November 17, 2018

திருக்குறள்-பதிவு-51



                       திருக்குறள்-பதிவு-51

பைபிளுக்கு எதிராக
நாங்கள் ஒரு சிறு
வார்த்தையையும்
அனுமதிக்க மாட்டோம்;
அப்படி இருக்கும்போது
பைபிளில் சொல்லப்பட்ட
கருத்து தவறு
என்று சொல்வதையும்
கிறிஸ்தவ
மதத்திற்கு எதிராக
செயல்படுவதையும்
நாங்கள் எப்படி
பார்த்துக் கொண்டு
இருக்க முடியும்

பைபிளில் உள்ள
கருத்து தவறு
என்று சுட்டிக்
காட்டப்படுமானால்
பைபிளில் உள்ள
கருத்துக்கள் சரியானதா
என்று சந்தேதிக்கும்
நிலை வந்து விடும்
கிறிஸ்தவ கடவுள்
உண்மையான
கடவுளா என்று
மக்கள் சிந்திக்கத்
தொடங்கி விடுவார்கள்
அது மட்டுமல்ல
இயேசு கிறிஸ்துவின்
வார்த்தைகளும்
சரியானவைகள் தானா
என்று கேள்வி
கேட்கும் நிலைக்கு
மக்கள் வந்து
விடுவார்கள்
கடவுளின் பிரதிநிதிகளாகிய
எங்களையே
சந்தேகக் கண் கொண்டு
பார்க்கும் நிலைக்கு
தள்ளப்பட்டு விடுவோம்

பைபிளில் ஒரு
தவறு இருந்தால்
இன்னும் எத்தனை
தவறுகள்
பைபிளில் இருக்கிறதோ
என்று பைபிளை
தப்பாக நினைப்பார்கள்;
பைபிளை
அருளிய கடவுளை
தப்பாக நினைப்பார்கள்;
பைபிளை போதிக்கும்
எங்களை தப்பாக
நினைப்பார்கள்;
இவைகளை எல்லாம்
நாங்கள் எப்படி
அனுமதிக்க முடியும்;
என்றார் விசாரணை
நடத்திய போப்

பைபிள் ஒன்றும்
அறிவியல்
கண்டு பிடிப்புகளின்
ஆவணமோ
தகவல் களஞ்சியமோ
கிடையாது
அது ஒரு
வாழ்வியல் நூல்

பைபிள் மனிதன்
இந்த உலகத்தில்
எப்படி வாழ வேண்டும்
என்பதை போதிக்கக்கூடிய
ஒரு மத நூல்
அப்படி இருக்கும்போது
பைபிளில் உள்ள
விஞ்ஞான கண்டுபிடிப்புகள்
சரியானவை என்று
எப்படி சொல்ல முடியும்

நான் ஒரு விஞ்ஞானி
நான் கண்டுபிடித்ததை
இந்த உலகத்திற்கு
சொன்னேன்;
நான் பைபிளில்
சொல்லப்பட்டதற்கு
எதிராக சொன்னேன்
என்பதையும்,
கிறிஸ்தவ மதத்திற்கு
எதிராக செயல்படுகிறேன்
என்பதையும்,
என்னால் எப்படி
ஏற்றுக் கொள்ள
முடியும்

நான் பைபிளில் உள்ள
கருத்திற்கு எதிராக
கருத்து சொல்ல
வேண்டும்
என்பதற்காக கருத்து
சொல்லவில்லை
நான் கண்டுபிடித்த
கண்டுபிடிப்பு
பைபிளில் உள்ள
கருத்துக்கு எதிராக
இருக்கிறது
அவ்வளவு தான்

பைபிளில் உள்ள
கருத்து தவறு
என்று சுட்டிக்
காட்டப்படும்போது
அந்த தவறை ஏற்று
திருத்திக் கொள்ள
வேண்டும்
அப்படி திருத்திக்
கொள்ளாமல்
தவறை சுட்டிக்
காட்டுபவர்களை
விசாரரிப்பதில்
ஒரு நியாயமும்
இல்லை

நான் கண்டுபிடித்து
சொன்ன கருத்து
சரிதான்
சூரியனை மையமாக
வைத்து பூமி சுற்றுகிறது
என்று நான் சொன்ன
கருத்து சரிதான்
நான் என்னுடைய
கருத்தை மாற்றிக்
கொள்ள மாட்டேன்
என்றார் கலிலியோ

இதனால் கலிலியோவை
விசாரித்த போப்புகள்
கலிலியோ சாகும்வரை
பிளாரென்ஸ் நகர்க்கருகில்
அர்செற்றி (ARCETRI)
என்னுமிடத்தில்
வீட்டுக் காவலில்
(HOUSE ARREST)
வைக்க உத்தரவு
இட்டனர்

இரு பிரதான உலக
அமைப்புகள் தொடர்பான
உரையாடல்
(Dialogue Concerning the
Two Chief World
Systems)
என்ற கலிலியோவின்
நூலைத் தீயிட்டுக்
கொளுத்தும்படி
ரோமபுரி மடாதிபதிகள்
கட்டளையிட்டனர்

கலிலியோவிற்கு
அளிக்கப்பட்ட
வீட்டுக் காவல்
என்ற
தண்டனைச் செய்தி
எல்லாப்
பல்கலைக் கழகங்களிலும்
வாசிக்கப்பட வேண்டும்
என்று கட்டளை
இடப்பட்டது

---------  இன்னும் வரும்
---------  17-11-2018
///////////////////////////////////////////////////