November 13, 2018

திருக்குறள்-பதிவு-48


                       திருக்குறள்-பதிவு-48

உலகம் முழுவதும்
வாழும் மக்கள்
பெறும் இலவசங்களை
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்,.

ஒன்று : இல்லாதவர்கள்
        பெறுவது.

இரண்டு: இருப்பவர்கள்
         பெறுவது.

இலவசம் என்பது
இல்லாதவர்களுக்காக
வழங்கப் படுவது
இருப்பவர்களுக்காக
வழங்கப்படுவது இல்லை

இல்லாதவர்களுக்காக
வழங்கப்படும்
இலவசத்தை
இருப்பவர்கள்
பெறும்போது
இருப்பவர்கள்
தங்களிடம்
இந்த பொருள்
இருக்கிறது
எனவே,
இந்தப் பொருளை
இல்லாதவர்களிடம்
கொடுங்கள் என்று
தான் சொல்ல
வேண்டும்

அவ்வாறு சொல்லாமல்
இருப்பவர்கள்
“இலவசம் கொடுக்க
வேண்டாம்”
என்று சொல்வதில்
உள்ள வார்த்தையின்
அர்த்தத்தை நன்றாக
உற்று நோக்கி
ஆராய்ந்து பார்த்தால்
அதிகார வர்க்கத்தின்
சூழ்ச்சியும்;
பணக்கார வர்க்கத்தின்
சூதும்;
அந்த வார்த்தையில்
இருப்பது புரியும்

எங்களுக்கு இலவசம்
வேண்டாம் என்று
இருப்பவர்கள் சொல்லும்
அந்த வார்த்தையில்
உள்ள அர்த்தம்
இது தான் அதாவது
“இல்லாதவன்
எப்போதும்
இல்லாதவனாக
இருக்க வேண்டும்
என்பதையும்; 
இல்லாதவன்
இருப்பவர்களுக்கு
சரிசமமாக
உயரக் கூடாது
என்பதையும்;
இல்லாதவன்
இருப்பவனுக்கு
எப்போதும் அடிமையாக
இருக்க வேண்டும்
என்பதையும்; “
குறிக்கும்

அந்தக் காலம் முதல்
இந்தக் காலம் வரை
இல்லாதவன் எழுந்து
இருப்பவனாக மாறும்
நிலையை அடைய
முயற்சிக்கும்
போதெல்லாம்
இருப்பவர்கள்
ஒன்று கூடி
இல்லாதவன்
இருப்பவனாக
மாறக் கூடாது;
இல்லாதவன்
இருப்பவனாக
மாறிவிட்டால்
நமக்கு சரிசமமாக
அமர்வான்;
நமக்கு அடிமையாக
இருக்க மாட்டான்;
நம் முன் கைகட்டி
நிற்க மாட்டான்;
நமக்கு மரியாதை
செலுத்த மாட்டான்;
என்பதற்காக
பல்வேறு கால
கட்டங்களில்,
பல்வேறு நிலைகளில்,
பல்வேறு ஆட்களை
தங்களுக்கு
சாதகமாக பயன்படுத்தி,
அவர்களை
“சரியான ஒரு
செயலை தவறான
செயல்”
என்று பேசவைத்து
இல்லாதவன்
இல்லாதவனாகவே
இருப்பதற்கான
வழிவகைகள்
காலம் காலமாக
இந்த உலகத்தில்
செய்யப்பட்டு
வந்திருக்கின்றன
என்பதை உலக
வரலாற்றை எடுத்துப்
பார்த்தாலே புரியும்.

தொலைக்காட்சி
இல்லாதவர்களுக்கு
தொலைக்காட்சி
பார்ப்பதற்காக
தொலைக்காட்சி
கொடுக்கும் செயலை
உதவி இலவசம்
என்ற பெயரில்
செய்யப்படுகிறது
என்றும் சொல்லலாம்
இலவசம் உதவி
என்ற பெயரில்
செய்யப்படுகிறது
என்றும் சொல்லலாம்

தொலைக்காட்சி வைத்து
இருப்பவர்களுக்கு
இலவசமாக
தொலைக்காட்சியை
கொடுக்கும் செயலை
இலவசம் என்று
மட்டுமே எடுத்துக்
கொள்ள முடியும்

இல்லாதவர்களுக்கு
தான் இல்லாத
பொருளை இலவசமாக
கொடுக்கும் போது
இலவசத்தின்
அருமை தெரியும்;
இருப்பவர்களுக்கு
எந்த பொருளை
இலவசமாக கொடுத்தாலும்
அவர்களுக்கு
இலவசமாக கொடுக்கும்
பொருளின் அருமை
தெரியாது

---------  இன்னும் வரும்
---------  13-11-2018
///////////////////////////////////////////////////////////