December 21, 2018

திருக்குறள்-பதிவு-72


                     திருக்குறள்-பதிவு-72

ஜியார்டானோ புருனோ
மீது சுமத்தப்பட்ட
குற்றச்சாட்டுக்களின்
மீது நடத்தப்பட்ட
விசாரணை
7 ஆண்டுகள் தொடர்ந்து
நடந்து கொண்டிருந்த
காரணத்தினால்,
இறுதி விசாரணை
செய்யப்பட்டு
இறுதி தீர்ப்பு
வரும் வரை
ஜியார்டானோ புருனோ
7 ஆண்டுகள் சிறையில்
சித்திரவதை செய்யப்பட்டார்.

ஜியார்டானோ புருனோ
7 ஆண்டுகள் தொடர்ந்து
சிறையில்
சித்திரவதைகளை
அனுபவித்தபோது ;
ஜியார்டானோ புருனோ
மீது சுமத்தப்பட்ட
பல்வேறு குற்றச்
சாட்டுக்களின் மீது
தொடர்ந்து ;
பல்வேறு நிலைகளில்  ,
பல்வேறு கட்டங்களில் ,
பல்வேறு விசாரணைகள் ,
நடத்தப்பட்டது

முதல் விசாரணை-I

கிறிஸ்தவ மத
போதகர்கள் கூடியிருந்த
விசாரணைக்
குழுவின் முன்பு
குற்றவாளி என்று
குற்றம் சுமத்தப்பட்ட
ஜியார்டானோ புருனோ
பேச ஆரம்பித்தார்

நான் என்னுடைய
வாழ்க்கையில்
போராட்டங்களையும் ,
எதிர்ப்புக்களையும் ,
துரோகங்களையும், தான்
கண்டிருக்கிறேனே தவிர
இன்பத்தின் நிழலும் ;
சந்தோஷத்தின்
புன்முறுவலும் ;
மகிழ்ச்சியின் சாயலும் ;
என்னைத் தீண்டியதே
இல்லை.

சமுதாயத்தில்
பல்லாண்டுகளாக
தொடர்ந்து கடைபிடித்து
வரும் தவறானவைகளைச்
சுட்டிக் காட்டினேன் ;
தவறானவைகளைத்
தவறானவை என்று
சொன்னேன் ;
இது தான் உண்மை
இந்த உண்மையைப்
பின்பற்றுங்கள்
என்று சொன்னேன் ;

நான் எவைகள்
எல்லாம் தவறானவைகளோ
அவைகள் எல்லாவற்றையும்
தவறானவைகள் என்று
சுட்டிக் காட்டி
உண்மையைச் சொன்ன
காரணத்தினால் ,
மதத் துரோகி என்று
குற்றம் சாட்டப்பட்டு
எந்த ஊரிலும்
என்னை நிலையாக
வாழ விடாமல் துரத்தி
துரத்தி அடிக்கப் பட்டேன் ;
ஓடினேன் ; ஓடினேன் ;
நாடு நாடாக ஓடினேன்
ஊர் ஊராக
சுற்றி அலைந்தேன் ;
தெரு தெருவாக
அலைந்து திரிந்தேன் ;
அப்படி இருந்தும்
என்னை
எதிர்த்தவர்களுடைய
இரத்த தாகம்
தீரவில்லை ;
தேடிப்பிடித்து விரட்டி
விரட்டி அடித்தார்கள் ;
மதத்தின் பெயரால்
துன்புறுத்தப்பட்டேன் ;
மத வாதிகளால்
குற்றம் சாட்டப்பட்டேன் ;

என்னுடைய வாழ்க்கை
எதிர்ப்புகளாலும் ;
துரோகத்தாலும் ;
ஆனது என்பதை
முதலில் நீங்கள்
தெரிந்து கொள்ளுங்கள்.

25- ஆண்டுகளுக்கு
முன்பு
நேபிள்ஸ் நகரில்
எளிமையாக நடந்த
என்னுடைய முதல்
திருப்பலி நிகழ்ச்சியில்
கலந்து கொண்டேன்

முதலாவதாக நான்
ஒரு புதிய
முயற்சியை செய்தேன்
முதலில் நான்
டொமினிக்கன்
கான்வென்டில்
தங்கி இருந்த போது
அங்கிருந்த அனைத்து
புனிதர் (Saint)
படங்களை எல்லாம்
எடுத்து விட்டேன்

தொடர்ந்து நான்
அங்கே தங்கி
இருந்த போது
என்னுடைய
14-ஆம் வயதில்
மீண்டும் அனைத்து
புனிதர் படங்களையும்
எடுத்து விட்டேன் ;
சிலுவை அணிந்த
படங்களைத் தவிர ;

இரண்டாவது முறையாக
புதியதாக ஒரு
முயற்சியைச் செய்தேன்
Seven Joys of
the Holy Virgin
என்ற புத்தகத்தை
தூக்கி எறிந்து விட்டு
Holy Father
புனித தந்தை
எப்படி இருக்க
வேண்டும் ;
என்பதைக் கற்றுக்
கொடுக்கும்
புத்தகங்களை
படியுங்கள் என்றேன்
புனித தந்தை எப்படி
நடந்து கொள்ள வேண்டும் ;
எத்தகைய பழக்க
வழக்கங்களை
கொண்டிருக்க வேண்டும் ;
எத்தகைய
நடைமுறைகளைப்
பின்பற்ற வேண்டும் ;
என்று நான் சொன்ன
காரணத்திற்காக
கத்தோலிக்க கிறிஸ்தவ
சபைக்கு எதிராக
செயல்படுகிறேன் என்று
குற்றம் சாட்டப்பட்டு
ரோமை விட்டு
துரத்தி அடிக்கப்பட்டேன்

---------  இன்னும் வரும்
---------  20-12-2018
///////////////////////////////////////////////////////////