May 02, 2019

பரம்பொருள்-பதிவு-9


                        பரம்பொருள்-பதிவு-9

பிராணன் + பிரதிஷ்டை=
பிராண பிரதிஷ்டை

" பிராணன் என்றால்
உயிர்ச்சக்தி என்று
பொருள் ;
பிரதிஷ்டை என்றால்
நிறுவுதல் என்று
பொருள் ;
பிராண பிரதிஷ்டை
என்றால்,
உயிர்ச்சக்தியை
நிறுவுதல்
என்று பொருள்”

“அதாவது
கடவுள் சிலைக்கு
உயிர்ச்சக்தியை அளித்து
கடவுள் சிலையை
கடவுளாகவே மாற்றி ;
கடவுளாகவே
இருக்கும்படிச் செய்வதற்கு ;
பெயர் தான்
பிராண பிரதிஷ்டை”

“உலகம் முழுவதும்
செய்யப்படும்
பிராண பிரதிஷ்டையை
இரண்டே இரண்டு
நிலைகளில் பிரித்து
விடலாம்”

ஒன்று :
மந்திரத்தைப் பயன்
படுத்தாமல் பிராண
பிரதிஷ்டை செய்வது

இரண்டு :
மந்திரத்தைப் பயன்
படுத்தி பிராண
பிரதிஷ்டை செய்வது

“ மந்திரத்தைப்
பயன் படுத்தி
பிராண பிரதிஷ்டை
செய்வதைக் காட்டிலும் ;
மந்திரத்தைப் பயன்
படுத்தாமல் பிராண
பிரதிஷ்டை செய்வது
கடினமான விஷயம்”

“அந்தக் காலத்தில்
மந்திரத்தை
பயன் படுத்தாமல்
பிராண பிரதிஷ்டை
அதிக அளவில்
செய்யப் பட்டது;- ஆனால்
இந்தக் காலத்தில்
மந்திரத்தைப்
பயன்படுத்தாமல்
பிராண பிரதிஷ்டை
செய்யக்கூடியவர்கள்
அரிதாக இருக்கின்ற
காரணத்தினால்
மந்திரத்தைப் பயன்படுத்தி
பிராண பிரதிஷ்டை
செய்யப்படுகிறது “

“ இந்த பிரபஞ்சம்
முழுவதும்
அங்கிங்கெனாதபடி
எங்கும், எல்லா
இடங்களிலும் நீக்கமற
நிறைந்திருக்கும்
இறைவனுடன்
தொடர்பு கொண்டு ;
தனக்கு தேவையானதை
இறைவனிடம் இருந்து
பெற்றுக் கொண்டு ;
தன்னுடைய ஆசையை
பூர்த்தி செய்து கொள்ளும்
முறையை அறிந்தவர்கள் ;
மந்திரத்தைப் பயன்
படுத்தாமல்
பிராண பிரதிஷ்டை
செய்கிறார்கள் ; “

“அதுமட்டுமில்லை
உண்மையை
உணர்ந்தவர்கள் ;
ஞானம் பெற்றவர்கள் ;
ஜீவசமாதி அடையும்
நிலையில் இருப்பவர்கள் ;
முக்தியில் மூழ்குவதற்காக
தயார் நிலையில்
இருப்பவர்கள் ;
ஆகியோர் மந்திரத்தை
பயன் படுத்தாமல்
பிராண பிரதிஷ்டை
செய்கிறார்கள் “

“மந்திரத்தை பயன்
படுத்தாமல் பிராண
பிரதிஷ்டை செய்யும்
உண்மையை உணர்ந்தவர்கள்
கடவுள் சிலைக்கு
சக்தியை செலுத்தி
கடவுளாகவே மாற்றி
கடவுளாகவே இருக்கும்படிச்
செய்கிறார்கள் “

“ மந்திரத்தை பயன்
படுத்தாமல்
பிராண பிரதிஷ்டை
செய்யப்பட்ட கடவுள்
சிலைகள் மிகவும்
சக்தி வாய்ந்தவைகளாக
இருக்கும் ;
இவற்றின் சக்தி
அளவிடற்கரியது ; “

“ இத்தகைய சிலைகள்
இந்துமதக் கோயில்களில்
கர்ப்பக் கிரகத்தின்
சிலைகளாக வைக்கப்
படுமானால் இத்தகைய
கடவுள் சிலைகள்
இந்துமதக் கோயில்களில்
சக்தி வாய்ந்த
மையங்களாக இருக்கும் “

“ மந்திரத்தை பயன்
படுத்தாமல் பிராண
பிரதிஷ்டை செய்வது ;
என்பது - தன்னுடைய
உயிரைக் கொடுத்து
இன்னொன்றுக்கு
உயிர் ஊட்டுவது ;
போன்றது - ஆன்மீகத்தில்
உயர் நிலை
அடைந்தவர்கள் மட்டுமே
இந்த முறையைப்
பயன்படுத்த முடியும்;”

“ ஆன்மீகத்தில் உயர்
நிலை அடையாதவர்கள்
இந்த முறையைப்
பயன்படுத்தினால்
யார் செய்கிறாரோ
அவருடைய உயிருக்கு
உத்தரவாதம் இல்லை “

“மந்திரத்தைப் பயன்
படுத்தாமல் பிராண
பிரதிஷ்டை செய்யப்படும்
கடவுள் சிலைகள்
எவ்வளவு சக்தி
வாய்ந்தவைகளாக இருக்கிறது
என்பதைத் தெரிந்து
கொள்ள வேண்டுமானால் ;

மந்திரத்தைப் பயன்
பயன்படுத்தாமல்
பிராண பிரதிஷ்டை
கடவுள் சிலைக்கு
எவ்வாறு செய்யப்படுகிறது
என்பதைத் தெரிந்து
கொள்ள வேண்டும்……….?”

-------- இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 02-05-2019
/////////////////////////////////////////////////////