October 25, 2019

பரம்பொருள்-பதிவு-76


                 பரம்பொருள்-பதிவு-76

"பஞ்சபாண்டவர்கள்
தங்கி இருந்த
அரண்மனையை நோக்கி
ஒரு அந்தணன்
விரைவாக நடந்து
வந்து கொண்டிருந்தான், ;
கோபத்தின் சாயல்
அவன் முகத்தில் வெட்ட
வெளிச்சமாகத் தெரிந்தது ;,
இழப்பின் தவிப்பு
அவன் நடையின்
வேகத்தில் தெரிந்தது, ;
பஞ்ச பாண்டவர்கள்
தங்கி இருந்த
அரண்மனையை அடைந்த
அந்த அந்தணன்
இழந்ததின் தவிப்பை
கோபத்தின் கனலாக
வார்த்தைகளாக
வெளிப்படுத்தினான்,;" 

அந்தணன் :
"தர்மா! தர்மத்தின்
காவலனான நீ
ஆளும் நாட்டில்
இப்படி ஒரு
அநியாயம் நடக்கலாமா ?
மக்களை
பாதுகாப்பவனே மன்னன்  
மக்களை பாதுகாக்காமல் ;
மக்களுக்கு ஏற்பட்ட
துன்பத்தை நீக்காமல் ;
மக்களுக்கு ஏற்பட்ட
துன்பத்தை களைவதற்கு
எந்தவிதமான
நடவடிக்கையும்
மேற்கொள்ளாமல்  ;
இருக்கும் நீயெல்லாம்
ஒரு மன்னவனா !
தர்மா! மக்களை
துன்பத்தில் வருந்த
வைத்து விட்டு நீ!
அரண்மனையில் என்ன
செய்து கொண்டிருக்கிறாய்? "

" தர்மா! அரண்மனையை
விட்டு வெளியே வா !
நடந்து முடிந்த
அக்கிரமக்காரச்
செயலுக்கு என்ன பதில்
சொல்லப் போகிறாய்  ;
எனக்கு நேர்ந்த
அநியாயத்திற்கு  
என்ன சமாதானம்
சொல்லப் போகிறாய் ;
எனக்கு நேர்ந்த
கொடுமைக்கு
என்ன ஆறுதல்
சொல்லப் போகிறாய்;
விரைந்து வா! தர்மா!
விரைந்து வெளியே வா!
தர்மா! வெளியே வா !
எனக்கு ஒரு நியாயத்தை
சொல் தர்மா
நியாயத்தை சொல்! "

என்றான் அந்த
அந்தணன்.

"அந்தணன் கோபத்துடன்
கத்திய கூச்சல்
ஆயுதசாலைக்குள்
இருந்த தர்மருக்கு
கேட்கவில்லை. - ஆனால்
அரண்மனையின்
உப்பரிகையில் உலவிக்
கொண்டிருந்த அர்ஜுனனின்
காதில் அந்தணன்
கத்திய கூச்சல்
விழுந்தது. அந்தணன்
போட்ட கூச்சலைக் கேட்ட
அர்ஜுனன் வேகமாக
அந்தணன் நிற்குமிடம்
ஓடி வந்தான் ;
ஓடி வந்த அர்ஜுனன்
அந்தணன் எதிரே
வந்து நின்றான்"

அர்ஜுனன் :
"தங்களுக்கு என்ன
அநியாயம் நேர்ந்தது ?
தங்களுக்கு அநியாயத்தை
செய்தவர்கள் யார் ?
அவர்கள் என்ன
அநியாயத்தை
தங்களுக்கு செய்தார்கள் ?
தங்களுக்கு ஏன்
இந்த மனக்குறை ?
தங்களுக்கு
என்ன பிரச்சினை  ?
சொல்லுங்கள்.”

அந்தணன் :
“தர்மர் இல்லையா ?
இந்த நாட்டை ஆளும்
மன்னவன் இல்லையா?
எங்கே தர்மர் ?
நான் போட்ட கூச்சல்
தர்மரின் காதுகளில்
விழவில்லையா ?
அல்லது
விழுந்தும் விழாதது
போல் இருக்கிறாரா?
மக்களுக்கு குறை
நேர்ந்தால் ஓடோடி
வர மாட்டாரா மன்னர்?
எங்கே தர்மர் ?
எங்கே நாட்டை
ஆளும் மன்னர்?"


அர்ஜுனன் :
"அண்ணன்
அரண்மனையில்
ஆயுத சாலையை
பார்வையிடச்
சென்றிருக்கிறார்  ;
அதனால் தான் நீங்கள்
பேசியவை அவர்
காதில் விழவில்லை ;
அரண்மனையின்
உப்பரிகையில் உலவிக்
கொண்டிருந்த என்னுடைய
காதில் நீங்கள்
பேசியவை விழுந்தது ;
அதனால் நானே தங்கள்
குறைகளை கேட்க
ஓடோடி வந்தேன் ;
தங்களுக்கு என்ன
குறை நேர்ந்தது ;
தங்களுக்கு என்ன
அநியாயம் நேர்ந்தது  ;
தங்களுக்கு என்ன
பிரச்சினை நேர்ந்தது ;
தங்கள் பிரச்சினை
என்ன என்று என்னிடம்
சொல்லுங்கள்  ;
தங்களுக்கு நேர்ந்த
அநியாயத்தை என்னிடம்
சொல்லுங்கள்  ;
உங்களுக்கு யார்
எத்தகைய அநியாயத்தை
செய்திருந்தாலும்
நானே முன்னின்று
அதை தீர்த்து சரி
செய்கிறேன்
சொல்லுங்கள் தங்களுக்கு
நேர்ந்த அநியாயம்
என்ன என்று
சொல்லுங்கள்!
சொல்லுங்கள்!"

"அந்தணன் தனக்கு
நேர்ந்த அநியாயத்தை
சொல்லத் தொடங்கினான்"

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
-----------25-10-2019
//////////////////////////////////////////