடைய

உயிர்

காப்பாற்றப்படும்

அந்தத்

தண்ணீரை

அந்தப் பம்பில்

ஊற்றி

தண்ணீர்

வரவில்லை

என்றால்

ஜக்கில் இருந்த

தண்ணீரும்

வீணாகி சாக

வேண்டியது தான்

 

-------என்றும் அன்புடன்

--------எழுத்தாளர்

K.பாலகங்காதரன்

 

--------- 10-04-2021

////////////////////////////////

 

பதிவு-3-முயற்சி- பழமொழி

 

பதிவு-3-முயற்சி-

பழமொழி

 

வெற்றி கிடைத்தால்

நாம் உழைத்த

உழைப்பிற்கு

பலன் கிடைத்தது

என்று எடுத்துக்

கொள்ள வேண்டும்

தோல்வி கிடைத்தால்

அனுபவம் கிடைத்தது

என்று எடுத்துக்

கொள்ள வேண்டும்

 

வெற்றி கிடைத்தால்

அதைப் பயன்படுத்தி

அடுத்த நிலைக்கு

செல்ல ஒரு

தூண்டுகோலாக

இருக்கும்

தோல்வி கிடைத்தால்

தவறு எதனால்

ஏற்பட்டது அதில்

உள்ள குறைகள்

எவை என்பதை

அறிந்து அதனை

சரி செய்து வெற்றி

கிடைப்பதற்காக

அடுத்த கட்ட

செயல்களைச் செய்ய

ஒரு வாய்ப்பு

கிடைத்திருக்கிறது

என்று எடுத்துக்

கொள்ள வேண்டும்

 

ஆக மொத்தம்

வெற்றி கிடைத்தாலும்

தொல்வி கிடைத்தாலும்

நாம் ஒன்றை

அறிந்து கொள்வதற்கு

நல்ல வாய்ப்பாக

அமையும்

இது முயற்சி

செய்தால் மட்டும்

தான் கிடைக்கும்

 

முயற்சி செய்தால்

ஏமாற்றம் என்ற

ஒன்று கிடைக்காது

அதாவது

முயற்சி செய்தால்

வெற்றி

அல்லது

தோல்வி

இரண்டில்

ஒன்று கிடைக்கும்

முயற்சி செய்யும்

போது வெற்றி

கிடைத்தால்

உழைத்த

உழைப்பிற்கு பலனும்,

அடுத்த கட்டத்திற்கு

செல்லும்

நிலையும் ஏற்படும்

முயற்சி

செய்யும் போது

தோல்வி கிடைத்தால்

பிழைகளை சரி

செய்து மேல்

நிலைக்கு செல்ல

ஒரு வாய்ப்பாக

அமையும்

ஆகவே

முயற்சி செய்தால்

வெற்றி அல்லது

தோல்வி இரண்டில்

ஒன்று கிடைக்கும்

என்பதை நினைவில்

கொள்ள வேண்டும்

 

ஏமாற்றம் என்ற

ஒன்று கிடைக்காது

என்ற காரணத்தினால்

தான் முயற்சியுடையார்

இகழ்ச்சி அடையார்

என்றார்கள்

 

முயற்சியுடையார்

இகழ்ச்சி அடையார்

என்றால்

முயற்சி செய்தால்

வெற்றி கிடைக்கும்

என்று பொருள்

எடுத்துக்

கொள்ளக் கூடாது

 

முயற்சியுடையார்

இகழ்ச்சி அடையார்

என்றால்

முயற்சி செய்தால்

தோல்வி கிடைக்காது

என்று பொருள் எடுத்துக்

கொள்ளக் கூடாது.

 

முயற்சி செய்தால்

வெற்றி அல்லது

தோல்வி கிடைக்கும்

இரண்டின் மூலம்

ஏதேனும் ஒரு

படிப்பினை

நமக்குக் கிடைக்கும்

ஏமாற்றம் என்ற

ஒன்று கிடைக்காது

என்பது தான்

முயற்சியுடையார்

இகழ்ச்சி அடையார்

என்பதற்கான அர்த்தம்

 

இந்தக் கதையைப்

படியுங்கள்

 

பாலைவனத்தில்

பயணம் செய்து

கொண்டிருந்தான்

ஒருவன்.

அவன் கொண்டு

வந்திருந்த தண்ணீர்

முழுவதும்

தீர்ந்து விட்டது

அவன் போக

வேண்டிய தூரமோ

அதிகமாக இருந்தது

குடிக்கத் தண்ணீர்

இல்லாமல் அவனால்

பிரயாணம் செய்ய

முடியவில்லை

அவன் மயங்கி

விழும் நிலைக்கு

வந்து விட்டான்

இந்தப்

பாலைவனத்திலேயே

தாகத்தால் உயிரை

விட்டு விடுவோமோ

என்று நினைத்துக்

கொண்டு

இருந்த நேரத்தில்

தூரத்தில் ஒரு

குடிசை போல

ஏதோ ஒன்று அவன்

மங்கிய கண்ணில்

நிழலாடியது

 

கால்களை நகர்த்தவே

மிகவும் கஷ்டப்பட்ட

அவன் அங்கு

சென்றால் தண்ணீர்

கிடைக்கும் என்ற

நம்பிக்கையில்

அந்த இடத்திற்கு

கஷ்டப் பட்டு

சென்று விட்டான்

அங்கே ஆட்கள்

யாரும் இல்லை

ஒரு கையால் அடித்து

இயக்கும் பம்ப் செட்டும்

அருகே ஒரு ஜக்கில்

தண்ணீரும் இருந்தன.

 

-------என்றும் அன்புடன்

--------எழுத்தாளர்

K.பாலகங்காதரன்

 

--------- 10-04-2021

////////////////////////////////

பதிவு-2-முயற்சி- பழமொழி

 

பதிவு-2-முயற்சி-

பழமொழி

 

சிலர் சொல்வார்கள்

இவர்களைத் தவிர்த்து

மற்றவர்கள்

சரியானபடி

முயற்சி

செய்யவில்லை என்று

அது என்ன

சரியான முயற்சி

என்று தெரியவில்லை

இவர்கள் சரியான

முயற்சி செய்தால்

மற்றவர்கள் தவறான

முயற்சி செய்தார்கள்

என்று தானே அர்த்தம்

 

முயற்சியில்

அது என்ன

சரியான முயற்சி

தவறான முயற்சி

என்று தெரியவில்லை

 

முயற்சி என்றால்

ஒன்றே ஒன்று தான்

அது முயற்சி

மட்டும் தான்

முயற்சியில்

சரியான முயற்சி

தவறான முயற்சி

என்று எதுவும்

இல்லை

 

சிலர் எனக்கு

கெட்ட கோபம் வரும்

என்று சொல்வார்கள்

கெட்ட கோபம் என்ற

ஒன்று உண்டு

என்றால்

நல்ல கோபம்

என்ற ஒன்று

உண்டு அல்லவா

 

அது என்ன கோபத்தில்

நல்ல கோபம்

கெட்ட கோபம்

என்று தெரியவில்லை

கோபம் என்றாலே

கெட்டது தான்

தவறானது தான்

 

கோபத்தில்

நல்ல கோபம்

கெட்ட கோபம்

என்ற

ஒன்றும் இல்லை

கோபம் என்றால்

ஒன்றே ஒன்று தான்

அது கோபம்

மட்டும் தான்

 

அதைப் போல

சரியான முயற்சி

தவறான முயற்சி

என்று

எதுவும் இல்லை

முயற்சி என்றால்

ஒன்றே ஒன்று தான்

அது முயற்சி

மட்டும் தான்

 

இந்த பழமொழியில்

முயற்சி செய்ய

வேண்டும் என்று

சொல்கிறார்கள்

முயற்சி செய்தால்

என்ன கிடைக்கும்

என்று சொல்கிறார்கள்

இந்தப் பழமொழியில்

முயற்சி செய்தால்

என்ன கிடைக்கும்

என்று சொல்லி

இருக்கிறார்கள்

 

முயற்சியுடையார்

தோல்வி அடையார்

என்று சொல்லி இருந்தால்

முயற்சி செய்தால்

வெற்றி கிடைக்கும்

என்று பொருள்

எடுத்துக் கொள்ளலாம்

 

முயற்சியுடையார்

வெற்றி அடைவார்

என்று

சொல்லி இருந்தால்

முயற்சி செய்தால்

தோல்வி கிடைக்காது

என்று பொருள்

எடுத்துக் கொள்ளலாம்..

 

ஆனால் அவ்வாறு

சொல்லவில்லை

முயற்சியுடையார்

இகழ்ச்சி அடையார்

என்று

சொல்லப்பட்டிருக்கிறது

ஏன் அவ்வாறு

சொல்ல வேண்டும்

 

முயற்சி செய்தால்

இரண்டு விஷயங்கள்

தான் கிடைக்கும்

வெற்றி கிடைக்கும்

அல்லது

தோல்வி கிடைக்கும்

இரண்டில் ஒன்று

தான் கிடைக்கும்

 

இந்தப் பழமொழியில்

இகழ்ச்சி என்ற

சொல்லுக்கு

ஏமாற்றம் என்று

பொருள் கொள்ள

வேண்டும்

 

இகழ்ச்சியடையார்

என்றால்

ஏமாற்றம் அடைய

மாட்டார் என்று

பொருள் கொள்ள

வேண்டும்

 

முயற்சியுடையார்

இகழ்ச்சி அடையார்

என்றால்

முயற்சி செய்பவர்

ஏமாற்றம்

அடைய மாட்டார்

என்று பொருள்

கொள்ள வேண்டும்

 

முயற்சி செய்பவர்

எப்படி ஏமாற்றம்

அடைய மாட்டார்

என்ற கேள்வி

எழுகிறது

ஆமாம் முயற்சி

செய்பவர் ஏமாற்றம்

அடைய மாட்டார்

என்பது சரியான

வார்த்தை தான்

 

இந்த உலகத்தில்

உள்ள யாரை

எடுத்துக் கொண்டாலும்

அவர் எந்த

ஒரு செயலைச்

செய்ய முயற்சி

எடுத்தாலும்

அந்த செயலின்

மூலம் இரண்டே

இரண்டு விஷயங்கள்

தான் நடக்கும்

வெற்றி கிடைக்கும்

அல்லது

தோல்வி கிடைக்கும்

இரண்டில் ஒன்று

தான் கிடைக்கும்

இரண்டில்

ஒன்று தான்

கண்டிப்பாக கிடைக்கும்

இந்த இரண்டைத் தவிர

வேறு எந்த

ஒன்றும் கிடைக்காது

 

-------என்றும் அன்புடன்

--------எழுத்தாளர்

K.பாலகங்காதரன்

 

--------- 10-04-2021

////////////////////////////////