April 23, 2018

ஔவையார்- நான்கு கோடி பாடல்-பதிவு-9

             ஔவையார்- நான்கு கோடி பாடல்-பதிவு-9

ஆனால் ஒன்று
தனக்கு வேண்டியவர்களை
வாருங்கள் என்று
சொல்வதற்கும்
உபசரிப்பதற்கும்
வசதியானவர்களை
மதிப்பு கொடுத்து
வரவேற்பதற்கும்
நம்மை உபசரிக்காமல்
இருப்பதற்கும்
வேறுபாடு இருக்கிறது

அதாவது
உயர்ந்தவர் தாழ்ந்தவர்
பிடித்தவர் பிடிக்காதவர்
என்ற பேதம் பிரித்து
அதாவது
வேறுபாடு காட்டி
வரவேற்பவர்
வீட்டு விசேஷத்திற்கு
சென்று அவமானப்பட்டோம்
அது நம்
மனதில்
ஆறாத வடுவாக
இருக்கிறது

அவர் நம்மை
நடத்திய விதம்
மனம்
கவலையில் வாடுகிறது
அவர் நம்மை
அவமானப் படுத்தியதை
நினைத்து
மனம்
வேதனையில் வாடுகிறது
அவர் நம்மை
உதாசீனப்படுத்தியதை
நினைத்து
மனம்
சோகத்தில் வாடுகிறது
அவர் நம்மை
இழிவாக நடத்திய
விதம்
நம் நெஞ்சில்
ஆறாத வடுவாக
பதிந்து விடுகிறது

இத்தகைய சூழ்நிலையில்
சிறிது காலம் கழித்து
மீண்டும் அவர்
தன்னுடைய
வீட்டு விசேஷத்திற்கு
வரும்படி நம்மை
அழைக்கிறார்

அழைப்பவர்
பெரிய பணக்காரராக
இருக்கிறார்
உயர்ந்த பதவியில்
இருக்கிறார்
அவருக்கு நிறைய
ஆட்களைத் தெரியும்
அதிக அளவு
அனுபவம் இருக்கிறது
அவமானப்பட்டால் என்ன
அவருடைய
வீட்டு விசேஷத்திற்கு
போய் விட்டு
வருவோம்
அவருடைய உதவி
நமக்கு எப்பொழுதாவது
தேவைப்படும்

அவரை
நாம் ஏன்
பகைத்துக் கொள்ள
வேண்டும் என்று
எண்ணாமல்
அழைப்பவர்
எவ்வளவு
பெரிய ஆளாக
இருந்தால் என்ன,
எவ்வளவு
பெரிய பதவியில்
இருந்தால் என்ன,
எவ்வளவு
பெரிய பணக்காரராக
இருந்தால் என்ன,
மதிக்காத அவருடைய
வீட்டு விசேஷத்திற்கு
செல்ல மாட்டேன்
என்று
அவருடைய வீட்டு
விசேஷத்திற்கு செல்லாமல்
இருக்கும் செயல்
கோடி ரூபாய்
மதிப்பு உடையது
என்று சொல்லலாம்
அல்லது
கோடி பொன்
மதிப்பு உடையது
என்று கூட
சொல்லலாம்

இது முதல் செயல்
இது முதல் கோடி
பெறும் செயல்
இது முதல்
கோடி ரூபாய்
பெறும் செயல்
அல்லது
இது முதல்
கோடி பொன்
பெறும் செயல்
இந்த முதல்
செயலை
செய்ய வேண்டாம்
என்று ஔவையார்
சொன்ன செயல்

---------- இன்னும் வரும்
//////////////////////////////////////////////////////////////////