February 28, 2019

திருக்குறள்-பதிவு-114


                  திருக்குறள்-பதிவு-114

“ ஜியார்டானோ
புருனோவின் முழுஉருவ
வெண்கல சிலை
மூன்று முக்கியமான
கூறுகளைத் தன்னுள்
கொண்டதாக இருக்கிறது “

“ ஜியார்டானோ
புருனோவின் சிலை
அனைவரையும் ஈர்த்து
விடும் வகையில்
அமைந்து இருப்பதோடு
மட்டுமல்லாமல் - அந்த
சிலையைப் பார்ப்பவர்கள்
நின்று பார்த்து அதன்
பெருமையை உணர்ந்து
கொள்ள வேண்டும் என்ற
நினைப்பை தூண்டும்
விதத்திலும் அமைந்து
இருப்பது இந்த
சிலையின் சிறப்பாகும் “

“ ஜியார்டானோ
புருனோவின் சிலையை
மக்கள் பார்க்கும்போது
அவர்களுடைய மனதில்
ஜியார்டானோ புருனோ
நிறைய தன்னம்பிக்கைகளை
கொண்ட ஒரு மனிதராகவும்
அஞ்சா நெஞ்சத்தையுடைய  
ஒரு மனிதராகவும் தெரிகிறார் “

 “ உலகில் உள்ள
பெரும்பாலான சிலைகளின்
தலை மேல் நோக்கி
வானத்தை நோக்கி
பார்த்த வண்ணம் இருக்கும் ;
அல்லது தலை நேராக
இந்த உலகத்தை பார்த்தபடி
இருக்கும்  ; - ஆனால்
ஜியார்டானோ புருனோவின்
சிலை இதிலிருந்து
மாறுபட்டு தலை கவிழ்ந்த
நிலையில் இருக்கிறது ;
அதாவது ஜியார்டானோ
புருனோ தான் சொன்ன
உண்மைகள் மக்களுக்கு
புரிந்திருக்கிறதா ? என்ற
சிந்தனையுடன் மக்களை
பார்க்கும்படியான
நிலையில் இருக்கிறது ;
அதேபோல் மக்கள் அவர்
சொன்ன கருத்துக்கள்
அனைத்தும்
உண்மையானதாக
இருக்குமோ  ? என்று
தலையை மேல் நோக்கி
ஆச்சரியத்துடன் அவரை
வியந்து பார்க்கும்
வண்ணம் சிலை
அமைந்து இருக்கிறது ; “

“ தன்னுடைய கருத்துக்கள்
எவ்வளவு தூரம் மக்களை
சென்று அடைந்திருக்கிறது
என்ற பதில் தெரியாத
கேள்விக் குறியுடன்……?
ஜியார்டானோ புருனோ
இருக்கிறார் என்பதைக்
குறிக்கும் வகையில்
ஜியார்டானோ
புருனோவின் முகம்
ஏதோ ஒன்றை சிந்தித்துக்
கொண்டு இருப்பதைக்
குறிக்கும் வகையில்
அமைந்து இருக்கிறது ; ‘

“ ஜியார்டானோ புருனோ
அணிந்து இருக்கின்ற
உடையை வைத்து
அவர் எத்தகைய மனிதர்
என்பதை அந்த சிலை
சொல்கிறது - அவர்
அணிந்து இருக்கின்ற
உடையானது தலை
முதல் பாதம் வரை
மூடிய நிலையில் இருக்கிறது
அவர் அணிந்து இருக்கின்ற
உடை ஒரு டொமினிக்கன்
அணியும் உடை
போன்று உள்ளது “


“ ஜியார்டானோ
புருனோவிற்கு அளிக்கப்பட்ட
சித்திரவதையின் மூலம்
அவர் பலமான மன
அழுத்தத்தில் இருந்த போதும்
விசாரணையின் போது
அவர் அளித்த பதில்கள்
மூலம் ஜியார்டானோ
புருனோ எவ்வளவு
நெஞ்சுறுதி படைத்த மனிதர்
என்பதை விசாரணை
அதிகாரிகள் இந்த
உலகத்தில் உள்ள
மக்களுக்கு தெரியப்
படுத்த நினைத்தனர்”

“ ஜியார்டானோ புருனோ
தான் சொன்ன உண்மைகளை
நிலைநாட்டுவதற்காக
தன்னுடைய உயிரே
போனாலும் பரவாயில்லை
என்று இறுதி வரை
பின்வாங்காமல் தான்
சொன்ன வார்த்தையில்
உறுதியாக இருந்தார் “

“ நீதி விசாரணையை
ஜியார்டானோ புருனோ
கையாண்ட விதம் பற்றி
குறிப்பிடும் குறிப்புகள்
அனைத்தும் அவருடைய
குணத்திற்கும் அவர்
வாழ்ந்து காட்டிய
வாழ்க்கைக்கும்
பொருத்தமானவையாக
இருக்கிறது “

“ ஜியார்டானோ புருனோ
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை நடைமுறைப்
படுத்தி வைத்திருக்கும்
பழக்க வழக்கங்கள் ;
சர்ச்சுகள் கடைபிடித்து
வரும் மத பழக்கவழக்கங்கள் ;
பைபிளில் சொல்லப்பட்ட
கருத்துக்கள் ஆகியவற்றிற்கு
எதிராக கருத்துக்கள் ;
கொண்டிருந்தாலும் - அவர்
கிறிஸ்தவ மதத்தின் மீதும்
இயேசு கிறிஸ்து மீதும்
மிகுந்த கடவுள் நம்பிக்கை
கொண்டவராக இருந்தார் “

“ இந்த உலகத்தைப் பற்றிய
அவருடைய எண்ணங்கள்
ஒரு போப்பிற்கு இருப்பதை
விடவும் வேறுபட்டு இருந்தது. “

“ ஜியார்டானோ புருனோ
சொன்ன அனைத்து
கருத்துக்களும் அறிவியல்
பூர்வமாக இருந்தது ;
ஆனால் போப் சொன்ன
அனைத்து கருத்துக்களும்
அறிவியல் பூர்வமாக
இல்லாமல் இருந்தது ;
எனவே, போப் சொன்ன
கருத்துக்களை மட்டுமே
வேத வாக்காக எடுத்துக்
கொண்டு வாழ்ந்து கொண்டு
இருந்த மக்களுக்கு போப்பின்
கருத்துக்கள் அனைத்தும்
பொய்யானது என்றும்
ஜியார்டானோ புருனோவின்
கருத்துக்கள் அனைத்தும்
உண்மையானது என்றும்
நினைக்கத் தொடங்கி
விட்டனர்.”

போன்ற கருத்துக்களை
வெளிப்படுத்தும் வகையில்
ஜியார்டானோ புருனோ
சிலையின் ஒரு கூறு
அமைந்து இருந்தது
மட்டுமல்லாமல்
ஜியார்டானோ புருனோ
கையில் வைத்திருக்கும்
புத்தகமும் ஒரு முக்கியமான
கருத்தை சொல்ல
வருகிறது ………………….?

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  28-02-2019
//////////////////////////////////////////////

February 27, 2019

பணி ஓய்வு வாழ்த்து மடல்


   பணி ஓய்வு வாழ்த்து மடல்- 28-02-2019
   

////////////////////////////////////////
28-02-2019 அன்று
பணிஓய்வு பெறும்
முதுநிலை துணை மேலாளர் 
(நிறுவன செயலர்)
திரு.M.சந்திரசேகர்  அவர்களை
பணியாளர் பிரிவு சார்பாக
வாழ்த்தும் வாழ்த்து மடல் !!
//////////////////////////////////////////////

மாநகர் போக்குவரத்துக்
கழகத்தில் பணிபுரிந்து
அனைவருடைய இதயங்களிலும்
அன்பு என்னும் சிம்மாசனமிட்டு 
பாசத்தால் அரசாட்சி
செய்து கொண்டிருக்கும்
முதுநிலை துணை மேலாளர்
(நிறுவன செயலர்)
திரு.M.சந்திரசேகர் அவர்கள் 
வயது முதிர்வின் காரணமாக
28-02-2019-ஆம் தேதி அன்று
பணி ஓய்வு பெறுகிறார்
பணிஓய்வு பெறும் அவரை
பணியாளர் பிரிவின்
பணியாளர்கள் அனைவரும்
கனத்த இதயத்துடன் பிரியா
விடை அளிக்கின்றோம் !

அறிவென்றால் என்ன என்றும்
அறிவை அறிவால்
உணர்ந்தவர் எவர் என்றும்
அறிவை செயல்படுத்தக்
கூடியவர் யார் என்றும்
அறியத் துடித்து தேடிக்
கொண்டிருந்த வேளையில்
அறிவாய் நான் இருக்கிறேன்
என்று பணியில் சேர்ந்து
அறிவு எத்தகைய
ஆளுமையைக் கொண்டது
என்பதை இந்த உலகத்திற்கு
தன்னுடைய கடின
உழைப்பின் மூலம் நிரூபித்தவர்
நிறுவன செயலர் அவர்கள் !

இல்லாததை இருப்பது போலவும்,
இருப்பதை இல்லாதது போலவும்
வெளி உலகுக்கு காட்டி
நடித்துக் கொண்டிருக்கும்
இந்த சமுதாயத்தில்
இருப்பது இருப்பது போலத்
தான் இருக்க வேண்டும்
இல்லாதது இல்லாதது போலத்
தான் இருக்க வேண்டும்
என்று எதற்கும் சமரசம்
செய்யாமல் உண்மையின்
வழி நின்று இந்த
மாநகர் போக்குவரத்துக்
கழகத்தை தாங்கி வழிநடத்திக்
கொண்டிருப்பவர் தான்
நிறுவன செயலர் அவர்கள் !

தகவல் அறியும்
உரிமைச் சட்டம்
சட்டமாக்கப்பட்டபோது கூட
உயர்வு பெறவில்லை
அவருடைய ஆளுமையின் கீழ்
தகவல் அறியும்
உரிமைச் சட்டம்
நடைமுறைப்படுத்தப்பட்ட
போது தான்
தகவல் அறியும்
உரிமைச் சட்டமே
உயிர் பெற்று உலா வந்தது !

முதலமைச்சரின்
தனிப்பிரிவு கடிதங்கள் கூட
அவருடைய கூர்மையான
பார்வைப்பட்ட பின்னரே
அதில் உள்ள கண்ணியம்
காப்பாற்றப்பட்டது !

அரசாங்கத்தின் ஆணைகள்
கூட அவருடைய
கையெழுத்து இல்லாமல்
நடைமுறைக்கு வந்ததாக
சரித்திரம் இல்லை. !

நிதி மற்றும் நிர்வாகக்
குழுமத்தில் நிறைவேற்றப்பட்ட
பல்வேறு தீர்மானங்கள்
மாநகர் போக்குவரத்துக்
கழகம் மற்றும்
பணியாளர்கள் வாழ்வினை
மேம்படுத்திடவும்
அனைவரும் பாராட்டும்
வண்ணமும்
வியந்து பார்க்கும் வண்ணமும்
இருக்கிறது என்றால்
அது அவருடைய உழைப்புக்கு
கிடைத்த வெற்றி மட்டுமல்ல
அவருடைய அறிவுக்கும்
கிடைத்த வெற்றி என்பதை
அனைவரும் உணர்ந்தே
ஆக வேண்டும்

றிவை அறிவால்
   அறியும் உபாயம் அறிந்து

ளுமையை அதில் புகுத்தி
   உழைப்பை சிறக்க வைத்து

யலாமையை போக்கி
   இன்பமுடன் பணி செய்ய வைத்து

வது அறிவாக இருந்தாலும்
  அதை உழைப்பிற்காக 
  மட்டுமே செலவழித்து

ள்ளன்பு கொண்டு
  அனைவரையும் உவகையுடன்
  பணி செய்ய வைத்து

ரெல்லாம் புகழும்படி
  உழைப்பிற்கொரு
  கதிரவனாய் தகித்து

ளிமையானவர் எப்படி
    இருக்க வேண்டும்
    என்பதற்கு உதாரணமாகத்
    திகழ்ந்து

ற்றத்தின் உயர்வுகளில்
    தான் மட்டும் ஏறி
    உயர்வின் அரியணையில் தான்
    மட்டும் முடிசூட்டிக் கொள்ளாமல்
    பிறரையும் கூட்டிக் கொண்டு
    சென்று முடி சூட வைத்து

யம் என்ற ஒன்றுடன்
    பணி செய்தால் பணி
    சிறக்காது என்பதற்காக
    பிறருடைய ஐயத்தை
    தெளிய வைத்து
    அனைவருடைய பணியையும்
    சிறப்புற செய்து

ற்றுமையின் பெருமையை
     பணியாளர்களுக்கு உணர்த்தி
     அதன் வெற்றியை
     அனைவரையும்
     சுவைக்க வைத்து

ர் குடும்பமாக சண்டை
     நீக்கி வாழ்ந்தால் மட்டுமே
     அலுவலகம் உயர்வடையும்
     என்பதை பணியாளர்களுக்கு
      உணர வைத்து

வையாரின்
      பொன்மொழிகளை
      இந்த அவனியில்
      செயல்படுத்தும் அவரை
                         
றிணை உயிரையும்
      தன்னுடைய அபரிதமான
      அறிவால் உயர்திணையாக
      மாற்றும் அவரை 

உழைப்பின் சிகரமாக
      இருக்கும் அவரை
      பணியாளர் பிரிவின்
      பணியாளர்கள் வாழ்த்துவதில்
      பெருமையடைகிறோம்.

என்றும் அன்புடன்
பணியாளர் பிரிவின்
நல் உள்ளங்கள்
//////////////////////////////////



February 26, 2019

திருக்குறள்-பதிவு-113


                       திருக்குறள்-பதிவு-113

“ 17-02-1600-ஆம்
ஆண்டு ஜியார்டானோ
புருனோ உயிரோடு
எரித்துக் கொல்லப்பட்ட
காம்போ டி பியோரி
(Campo Dei Fiori)
என்ற இடமானது
வாட்டிகனுக்கு
அருகில் மிக
நெருங்கிய
இடத்தில் இருந்தது “

“ கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபை
நடைமுறைப்படுத்தி
வைத்திருந்த
செயல்பாடுகளில்
சீர்திருத்தம் கொண்டு
வர வேண்டும் என்று
போராடியவரும் ;

கிறிஸ்தவர்களால்
பின்பற்றப்பட்டு வந்த
மத நம்பிக்கைகளை
மாற்ற வேண்டும்
என்று முயற்சி
செய்தவரும் ;

பைபிளில் உள்ள
கருத்துக்களுக்கு
எதிராக கருத்து
சொன்னவருமான ;

கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபையால்
கொல்லப்பட்டவருமான ;

ஜியார்டனோ
புருனோவினுடைய
சிலையை
வாட்டிகனுக்கு அருகில் ;
வாட்டிகனுக்கு எதிராக ;
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபைக்கு
அருகில் ;
நிறுவுவது என்பது
கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபையையும் ;
கிறிஸ்தவர்களையும் ;
இழிவு படுத்தும்
விதத்தில் அமையும்
என்ற காரணத்தினால்
ஜியார்டானோ
புருனோ உயிரோடு
எரித்துக் கொல்லப்பட்ட
காம்போ டி பியோரி
(Campo Dei Fiori)
என்ற இடத்தில்
ஜியார்டானோ
புருனோவினுடைய
சிலையை
வைக்கக்கூடாது என்று
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையும் ;
கிறிஸ்தவர்களும் ;
சர்ச்சுகளும் ;
எதிர்ப்பு தெரிவித்தன “

 “ஆனால் பல்வேறு
தரப்பட்ட இடங்களில்
இருந்து வந்த
எதிர்ப்புகளை
எல்லாம் கடந்து
ஜியார்டானோ
புருனோ உயிரோடு
எரித்துக் கொல்லப்பட்ட
காம்போ டி பியோரி
(Campo Dei Fiori)
என்ற இடத்தில்
ஜியார்டானோ
புருனோவுக்கு
முழு உருவ
வெண்கல சிலை
அமைப்பதற்கான
ஏற்பாடுகள்
1885-ஆம் ஆண்டு
தொடங்கியது :

“ ரோம் நகரத்தின்
பல்கலைக் கழகத்தில்
படித்துக்
கொண்டிருந்த
மாணவர்கள்
அனைவரும்
ஒரு குழுவாக
இருந்து செய்த
முயற்சியாலும் ;
விக்டர் ஹ்யூகோ
(Victor Hugo - France)
ஹொன்றிக் இப்சன்
(Henrik Ibsen - Norway)
போன்ற அறிவு
ஜீவிகளின்
ஒத்துழைப்பாலும் ;
ஜியார்டானோ
புருனோ உயிரோடு
எரித்துக் கொல்லப்பட்ட
காம்போ டி பியோரி
(Campo Dei Fiori)
என்ற இடத்தில் ;
ஜியார்டானோ
புருனோவுக்கு
முழு உருவ
வெண்கல சிலை
அமைப்பதற்கான ;
முயற்சிகள்
மேற்கொள்ளப்
பட்டன ; ‘

“ ஜியார்டானோ
புருனோவின்
முழுஉருவ வெண்கல
சிலையை உருவாக்க
எட்டோர் ஃபெராரி
(Ettore Ferrari)
என்பவர் நியமிக்கப்
பட்டார் “

“ எட்டோர் ஃபெராரி
(Ettore Ferrari)
ஒரு சிற்பி (Sculptor)
மட்டுமல்ல ;
இத்தாலி
பாராளுமன்றத்தின்
ஒரு துணைவராவார் ;
(Deputy in Italian
Parliament)
இது தவிர அவர்
XXV ரோமன்
நாட்டுப்புற
உறுப்பினராக இருந்தார் ;.
(Member of xxv
Roman Countryside) “

“ ஜியார்டானோ
புருனோவின்
முழு உருவ வெண்கல
சிலை பல்வேறு
விதமான சிறப்புகளைத்
தன்னுள் கொண்டது“

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  26-02-2019
//////////////////////////////////////////////