November 20, 2011

சூக்குமப் பயணம் - பதிவு - 2

                              


                               சூக்குமப் பயணம் - பதிவு - 2

“”பதிவு இரண்டை விரித்துச் சொல்ல
    ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

சூக்குமப் பயணம் செய்யும் முறை:
1 எந்த தினத்தில் நாம் சூக்குமப் பயணம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறோமோ அதற்கு முந்தைய தினம் இரவு 10 நிமிடம் (அல்லது) 20 நிமிடம் மணிபூரகத் தவம் செய்ய வேண்டும் படுத்துக் கொண்டே  செய்ய வேண்டும்.
2 அதன் மூலம் கிடைத்த சக்தியை உடல் முழுவதும் பரவச் செய்ய வேண்டும்.
3 காலை விடியும் முன் பல் துலக்குவதற்கு, முகம் அலம்புவதற்கு, முன் பருவ நிலைக்கு ஏற்ற விதத்தில் ஆடையை அணிந்து கொள்ள வேண்டும்.
4 தரையில் பாய் அல்லது போர்வை விரித்து மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும்  இடது கால் மீது வலது கால் வைத்து படுத்துக் கொள்ள வேண்டும்
5 உடல் முழுவதும் போர்வையால் மூடிக் கொள்ள வேண்டும்
6 காப்பு மந்திரம் போட்டுக் கொள்ள வேண்டும் காப்பு மந்திரம் தெரியாதவர்கள் கட்டு மந்திரம் போட்டுக் கொள்ள வேண்டும்
7 மணிபூரகத் தவம் செய்ய வேண்டும் தவத்தின் போது வலது கையை தொப்புள் மேல் இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் வைக்க வேண்டும் பிறகு கையை எடுத்து உடலின் பக்கத்தில் வைக்க வேண்டும்  தவத்தினை தொடர்ந்து செய்து சூட்சும உடலில் நிலைக்க வேண்டும் பூத உடலிலிருந்து சூட்சும உடலுக்கு சக்தியை பரவச் செய்ய வேண்டும்
8 தவத்தினால் கிடைத்த சக்தியை உடல் முழுவதும் பரப்பிக் கொண்டு உடலை    கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்திக் கொண்டே வர வேண்டும் பிறகு நமது சூட்சும உடலை பூத  உடலிலிருந்து பிரித்து உடலுக்கு ஒரு முழம் (ஒரு அடி) மேல் கொண்டு வந்து கவனிக்க வேண்டும் நம்மால் சூட்சும உடலை உணர முடியும் கவனிக்க முடியும்

9 சூட்சும உடலை பூத உடலுக்கு மேலே நிறுத்தி பூத உடலுக்கு காப்பு மந்திரம் கொடுக்க வேண்டும்

பூத உடலிலிருந்து சூட்சும உடலைப் பிரித்தப் பின் இரண்டு முறைகளில் செய்ய வேண்டும்
A  ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் செய்ய வேண்டிய நிலை
B  தவத்தில் வளர்ச்சி அடைந்தவர்கள் செய்ய வேண்டிய நிலை
என்ற இரண்டு நிலைகளில் நின்று சூட்சும பயணத்தைச் செய்ய வேண்டும்


A.  ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் செய்ய வேண்டிய நிலை
1 முதலில் குருவை நினைத்து குருவை பின் தொடர்ந்து செல்ல வேண்டும்
2 முதலில் ஒரு ஆலயம் சென்று வணங்க வேண்டும் பின்பு தன் பெற்றோரிடம் சென்று ஆசிர்வாதம் வாங்க வேண்டும்
3 பின்பு தன் குடும்பத்தின் மனைவி மக்களைக் கண்டு ஆசிர்வாதிக்க வேண்டும்
4 பின்பு தன் நெருங்கிய நண்பர்  வீட்டிற்குச் சென்று அவரைக் காண வேண்டும் தனக்கும் அவருக்கும் உள்ள நட்பு தொடர அவரை வாழ்த்த வேண்டும்
5 பின்பு அதே ஆலயத்திற்கு வந்து அமர்ந்து சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டும்
6 தான் இருக்கும் இடம் வந்து சேர்ந்து சூட்சும உடலை பூத உடலுக்கு அருகே தலைக்கு அருகே கொண்டு வர வேண்டும்
7 ஆக்கினையில் நின்று உடல் முழுவதும் உயிரால் நிரம்பி முடிந்ததும் தவத்தை முடித்துக் கொண்டு அப்படியே உடலைத் தளர்த்தி கை கால்களை அசைவு கொடுத்து இடது வலமாக புரண்டு பின்பு ஓய்வு கொள்ள வேண்டும்
8 உடலை அமைதி பெறச் செய்து பாதத்திலிருந்து தலை வரை ஒவ்வொரு பாகமாக நினைத்து அமைதி  பெற வேண்டும்
9 உறக்கம் வந்தால் நன்றாக உறங்க வேண்டும்



B .  தவத்தில் வளர்ச்சி அடைந்தவர்கள் செய்ய வேண்டிய நிலை
1 முதலில் குருவை நினைத்து குருவை பின் தொடர்ந்து செல்ல வேண்டும்
2 முதலில் ஒரு ஆலயம் சென்று வணங்க வேண்டும் பின்பு தன் பெற்றோரிடம் சென்று ஆசிர்வாதம் வாங்க வேண்டும்
3 பின்பு தன் குடும்பத்தின் மனைவி மக்களைக் கண்டு ஆசிர்வாதிக்க வேண்டும்
4 பின்பு தன் நெருங்கிய நண்பர்  வீட்டிற்குச் சென்று அவரைக் காண வேண்டும் தனக்கும் அவருக்கும் உள்ள நட்பு தொடர அவரை வாழ்த்த வேண்டும்
5 பின்பு சூட்சுமப் பயணம் சந்திர மண்டலத்தை நோக்கிச் சென்று இரண்டற கலந்து விட்டு அங்கு இருந்து சூரிய மண்டலத்திற்குச் சென்று நமது தவ வலிமையை விரிவடையச் செய்ய வேண்டும்
6 சூரிய மண்டலத்திலிருந்து சந்திர மண்டலத்திற்கு வர வேண்டும் பின்பு சந்திர மண்டலத்திலிருந்து அதே ஆலயத்திற்கு வர வேண்டும்
7 பின்பு அதே ஆலயத்திற்கு வந்து அமர்ந்து சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டும்
8 தான் இருக்கும் இடம் வந்து சேர்ந்து சூட்சும உடலை பூத உடலுக்கு அருகே தலைக்கு அருகே கொண்டு வர வேண்டும்
9 ஆக்கினையில் நின்று உடல் முழுவதும் உயிரால் நிரம்பி முடிந்ததும் தவத்தை முடித்துக் கொண்டு அப்படியே உடலைத் தளர்த்தி கை கால்களை அசைவு கொடுத்து இடது வலமாக புரண்டு பின்பு ஓய்வு கொள்ள வேண்டும்
10 உடலை அமைதி பெறச் செய்து பாதத்திலிருந்து தலை வரை ஒவ்வொரு பாகமாக நினைத்து அமைதி பெற வேண்டும்
11 உறக்கம் வந்தால் நன்றாக உறங்க வேண்டும்

மேலே சொன்னவாறு சூக்கும பயணம் தொடர்ந்து செய்து கொண்டு வர ஆன்மா உடலிலிருந்து பிரிந்து தனித்து இயங்கக் கூடிய தன்மையைப் பெறுகிறது
பிரபஞ்ச ரகசியங்களைத் தெரிந்து கொண்டு ஞானத்திற்கான திறவுகோலைப் பெறுகிறது
 

சூட்சும ரகசியம்
சூக்குமப் பயணம் நம் வசமாக குறைந்தது எத்தனை வருடங்கள் ஆகும் என்று காலத்தை குறிப்பிட்டு சொல்ல முடியாது ஆனால் சூக்குமப் பயணத்தை நம் வசமாக்க சூட்சும ரகசியம் ஒன்று உள்ளது

அதாவது ஆன்மாவை  உடலிலிருந்து எளிதாகப் பிரித்து இந்த பிரபஞ்சம் முழுவதும் உலா வந்து நமக்கு விருப்பப் பட்ட இடங்களுக்குச் சென்று நமது தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஒரு சூட்சும ரகசியம் ஒன்று உள்ளது அது என்னவென்றால் ஏற்கெனவே உயிரை உடலிலிருந்து பிரித்து தவம் செய்தவர்கள் நம்முடைய உயிரை ஒரு முறை பிரித்து நமக்கு காட்ட வேண்டும்

உடலிலிருந்து பிரித்த நமது உயிரை நாம் ஒரு முறை பார்த்து விட்டால் நாம் தனியாக யாருடைய துணையும் இல்லாமல் எளிதாக நம்முடைய உயிரை உடலிலிருந்து பிரித்து விடலாம் என்ற சூட்சும ரகசியத்தை மட்டும் தெரிந்து கொள்வோம் பயன் பெறுவோம்

“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                போற்றினேன் சூக்குமப்பயண  ந்தான்முற்றதாமே “”