January 13, 2013

இயேசு கிறிஸ்து-பட்டினத்தார்-ஊருஞ்சதமல்ல-பதிவு-59





              இயேசு கிறிஸ்து-பட்டினத்தார்-ஊருஞ்சதமல்ல-பதிவு-59 


           “”பதிவு ஐம்பத்துஒன்பதை விரித்துச் சொல்ல             

                               ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””


இயேசு கிறிஸ்து :

 இயேசு கப்பர்நகூமில் பிரவேசித்த போது, நுாற்றுக்கு அதிபதி ஒருவன் அவரிடத்தில் வந்து ; ”

                                -------மத்தேயு - 8 : 5

ஆண்டவரே ! என் வேலைக்காரன் வீட்டிலே திமிர்வாதமாய்க் கிடந்து கொடிய வேதனைப்படுகிறான் என்று அவரை வேண்டிக்கொண்டான்.”

         -------மத்தேயு - 8 : 6

அதற்கு இயேசு : நான் வந்து அவனைச் சொஸ்தமாக்குவேன் என்றார்.”

         -------மத்தேயு - 8 : 7

நுாற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக  :  ஆண்டவரே ! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல ;  ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்.

         -------மத்தேயு - 8 : 8

நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும் , எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு ; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான் , மற்றொருவனை வாவென்றால் வருகிறான் , என் வேலைக்காரனை , இதைச் செய்யென்றால் செய்கிறான் என்றான்.”

          -------மத்தேயு - 8 : 9

இயேசு இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு , தமக்குப் பின் செல்லுகிறவர்களை நோக்கி : இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று , மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”

         -------மத்தேயு - 8 : 10

 பின்பு இயேசு நுாற்றுக்கு அதிபதியை நோக்கி :  நீ போகலாம் , நீ விசுவாசித்த படியே உனக்கு ஆகக்கடவது என்றார் . அந்த நாழிகையிலே அவன் வேலைக்காரன் சொஸ்தமானான் .”

          -------மத்தேயு - 8 : 13


நாம் வைக்கும் நம்பிக்கையில் இரண்டு நிலைகள் இருக்கிறது.

ஒன்று                : தன் மேல் வைக்கும் நம்பிக்கை

மற்றொன்று : மற்றவர்  மேல் வைக்கும் நம்பிக்கை

தன் மேல் வைக்கும் நம்பிக்கையிலும்

பிறர் மேல் வைக்கும் நம்பிக்கையிலும்

மூன்று விதமான தன்மைகள் உள்ளன.

ஒன்று  :  அளவான நம்பிக்கை

இரண்டு :  அளவை விட அதிகமான நம்பிக்கை

மூன்று :  அளவை விட குறைவான நம்பிக்கை

தன் மேல் வைக்கும் நம்பிக்கை அளவுக்கு அதிகமாகி

அளவுக்கு அதிகமான நம்பிக்கை ஆகி விட்டால்

ஆணவம் ஆகி விடுகிறது .

தன் மேல் வைக்கும் நம்பிக்கை

அளவை விட குறைவான நம்பிக்கை ஆகி விட்டால்

தாழ்வு மனப்பான்மை ஆகி விடுகிறது .

நம்பிக்கை நம் மேல் அளவான அளவோடு

சரியான விகிதத்தில் இருந்தால்

வாழ்வு சரியான இலக்கை நோக்கி

பிரச்சினைகள் இன்றி ,  

குழப்பங்கள் இன்றி ,

மனவேதனை இன்றி ,

இழப்புகள் இன்றி ,

ஏமாற்றங்கள் இன்றி ,

அமைதியாகச் செல்லும் .


நம்பிக்கை அதிகமானாலோ ,  குறைந்தாலோ

எண்ணத்திற்கும்  , செயலுக்கும் வேறுபாடு ஏற்பட்டு

வாழ்வை குழப்பத்தில் ஆழ்த்தும்.


நீச்சல் மேல் விருப்பம் ஏற்பட்டு

நீச்சல் கற்றுக் கொள்ளலாம்  -  என்று

கிணற்றுக்கு நான் செல்கிறேன் ;

கிணற்றை எட்டிப் பார்க்கிறேன் ;

கிணறு முழுவதும் தண்ணீர் நிரம்பி வழிகிறது ;

அச்சத்தில் மனம் வாடுகிறது ;

பயம் என்னை அரவணைத்துக் கொள்கிறது ;

என்னால் நீச்சல் கற்றுக் கொள்ள முடியாது

பிறர்  உதவியை நாடி

நான் நீச்சல் கற்றுக் கொள்ள முயற்சி செய்தாலும்

என்னால் நீச்சல் அடிக்க முடியாது .


நீச்சல் அடிக்க  தைரியம் தேவை

எனக்கு தைரியம் இல்லை .

என்னால் நீச்சல் கற்றுக் கொண்டு

என்னால் நீச்சல் அடிக்க முடியாது - என்று

என் மேல் நம்பிக்கை குறைந்து

அளவான நம்பிக்கையை விட குறைவான நம்பிக்கை

என் மேல் நான் கொண்டால்

தாழ்வு மனப்பான்மையால்

என் மனம் தள்ளாடும்

என் உறுதி குலையும்.


என்னால் நீச்சல் கற்றுக் கொள்வது என்பது

இயலாத காரியம் ஆகிவிடும்.

தாழ்வு மனப்பான்மை

நம்முடைய உறுதியை குலைத்து

ஒரு செயலை செய்ய முடியாமல் தடுத்து விடும்.


அளவுக்கு அதிகமான நம்பிக்கை கொண்டு

ஆணவம் ஏற்படுத்திய திமிரால் என்னால் முடியும் ;

யார்  உதவியும் இன்றி என்னால் செய்ய முடியும் ;

மற்றவர்  உதவியின்றி என்னால் செயல்பட முடியும் ;

என் உதவியின்றி மற்றவரால் செயல்பட முடியாது என்று

அளவுக்கு அதிகமான நம்பிக்கை

என்ற பெயரில் வெறி கொண்டு

மற்றவர்களை மதிக்காமல்

மற்றவர்களை உதவிக்கு அழைக்காமல்

நான் மட்டுமே தனியாக இருந்து நீச்சல் கற்றுக் கொள்வேன் .

என்று ஒருவன் நினைப்பானேயாகில் ,

அவன் பிரச்சினைக்குள் சிக்கி அல்லல் பட நேரிடும்.

தன்னந்தனியாக நீச்சல் கற்றுக் கொள்ள முயற்சி செய்யும் போது

அதில் உள்ள நுணுக்கங்களை அதில் உள்ள நெளிவு - சுளிவுகளை

அதில் உள்ள சூட்சும விஷயங்களை அறிந்து கொண்டு

செயல்படுத்த வில்லையென்றால்

அறிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு

செயல்படுத்த வில்லையென்றால் துன்பப்பட நேரிடும் .


அளவை விட குறைவான நம்பிக்கை கொண்டவர்

தாழ்வு மனப்பான்மை கொண்டவர்

துணைக்கு ஓருவரை வைத்துக் கொண்டு

செயலைச் செய்ய தடுமாறுவார் .


அளவுக்கு அதிகமான நம்பிக்கை வைத்திருப்பவர் ;

 ஆணவத்தில் இருப்பவர் ;

ஒருவரை துணைக்கு வைத்துக் கொண்டு செயலைச் செய்யாமல்

தனியாக செயலைச் செய்து பிரச்சினையில் மாட்டிக் கொள்வார்.


அளவான நம்பிக்கை உடையவர்  செயலைச் செய்வதற்கு

துணையாக இருப்பவரைத் தேர்ந்தெடுத்து

தனக்கு துணையாக வைத்துக் கொண்டு

செயலைச் செய்து வெற்றி பெறுவார்.


தன் மேல் வைக்கும் நம்பிக்கை

அளவான நம்பிக்கையாக இருந்தால் அதுவே சிறந்தது.


நாம் ஒருவர்  மேல் அளவுக்கு அதிகமான நம்பிக்கை வைக்கிறோம்

அவர்  எல்லாம் தெரிந்தவர்  அனைத்தும் அறிந்தவர் ;

பிரச்சினையை சமாளிக்கக் கூடியவர்  ;

காரியங்களை வெற்றிகரமாக நடத்திக் காட்டக் கூடியவர்  ;

எதையும் எளிதாக நடத்தி வெற்றி பெறக் கூடியவர்  ;

இடையூறுகளை ஒதுக்கி  ,

தோல்விகளை நறுக்கி  ,

ஏச்சுக்களை விலக்கி  ,

எடுத்த காரியத்தை சுபமாக முடிக்கக் கூடியவர்  என்று

நாம் ஒருவர்  மேல் நம்பிக்கை வைத்தால் ,

நான் வேலையில்லாமல் இருக்கிறேன்  ;

பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறேன்  ;

வாழ்வை நகர்த்த துயரப்படுகிறேன்  ;

கடனில் அவதிப் படுகிறேன் ;

ஏளனங்களால் வருத்தப் படுகிறேன் ;

குடும்பத்தால் இகழப் படுகிறேன் ;

சமுதாயத்தால் தாழ்த்தப் படுகிறேன் ;

உறவினர்களால் வெறுக்கப் படுகிறேன் ;

சுற்றத்தார்களால் அவமானப் படுகிறேன் ;

நட்புகளால் ஏளனப் படுகிறேன்  ;

சகோதரர்களால் வசைபாடப் படுகிறேன்  ;

துணையால் கவலைப் படுகிறேன்  ;

என்று வேதனைப்பட்டு  ,

தன் நிலையை எடுத்துச் சொல்லி

தன் கவலையை விளக்கிச் சொல்லி

ஒருவர்  மேல் கொண்ட அளவுக்கு அதிகமான நம்பிக்கையால்

தனக்கு வேலை வாங்கித் தர வேண்டும்

என்று சொன்ன வார்த்தையை

அவர்  வாங்கித் தருகிறேன் என்று சொல்லி விட்டு

வாங்கித் தராமல் விட்டு விட்டால்

அவர்  மேல் வைத்த நம்பிக்கை குறைகிறது.


கொடுத்த வேலையை அவர்  திறம்பட

வெற்றிகரமாக முடித்திருந்தால்

அவர்  மேல் நாம் வைத்த நம்பிக்கை கூடும்.

கொடுத்த வேலையை வெற்றிகரமாக

முடிக்காமல் விட்டு விட்டால்

அவர்  மேல் நாம் வைத்த நம்பிக்கை குறையும்.

வேலையை முடித்தால் மதிப்பு கூடும்  .

வேலையை முடிக்கா விட்டால் மதிப்பு குறையும் .


அளவை விட குறைவான நம்பிக்கை ஒருவர் மேல் வைத்தால்

குறைவான நம்பிக்கையை ஒருவர் மேல் வைத்தால்

அவரிடம் வேலை வாங்கித் தருமாறு வேண்டுகோள் வைத்தால்

அவர்  முயற்சி செய்து வேலை வாங்கித் தந்து விட்டால்

அவர்  மேல் உள்ள மதிப்பு கூடும்.

குறைவான நம்பிக்கையை யார் மீது வைத்தோமோ

அவர்  முடியாத செயலை முடித்து தந்து விட்டால்

அவர்  மேல் உள்ள மதிப்பு கூடும் .

அவர்  அதை முடிக்காமல் விட்டால்

அவர் முடியாத செயலை முடிக்காமல் விட்டு விட்டால்

அவர்  திறமை அவ்வளவுதான்

அவர் திறமைக்கு ஏற்றவரை முயற்சி செய்தார் முடியவில்லை

காரியத்தை வெற்றிகரமாக நடத்தித் தர முடியவில்லை

என மனம் ஆறுதல் அடையும் .

அவர்  மேல் மதிப்பு கூடுமே ஒழிய வெறுப்பு ஏற்படாது .


அளவுக்கு அதிகமாக நம்பிக்கை யார்  மேல் வைத்தோமோ

அவர் ஒரு செயலை வெற்றிகரமாக முடித்தால்

அவர்  மேல் உள்ள மதிப்பு கூடும் .

செயலை வெற்றிகரமாக முடிக்காவிட்டால்

அவர்  மேல் உள்ள மதிப்பு குறையும் .


அளவை விட குறைவான நம்பிக்கையை

யார்  மீது வைத்தோமோ  ?

அவர்  ஒரு செயலை வெற்றிகரமாக முடித்தால்

அவர் மேல் உள்ள மதிப்பு கூடும் .

செயலை வெற்றிகரமாக முடிக்காவிட்டால்  ,

அவர் மேல் என்ன மதிப்பு கொண்டு இருந்தோமோ

அந்த மதிப்பு அப்படியே இருக்கும் மாறாது .


மற்றவர்  மேல் நாம் வைக்கும் நம்பிக்கை என்பது

அவரிடம் நாம் ஒப்படைத்த ஒரு செயலை

அவர்  அதை வெற்றிகரமாக முடித்தாரா? அல்லது

வெற்றிகரமாக  முடிக்கவில்லையா? என்பதை பொறுத்து

அவர்  பெற்ற வெற்றி தோல்வியைப் பொறுத்து

அவர்  மேல் நாம் கொண்ட மதிப்பு கூடுகிறது அல்லது

அவர்  மேல் நாம் கொண்ட மதிப்பு குறைகிறது .

அளவான நம்பிக்கை தன் மேல் வைத்தாலும்

பிறர் மேல் வைத்தாலும் கிடைக்கும் வெற்றி - தோல்வி

தன்னை சிந்திக்கவைத்து  ,

அனுபவத்தை கொடுத்து  ,

வாழ்வை உயர்நிலைக்கு கொண்டு செல்லும் .


இதனைத் தவிர்த்து முழு நம்பிக்கை என்ற ஒன்று உண்டு.

முழு நம்பிக்கையை

மாற்றத்திற்கு உட்பட்ட இயற்கையின் மீதும்  ,

மாறிக் கொண்டே இருக்கும் மனிதரின் மீதும்  ,

மாறுதலுக்கு ஆட்படும் உயிரினங்கள் மீதும் வைக்க முடியாது.


மாற்றத்திற்கு உட்படாத ,

அழியாத தன்மையை தன்னுள் கொண்டுள்ள  ,

இறப்பென்ற ஒன்று இல்லாத  ,

அனைத்தும் செய்து முடிக்க வல்ல ஆண்டவரிடம் தான்

நாம் முழு நம்பிக்கையை வைக்க முடியும்.

அத்தகைய ஆண்டவரால் தான் எதையும் செய்ய முடியும்.


இயேசு கப்பர்நகூமுக்கு சென்ற போது

நுாற்றுவர்  தலைவர்  ஒருவர்,

அவர்  முன் வந்தார்  ; உதவி வேண்டி நின்றார் ;

உதவியின் தன்மையையும்

என்ன உதவி அவர்  செய்ய வேண்டும் என்பதையும்

அவர்  இயேசுவிடம் கூறினார்.


ஐயா என் வேலையாள் உடல்நிலைக் குறைவால்

வீட்டிலே முடங்கிக் கிடக்கிறான் ;

வேதனையால் அவதிப்படுகிறான்;

நோயின் தாக்கத்தால் துன்பப்படுகிறான்  ;

வலியின் தாக்கத்தால் வருத்தப்படுகிறான் என்றார்.


இயேசு அவரிடம் நான் வந்து அவரை குணமாக்குவேன் என்றார்.

நுாற்றுவர்  தலைவர் இயேசு சொன்ன வார்த்தைகளைக் கேட்டு

அதற்கு மறுமொழியாக ஐயா நீர்  என் வீட்டிற்குள்

அடி எடுத்து வைக்க நான் தகுதியற்றவன்

உம்மைப் போல் உயர்ந்தவர் ;

உதவி செய்யும் மனம் கொண்டவர் ;

அன்பு மனம் கொண்டவர் ;

கருணை உள்ளம் நிறைந்தவர் ;

என் வீட்டிற்கு அடி எடுத்து வைத்து

என் வீட்டிற்கு வர நான் நல்லவன்  இல்லை ;

நல்ல மனப்பான்மை கொண்டவன் இல்லை ;

நீர் என் வீட்டிற்கு வர

 நான் அருகதை உடையவனும் இல்லை ;

தகுதி என்பதும் எனக்கு இல்லை ;

உம்மைப் போல் உயர்ந்த மனம் கொண்டவர்

என்னைப் போல் தாழ்ந்த மனம் கொண்டவர்  

வீட்டிற்கு  வர நான் தகுதியற்றவன்.

ஆனால் , ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்

என் வேலையாள் குணமடைவான் .

உம்முடைய ஒரு வார்த்தையே போதும்

நலமாக வேண்டும் என்ற ஒரு வார்த்தையே போதும்

உம்முடைய ஒரு வார்த்தையே

என் வேலையாளை நோயிலிருந்து விடுவித்து விடும்  ;

நோய்க் கொடுமைகளை உடலிலிருந்து அறுத்து விடும் ;

வலிகளையும் , வேதனைகளையும்  .

துன்பங்களையும் , துயரங்களையும்  .

கண்ணீரையும் , கவலையையும்

நோயின் தாக்கத்தையும் ,

உடலிலிருந்து கட்ட விழ்த்து விடும் .

உம்முடைய ஒரு வார்த்தையே போதும்

என் வேலையாள் நலமாக வேண்டும் என்று

நீர்  ஒரு வார்த்தை சொன்னால் போதும்

என் வேலையாள் குணமடைவான் .


நான் அதிகாரத்திற்கு உட்பட்டு நடப்பவன்

என் அதிகாரத்திற்கு உட்பட்டவர்களும் உண்டு

என் அதிகாரத்திற்கு உட்பட்டு நடப்பவர்களும் உண்டு

என் அதிகாரத்திற்கு உட்பட்ட வேலையாட்களும் உண்டு

என் அதிகாரத்திற்கு உட்பட்ட ஒருவரை

என் அதிகாரத்திற்கு கீழ்படிந்து நடக்கக் கூடிய ஒருவரை

செல் என்றால் செல்வார் ; வருக என்றால் வருவார் ;

இந்தச் செயலைச் செய் என்றால் செய்வார் ;

இந்தச் செய்யாதே என்றால் செய்ய மாட்டார்  என்றார்.


நுாற்றுவரின் வார்த்தைகளைக் கேட்ட இயேசு

அவர்  அதிகாரத்திற்கு உட்பட்டவராயிருந்தாலும்

தன் அதிகாரத்திற்கு கீழ் வேலை செய்யும் வேலையாட்களை

தன்னுள் கொண்டிருந்தாலும்,

அதிகாரத்தின் நிமித்தம்

அவர்களை ஆட்டுவித்தாலும்,

அதிகாரத்தால் அவர்களை

தன் சொற்படி இயங்க வைத்தாலும் ,

தன் கீழே வேலை செய்பவர்கள்

தனக்கு அடிமைகள் என்ற எண்ணம் இல்லாமல் ,

அடிமைகள் தானே என்ற கீழ்த்தர எண்ணம் கொள்ளாமல்  ,

அவர்களும் மனிதர்கள்

தனக்கும் நோய் வந்தால் உடல்வாடும் ;

வேலையாட்களுக்கும் நோய் வந்தால் உடல் வாடும் ;

என்ற எண்ணம் கொண்டு ,

பேதம் காட்டாமல் வேறுபாடு பாராமல்

ஏற்றத் தாழ்வு நினைக்காமல்

கருணை மனப்பான்மையுடன்

இரக்க சுபாவத்துடன்

நுாற்றுவர் தலைவன்

தன் வேலையாளை குணமாக்க வேண்டும் - என்று

நுாற்றுவர்  தலைவன் சொன்ன வார்த்தைகளை கேட்டு


இயேசு மட்டுமே குணமாக்குவார்

இயேசுவால் மட்டுமே குணமாக்க முடியும்

இயேசுவைத் தவிர யாராலும் குணப்படுத்த முடியாது என்று

இயேசுவின் மேல் நம்பிக்கை கொண்டு

தன்னிடம் வந்த நுாற்றுவர்  தலைவன்

வார்த்தைகளைக் கேட்டு இயேசு வியந்தார்.


நுாற்றுவார்  தலைவனின்

நம்பிக்கையின் ஆழத்தை புரிந்து கொண்டார்.

தம்மைப் பின் தொடர்ந்து வந்தவர்களை நோக்கி ,     

உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்

இஸ்ரவேலர்  யாரிடமும்

இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை.

இஸ்ரவேலர்  யாரும் என் மேல்

இவ்வளவு நம்பிக்கை வைக்கவில்லை  .

என் மேல் இவ்வளவு நம்பிக்கை வைத்தவர்களில்

இஸ்ரவேலரில் நான் யாரையும் நான் கண்டதில்லை .

இத்தகைய நம்பிக்கை கொண்ட ஒருவரையும்

நான் இஸ்ரவேலரில் பார்த்ததில்லை என்றார்.


பின்பு இயேசு நுாற்றுவர்  தலைவனை நோக்கி நீர் போகலாம்

நீர் விரும்பிய வண்ணமே உமக்கு நிகழும் என்றார்.

அந்த நேரமே வேலையாள் குணமடைந்தான் .

இயேசுவால் மட்டுமே தன் வேலையாளை குணப்படுத்த முடியும்

இயேசு மட்டுமே தன் வேலையாளை குணப்படுத்துவார் என்று

இயேசுவின் மேல் முழு நம்பிக்கை கொண்டு  ,

இயேசுவிடம் வந்த நுாற்றுவர்  தலைவனுடைய கோரிக்கையை

இயேசு ஏற்று நுாற்றுவர் தலைவனுடைய

வேலையாளை குணப்படுத்தினார்.


ஒரு செயலை ஆண்டவரால் மட்டுமே செய்ய முடியும்

ஆண்டவரைத் தவிர வேறு யாரும் செய்ய முடியாது

என்று எண்ணம் கொண்டு ,

முழுமையான நம்பிக்கையை இறைவன் மீது செலுத்தி

தனக்கு அந்த செயலை நிறைவேற்றி தருமாறு

பணிவுடன் கோரிக்கை வைத்தால்

இறைவன் நம்முடைய கோரிக்கையை

ஏற்று நிறைவேற்றி வைப்பார்

என்பது இயேசுவின் செயல் மூலம் தெரிகிறது .


ஆண்டவர்  மேல் வைக்கும் நம்பிக்கை நம்மை காப்பாற்றும்

என்பது இந்தச் செயல் மூலம் தெரிகிறது என்பது பைபிள்.


பட்டினத்தார் :


ஊருஞ் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப்பெற்ற


 பேருஞ் சதமல்ல பெண்டீர் சதமல்ல பிள்ளைகளுஞ்


 சீருஞ் சதமல்ல செல்வஞ் சதமல்ல தேசத்திலே


 யாருஞ் சதமல்ல நின்றாள் சதங்கச்சி ஏகம்பனே

                 -----பட்டினத்தார்---பெரிய ஞானக் கோவை---


ஏமாற்றுவது இரண்டு நிலைகளில் நடைபெறுகிறது:

ஓன்று             : நாம் ஒருவர்  மேல் நம்பிக்கை வைக்கும் போது

                                          அவர்  நம்மை ஏமாற்றுவது .

மற்றொன்று : நம் மேல் ஒருவர் நம்பிக்கை வைக்கும் போது

                                          அவரை நாம் ஏமாற்றுவது .


நாம் ஒருவர்  மேல் நம்பிக்கை வைக்கிறோம் ;

அவர்  பின்னால் செல்கிறோம் ;

அவர்  நமக்கு எல்லாம் செய்வார் என்று நினைக்கிறோம் ;

அவர்  சொல்வதை செய்கிறோம் ;

அவர்  நினைப்பதை நடத்துகிறோம்  ;

அவர்  விரும்புவதை நிறைவேற்றுகிறோம்  ;

அவர் ஆசைக்காக உழைக்கிறோம் ;

அவர் கண் அசைவுக்காக காத்திருக்கிறோம்  ;

செய் என்றால் செய்கிறோம்

செய்யாதே என்றால் வார்த்தைக்கு கட்டுபடுகிறோம் ;

பேசு என்றால் பேசுகிறோம்

பேசாதே என்றால் அமைதியை கடைப்பிடிக்கிறோம் ;

ஏவலுக்கு கட்டுபடுகிறோம் ;

உத்தரவுக்கு அடி பணிகிறோம்  ;

அவர்  நமக்கு நல்லது செய்வார் ;

நல் வழியில் நடத்துவார் ;

நல்பாதையை காட்டுவார் ;

வாழ்க்கையில் ஒளியை ஏற்றுவார் ;

கலைகளை கற்றுத் தருவார் ;

கவலைகளை ஒழிப்பார் ;

ஆசைகளை நிறைவேற்றுவார் ;

கண்ணீரை துடைப்பார் ;

இன்பங்களை அளிப்பார் ;

துன்பங்களை ஓட்டுவார் ;

வித்தைகளை அளிப்பார் ;

மந்திர - யந்திர - தந்திர முறைகளை

விவரமாக சொல்லிக் கொடுப்பார் ;

சூட்சுமங்களை கட்டவிழ்ப்பார் ;

பிரம்மத்தை உணர வைப்பார் ;

ஞானத்திற்கான திறவுகோலை நம்மிடம் கொடுப்பார் ;

உண்மைகளை விளக்குவார் ;

ஊரெல்லாம் வாழ்த்தும் படி வாழும் வகை செய்வார் ;

கலைகளை பயிற்றுவிப்பார் ;

சுவாசத்தை மாற்றும் வழி காட்டுவார்;

தொட்டுக் காட்டி சூட்சுமத்தை விளக்குவார் ;

தொடாமல் பிரம்ம ரகசியங்களை உணர்த்துவார் ;

மூலிகைகளின் ரகசியங்களை கட்டவிழ்ப்பார் ;


என்று பல்வேறு நிலைகளில்

பல்வேறு விதமான தன்மைகள் கொண்ட

பல்வேறு விதமான திறமைகள் கொண்ட குருவையோ

தன்னை வாழ வைப்பார்  என்ற நம்பிக்கை கொண்டு

ஒருவர்  பின்னாலோ செல்லும் போது

அவர்  நம்முடைய திறமையை பயன் படுத்திக் கொண்டு

அவர்  நம்முடைய உழைப்பை கிரகித்துக் கொண்டு

அவர்  நம்முடைய வாழ்வின்

முக்கியமான நாட்களை உறிஞ்சிக் கொண்டு

நமக்கு எதுவும் சொல்லித் தராமல்

எந்த வழியையும் காட்டாமல்

நாம் என்ன நினைத்து அவர்  பின்னால் சென்றோமோ ?

அதைச் செய்யாமல் விட்டு விட்டால்

நம்முடைய நம்பிக்கையை ஏமாற்றி விட்டால்

நாம் அவர்  மேல் வைத்த நம்பிக்கையை

அவர் சிதைத்து விட்டால் துரோகி என்கிறோம்.

ஏமாற்றி விட்டார் என்கிறோம்.


அவர்  மேல் நான் வைத்த நம்பிக்கையை சிதைத்து விட்டார் ;

என் உழைப்பை பயன்படுத்திக் கொண்டார் ;

என் திறமையை உறிஞ்சிக் கொண்டார் ;

என்னை நன்றாக உபயோகப் படுத்திக் கொண்டார் ;

என்று அவரை வசைப் பாடுகிறோம் ;

மனக் குமுறலை கொட்டுகிறோம் ;

நம் மன நிலையை வெளிக் காட்டுகிறோம் ;

கோபத்தை வார்த்தையால் கொட்டுகிறோம் ;

நம்மை ஒருவர் ஏமாற்றினால் அவரை துரோகி என்கிறோம் .


நம்மை நாடி ஒருவர் வருகிறார் ;

ஒரு விஷயத்தை நாம் தான் முடிப்போம் என்று நினைக்கிறார் ;

நம்மால் முடிக்க முடியும் என்று நம்மை நாடி வருகிறார் ;

வந்ததற்கான காரணத்தை கூறுகிறார்

விஷயங்களை கூறுகிறார்

தனக்கு அந்த வேலையை அந்த செயலை

முடித்து தருமாறு வேண்டுகிறார் .

எப்படி அந்த வேலை முடியும் என்பதைப் பற்றியும்  ,

எப்படி அந்த வேலையை முடிக்க வேண்டும் என்பதைப் பற்றியும் ,

அதற்கான வழி முறைகளை ஆராய்ந்து

பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பேசி

அந்த வேலையை நம்மிடம் ஒப்படைத்து

அந்த வேலைக்கான விவரங்கள்

பணம் எவ்வளவு தேவையோ

அவ்வளவு பணம் ஆகியவற்றை அளித்து

நம்மை நம்பி முழு பொறுப்பை

நம்மிடம் ஒப்படைத்து விட்டு சென்றால்

அந்த வேலையை நாம் முடிக்காமல்

அவரை ஏமாற்றி விட்டு

அவர்  பணத்தை ஏமாற்றி விட்டு

உன்னால் என்னை என்ன செய்ய முடியும்

முடிந்தால் என்ன வேண்டுமானாலும் செய் பார்க்கலாம்

என்று நாம் சவால் விட்டால் ,

அவரை அதிகாரம் கொண்டு மிரட்டினால்  ,

பதவியை கொண்டு பயமுறுத்தினால்  ,

அவரால் என்ன செய்ய முடியும் .


நாம் ஒருவரை ஏமாற்றி நம்பிக்கையை சிதைத்தால்

அதந்குப் பெயர்  ராஜ தந்திரம் .

நம்மை ஒருவர்  ஏமாற்றி நம் நம்பிக்கையை சிதைத்தால்

அதற்குப் பெயர்  துரோகம் .

ஏமாற்றுபவர் - ஏமாற்றப்பட்டவர்

என்ற நிலைகளைப் பொறுத்து

துரோகம் ராஜ தந்திரம் என்ற பெயர்களைப் பெறுகிறது .


சமுதாயத்தில் நாம் ஒருவரை ஒருவர்

ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம் ;

நல்லவர்கள் போல் நடித்துக் கொண்டிருக்கிறோம் ;

மற்றவர்கள் வாழ்வை அழித்துக் கொண்டிருக்கிறோம் ;

நல்ல எண்ணங்கள் இல்லாமல் அலைந்து கொண்டிருக்கிறோம் ;

கெட்ட எண்ணத்துடனே திரிந்து கொண்டிருக்கிறோம் ;

உண்மை பேசாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ;

பொய்யை விற்று பிழைத்துக் கொண்டிருக்கிறோம் ;

பொல்லாங்கு பேசி திரிந்து கொண்டிருக்கிறோம் ;

இத்தகைய நிலையினால்  ,

இத்தகைய ஒரு நிலையை சமுதாயம் கொண்டிருப்பதினால்

மனிதர்கள் ஒருவரை ஒருவர்  நம்புவதில்லை

கடவுளிடம் சென்று தன் கோரிக்கையை வைத்து விடுகின்றனர்.

கடவுள் தன்னை காப்பாற்றுவார் ;

தன் வாழ்வை செழிக்க வைப்பார் ;

கவலைகளை துடைப்பார் ;

வாழ்வை பூந்தோட்டமாக மாற்றுவார் ;

வசந்தமாக ஆக்குவார் ;

தன்னை கை விட மாட்டார் ;

என்ற நினைப்பில் இறைவனிடம் சரணாகதி அடைந்து விடுகின்றனர் .


இறைவனே எல்லாம்

இறைவனால் மட்டுமே முடியும் மற்றவர்களால் முடியாது

என்ற முழு நம்பிக்கையுடன்

இறைவனிடம் மக்கள் சரணாகதி அடைந்து விடுகின்றனர் .


நாம் பிறப்பதற்கு முன் இந்த உலகம் இருந்தது ;

வாழும் போதும் இந்த உலகம் இருந்து கொண்டிருக்கிறது ;

நாம் இறந்த பிறகும் இந்த உலகம் இருந்து கொண்டு தான் இருக்கும் .

இந்த உலகத்தில் நாம் வந்து

தங்கி செல்லும் பிரயாணி மட்டும் தான்

இந்த உலகமும் இந்த உலகத்தில் உள்ளவையும்

நமக்கு சொந்தமில்லை .

நாம் வண்டியில் பிரயாணம் செய்யும் போது

பாலத்தைக் கடக்கிறோம் .

அந்த வழியைக் கடக்க நம் பிரயாணத்தை

நம் பிரயாணத்தின் குறிக்கோளை நிறைவேற்ற

நாம் எந்த திட்டம் வகுத்து பிரயாணத்தை மேற்கொண்டோமோ

அந்த திட்டம் நிறைவேற்ற

பாலத்தின் மீது பயணம் செய்து பாலத்தைக் கடக்கிறோம் .


நாம் வண்டியில் ,

பாலத்தைக் கடப்பதற்கு முன் பாலம் அங்கே தான் இருந்தது

பாலத்தைக் கடக்கும் போதும் பாலம் அங்கே தான் இருந்தது

பாலத்தைக் கடந்து சென்ற போதும்  பாலம் அங்கே தான் இருந்தது


பாலம் அங்கே தான் இருக்கிறது

நாம் தான் பிரயாணம் செய்ய

அந்த பாலத்தைப் பயன்படுத்துகிறோம்.

அதைப் போல வாழ்க்கை என்னும் பிரயாணத்தில்

இந்த உலகத்திற்கு வருகிறோம் ;

தங்குகிறோம்  ; செல்கிறோம் ;

பாலத்தைக் கடப்பதால் நமக்கு அந்த பாலம் சொந்தமில்லை

அந்த பாலம் எனக்கு சொந்தம் என்று

யாரும் சொந்தம் கொண்டாட முடியாது .

அந்த பாலம் எனக்கு சொந்தம் என்று

யாரும் கூடாரம் அமைத்து குடித்தனம் நடத்த முடியாது .

பாலம் யாருக்கும் சொந்தமில்லை .

பிரயாணம் செய்பவர்  அந்த பாலத்தைப் பயன்படுத்திக் கொள்வர்.

நேற்று ஒருவர் பயன்படுத்தினார் ;

இன்று நாம் பயன்படுத்தினோம் ;

நாளை வேறு ஒருவர்  பயன்படுத்துவார் ;


அதைப் போலத் தான் இந்த உலகம்

நேற்று இந்த உலகத்தில் வேறு ஒருவர் வாழ்ந்தார் ;

இன்று நாம் வாழ்கிறோம் ;

நாளை வேறு ஒருவர்  வாழ்வார் ;

இந்த உலகமும் இந்த உலகத்தில் உள்ளவையும்

யாருக்கும் தனிப்பட்ட முறையில் சொந்தமில்லை

அனைவருக்கும் பொதுவானது .


ஓடி ஓடி உழைத்து நிலங்கள் பல வாங்கி

வீடுகள் பல கட்டி நிலைபெற்று வாழ்வோம்

என்று நினைத்து சேர்த்து வைத்த சொத்தும் நமக்கு சொந்தமில்லை ;

நம்முடன் பிணைந்து உறவாடிய உறவுகளும் நமக்கு சொந்தமில்லை ;

நாம் இந்த உலகத்தில் பெற்ற பேரும் புகழும் ,

மதிப்பும் மரியாதையும் நமக்கு சொந்தமில்லை ;

கட்டிய மனைவியும் , பெற்ற பிள்ளையும் நமக்கு சொந்தமில்லை ;

உயர்வுகளும், பதவிகளும், அதிகாரங்களும் நமக்கு சொந்தமில்லை ;

செல்வமும் நமக்கு சொந்தமில்லை;

நாம் இந்த உலகத்தில் பிறந்து வாழ்ந்து இறக்கும் வரை

நாம் பெற்ற நம்முடன் சேர்த்த நம்முடன் சேர்ந்த 

அனைத்தும் நமக்கு சொந்தமில்லை.

இருந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம்.


நித்தியமில்லா வாழ்க்கையில் அழியக் கூடியவைகளை

நம் சொந்தங்கள் , நம் சொத்துக்கள் ,

நம் செல்வங்கள் , நம் உறவுகள் ,

நமக்கு உரியவைகள் என்று நினைக்கிறோம் .

இந்த உலகத்தில் உள்ளவை எவையும் நமக்கு சொந்தமில்லை .


இந்த உலகத்தில் பிறந்த பிறகு

நம்முடன் தன்னால் இணைந்தவை

நம்மால் இணைக்கப்பட்டவை

எவையும் நமக்கு சொந்தமில்லை .


நித்தியமில்லாத இந்த உலகத்தில் சொந்தமில்லாதவைகளை

சொந்தம் என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் ,

எனக்கு சொந்தமானவை எவை என்றும் ,

எனக்கு உரியவை எவை என்றும் ,

என்னுடைய கடமை எது என்றும் ,

நித்தியமான வாழ்வையும்

நிம்மதியான நினைவையும்

துன்பங்கள் அற்று இன்பத்துடன் வாழக்கூடிய நிலையினையும்

அறிவுக் கண்ணை திறந்து

ஞானத் திறவு கோலை எனக்கு அளித்து

பொய் , சூது , கொலை , கொள்ளை , கற்பு நெறி பிறழ்தல்

போன்ற கயமைத்தனம் நிரம்பிய இந்த உலகத்தில்

அழியக்கூடிய இந்த உலகத்தில்

அழியாமல்  நித்தியமாய் வாழக்கூடிய முறையினையும்

எனக்கு அளித்து என்னை வழிநடத்தி

இறையுடன் இரண்டறக் கலந்து

பேரின்பப் பெருவெள்ளத்தில் நீந்தக் கூடிய நிலையினை

அளிக்க இறைவா உன்னால் மட்டுமே முடியும் .


உன்னைத் தவிர வேறு ஒருவராலும் எனக்கு

நித்திய வாழ்வை அளிக்க முடியாது .


இறைவா உன்மேல் என் முழுநம்பிக்கையை வைத்துள்ளேன்

நீ தான் எனக்கு நித்திய வாழ்வை அளிக்க முடியும் .


நித்தியமில்லாத ஒன்று நமக்கு நித்தியத்தை அளிக்க முடியாது

நித்தியமாக இருக்கும் ஒன்றே

நமக்கு நித்திய வாழ்வை அளிக்க முடியும் .

அன்றும் , இன்றும் , என்றும் நித்தியமாக இருக்கும் இறைவா

எனக்கு நித்திய வாழ்வை அருள்வாய்

என்கிறார்  பட்டினத்தார் .


இயேசு கிறிஸ்து - பட்டினத்தார் :

ஒரு செயலை இவர்  தான் செய்வார்

இவரைத் தவிர வேறு யாரும் செய்ய முடியாது

என்று முழு நம்பிக்கையை அவர் மீது வைத்து

அவரிடம் செல்லும் போது

அவர்  அந்த நம்பிக்கையை நிறைவேற்றுவார் என்று

இயேசு தன் வாழ்க்கையில் செயல்படுத்திக் காட்டினார் .

இறைவனிடம் வைக்கும் நம்பிக்கை

நம்மை காப்பாற்றும் என்கிறது பைபிள்.



அவ்வாறே ,

பட்டினத்தாரும் ,

நித்தியமில்லாத இந்த உலகத்தில்

நிம்மதியை தேடி அலைந்து கொண்டு இருக்கும்

இந்த மானிடர்கள் மத்தியில்

நித்தியமான வாழ்வை

இறைவா உன்னால் மட்டுமே அளிக்க முடியும் .

உன்னைத் தவிர வேறு யாராலும்

எனக்கு நிம்மதியான நித்தியமான வாழ்வை

எனக்கு அளிக்க முடியாது

உன்னை சரணடைந்தேன்

என்னை நீ காப்பாயாக என்கிறார் .

இறைவன் மேல் வைக்கும் நம்பிக்கை

நம்மை உயர்த்தும் என்கிறார்  பட்டினத்தார் .


                  “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
   
                                        போற்றினேன் பதிவுஐம்பத்துஒன்பது ந்தான்முற்றே “”