August 24, 2018

திருக்குறள்-பதிவு-5


                            திருக்குறள்-பதிவு-5
                                                   
“”””எந்நன்றி கொன்றார்க்கும்
உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு”””””

நன்றி மறப்பது
என்ற சொல்லுக்கும்,
நன்றி கொல்லுதல்
என்ற சொல்லுக்கும்,
சிறிதளவு வேறுபாடு
மட்டுமே உண்டு.


நன்றி மறப்பது
என்றால்,
ஒருவர் நமக்கு
செய்த உதவியை
மறந்து விடுவது
என்று பொருள்.

நன்றி கொல்லுதல்
என்றால்,
நமக்கு உதவி
செய்த ஒருவருக்கு
நாம் தீமையான
செயலைச் செய்வது
என்று பொருள்

பெற்றோர்கள்
ஒரு மகனை பெற்று
வளர்த்து,
படிக்க வைத்து,
வீடு கட்டி கொடுத்து,
கல்யாணம்
செய்து வைத்து,
நல்ல நிலையில்
மகன் வாழ்வதற்கு
தேவையான
நன்மையான செயல்கள்
பலவற்றை செய்து
கொடுத்து,
மகன் வாழ்வதற்காக
தங்கள் வாழ்க்கையையே
அர்ப்பணித்த பெற்றோர்கள்
செய்த உதவியை மகன்
மனதில் கொள்ளாமல்,
பெற்றோர்களுக்கு
முடியாத காலத்தில்
தன்னுடன் தங்க
வைத்து பெற்றோர்களுக்கு
தேவையான உதவிகளைச்
செய்யாமல் இருந்தால்
அது “”நன்றி மறத்தல்””
எனப்படும்.

வாழ்க்கை முழுவதும்
மகனுக்காகவே வாழ்ந்து,
மகனுக்காகவே உழைத்து,
மகனை வாழ வைப்பதற்காக,
கஷ்டப்பட்டு உழைத்த
பெற்றோர்கள் செய்த
உதவியை நினைக்காமல்,
அவர்களை கொண்டு போய்
வயதாகி விட்டது என்ற
காரணத்தினால்
முதியோர் இல்லத்தில்
சேர்த்து விடுகிறான் மகன்

வயதான காலத்தில்
தன்னுடைய மகனுடனும்,
மருகளுடனும்,
பேரன், பேத்திகளுடனும்
மகிழ்ச்சியாக
இருக்க வேண்டும் என்று
நினைத்த பெற்றோர்களின்
மனம் என்ன
வருத்தங்களை அடையும்

மகனிடமிருந்து பிரிந்து,
மருமகளிடமிருந்து
பிரிந்து,
பேரப்பிள்ளைகளிடமிருந்து
பிரிந்து,
தனிமையில்
உறவுகள் இல்லாத
ஓரிடத்தில்
வாழ்வது என்பது
நினைத்து கூடப் பார்க்க
முடியாத செயல்
இத்தகைய தீமையான
செயலை பெற்றோர்களுக்கு
செய்கிறான் மகன்

இது தான்
பெற்றோர்கள் செய்த
நன்மையான செயலுக்கு
மகன் செய்த
தீமையான செயல்
இது தான்
“””நன்றியைக் கொல்லுதல் “””
எனப்படும்.

சிலர் சொல்வார்கள்
பெற்றோர்கள்
பெற்றார்கள்
நம்மை வளர்க்க
வேண்டியது
அவர்களது கடமை
அதனை உதவி என்று
வைத்துக் கொண்டு
நாம் ஏன் உதவி
செய்ய வேண்டும்
என்று சொல்வார்கள்
அது தவறான வார்த்தை

உலகில் மனிதனால்
அடைக்க முடியாத
கடனை இரண்டு
நிலைகளில் பிரித்து
விடலாம்

 ஒன்று  : பெற்ற கடன்
 இரண்டு : வளர்த்த கடன்

நாம் இந்த உலகத்தில்
மனிதனாக
பிறந்து வருவதற்கும்,
நாம் சுயமாக
சிந்தித்து நம்மை நாமே
காப்பாற்றிக் கொள்ளும்
நிலை வரும் வரைக்கும்
நமக்கு உதவியாக
இருந்தவர்கள் பெற்றோர்கள்.


நாம் பிறந்து வருவதற்கும்,
நாம் வளர்வதற்கும்,
பெற்றோர்கள் நமக்கு
உதவியாகத் தான்
இருந்தார்களே ஒழிய
அது அவர்களது
கடமை இல்லை.

மனிதனால் இந்த
பெற்ற கடன்
வளர்த்த கடன்
என்ற இந்த இரண்டு
கடன்களையும்
அடைக்க முடியாது
எனவே, மனிதன்
பெற்றோர்கள்
செய்த உதவியை
மனதில் கொள்ளாமல்
நன்றியை மறந்து
உதவி செய்யாமல்
இருந்தாலும் பரவாயில்லை
நன்மை செய்த அவர்களுக்கு
தீமை செய்து நன்றியைக்
கொல்லக்கூடாது

எந்நன்றி கொன்றார்க்கும்
உய்வுண்டாம் என்றால்,
உலகில் செய்யப்படும்
எந்த பாவத்திற்கும்
பிராயச்சித்தம் உண்டு
என்று பொருள்.

உய்வில்லை செய்ந்நன்றி
கொன்ற மகற்கு என்றால்,
நன்றி கொன்ற
பாவத்திற்கு மட்டும்
பிராயச்சித்தம் என்பது
கிடையவே கிடையாது
என்று பொருள்.

உலகில் செய்யப்படும்
எந்த பாவத்திற்கும்
பிராயச்சித்தம்
என்ற ஒன்று உண்டு
ஆனால்
நன்றி கொன்ற
பாவத்திற்கு மட்டும்
பிராயச்சித்தம் என்பது
கிடையவே கிடையாது
என்பதைத் தான்

“”””எந்நன்றி கொன்றார்க்கும்
உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு”””””

என்ற திருக்குறளின்
மூலம் நமக்கு
தெரிவிக்கிறார் திருவள்ளுவர்

---------  இன்னும் வரும்
---------  24-08-2018
///////////////////////////////////////////////////////////