October 19, 2018

திருக்குறள்-பதிவு-36



                      திருக்குறள்-பதிவு-36

“”””உலகத்தோடு ஒட்ட
ஒழுகல் பலகற்றும்
கல்லார்
அறிவிலா தார்””””

தானும், தனது
குடும்பமும்
இந்த உலகத்தில்
மகிழ்ச்சியாக
வாழ வேண்டும்
என்று நினைப்பவர்கள்
இரண்டு நிலைகளைப்
பின்பற்ற வேண்டும்

ஒன்று
எந்த இடத்தில்
முட்டாளாக இருக்க
வேண்டுமோ அந்த
இடத்தில் முட்டாளாக
இருக்க வேண்டும்

இரண்டு
எந்த இடத்தில்
அறிவாளியாக இருக்க
வேண்டுமோ அந்த
இடத்தில் அறிவாளியாக
இருக்க வேண்டும்

ஒரு ஊரில் ஆண்கள்
யாரும் கோவணம்
கட்டுவதில்லை
இந்த விஷயத்தை
அறியாது அந்த
ஊருக்கு புதியதாக
வரும் ஒருவர்
கோவணம் கட்டிக்
கொண்டு அந்த ஊருக்குள்
நடந்து செல்கிறார்
அவரை பார்க்கும்
அந்த ஊரில் உள்ளவர்கள்
அனைவரும் அவரைப்
பார்த்து சிரிக்கின்றனர்
பைத்தியக்காரன்
கோவணம் கட்டி
இருக்கிறான் பார்
அவனுக்கு அறிவு
என்பதே இல்லை
என்று கிண்டல்
கேலி செய்கிறார்கள்
அவமானப்படுத்துகிறார்கள்

முட்டாள்கள் கூடி
முட்டாள்தனமாக
ஒரு விஷயத்தை
செய்யும் போது
நாமும் முட்டாள்களுடன்
முட்டாளாக இருந்து
கோவணம்
கட்டாமல் இருந்தால்
நாமும், நம்முடைய
குடும்பமும் நிம்மதியாக
வாழ முடியும்
நான் அறிவாளி
கோவணம் கட்டிக்
கொண்டு தான் செல்வேன்
என்று சென்றால் நாம்
நிம்மதியாக வாழ முடியாது

நாமும், நம்முடைய
குடும்பமும் நிம்மதியாக
வாழ வேண்டுமானால்
எந்த இடத்தில் முட்டாளாக
இருக்க வேண்டுமோ
அந்த இடத்தில்
முட்டாளாக இருந்து
தான் ஆக வேண்டும்
அந்த இடத்தில்
அறிவாளியாக
இருக்கக் கூடாது

இது தான் கோவணம்
கட்டாத ஊரில்
கோவணம் கட்டியவன்
பைத்தியக்காரன்
என்பதற்கு அர்த்தம்

நாம் பள்ளியில்
படித்துக் கொண்டிருக்கிறோம்
அப்பொழுது
அனைவரும் போட்டி
போட்டுக் கொண்டு
வாழ்க்கையில்
நல்ல வேலை
நல்ல சம்பளம்
கிடைக்க வேண்டுமானால்
நன்றாக படித்து
அதிக அளவில்
மதிப்பெண்கள் எடுக்க
வேண்டும் என்ற
நினைப்பில் அனைவரும்
போட்டி போட்டுக் கொண்டு
படிக்கும் போது
நாமும் அவர்களுடன்
போட்டி போட்டுக்
கொண்டு படித்து
அதிக மதிப்பெண்கள்
எடுத்து நாம்
அறிவாளி என்பதை
நிரூபிக்க வேண்டும்
இந்த இடத்தில்
அறிவாளியாக
இருக்க வேண்டும்
முட்டாளாக
இருக்கக் கூடாது

நாமும், நம்முடைய
குடும்பமும் நிம்மதியாக
வாழ வேண்டுமானால்
எந்த இடத்தில்
அறிவாளியாக இருக்க
வேண்டுமோ
அந்த இடத்தில்
அறிவாளியாக இருந்து
தான் ஆக வேண்டும்
அந்த இடத்தில்
முட்டாளாக
இருக்கக் கூடாது

தானும், தனது
குடும்பமும் நிம்மதியாக
உலகத்தில் உள்ள
மக்களோடு ஒன்று
பட்டு நிம்மதியாக
வாழ வேண்டும்
என்று நினைப்பவர்கள்
எந்த இடத்தில்
முட்டாளாக இருக்க
வேண்டுமோ
அந்த இடத்தில்
முட்டாளாக இருக்க
வேண்டும்
எந்த இடத்தில்
அறிவாளியாக இருக்க
வேண்டுமோ அந்த
இடத்தில் அறிவாளியாக
இருக்க வேண்டும்
என்பதை
உணராமல்
இருப்பவர்கள்
பலபுத்தகங்களைப்
படித்து பெற்ற
படிப்பறிவு மற்றும்
அனுபவத்தின்
மூலம் பெற்ற
பட்டறிவு
ஆகிய இரண்டு
அறிவினாலும்
ஒரு பயனும் இல்லை
என்பதைத் தான்

“”உலகத்தோடு ஒட்ட
ஒழுகல் பலகற்றும்
கல்லார்
அறிவிலா தார்””

என்ற திருக்குறளின்
மூலம் நமக்கு
தெரியப்படுத்துகிறார்
திருவள்ளுவர்

---------  இன்னும் வரும்
---------  19-10-2018
////////////////////////////////////////////////